Sunday, 30 April 2017

கியாமத் நாளை நோக்கி ஏப்ரல் 2017 வெற்றியாளர்கள் பட்டியல்

கியாமத் நாளை  நோக்கி ஏப்ரல் 2017 வெற்றியாளர்கள் பட்டியல்:

🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌

🎁🎁🎁 *முதல் பரிசு* 🎁🎁🎁

*முதலாவது குழுமத்தில் உள்ள சகோதரர்👇*

 ராஜா முஹம்மது - கட்டுமாவடி (70)🏆

🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖

*🏆இரண்டாம் பரிசு🏅*

*இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோதரர்கள் :👇*

யாசர் அரஃபாத் - காயல்பட்டினம் (69)

சுல்தான் - திருநெல்வேலி (69)

💠💠💠💠💠💠💠💠💠💠💠
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

*🏆மூன்றாம் பரிசு*🏅

*முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்👇*

முஹம்மது ஹக்கீம் - தென்காசி (68)

சதாம் ஹூசைன் - திருநெல்வேலி (67)

🚏🚏🚏🚏🚏🚏🚏🚏🚏🚏🚏
🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕

*🏆சிறப்புப் பரிசு🏅*

*முதலாவது குழுமத்தில் உள்ள சகோதரர்👇*

🎗பீர் முஹம்மது - திருநெல்வேலி (65)

🎗அபூதல்ஹா - திருநெல்வேலி (65)

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

♻♻♻♻♻♻♻♻♻♻♻

*🎁🎁ஆறுதல்  பரிசு*🎁🎁

💍💍💍💍💍💍💍💍💍💍💍

🏅முஹம்மது சஃபி - வளையப்பட்டி (நாமக்கல்) (64)

🏅ஜாஹிர் ஹூசைன் - சென்னை (63)

🏅முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி(61)

*2வது குழுமத்தில் உள்ள சகோ👇*

🏅முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் (61)

🏅அப்துல் காதர் - திருநெல்வேலி(60)

🏅அம்மார் சவுதி (அதிராம்பட்டினம்) (58)

🏅அப்துல் பாசித் - சவுதி (53)

🏅ஹூசைன் - நாகர்கோவில் (28)

💍💍💍💍💍💍💍💍💍💍💍

இந்த குழுமத்தின் நோக்கத்தையும், கொள்கையையும் நீண்ட நாட்களாக கவனித்து நமது குழுமத்தை மேலும் ஒருபடி உயரத்திற்க்கு கொண்டு சென்று தங்களின் பங்களிப்பாக கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு பரிசளிக்கும் *_"இல்மிற்கு உதவும் கரங்கள் குழும சகோதரர்களுக்கு_ *கியாமத் நாளை நோக்கியின் நன்றிகளை துஆக்களாக எஞ்சுவோம்..*

*"இல்மிற்கு உதவும் கரங்கள்"* இறை பணி மேலும் உயர, சிறந்த நல்நோக்கங்களில் வெற்றி பெற இவ்வுலக வாழ்வில் நீண்ட ஆயுளுடன்  அனைத்திலும் வெற்றிபெற்று மறுமையில் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தார்க்கும் சுவனத்தை தந்தருள எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக - ஆமீன்.

*கியாமத் நாளை நோக்கியின்* பயணத்தை சிறந்த முறையில் நல்கிய ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்

*இதில் குழுமியுள்ள அனைவர்களையும் கியாமத் நாளை நோக்கி பயணிக்க நோக்கி அழைத்து செல்லும் தளமாக ஆக்கித்தர வல்ல ரஹ்மான் துணைபுரிவானாக* - _ஆமீன்_

*பரிசுகள் வென்ற அனைத்து சகோதரர்களுக்கும்  அல்லாஹ் மேன்மேலும் இல்மை அதிகமாக்கி  அருள்புரிவானாக..*

*" கியாமத் நாளை நோக்கியின் வாழ்த்துக்கள்"*

🎉🎉🎉🎁🎁🎁🎁🎉🎉🎉

_இக்குழுமத்தில் இணைந்திருக்கும் அனைத்து சகோதரர்களும் தினமும் கேட்கபடும் கேள்விக்கு பதிலளித்து இக்குழுமத்திலும் மறுமையிலும் வெற்றிபெற்றவர்களாக முயலுவோம்._

💐💐💐💐💐💐💐💐💐💐💐

*🌴 கியாமத் நாளை நோக்கி குழுமம் 🌴*                                  
_அட்மின் குழு_

