🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 420*
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
*குர்ஆனில் உள்ள கேள்வி👇*
🔴 *எவர்களுடைய நற்செயல்களையும் பாழாக்கிவிட்டதாக அல்லாஹ் கூறுகிறான்?*
💠 *பதில் =*
_உண்மையாக ஈமான் கொள்ளாதவர்களுடைய நற்செயல்களையும்._
*ஆதாரம் =அல்குர்ஆன்: 33:19*
*ஹதீஸில் உள்ள கேள்வி👇*
🔵 *எந்த இடத்திலிருந்து குழப்பம் தோன்றும் என பெருமானார் எந்த திசையை நோக்கி கூறினார்கள்❓*
📃(அவர்கள்) உங்கள் மீது உலோபத்தனத்தைக் கைக்கொள்கின்றனர். ஆனால் (பகைவர்கள் பற்றி) பயம் ஏற்படும் சமயத்தில், மரணத்தறுவாயில் மயங்கிக்கிடப்பவர்போல், அவர்களுடைய கண்கள் சுழன்று சுழன்று, அவர்கள் உம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; ஆனால் அந்தப் பயம் நீங்கி விட்டாலோ, (போர்க் களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற) செல்வப் பொருள்மீது பேராசை கொண்டவர்களாய், கூரிய நாவு கொண்டு (கடுஞ் சொற்களால்) உங்களைக் கடிந்து பேசுவார்கள்; இத்தகையோர் (உண்மையாக) ஈமான் கொள்ளவில்லை; ஆகவே, அவர்களுடைய (நற்) செயல்களையும் அல்லாஹ் பாழாக்கி விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்.
(அல்குர்ஆன் : 33:19)
💠 *பதில் =*
_ஷைத்தானின் கொம்பு அல்லது சூரியனின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து தோன்றும்.கிழக்கு திசையை நோக்கி கூறினார்கள்._
*ஆதாரம் = புகாரி* 3104,3279,3301,3498,3511,5296,7092*
*முஸ்லிம்:5565,5566,5568,5569*
📜3104. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, ஆயிஷா(ரலி) அவர்களின் உறைவிடத்தை (இராக் நாடு அமைந்துள்ள கிழக்குத் திசையை) நோக்கிச் சைகை செய்து, 'இங்கிருந்து தான் குழப்பம் ஏற்படும்' என்று மூன்று முறை கூறிவிட்டு, 'ஷைத்தானின் கொம்பு (தலையின் ஓரப்பகுதி) எங்கிருந்து உதயமாகிறதோ அங்கிருந்து...' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி.
🗒7092. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் அருகில் நின்றுகொண்டு, (ம்ழக்குத் திசையைக் சுட்டிக் காட்டி) 'குழப்பம் இங்குதான் தோன்றும்; குழப்பம் இங்குதான் தோன்றும். 'ஷைத்தானின் கொம்பு' அல்லது 'சூரியனின் கொம்பு' உதயமாகும் இடத்திலிருந்து' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி.
📖5565. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா (ரலி) அவர்களது வீட்டுவாசலில் நின்றுகொண்டு, கிழக்குத் திசையை நோக்கித் தமது கையால் சைகை செய்து, "குழப்பம், இங்கிருந்துதான் தோன்றும்; ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து" என்று இரண்டு அல்லது மூன்று முறை கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் உபைதுல்லாஹ் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
3. ஹக்கிம் - தென்காசி 2
4. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
5. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
6. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
7. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
2. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
3. ஹுசைன் - நாகர்கோவில் 2
4. சுல்தான் - திருநெல்வேலி 2
5. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
6. அப்துல் பாசித் - சவுதி 2
7. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
8. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
9. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
10. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
1. ஆயிஷா பர்வின் -இராஜகிரி(தஞ்சை) 1
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
📆பதிவு நாள் : 30 - 03 - 2017
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
No comments:
Post a Comment