Tuesday, 28 March 2017

அமல் என்பதும் அங்கீகாரம் என்பதும் தனித்தனியான நிஃமத்தாகும்.




அமல் என்பதும் அங்கீகாரம் என்பதும் தனித்தனியான நிஃமத்தாகும். அல்லாஹ் சிலருக்கு அமல் செய்யும் நஸீபை வழங்குவான் ஆனால் அங்கீகாரம் வழங்கமாட்டான்.


ஆயிரம் ஆண்டுகள் வணக்கம் புரிந்த இப்லீஸின் வணக்கத்திற்கு அல்லாஹ் விடம் அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது.


அல்லாஹ்வின் கபூலிய்யத் கிடைக்காமல் தங்களின் ஈமானை இழந்த வணக்கசாலிகள் பற்றி திருக்குர்ஆன் பேசுகிறது.

ஸஃலபா எனும் நபித்தோழர் முதல் பல்ஆம் இப்னு பாஊரா எனும் இறைநேசர் வரை பட்டியல் நீளமானது.


அல்லாஹ்வின் அங்கீகாரம் கிடைக்க சிலநேரங்களில் ஒரு சின்ன அமலும் காரணமாக ஆகிவிடலாம்.தாகித்த நாயிக்கு தண்ணீர் புகட்டிய ஒரு விபச்சாரியின் அமல் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெற்றதால் அவளுக்கு சுவனத்தை பெற்றுத்தந்தது.


அமலுக்கான அங்கீகாரம் யாருக்கு கிடைக்கும்?

இதோ அல்லாஹ்வின் வசனத்தை கவனியுங்கள்...


إِنَّمَا يَتَقَبَّلُ اللَّـهُ مِنَ الْمُتَّقِينَ


"மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்" என்று (ஹாபீல்) கூறினார்.

அச்சமுள்ளவருக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும் என்பதை புரிந்துகொள்ள இவ்வசனம் ஒன்றே போதுமானது.அதனால் தான் நபிமார்கள்,ஸஹாபாக்கள் ஸாலிஹீன்கள் ஒரு அமலை துவக்கும்போதும் முடிக்கும்போது அல்லாஹ் ஏற்றுக்கொள்வதை கேட்பார்கள்.

பதிவு நாள்: 29-03-2017

No comments:

Post a Comment