பதிவு நாள்: *30-04-2017*





Friday, 28 April 2017

☪ரஜபில் நடந்த முக்கிய நிகழ்வுகளும் ,அதன் படிப்பினைகளும் தொடர் -5

2) கிலாஃபத் ஆட்சி முடிவடைந்தது ரஜபில்தான்

**********************************************
அண்ணல் நபி( ஸல்) அவர்களால் நிலைநாட்டப்பட்ட நபித்துவ அரசு.அவர்களின் மறைவிற்குப் பிறகு கிலாஃபா பேரரசாக விரிவடைந்தது 1924 ஆம் ஆண்டுவரை கம்பீரமாக உலகை மேலாண்மை செலுத்தியது. அந்த பேரரசின் கீழ் ஒரே கொடியின் கீழ் ஒரே கலீஃபாவின் கீழ் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமுதாயமாகப் பின்னிப் பிணைந்து பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். ஆனால் அதைச் சகித்துக் கொள்ள விரும்பாத நிராகரிப்புச் சர்வாதிகாரிகள் சதிகள். பேரங்கள். தந்திரங்கள். கூலிப்படைகள். கைக்கூலிகள் முதலான ஆள்.அம்பு. சேனை என்று அனைத்தையும் களத்தில் இறக்கிவிட்டு.நீண்ட கால முயற்சிக்குப் பின்னர் அந்தப் பேரரசை - உலக முஸ்லிம்களுக்கு எந்தப் பேரரசு பாதுகாப்புக் கேடயமாக விளங்கியதோ அந்தப் பேரரசை - ஹிஜ்ரி 1342 ஆம் ஆண்டு ரஜப் மாதம் 28 ஆம் நாள் அன்று( 03/03/1924) துண்டு துண்டாக உடைத்தெறிந்தார்கள்.

وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌ وَاصْبِرُوْا‌  اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‌‏ 

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 8:46).

முடிவுற்றது.

பதிவு நாள்: 28-04-2017

அல்லாஹ் "என்ற பெயரை கேவலபடுத்த சைத்தானின் தூண்டுதல்கள்

அனைத்து இஸ்லாமிய சகோதர்களுக்கும் ஒரு வேண்டுகோள்
"அல்லாஹ் "என்ற பெயரை கேவலபடுத்த சைத்தானின் தூண்டுதல்கள்
அதற்கு உடந்தையாக இணையதளத்தில்
இதுபோல் யாரேனும் பகிர்ந்து கொள்வது
இரண்டு காரணங்களாக அமைகிறது

1)அல்லாவின் பெயரை கொச்சைபடுத்த வேண்டும் என்பது போல் இப்படிபட்ட புகைப்படத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணங்கள் உள்ளவர்கள்

2.இரண்டாவது காரணம்
இது போன்றவை
யாரும் உபயோகம் செய்ய வேண்டாம்,
என்ற எண்ணங்களிலும்
இஸ்லாமியர்களுக்கு விழிப்புணர்வாகவும்
அவர்கள் இது போன்ற பொருட்களை வாங்க கூடாது
என்ற எண்ணங்கள் அடிப்படையில்
மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்கிறார்கள்.

அதே வேலையில் சற்று சிந்திக்கவும்
"அல்லா"என்ற பெயரை கேவலபடுத்தும் விதமாக
மனிதன் உபயோகிக்கும் காலணி, ஆடைகள்,
வீட்டின் வாசபடியில் காலால் மிதிக்கும் துணிகளிலும்
இருக்கின்றது
என்று அது போன்ற புகைபடத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வது சைத்தான்
நம் கைகளால் அப்படிபட்ட புகைபடத்தை
பகிர செய்கிறான் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்,
இது போன்ற பொருட்களை இஸ்லாமியர்கள் பயன்படுத்துவதில்லை
காவிகள் தான் பயன்படுத்துகிறார்கள் ஆனால்
இஸ்லாமியர்கள் செய்யும் தவறு இதை விளம்பரமாக
மற்றவர்களுக்கு பகிர்வதுதான்.

அப்படியென்றால் இதற்கு
என்ன முடிவு
இப்படிபோன்ற புகைப்படங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொள்வதற்கு பதிலாக

இதை தயார் செய்யும்
தயாரிப்பாளர்களை இதுபோல் தயாரிப்பதை நிறுத்திகொள்ள வேண்டும்
என்று
அவர்களிடம் அவர்கள் தொழிற்சாலைகள் முன்பு கண்டனம் தெரிவிக்க வேண்டும்
ஒரு போட்டாவை நீங்கள் பகிர்ந்து கொள்வதன் மூலம் நீங்கள் "அல்லாவுக்கு"நன்றிகடன் செலுத்தியதாக அர்த்தம் இல்லை ,
அதனால் எந்த பயனும் இல்லை
உங்களது கைகளால் இணையதளத்தில் மற்றவர்கள் கண்களில் பார்க்கும் படி "அல்லாவின்"
பெயரை சைத்தான் இழிவு படுத்துகிறான், உங்களிடம் இருந்து உங்கள் கைகளிலேயே அல்லாவின் பெயரை இழிவுபடுத்தும் விதமாக விளம்பரமாக்குகிறான் என்பதை இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்,

இது போன்ற பொருட்கள்
இஸ்லாத்தை ஏற்கும் மக்கள்
உபயோகிபதில்லை,
ஒரு வேளை அவன் இதை தெரிந்து கொண்டு வேண்டும் என்றே பயன்படுத்தினால்
அவன் இஸ்லாமியனே இல்லை,
தெரியாமல் இதை பயன்படுத்துபவன் என்றால்
அவர்கள் அறியாமையாக இருந்தாலும் கண் இருந்தும் குருடன்,
ஒரு குருடனிடம் சென்று எப்படி பார்க்க சொல்வீர்கள்,
அப்படி இதை உபோயோகிப்பவர்கள்
இஸ்லாமியர்கள் இல்லை,
இஸ்லாத்தை ஏற்காதவர்கள் தான் இதை பயன்படுத்துவார்கள்

