💎 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 💎
🌙நபிமார்கள் வரலாறு🌟
💠 நபி இஸ்மாயில் அலைஹி வஸல்லம் வாழ்க்கை வரலாறு தொடர்:6
🎀 அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார். பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் குறைப்பட்டு முறையிட்டார். உடனே இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம் சொல்லு. மேலும் அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள்.
🎗 ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள். ஆகவே எவரேனும் உங்களிடம் வந்தார்களா என்று கேட்டார்கள். அவருடைய மனைவி ஆம் இப்படிப்பட்ட (அடையாளஙகள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார். என்னிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன். என்னிடம் உங்கள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் அவரிடம் நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார். அதற்கு இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க, அதற்கு அவர் ஆம் உங்களுக்கு தன் சார்பாக ஸலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு, பின்பு உன் நிலைப்படியை மாற்றிவிடு என்று (உங்களிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார். அதற்கு ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார். ஆகவே நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்துக்கொள் என்று சொல்லிவிட்டு உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார்கள்.
மறுமணம்
பின்னர் ஹஸ்ரத் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார்கள். பிறகு ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை தம் மகனைப் பார்க்க வராமல் விலகி வாழ்ந்து வந்தார்கள். அதன் பிறகு, மீண்டும் ஒரு முறை அவர்களிடம் வந்தார்கள். ஆனால் இந்த முறையும் ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை அவர் அங்கு காணவில்லை.
🔵 ஆகவே ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர் “எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார்” என்று சொன்னார். இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “நீஙகள் எப்படியிருக்கிறீர்கள்? (நலம்தானா)” என்று கேட்டார்கள். மேலும் அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார்கள். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார் “நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார். மேலும் “நீங்கள் இன்னும் கொஞ்சம் நேரம் தங்கி இருந்து ஏதேனும் உண்டுவிட்டும், குடித்துவிட்டும் செல்லுங்கள்” என்று சொன்னார். அப்போது ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “உங்கள் உணவு எது?” என்று கேட்க, அதற்கு அவர் “இறைச்சி” என்று பதிலளித்தார். “உங்கள் பானம் எது?” என்று கேட்க, “தண்ணீர்” என்று பதிலளித்தார். உடனே ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் “இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*
📝 உலாமாக்கள் குழு🎖
🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪
🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 29 / 3 / 17
No comments:
Post a Comment