Wednesday, 29 March 2017

💠 நபி இஸ்மாயில் அலைஹி வஸல்லம் வாழ்க்கை வரலாறு தொடர்:2


💎 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 💎

🌙நபிமார்கள் வரலாறு🌟

💠 நபி இஸ்மாயில் அலைஹி வஸல்லம் வாழ்க்கை  வரலாறு தொடர்:2

🐳 மக்காவுக்கு செல்லல்
ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கும் அவர்களின் மனைவி அன்னை ஸாரா அவர்களுக்குமிடையே மனத்தாங்கல் ஏற்பட்டபோது, ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், ஹஸ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களையும், அவர்களின் தாயாரான அன்னை ஹாஜராவையும் அழைத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றார்கள்.

🌷 தனிமைப்படுத்தப்படல்
சிறிது காலத்தில் ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு அல்லாஹ்விடம் இருந்து ஒரு உத்தரவு வந்தது. அது என்னவென்றால் தம் மனைவி, மகன் இருவரையும் கூட்டி சென்று கஃபாவின் மேல்பகுதியில் விட்டுவிட்டு வருமாறு.

🌲 அதன்படி, ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அன்னை ஹாஜர் தம் மகன் இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் காலக் கட்டத்தில் இருவரையும் கூட்டி வந்து அவர்களை கஃபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்துவிட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்ணீர் கூட கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கு இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரீச்சம்பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர்ப் பை ஒன்றையும் வைத்தார்கள். பிறகு இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அவர்களை அங்கேயே விட்டு விட்டு தமது ஷாம் நாட்டிற்கு திரும்பிச் சென்றார்கள்.


🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

📝 உலாமாக்கள் குழு🎖

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 29 / 3  / 17

No comments:

Post a Comment