🚩உங்களால் (காவிகளிடம்)
அவர்களிடம் சென்று "அல்லாவின்"
பெயரை இழிவுபடுத்துவதாக இருக்கும் காலணிகளை
வீட்டு உபயோகிக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்ல முடியுமா?
ஆனால் இப்படிபட்ட புகைபடத்தை இஸ்லாமியர்களுக்குள்ளே
இஸ்லாமியர்கள் விளம்பரம் செய்கிறார்கள்
இது எந்த வகையில்
நன்மை தரும் செயல்கள் என்று சிந்தியுங்கள்
"அல்லா" பெயரை இகழ்வது போல் பகிர்ந்து கொள்ளாமல்

அல்லா "என்ற பெயர்
என்றால் ஒருவன்
சுத்தம்
அனைத்து மொழிகளிலும் ஒரே பெயரை உடையவன்
"லா"
இது போன்று
மற்றவர்களுக்கு புரியும் படி
அவனுக்கு புகழ் சேர்ப்பதாக
புகழ்ச்சியாக இது போன்று
மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்,
முஹம்மத் ரசூல் (சல்அலை)
உம்மத்தவர்களே
சிந்தியுங்கள்
"அல்லா"என்ற பெயரை இழிவு படுத்துவதாக உங்கள் அறியாமையை பயன்படுத்தி
சைத்தான் உங்களது கைகளில் மூலம் இந்த இணையதளத்தில் பகிர செய்கிறான்,
இணையதளம் இன்றைய காலசூழ்நிலையில்
மிக அவசியாக உள்ளது
ஆக இதுபோன்ற செய்திகளை பகிர்வது வேண்டாம் என்று இஸ்லாமிய சகோதரர்களுக்கு அனைவருக்கும் வேண்டுகோள்.

  "அல்லாவின் "சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக.

முஸ்லிம்.

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
_அட்மின் குழு_
பதிவு நாள்: *28-04-2017*

Thursday, 27 April 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻

அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும்.
"

   📚 அல்குர்ஆன் 22:1

💢💢💢💢💢💢💢💢💢💢💢
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

" நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு மனிதர் தம் மனைவியிடம் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தார்; பின்னர் அவ்விருவரையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரித்து வைத்தார்கள்; மேலும், குழந்தையைத் தாயிடம் சேர்த்தார்கள்" என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் தங்களுக்கு அறிவித்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு மாலிக் (ரஹ்) அவர்கள் "ஆம்” என்று பதிலளித்தார்கள்."

🎭அறிவிப்பவர்:
யஹ்யா பின் யஹ்யா (ரஹ்)


📓நூல்:
ஸஹீஹ் முஸ்லிம்-2992

🌱🍃🌱🍃🌱🍃🌱🍃🌱🍃🌱

*🔴நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் தொடர் - 50*

*🎯கிலாஃபத் இறையாட்சியை ஆதரிக்கலாமா❓❓❓*

*🔘சூழல் காரணமாக ஓர் இறைமறுப்பாளரை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் ஜெயலலிதாவையோ கருணாநிதியையோ ஆதரிப்பது தவறில்லை என்கிறீர்கள். சரி,அதே போல உலகில் எங்காவது ஒரு பகுதியில் கிலாஃபத்இறையாட்சி ஆட்சி ஏற்பட்டால் அதை ஆதரிப்பீர்களா❓❓❓*

🔘ஒரு ஆட்சியை கிலாபத் என்றும் இறையாட்சி என்றும் சொல்லிக் கொண்டால் அது சரியான ஆட்சியாகிவிட முடியாது. அது இஸ்லாமிய ஆட்சியாகவும் முடியாது.

🔘இஸ்லாமிய ஆட்சி என்றால் இஸ்லாமிய சட்டதிட்டங்களை வளைந்து கொடுக்காமல் அப்படியே பின்பற்றுவதாகும். இப்படிப்பட்ட ஆட்சி இன்று உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லை. இஸ்லாமிய நாடுகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் நாடுகளிலும் இல்லை.

🔘இஸ்லாத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்ற அடிப்படையில் இஸ்லாமிய ஒழுங்கு முறைகளையும் நெறிமுறைகளையும் மீறி நடப்பவர்கள் இஸ்லாமிய ஆட்சிக்கு அழைப்பு விட்டால் அந்த அழைப்பு பொய்யானது. போலியானது. இவர்களை நம்பி இவர்களுக்குப் பின்னால் செல்லக் கூடாது. இந்த அழைப்பை விடுவதற்கு இவர்களுக்கு எள்ளளவு கூட தகுதி இல்லை.

🔘இஸ்லாமிய ஆட்சி என்றால் திருக்குர்ஆனையும் ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் ஆட்சி தான். அப்படி எந்த ஆட்சியும் இப்போது உலகில் எங்கும் இல்லை. இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதாக படம் காட்டும் இயக்கங்களும் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் என்ற கொள்கையில் இல்லை. மாறாக இக்கொள்கையின் முழு எதிரிகளாக உள்ளனர்.

