💎 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 💎
🌙நபிமார்கள் வரலாறு🌟
💠 நபி இஸ்மாயில் அலைஹிவஸல்லம் வாழ்க்கை வரலாறு தொடர்:5
🍮 பிறகு அன்னை ஹாஜர் அவர்கள் ஸம்ஸம் தண்ணீரை அருந்தினார்கள். இதனால் அவர்களது தாய்பால் அதிகரிக்கவே, குழந்தைக்கும் தாய்ப்பால் ஊட்டினார்கள். அப்போது அந்த வானவர் அவர்களிடம் நீங்கள் (கேட்பாரற்று) வீணாக அழிந்து போய்விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில் இங்கு இந்தக் குழந்தையும் இவருடைய தந்தையும் சேர்ந்து (புதுப்பித்துக்) கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் இல்லம் உள்ளது. அல்லாஹ் தன்னை சார்ந்தோரைக் கைவிடமாட்டான் என்று சொன்னார். இறையில்லமான கஃபா மேட்டைப் போன்று பூமியிலிருந்து உயர்ந்திருந்தது. வெள்ளங்கள் வந்து அதன் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் (வழிந்து) சென்றுவிடும். இவ்வாறே அன்னை ஹாஜர் அவர்கள் (தண்ணீர் குடித்துக்கொண்டும் பாலூட்டிக் கொண்டும்) இருந்தார்கள்.
🎯 ஜூர்ஹூம் குலத்தினரோடு சேர்ந்து வாழுதல்
இந்நிலையில் யமன் நாட்டைச் சேர்ந்த ஜுர்ஹும் குலத்தாரின் ஒரு குழுவினர் அவர்களைக் கடந்து சென்றார்கள். அவர்கள் கதா எனும் கணவாயின் வழியாக முன்னோக்கி வந்து மக்காவின் கீழ்ப்பகுதியில் தங்கினர் அப்போது தண்ணீரின் மீதே வட்டமடித்துப் பறக்கும் (வழக்கமுடைய) ஒருவகைப் பறவையைக் கண்டு இந்தப் பறவை தண்ணீரின் மீது வட்டமடித்துக் கொண்டிருக்க வேண்டும்.
திருமணம்
குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார்கள். ஜுர்ஹும் குலத்தாரிடம் இருந்து அவர்கள் அரபு மொழியை கற்றுக்கொண்டார்கள். அவர்கள் வாலிபரானபோது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விரும்பமானவராகவும் ஆகிவிட்டார்கள். பருவ வயதை அவர்கள் அடைந்தபோது அவர்களுக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். பின்னர் இஸ்மாயீலின் தாயார் அன்னை ஹாஜர் இறந்துவிட்டார்கள்.
இப்ராஹிம் நபியின் முதல் வருகை
ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு ஒரு நாள் தம் மனைவியையும் மகனையும் அவர்கள் என்ன ஆனார்கள் என்று பார்த்துவிட்டு வரலாமென்று தோன்றியது. எனவே, தம் வீட்டாரிடம் (முதல் மனைவி ஸாராவிடம்) “நான் (மக்காவில்) விட்டு வந்த என் செல்வங்களைப் பற்றி அறிந்து வரப் போகிறேன்” என்று கூறி மக்காவுக்கு புறப்பட்டார்கள்.
🎪 இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை காணவில்லை. ஆகவே ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மனைவியிடம் ஹஸ்ரத் இஸ்மாயிலை குறித்து விசாரித்தார்கள்
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*
📝 உலாமாக்கள் குழு🎖
🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪
🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 29 / 3 / 17
No comments:
Post a Comment