Wednesday, 29 March 2017

💠 நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் வாழ்க்கை வரலாறு தொடர்:8


💎 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 💎

🌙நபிமார்கள் வரலாறு🌟

💠 நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் வாழ்க்கை வரலாறு தொடர்:8

🎀 அப்போது இருவரும் இறையில்லம் கஃபாவின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டினார்கள். இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை கற்களை கொண்டு வந்து கொடுக்கலானார்கள். இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கட்டளானார்கள். வயதான ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அன்னவர்களுக்கு கற்களைத் தூக்கி வைக்க முடியவில்லை. எனவே, “மகாமு இப்ராஹீம்” என்று அழைக்கப்படும் கல் மீது ஏறி நின்றார்கள். அவர்களுக்கு ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கற்களை எடுத்துத் கொடுத்தார்கள். இறுதியில் கட்டடம் எழும்பியது.

பிறகு இருவரும் “இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயம், நீயே செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய்” என்று பிரார்த்தித்தார்கள். மேலும், “எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக! எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக! நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக! எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக! நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்!” என்றும் பிரார்த்தித்தார்கள்.

💦 இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் குர்பானி சம்பவம்
ஒருநாள், ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தன் மகன் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் கூறினார்கள்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக கனவு கண்டேன். இதை பற்றி உம் கருத்து என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு மகன் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறினார்கள், “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்” என்று கூறினார்கள்.

🚧 (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தனது மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்தி அறுக்க முற்பட்டபோது அவர்களது கத்தி அறுக்கவில்லை. அப்போது " யா இப்ராஹீமே! என்று அல்லாஹ்வின் அழைப்புக் குரல் கேட்டது. அல்லாஹ் அவர்கள் இருவரையும் சோதிக்கவே இவ்வாறு செய்ததாக கூறி ஹஸ்ரத் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு பதிலாக ஒரு ஆட்டை அறுத்து பலியிடுமாறு கட்டளையிட்டான்.


🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

📝 உலாமாக்கள் குழு🎖

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 29 / 3  / 17

No comments:

Post a Comment