🔘எனவே இஸ்லாமிய ஆட்சியும் இப்போது இல்லை. அதைக் கொண்டு வருவதாக ஜாலம் காட்டுவோர் ஆட்சிக்கு வந்தாலும் அது இஸ்லாமிய ஆட்சியாக இருக்காது. இஸ்லாமிய ஆட்சி என்ற கொள்கையின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்களான இக்வானுல் முஸ்லிமீன் எகிப்தில் நடத்தும் இஸ்லாமிய ஆட்சி(?) இதற்கு நல்ல உதாரணம்.

(♻இன்ஷா அல்லாஹ் வேறொரு பிரச்சினை மற்றும் தீர்வுடன் தொடரும்♻)

பதிவு நாள்: 28-04-2017

☪ரஜபில் நடந்த முக்கிய நிகழ்வுகளும் ,அதன் படிப்பினைகளும் தொடர் -4 ☪

1) ரஜப் பைத்துல் முகத்தஸ் மீட்கப்பட்ட புரட்சி மாதம்

**********************************************
11,12, 13. ஆகிய நூற்றாண்டுகளில் நடைபெற்ற சிலுவைப் போர்களின் காலத்தில் அந்தப் புனித மிக்கப் பள்ளியும் புனிதமிக்கப் பகுதியும் நிராகரிப்பாளர்களின்  அதிகாரத்தின் கீழ் சென்றது.இதனால் உலக முஸ்லிம்கள் அனைவரும் மிகுந்த துக்கமும் கவலையும் மனவேதனையும் அடைந்தார்கள்.அதை மீட்கும் நாள் இனி வராதா என்று ஏங்கினார்கள்.

அன்றைய இஸ்லாமிய பேரரசுக்குள் நிகழ்ந்த உள்ளார்ந்த குழப்பங்களும் சுமார் 200 ஆண்டுகாலம் நடைபெற்ற சிலுவைப் போர்கள் தோற்றுவித்திருந்த உயிர் மற்றும் பொருளாதார இழப்பும் இஸ்லாமியப் பேரரசை மிகவும் பலவீனப் படுத்தி இருந்தது இதனால் குதுஸூம் பைத்துல் முகத்தஸூம் நிராகரிப்பாளர்களிடமிருந்து மீட்கப்படும் வாய்ப்பே இனி இல்லை என்றும் ஒரு வேளை அவை மீட்கப்பட்டு விட்டால் அது உலக வரலாற்றில் ஒரு தலைகீழ் புரட்சியாகத்தான் இருக்க முடியும் என்றும் கணிசமானோர் கருதினார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் எல்லாம் வல்ல அல்லாஹ் இஸ்லாமிய கிலாஃபா பேரரசின் தளபதியும் ஆட்சியாளருமான சுல்தான் சலாஹூத்தீன் அய்யூபி( ரஹ்) அவர்கள் மூலம் பைத்துல் முகத்தஸையும் அதைச் சுற்றியுள்ள குதுஸ் பகுதியையும் நிராகரிப்பாளர்களின் கரங்களிலிகுந்து இதே ரஜப் மாதத்தில் மீட்டெடுத்து மீண்டும் இஸ்லாமிய பேரரசின் மடியில் தவழச் செய்தான். அதனால் உலக முஸ்லிம்களின் துக்கமும் கவலையும் வேதனையும் மறைந்து மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது.

மேலும் பைத்துல் முகத்தஸ் மற்றும் குதுஸ் ஆகியவற்றின் மீட்பு ரஜப் மாதத்தில் நடந்தது. அதைத் தொடர்ந்து இரண்டே மாதங்களில் சிரியா உள்ளிட்ட இஸ்லாத்தின் நிலப்பரப்புகள் சிலுவைக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டது.

வியக்கத்தகு சம்பவம் ஒன்று:

**********************************
மன்னர் சுல்தான் சலாஹூத்தீன் நல்ல முறையில் எகிப்து நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கும் தருணத்தில் மீண்டும் ஜெருசலத்தை பிடிப்பதற்காக ஐரோப்பிய கிருஸ்தவர்கள் பெரும் படை ஒன்றை திரட்டி வந்தார்கள். இப்படைக்கு தளபதியாக இங்கிலாந்தைச் சார்ந்த முதலாம் ரிச்சார்டு என்ற மன்னர் தலைமை தாங்கினார். இப்போர் பாலைவனத்தில் பல நாட்கள் நடந்தது. அவ்வேளையில் ரிச்சார்டுக்கு விஷக்காய்ச்சல் ஏற்பட்டு உயிர் போகும் நிலையில் இருக்கிறார். அவர்களின் ஆங்கில மருந்து எந்த பலனையும் தரவில்லை. ஒரு நாள் ஒரு வைத்தியர் ரிச்சார்டின் கூடாரத்திற்கு முன்பு வந்து நின்று என்னை வைத்தியம் செய்வதற்காக சலாஹூத்தீன் என்ற அரசர் அனுப்பி வைத்தார் எனக்கூற  அங்கிருந்தவர்கள் அவரை சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்கள். இதையறிந்த வைத்தியர் உங்கள் தளபதிக்கு மருந்து கொடுக்குமுன் அதை நான் சாப்பிட்ட பிறகே கொடுக்கிறேன் எனக் கூறினார். அவர்களும் அனுமதித்தார்கள். மருத்துவம் செய்தார் வைத்தியர். நோயும் குணமடைந்தது. மன்னர் ரிச்சார்டு மனம் திருந்தி சமாதான உடன்படிக்கையை சமர்ப்பித்தார். சுல்த்தான் சலாஹூத்தீன் அவர்களின் அரசவைக்கு மன்னர் ரிச்சார்டு நேரில் சென்றார். சுல்தான் சலாஹூத்தீன் ரிச்சார்டுவை அன்புடன் வரவேற்றார். என்ன ஆச்சர்யம்! மன்னர் ரிச்சார்டுவின் கண்கள் படபடத்தன. என் நோயினை போக்க வைத்தியராக வந்தவர் சுல்தான் சலாஹூத்தீன் அவர்களா? இத்தகு வீரரை நான் கேள்விப்பட்டது கூட இல்லை. என்னை மன்னித்து விடுங்கள் எனக் கூறி கரம்பற்றி அழுகிறார். இதுவல்லவா மனித நேயம் ஆம் இஸ்லாம் இதைத்தான் போதிக்கிறது.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 28-04-2017

