🕋 மார்க்க_ *கேள்வி எண்: 415*
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
*குர்ஆனில் உள்ள கேள்வி👇*
🔴 *எந்த விடயங்களை யாரும் அறிவதில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்❓*
💠 *பதில் =*
_நாளை தினம் தாம் செய்வது, சம்பாதிப்பது எது, எந்த பூமியில் இறப்போம், என்பதையும் எவரும் அறிவதில்லை._
*ஆதாரம் =அல்குர்ஆன்: 31:34*
📜நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
(அல்குர்ஆன் : 31:34)
*ஹதீஸில் உள்ள கேள்வி👇*
🔵 *எந்த காரணத்தினால் ஜனாஸா வேதனை செய்யப்படுவதாக பெருமானார் கூறினார்கள்❓*
💠 *பதில் =*
_ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக_
*ஆதாரம் = *புகாரி:1286,1287,1288,1289,1290,1291,1292,1304*
*முஸ்லிம்:1688,1689,1690,1691,1692,1693*
📖1286 1287 1288. இப்னு உபைதுல்லாஹ்(ரஹ்) அறிவித்தார்.
மக்காவில் உஸ்மான் (ரலி)அவர்களின் மகள் இறந்தபோது நாங்கள் (ஜனாஸாவில்) கலந்து கொள்வதற்காக அங்கு சென்றோம். அங்கு இப்னு உமர்(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் வந்திருந்தனர். நான் அவர்களிருவருக்கும் நடுவில் அல்லது ஒருவருக்கருகில் அமர்ந்தபோது மற்றொருவர் வந்து என்னருகில் அமர்ந்தார். அப்போது அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) உஸ்மான்(ரலி) உடைய மகன் அம்ர்(ரலி) அவர்களிடம் 'நீ (சப்தமிட்டு) அழுபவர்களைத் தடை செய்ய வேண்டாமா? ஏனெனில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித்திற்கு வேதனை கொடுக்கப்படுகிறது' எனக் கூறினார்கள்' என்றார். உடனே இப்னு அப்பாஸ்(ரலி) உமர்(ரலி) இதே போன்ற சில ஹதீஸ்களைக் கூறிக் கொண்டிருந்தார். நான் உமர்(ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து புறப்பட்டேன். நாங்கள் பைதா எனும் இடத்தை அடைந்தோம். அங்கு சமுரா என்னும் ஒரு(வகையான காட்டு) மரத்தின் நிழலில் ஒரு வாகனக் கூட்டம் நிற்பதைக் கண்டோம். 'நீ சென்று அவ்வாகனக் கூட்டம் யாதெனப் பார்த்துவா!' என உமர்(ரலி) என்னை அனுப்பினார். நான் அங்கு சென்று பார்த்தபோது அங்கே ஸுஹைப்(ரலி) இருந்தார். அதை உமர்(ரலி) கூறினார். நான் ஸுஹைப் இடம் சென்று, 'அமீருல் மூமீனின் அவர்களைச் சந்திக்கப் புறப்படு' எனக் கூறினேன். பின்னர் சிறிது காலம் கழித்து உமர்(ரலி) அவர்களிடம் மரணக் காயமுற்றிருந்தபோது 'சகோதரனே! நண்பனே!' எனக் கூறி அழுதவராக ஸுஹைப்(ரலி) (வீட்டினுள்) நுழைந்தார். அப்போது உமர்(ரலி) 'ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்களல்லவா?' என்றார். உமர்(ரலி) இறந்தபோது (அவர்) இறப்பதற்கு முன் கூறிய செய்தியை ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'அல்லாஹ் உமருக்குக் கிருபை செய்வானாக! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குடும்பத்தினர் அழுவதன் காரணமாக மூமினை அல்லாஹ் வேதனை செய்வான்' எனக் கூறவில்லை: மாறாக 'குடும்பத்தினர் சப்தமாக அழுவதன் காரணத்தினால் காஃபிருக்கு வேதனை அதிகமாக்கப்படும்' என்றே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்று கூறி, 'ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது' (திருக்குர்ஆன் 6:164) என்ற குர்ஆனின் வசனமே உங்களுக்கு (சான்றுரைக்கப்) போதுமே' என்றும் கூறினார்கள்.
முடித்த பொழுது 'சிரிக்கச் செய்பவனும் அழவைப்பவனும் அவனே' (திருக்குர்ஆன் 53:43) என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இப்னு அப்பாஸ்(ரலி) உடைய இச்சொல்லைச் செவியுற்ற அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) இதைப் பற்றி எந்த ஆட்சேபணையும் செய்யவில்லை' என்று இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி.
📃1688. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தவருக்காக ஒப்பாரிவைத்து அழுவதால் மண்ணறையில் (கப்று) அவர் வேதனை செய்யப்படுவார்.
இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. ஹக்கிம் - தென்காசி 2
2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 1
3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
4. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
5. பீர் முஹம்மது - திருநெல்வேலி 1
6. அபூதல்ஹா - திருநெல்வேலி 1
7. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 1
8. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
2. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
3. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
4. ஹுசைன் - நாகர்கோவில் 2
5. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
6. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
7. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
8. அப்துல் பாசித் - சவுதி 2
9. சுல்தான் - திருநெல்வேலி 2
10. முஜீப் - சென்னை (ராயபுரம்) 1
*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
📆பதிவு நாள் : 30- 03 - 2017
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
No comments:
Post a Comment