Thursday, 30 March 2017

🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 417*


🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 417*

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *வரம்புகளை மீறி பாவம் செய்தவர்களிடம் என்ன சொல்லப்படும்❓*

💠 *பதில் =*
 _“எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த நரக நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்லப்படும்._

*ஆதாரம் = *அல்குர்ஆன்: 32:20*

📖ஆனால் எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு: “எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
(அல்குர்ஆன் : 32:20)

*ஹதீஸில் உள்ள கேள்வி👇*

🔵 *எதன் காரணத்தினால் நபித் தோழர்களை திட்ட (ஏச) வேண்டாம் என பெருமானார் கூறினார்கள்❓*

💠 *பதில் =*
_உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் இறை வழியில் செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது._

*ஆதாரம் = புகாரி:3673*
*முஸ்லிம்: 4967,4968*

📄3673. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📑4967. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் தோழர்களை ஏசாதீர்கள். என் தோழர்களை ஏசாதீர்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹுத் மலையளவுக்குத் தங்கத்தை (தானமாகச்) செலவிட்டாலும், என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இரு கையளவு, அல்லது அதில் பாதியளவைக் கூட எட்ட முடியாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

🗒4968. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபித்தோழர்களான) காலித் பின் அல் வலீத் (ரலி) அவர்களுக்கும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கும் இடையே ஏதோ (பிரச்சினை) இருந்தது. காலித் (ரலி) அவர்கள் (அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களை) ஏசினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் தோழர்களில் யாரையும் ஏசாதீர்கள். உங்களில் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தை (தர்மமாகச்) செலவிட்டாலும் என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இரு கையளவு, அல்லது அதில் பாதியளவைக்கூட எட்ட முடியாது" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஷுஅபா மற்றும் வகீஉ (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), காலித் பின் அல்வலீத் (ரலி) ஆகியோரைப் பற்றிய குறிப்பு இல்லை.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
2. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
3. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
4. ஹக்கிம் - தென்காசி 2
5. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
6. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
7. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
8. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
2. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
3. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
4. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
5. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
6. ஹுசைன் - நாகர்கோவில் 2
7. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம்2
8. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
9. சுல்தான் - திருநெல்வேலி 2
10. அப்துல் பாசித் - சவுதி 2

🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿

1. ஆயிஷா பர்ஷன் - இராஜகிரி(தஞ்சை) 1

🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 30- 03 - 2017
   
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

No comments:

Post a Comment