💎 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 💎
🌙நபிமார்கள் வரலாறு🌟
💠 நபி இஸ்மாயில் அலைஹி வஸல்லம் வாழ்க்கை வரலாறு தொடர்:3
⛵ அப்போது அவர்களை ஹஸ்ரத் இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் அவர்கள் பின்தொடர்ந்து வந்து “இப்ராஹீமே! மனிதரோ, வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டு விட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார்கள். இப்படி பல முறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அவரை திரும்பி பார்க்காமல் நடக்கலானார்கள். ஆகவே அவர்களிடம் ஹாஜர் நாயகி அவர்கள் 'அல்லாஹ்தான் உங்களுக்கு இப்படி கட்டளையிட்டனா?” என்று கேட்க, அதற்கு இப்ராஹிம் நபியவர்கள் ஆம் என்று சொன்னார்கள். அதற்கு அன்னை ஹாஜர் அவர்கள் “அப்படியென்றால் அல்லாஹ் எங்களைக் கைவிடமாட்டான்” என்று சொல்லிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்கள்.
ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் சிறிது தூரம் நடந்து சென்று மலைக் குன்றின் அருகே அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது தம் முகத்தை இறையில்லம் கஅபாவை நோக்கி திருப்பி, பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி இந்த சொற்களால் பிரார்த்தித்தார்கள்.
🌄"எங்கள் இறைவா! உன் ஆணைப்படி நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். எஙகள் இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்) எனவே இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும் இவர்களுக்கு உண்பதற்கான பொருள்களை வழஙகுவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பார்கள் என்று இறைஞ்சினார்கள்."
📕அல்குர்ஆன் 14-37
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*
📝 உலாமாக்கள் குழு🎖
🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪
🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 29 / 3 / 17
No comments:
Post a Comment