Wednesday, 26 April 2017

☪ரஜபில் நடந்த முக்கிய நிகழ்வுகளும் ,அதன் படிப்பினைகளும் தொடர் -3 ☪


வரலாற்றுச் சிறு குறிப்பு

*******************************
🇬🇷ஜெருஸலம் நகரானது கி.பி.637 ஹிஜ்ரி16 ல் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் முஸ்லீம்களால் மீட்டிக் கொண்டு வரப்பட்டது.  இது வரை இருந்து வந்த அடக்குமுறை ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதற்கு முன் அந்தப் பகுதியை எகிப்தியர்களும், கிரேக்கர்களும், பெர்ஸியர்களும் பின்பு ரோமர்களாலும் மாறி மாறி ஆட்சி செய்து வந்தார்கள். ரோமர்களை எர்முக் என்ற இடத்தில் வைத்து போர் செய்து முஸ்லிம்கள் வெற்றி பெற்றவுடன், இந்த அடக்குமுறைகள் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. ரோமர்களின் கவர்னராக இருந்து ஆட்சி செய்து வந்தவர், புனித நகரை விட்டு ஓடிச் சென்று, முஸ்லிம்களிடம் சரணடைந்து, அமைதி ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இது போலவே இன்னும் ஏனைய நகரங்களும் முஸ்லிம்களுடன் அமைதி ஒப்பந்தங்கள் செய்து கொண்டன. ஆனால் மற்ற நகரங்களின் மக்கள் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்திற்கும், ஜெருஸலம் நகர மக்கள் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்திற்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. அதாவது, முஸ்லிம்களின் இரண்டாவது கலீபாவாக மதினா நகரில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் உமர் (ரலி) அவர்கள் நேரடியாக வந்து இந்த நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதே, அந்த மக்களின் வேண்டுகோளாக இருந்தது.

♻மேலும் பைத்துல் முகத்தஸ் உடைய சாவியை முஸ்லிம்களின் படைத்தளபதி அபூ உபைதா( ரலி) அவர்களிடம் ஒப்படைக்க அனைத்து பாதிரிகளும் ஒப்புக் கொண்ட போதிலும் அவர்களில் வயது முதிர்ந்த ஒரு பாதிரி மறுத்துவிட்டார். காரணம் இந்த சாவியை வாங்குவதற்கு தகுதி உடையவர் உமர் ( ரலி) அவர்கள்தான் எனவே அவரிடம்தான் ஒப்படைப்பேன் என்றார். அவ்வாறு அந்த பாதிரி கூறியதற்கும் ஒரு காரணம் உண்டு. உமர் ( ரலி) அவர்களுக்கு 25 வயது இருக்கும் சமயத்தில் நபி( ஸல்) அவர்களுக்கு நபி பட்டம் வழங்கப்படுவதற்கு முன்பு உமர் ( ரலி)  அவர்கள் வியாபார நிமித்தம் ஷாம் தேசம் சென்றிருந்தார்கள் அங்கு அவர்கள் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒருவன் வேண்டுமென்றே தகராறு செய்தான். அவனை உமர் ரலி ஓங்கி அடிக்க அவன் இறந்து விடுகிறான். மக்கள் உமர் (ரலி) அவர்களை அடிக்க துரத்தி வருகின்றார்கள் உமர் ரலி பைத்துல் முகத்தஸில் நுழைந்து விடுகிறார்கள் அங்கே ஒரு பாதிரி இருக்கிறார் அவரிடம் நடந்த விபரத்தை கூறுகின்றார்கள். இதைக்கேட்ட பாதிரி இவ்வாறு கூறினாராம் ஒரு காலம் வரும் அன்று இந்த நகரத்தையும் இந்த பைத்துல் முகத்தஸையும் நீங்கள் வெற்றி கொள்வீர்கள்  அன்றைய நாளிள் என் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று இப்பொழுதே எனக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்றார். உமர் ரலி அவர்களுக்கு அவர் சொன்னது புதிராக இருந்தது நான் இந்த நகரத்தை வெற்றி கொள்வேனா? என்று வியந்தார்கள். மீண்டும் மீண்டும் பாதிரி வற்புருத்தவே வேறு வழியின்றி கையெழுத்திட்டார்கள். எனவேதான் அந்த பாதிரி உமர் வரவேண்டும் அவரிடம்தான் சாவியை ஒப்படைப்பேன் என்றார்.

