🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 422*
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
*குர்ஆனில் உள்ள கேள்வி👇*
🔴 *நபிமார்களுக்கெல்லாம் இறுதி முத்திரை யார்❓*
💠 *பதில் =*
_முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்._
*ஆதாரம் = *அல்குர்ஆன்: 33:40*
📖முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் : 33:40)
*ஹதீஸில் உள்ள கேள்வி👇*
🔵 *எவர்களுடைய வீடுகளை எரித்து விடலாம் என நினைத்ததாக பெருமானார் கூறினார்கள்❓*
💠 *பதில் =*
_தொழுகையை நிலைநிறுத்தும்படி கட்டளையிட்டுவிட்டு தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது கூட்டுத் தொழுகைக்கு வருகை தராத மக்களின் வீடுகளுக்குச் சென்று அவற்றை எரித்து விடலாம் என்று நான் நினைத்ததுண்டு._
*ஆதாரம் = *புகாரி: 657,2420,7224*
*முஸ்லிம்: 1154,1155,1156*
📑657. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📃7224. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டு வந்து கள்ளிகளாக உடைக்கும்படி நான் உத்தரவு பிறப்பித்துவிட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்புச் செய்யும்படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி ஒருவருக்குக் கட்டளையிட்டுவிட்டு, (கூட்டுத் தொழுகைக்கு வராமல் இருக்கும்) மனிதர்களைத் தேடிச் சென்று, அவர்களின் வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்துவிட வேண்டுமென நான் எண்ணியதுண்டு. 84 என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஓர் எலும்போ அல்லது ஆட்டின் இரண்டு குளம்புகளுக்கிடையேயுள்ள இறைச்சித் துண்டுகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் 'இஷா' தொழுகையில் கலந்து கொள்வார்.
முஹம்மத் இப்னு சுலைமான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) 'மிர்மாத்' என்பது ஆட்டின் குளம்புகளுக்கிடையே உள்ள இறைச்சியைக் குறிக்கும். இது (வாய்பாட்டில்) 'மின்ஸாத்' மற்றும் 'மீளாத்' போன்றதாகும். இதிலுள்ள 'மீம்' எனும் எழுத்துக்கு 'இகர' அடையாளம் ('கஸர்') உண்டு.
ஸஹீஹ் புகாரி.
🗒1154. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை, இஷாவும் ஃபஜ்ரும் ஆகும். அவர்கள் அவ்விரு தொழுகைகளில் உள்ள சிறப்பை அறிவார்களானால் (முழங்கால்களில்) தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். நான் தொழுகைக்கு (பாங்கும்) இகாமத்(தும்) சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தலைமையேற்றுத் தொழுவிக்குமாறு பணித்துவிட்டுப் பிறகு விறகுக் கட்டைகள் சகிதமாக என்னுடன் மக்களில் சிலரை அழைத்துக்கொண்டு, கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத மக்களை நோக்கிச் சென்று, அவர்களை வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என எண்ணியதுண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
📜1156. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாத சிலர் குறித்து, "நான் ஒரு மனிதரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறிவிட்டு, பின்னர் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் (வீட்டில்) இருப்பவர்களை (நோக்கிச் சென்று அவர்களை) வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என எண்ணியதுண்டு" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
4. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
5. ஹக்கிம் - தென்காசி 2
6. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
7. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
2. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
3. ஹுசைன் - நாகர்கோவில் 2
4. அப்துல் பாசித் - சவுதி 2
5. சுல்தான் - திருநெல்வேலி 2
6. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
7. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
8. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
9. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
10. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1
🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸
*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
📆பதிவு நாள் : 30 - 03 - 2017
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
No comments:
Post a Comment