Wednesday, 29 March 2017

💠 நபி இஸ்மாயில் அலைஹி வஸல்லம் வாழ்க்கை வரலாறு தொடர்:7


💎 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 💎

🌙நபிமார்கள் வரலாறு🌟

💠 நபி இஸ்மாயில் அலைஹி வஸல்லம் வாழ்க்கை  வரலாறு தொடர்:7

🕰 அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தாணியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள் வளம் தரும்படி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பிரார்த்திருப்பார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே தான் மக்காவைத் தவிர பிற இடங்களில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்தக்கொள்வதே இல்லை என்றும் சொன்னார்கள்.

💎 மேலும் ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், “உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம் சொல்லு. மேலும் அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிப்படுத்தி வைக்கும்படி சொல்” என்று சொன்னார்கள்.

🕸 ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்தபோது, தன் மனைவியிடம் “உன்னிடம் எவரேனும் வந்தார்களா” என்று கேட்க, அதற்கு அவருடைய மனைவி “ஆம் எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார்” என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) “என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன்” என்று பதில் சொன்னார். அவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா என்று இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) கேட்டார்கள். அதற்கு அவர் “ஆம், உங்களுக்கு ஸலாம் சொன்னார். உஙகள் நிலைப்படியை உறுதிப்பபடித்திக் கொள்ளும்படி உங்களுக்கு கட்டளையிட்டார்” என்று சொன்னார். அதற்கு ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், “அவர் என் தந்தை. நீதான் அந்த நிலைப்படி உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே மனைவியாக வைத்தக் கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார்” என்றும் சொன்னார்கள்.

🍈 இப்ராஹிம் நபியின் மீள் வருகையும் கஃபாவை கட்டுதலும்
பிறகு ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம் வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள். அதன் பிறகு மீண்டும் ஒரு நாள் ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் அருகேயிருக்கும் பெரிய மரத்திற்கு கீழே தனது அம்பு ஒன்றைச் செதுக்கிக் கொண்டிருந்தபோது, ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அங்கு வந்தார்கள். ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் கண்டதும் ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். (நெடுநாட்கள் பிரிந்து மீண்டும் சந்திக்கும் போது) தந்தை மகனுடனும் மகன் தந்தையுடனும் எப்படி நடந்துக் கொள்வார்களோ அப்படி இருவரும் நடந்துக் கொண்டார்கள். பாசத்தோடும் நெகிழ்வோடும் வரவேற்றார்கள்.

⚾ பிறகு ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், “இஸ்மாயீலே! அல்லாஹ் எனக்கு ஒரு விஷயத்தை (நிறைவேற்றும்படி) உத்திரவிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், “உங்கள் இறைவன் உங்களுக்கு கட்டளையிட்டதை நிறைவேற்றுஙகள்” என்று சொன்னார்கள். ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “நீ எனக்கு அந்த விஷயத்தை நிறைவேற்றுவதற்கு உதவுவாயா?” என்று கேட்க, ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “உஙகளுக்கு நான் உதவுகிறேன்” என்று பதிலளித்தார்கள். ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “அப்படியென்றால் நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தை (புதுப்பித்து) கட்டவேண்டும் என்று எனக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்” என்று சொல்லிவிட்டு, சுற்றியிருந்த இடங்களை விட உயரமாக இருந்த ஒரு மேட்டைச் சைகையால் காட்டினார்கள்.


🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

📝 உலாமாக்கள் குழு🎖

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 29 / 3  / 17

No comments:

Post a Comment