🌾இதனையறிந்த உமர் (ரலி) அவர்கள், அலி (ரலி) அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, ஜெருஸலம் நகர் வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றாார்கள். பைத்துல் முகத்தஸ் சாவியை அந்த பாதிரி ஒப்படைக்கும் பொழுது உமர் ரலி எழுதிக் கொடுத்த சீட்டையும் கான்பித்தார் அப்பொழுதுதான் தம்முடைய 25 ஆம் வயதில் நடந்த அந்த நிகழ்வு அவர்களுக்கு ஞாபகம் வந்ததாம். இதுவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் எல்லாம், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, அந்த மக்களை அடக்குமுறையின் கீழ் வைத்திருந்ததற்கு மாறாக, உமர் (ரலி) ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அன்றே அந்த மக்கள், இஸ்லாத்தின் உன்னதத்தைக் கண்டு கொண்டார்கள்.

🚩தொழுகைக்கான நேரம் வந்த சமயத்தில், உமர் (ரலி) அவர்களை கிறிஸ்த்தவர்களின் கோயிலில் தொழுது கொள்ளும்படி அந்த மக்கள் வேண்டிக் கொண்ட பின்பும், அதில் தொழ மறுத்துவிட்டதுடன், பின்பு வரக் கூடிய என்னுடைய சமூகம் இது எங்கள் உமர் நின்று தொழுத இடம் என்று வாதிடாமல் இருக்கத் தான் நான் தொழ மறுக்கின்றேன் என்று கூறி அன்றே அந்த மக்களின் மத, மற்றும் சகோதர நல்லிணக்கத்திற்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார்கள். மேலும், அங்கு வாழக்கூடிய மக்களின் மத வணக்க வழிபாடுகள், அவர்களின் சின்னங்கள், வணக்கத் தளங்கள் ஆகியவற்றை எக்காரணம் கொண்டும் , ஆக்கிரமிக்கவோ, அகற்றவோ கூடாது என உமர் (ரலி) அவர்கள் முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

🎓மேற்கண்ட இந்த உத்தரவு அங்கு வாழ்ந்த கிறிஸ்த்தவர்களுக்கு மட்டுமல்ல, யூதர்கள் விஷயத்திலும் இந்தக் கொள்கையைக் கடைபிடிக்குமாறு உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள். இந்தப் புண்ணிய பூமியில் வாழ்ந்த இவர்கள், நிம்மதியாக யார் காலத்தில் வாழ்ந்தார்கள் என்றால், அது கிறிஸ்த்தவர்களான ரோமானியர்களின் ஆட்சிக் காலத்தில் அல்ல. மாறாக அது முஸ்லிம்களின் ஆட்சிக்காலத்தில் தான் என்பது உண்மையான வரலாறாகும். உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற அந்தக் காலத்தில் யூதர்களும், கிறிஸ்த்தவர்களும் தங்களுக்குள் கடுமையான பகைமையைக் கொண்டிருந்தார்கள். காரணம், கிறிஸ்த்தவர்களான ரோமர்கள் யூதர்களைப் படுகொலை செய்ததது மட்டுமல்லாது, கி.பி. 325 ல் அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்து கொண்டிருந்த ரோமப் பேரரசர் காண்ஸ்டான்டின் என்பவர், யூதர்களை ஜெருஸலம் உட்பட்ட பகுதிகளுக்குள் வரவே கூடாது என்ற ஒரு உத்தரவையும் பிறப்பித்தார்.

🌎முஸ்லிம்கள் ஜெருஸலம் நகரைக் கைப்பற்றிய பின்னர் தான், அவர்கள் இந்தப் புனித பூமிக்குள்ளேயே நுழைய முடிந்தது. ஆக, இந்த யூதர்கள் எங்கெங்கு வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் அவமானப்படுத்தப்பட்டார்கள். ஆனால், முஸ்லிம்களின் ஆட்சியில் தான் இவர்கள் நிம்மதியைப் பெற்றார்கள்.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *27-04-2017*

Tuesday, 25 April 2017

☪ரஜபில் நடந்த முக்கிய நிகழ்வுகளும் ,அதன் படிப்பினைகளும் தொடர் -2 ☪


பூமியில் இரண்டாவதாக கட்டப்பட்ட பள்ளிவாசல்
3366- حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا الأَعْمَشُ حَدَّثَنَا إِبْرَاهِيمُ التَّيْمِيُّ عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ أَبَا ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الأَرْضِ أَوَّلُ قَالَ: ((الْمَسْجِدُ الْحَرَامُ)). قَالَ قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ: ((الْمَسْجِدُ الأَقْصَى)). قُلْتُ كَمْ كَانَ بَيْنَهُمَا قَالَ: ((أَرْبَعُونَ سَنَةً، ثُمَّ أَيْنَمَا أَدْرَكَتْكَ الصَّلاَةُ بَعْدُ فَصَلِّهْ، فَإِنَّ الْفَضْلَ فِيهِ)).

