Thursday, 30 March 2017

🕋 மார்க்க_🕌 *கேள்வி எண்: 419*


🕋 மார்க்க_🕌 *கேள்வி எண்: 419*

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *இதயங்கள் எப்போது தொண்டைக் குழியை அடைந்ததாக அல்லாஹ் கூறுகிறான் ?*

💠 *பதில் =*
_எதிரிகள் படையெடுத்து வந்த போது._

*ஆதாரம் = அல்குர்ஆன்: 33:10*

📃உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்த போது, (உங்களுடைய) இருதயங்கள் தொண்டை(க் குழி முடிச்சு)களை அடைந்து (நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி பலவாறான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்கு செய்த அருள்கொடையை) நினைவு கூருங்கள்.
(அல்குர்ஆன் : 33:10)

*ஹதீஸில் உள்ள கேள்வி👇*

🔵 *எவர்கள் வேதத்தில், பல பொருட்கட்கு இடம் அளிக்கும் வசனங்களை கடைப்பிடிப்பர்? என பெருமானார் கூறிய குர்ஆன் வசனம் எது❓*

💠 *பதில் =*
_இதயத்தில் கோளாறு உள்ளவர்கள்._

*ஆதாரம் =புகாரி:4547*
*முஸ்லிம்: 5179*

📃4547. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் 'கோணல்' உள்ளதோ, அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியார். அறிவில் முதிந்தவர்களோ 'இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன' என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளிகளன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை' எனும் (திருக்குர்ஆன் 03:7 வது) வசனத்தை ஓதிவிட்டு, 'முதஷாபிஹாத்தான வசனங்களைத் தேடித் திரிபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள் தாம் (இந்த வசனத்தில்) அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள் (என்பதைப் புரிந்து கொண்டு) அவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி.

📜5179. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நபியே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் (பொருள்) உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கும் வேறுசில வசனங்களும் (அதில்) உள்ளன. யாருடைய உள்ளத்தில் கோளாறு உள்ளதோ அவர்கள், வேதத்தில் பல பொருள்களுக்கு இடமளிப்பவற்றையே பின்தொடர்வர். குழப்பம் செய்ய விரும்பியும், அவற்றுக்கு (சுயமாக) விளக்கம் அளிக்க விரும்பியுமே (அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்).
ஆனால், அவற்றின் (மெய்ப்)பொருளை அல்லாஹ்வையன்றி வேறு யாரும் அறியார். கல்வியில் தேர்ந்தவர்கள், நாங்கள் அவற்றை நம்புகிறோம்; (அவை) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே" என்று கூறுவர். அறிவுடையோர் தவிர (வேறு யாரும் இதை) உணர்வதில்லை" (3:7) எனும் இறை வசனத்தை ஓதிவிட்டு, "பல பொருள்களுக்கு இடமளிக்கும் வசனங்களைப் பின்தொடர்வோரை நீங்கள் கண்டால், அவர்கள்தான் (இந்த வசனத்தில்) அல்லாஹ் குறிப்பிட்டுள்ள ஆட்கள் (என்பதை அறிந்து),அவர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்" என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
2. ஹக்கிம் - தென்காசி 2
3. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
4. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
5. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
6. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
7. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
8. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 1

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. அமீர் - அய்யம்பேட்டை(தஞ்சை) 1
2. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
3. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
4. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
5. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
6. ஹுசைன் - நாகர்கோவில் 2
7. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
8. சுல்தான் - திருநெல்வேலி 2
9. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
10. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
11. அப்துல் பாசித் - சவுதி 2

💠💠💠💠💠💠💠💠💠💠💠

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

💠💠💠💠💠💠💠💠💠💠💠

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 30- 03 - 2017
   
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

No comments:

Post a Comment