அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" (அன்று) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க (நபியே!) நீர் காண்பீர்; ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் (பதிவு) புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள் (உலகில்) செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள்.
“இது உங்களைப்பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய புத்தகம்; நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்” (என்று கூறப்படும்).
"
📚 அல்குர்ஆன் 45:28,29
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
" ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம்விட்டு விடுவார்; பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும் சென்று விடக்கூடும்."
🎭அறிவிப்பாளர்:
நுஃமான் இப்னு பஷீர்(ரலி)
📓நூல்:
ஸஹீஹ் புகாரி -2051
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
🌴🎋🌴🎋29-3-17🌴🎋🌴🎋
🌟💥🌟💥🌟💥🌟💥🌟💥🌟
No comments:
Post a Comment