3366. அபூ தர்(ரலி) அறிவித்தார்  நான் (நபி(ஸல்) அவர்களிடம்),“இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?“ என்று கேட்டேன். அவர்கள்,“அல் மஸ்ஜிதுல் ஹராம் - மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்” என்று பதிலளித்தார்கள். நான்,“பிறகு எது?“ என்று கேட்டேன். அவர்கள்,“ஜெரூஸத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா” என்று பதிலளித்தார்கள். நான்,“அவ்விரண்டுக்கு மிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது” என்று கேட்டேன். அவர்கள்,“நாற்பதாண்டுகள்” (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு,“நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி.

நன்மை அதிகம்

********************
) وعن أبي الدرداء وجابر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: «فضل الصلاة في المسجد الحرام على غيره مائة ألف صلاة، وفي مسجدي هذا ألف صلاة وفي مسجد بيت المقدس خمسمائة صلاة» أخرجه البيهقي في السنن الصغرى رقم (1821) وصححه الألباني في صحيح الجامع (4211).

மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவதற்கு ஒரு லட்சம் நன்மைகளும் .மஸ்ஜிது நபவியில் தொழுவதற்கு ஆயிரம் மடங்கு நன்மைகளும். பைத்துல் முகத்தஸில் தொழுவதற்கு 500 மடங்கு நன்மைகளும் கிடைக்கும் என்று நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தஜ்ஜால் நுழைய மாட்டான்

****-****************************

عن جنادة بن أبي أمية الأزدي قال: "ذهبت أنا ورجل من الأنصار إلى رجل من أصحاب النبي صلى الله عليه وسلم فقلنا حدثنا ما سمعت من رسول الله صلى الله عليه وسلم يذكر في الدجال، فذكر الحديث وفيه "علامته يمكث في الأرض أربعين صباحا، يبلغ سلطانه كل منهل، لا يأتي أربعة مساجد: الكعبة ومسجد الرسول، والمسجد الأقصى والطور" رواه أحمد .கியாமத்நாள் சமீபமாக தஜ்ஜால் வருவான் பூமியில் நாற்பதுநாள் தங்குவான் அனைத்து இடங்களுக்கும் செல்வான் ஆனால் நான்கு இடங்களுக்கு அவன் வரமாட்டான்.1 கஃபா. 2மஸ்ஜிதுன் நபவி 3 மஸ்ஜிதுல் அக்ஸா 4 தூர்சினா மலை என்று நபி ( ஸல்) கூறினார்கள். நூல் அஹ்மத்

ஃபலஸ்தீன முஸ்லிம்களுக்கு நிச்சயம் வெற்றி உண்டு

***************************************

* طائفة من أهلها على الحق ظاهرين إلى قيام الساعة

لما روى أبو أمامة الباهلي, قال: قال رسول الله صلى الله عليه وسلم: "لا تزال طائفة من أمتي على الدين ظاهرين لعدوهم قاهرين، لا يضرهم من خالفهم.. قالوا: فأين هم؟ قال: ببيت المقدس وأكناف بيت المقدس" (رواه أحمد ).இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”என்னுடைய உம்மத்தில் ஒரு குழுவினர் சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக தொடர்ந்தும் போராடிக் கொண்டே இருப்பார்கள், இன்னும் (இறுதி) நேரம் வரும் நேரத்தில் அவர்கள் தங்களது எதிரிகளை வென்றெடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.” அப்பொழுது ஒருவர் கேட்டார் : இறைத்தூதர் (ஸல்) அவர்களே.., அவர்களை நாங்கள் எங்கே காண்பது? அதற்கு, ”அவர்கள் பைத்துல் முத்திஸிலும், அதனைச் சுற்றிலும் (வாழ்ந்து கொண்டு) இருப்பார்கள்” என்றார்கள். (அஹ்மத்)


* حرص الأنبياء والصالحين على زيارة المسجد الأقصى

والصلاة فيه والسكن في بيت المقدس ومجاورة الأقصى, فقد زار بيت المقدس عمر بن الخطاب وأبو عبيدة وسعيد بن زيد وأم المؤمنين صفية وأبو الدرداء وسلمان الفارسي وعمرو بن العاص رضي الله عن الجميع

நபிமார்கள் நல்லடியார்கலெல்லாம் மஸ்ஜிதுல் அக்ஸாவை ஜியாரத் செய்ய வேண்டும் அதில் தொழ வேண்டும் அங்கு தங்க வேண்டும் என்றே விரும்பினார்கள்.

உமர் ( ரலி) அபூ உபைதா ( ரலி) சயீத் இப்னு ஜைத் ரலி ஸஃபிய்யா ரலி அபூதர்தாஉ ரலி சல்மான் பாரிஸ் ரலி அம்ருப்னுல் ஆஸ் ரலி ஆகிய சகாபாக்கல்அதை ஜியாரத் செய்துள்ளார்கள்.

எனவே வாழ்க்கையில் ஒருமுறையேனும் நாமும் இப்பள்ளிக்கு சென்று வருவோம்

عن أبي سعيد الخدري -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد: المسجد الحرام، ومسجدي هذا، والمسجد الأقصى متفق عليه1189. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:  “மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதன் னபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புஹாரீ.

