💎 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 💎
🌙நபிமார்கள் வரலாறு🌟
💠 நபி இஸ்மாயில் அலைஹி வஸல்லம் வாழ்க்கை வரலாறு தொடர்:4
🌠 ஸஃபா, மர்வா
ஹஸ்ரத் இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் அவர்கள் இஹ்மாயீலுக்கு பாலூட்டும் அந்த காலக்கட்டத்தில், தம்மிடம் இருந்த அந்த தண்ணீரிலிருந்து தாகத்திற்கு நீர் அருந்தவும் தொடங்கினார்கள். தண்ணீர் பையிலிருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டபோது அவர்களும் தாகத்திற்குள்ளானார்கள். அவருடைய மகனும் தாகத்திற்குள்ளானார். தம் மகன் தாகத்தில் புரண்டு புரண்டு அழுவதை அல்லது தரையில் காலை அடித்துக் கொண்டு அழுவதை அவர்கள் பார்க்கலானார்கள். அதைப் பார்க்கப் பிடிக்காமல் சிறிது தூரம் நடந்தார்கள். பூமியில் தமக்கு மிக அண்மையிலுள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள். அதன் மீது ஏறி நின்று கொண்டு மனிதர்கள் யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டபடி பள்ளத்தாக்கை நோக்கி பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை. ஆகவே ஸஃபாவிலிருந்து இறங்கிவிட்டார்கள். இறுதியில் பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்த போது தம் மேலங்கியின் ஓரத்தை உயர்த்திக் கொண்டு சிரமப்பட்டு ஓடும் ஒரு மனிதனைப் போன்று ஓடிச்சென்று பள்ளத்தாக்கை கடந்தார்கள். பிறகு மர்வா மலைக் குன்றிற்கு வந்து அதன் மீது ஏறி நின்று யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டார்கள். எவரையும் காணவில்லை. குழந்தை இஸ்மாயீல் அதே நிலையில் தான் அழுதபடி இறப்பற்கு முன் மூச்சுத் திணறுவதைப் போல் முனகிக் கொண்டிருந்தார்கள். அவரின் (பெற்ற) மனம் அவரை நிம்மதியாக இருக்கவிடவில்லை. எனவே, அம்மையார் அவர்கள் (தமக்குள்) 'நான் போய் நோட்டமிட்டால் எவராவது தென்படக் கூடும்" என்று கூறிச் சென்று ஸஃபா மலைக் குன்றின் மீதேறிப் பார்த்தார்கள். பார்த்தார்கள். பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். ஆனால் எவரும் அவருக்குத் தெரியவில்லை. இவ்வாறே ஏழு முறை செய்தார்கள்.
ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். இதுதான் இன்று ஹஜ்ஜில் மக்கள் ஸஃபாவுக்கும் மர்மாவுக்குமிடையே செய்கின்ற ஸஃயு (தொங்கோட்டம்) ஆகும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் சொன்னார்கள்.
💦 ஸம்ஸம் தண்ணீர் உருவாதல்
அவர்கள் மர்வாவின் ஏழாவது முறை மீது ஏறி நின்றுபோது, ஒரு குரலைக் கேட்டார்கள். அமைதியாய் இரு என்று தமக்கு தாமே கூறிக்கொண்டார்கள். பிறகு காதைத் நன்றாக தீட்டிக் கேட்டார்கள். அப்போது அதே போன்ற ஒரு குரலை மீண்டும் செவியுற்றார்கள். உடனே "(அல்லாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை நான் செவியுற்றேன். உங்களிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுங்கள் என்று சொன்னார்கள். அப்போது அங்கே தம் முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றின் அருகே கண்டார்கள். அந்த வானவர் தம் குதிகாலால் அல்லது தமது இறக்கையினால் மண்ணில் தோண்டினார். அதன் விளைவாக அங்கிருந்து தண்ணீர் வெளிப்பட்டது. உடனே அன்னை ஹாஜர் அவர்கள் அதை ஒரு தடாகம் போல் கையால் அமைக்கலானார்கள். அதை தம் கையால் இப்படி ஓடிவிடாதே! நில் நில் என்று சைகை செய்து சொன்னார்கள். அதுவே ஸம்ஸம் என்று பெயர் பெற்றது. இந்த தண்ணீரிலிருந்து அள்ளித் தம் தண்ணீர்ப் பையில் போட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கியபடியே இருந்தது.
⭐ நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் அன்னைக்கு கருணை புரிவானாக! ஸம்ஸம் நீரை அவர் அப்படியே விட்டுவிட்டிருந்தால் அல்லது அந்த தண்ணீரிலிருந்து அள்ளியிருக்காவிட்டால் ஸம்ஸம் நீர் பூமியில் ஓடும் நீர் ஊற்றாக மாறிவிட்டிருக்கும்” என்பதாக.
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*
📝 உலாமாக்கள் குழு🎖
🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪
🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 29 / 3 / 17
No comments:
Post a Comment