*🔴நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் தொடர் - 48*


*🎯இஹ்வான்கள் என்ற கூட்ட்த்தினர் இசை கேட்பது இஸ்லாத்தில் தடுக்கப்படவில்லை என்கிறர்கள. இது பற்றி விளக்குக!*

🔘இஸ்லாம் இசையைத் தடைசெய்துள்ளது. இதற்கான ஆதாரங்களையும் இசை கேட்பது கூடும் என்று சொல்பவர்கள் வைக்கும் வாதங்களுக்கு சரியான பதிலையும் நமது இணையதளத்தில் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம்.

🔘இசை கேட்பது கூடும் என்று இக்வான்கள் என்போரும் நமது நாட்டில் அவர்களைப் பின்பற்றுவோரும் கூறுகிறார்கள். இவர்களைப் பற்றி ஒரு விஷயத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

🔘இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் கொள்கை எனக் கூறும் இவர்கள் இதற்கேற்ப நடப்பதில்லை. இஸ்லாத்தை மற்ற மக்களிடம் போதனை செய்வதையோ தங்கள் வாழ்வில் முழுமையான இஸ்லாத்தை கடைபிடிப்பதையோ இவர்களிடம் பார்க்க முடியாது.

🔘இஸ்லாமிய மார்க்கத்தைப் பயன்படுத்தி எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும். ஆட்சி கிடைக்காவிட்டாலும் ஆட்சி செய்பவன் காபிராக இருந்தாலும் இணைவைப்பாளனாக இருந்தாலும் அந்த ஆட்சியில் ஒரு எம்பி யாகவாது வர வேண்டும். அல்லது ஒரு எம் எல் ஏ சீட்டாவது வாங்க வேண்டும். இதை விடவும் கீழ் நிலையில் உள்ள பதவி கிடைத்தாலும் சரி. இதுவே இவர்களின் நோக்கம்.

🔘அரசியல் பதவி ஒன்றே இவர்களின் இலக்கு. இதற்காக இவர்கள் எப்படிப்பட்ட கேவலமான காரியத்தையும் செய்வார்கள். வணக்கம் சொல்வார்கள். விநாயகர் சதூர்த்தி, பொங்கல் தீபாவளி ஆகிய மாற்றுமத பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறி பேனர்கள் வைப்பார்கள். தேசியக் கொடியை வணங்குவார்கள். கேட்டால் முஸ்லிமல்லாத மக்களும் எங்கள் இயக்கத்தில் உள்ளனர் என்பார்கள். அப்படியானால் இஸ்லாத்தின் பெயரால் ஏன் கட்சி நடத்த வேண்டும்? இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வரப்போகிறோம் என்று மக்களை ஏன் ஏமாற்ற வேண்டும்? மற்ற அர்சியல் கட்சிகளைப் போல் நாங்களும் ஒரு அர்சியல் கட்சி என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியது தானே?

🔘இந்த அடிப்படையில் தான் இவர்கள் இசை கூடும் என்று கூறிவருகிறார்கள். இசை பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் என்ன சொன்னார்கள் என்று இவர்கள் பார்க்கவில்லை. இதுவெல்லாம் இவர்களுக்குத் தேவையுமில்லை. இது பற்றி பேச அழைத்தால் முன்வரமாட்டார்கள்.

🔘இவர்களின் தேர்தல் பிரச்சாரத்துக்கு இசை பயன்படுகின்றது என்ற ஒரு காரணத்துக்காகவே இசை கூடும் என்று கூறுகின்றனர். சுய நலனுக்காக மார்க்கத்தில் விளையாடும் இவர்களை சமுதாயம் அடையாளம் காண வேண்டும்.

🔘இவர்களின் இஸ்லாமிய ஆட்சி இலட்சணம் எகிப்தில் இவர்கள் நடத்தும் ஆட்சியே தக்க சான்றாக உள்ளது.

(♻இன்ஷா அல்லாஹ் வேறொரு பிரச்சினை மற்றும் தீர்வுடன் தொடரும்♻)

பதிவு நாள்: *24-04-2017*

🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 4🐠

🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 4🐠

நீங்கள் அவரை அழைத்து செல்வது எனக்கு கவலையை தருகிறது நீங்கள் விளையாடி கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு பாரமுகமானால் அவரை ஓநாய் தின்றுவிடுமே என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்.
அதற்கு அவர்கள் ஒரு கூட்டடினராக நாங்கள் இருந்தும் எங்களை மீறி அவரை ஓநாய் தின்றுவிடுமானால் நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகி விடுவோம் என்று கூறினார்கள் இதனை கண்ட நமது தந்தை நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் இவ்வாறு அலைகிறார்கள் அப்படியாவது சகோதர் மீது பாசம் வரட்டும் என்று அவர்களுடன் அனுப்பி வைத்தார்கள் அவ்வாறே அந்து பத்து சகோதரர்களும் திட்டம் செய்தது போல்  அவர்கள் ஒரு பாழடைந்த ஒரு கிணற்றுக்குள்  தள்ளி விட்டார்கள்.
அப்பொழுது அல்லாஹ்  நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு வகி அறிவித்தான் நிச்சயமாக இந்த காரியத்தை பற்றி ஒரு நாள் நீர் அந்த சகோதர்களுடன் கேட்பீர் என்று,
அவ்வாறு இருக்க பொழுது சாய்ந்த வேளையில் அவர்கள்   தங்கள் தந்தையிடம் அழுதவர்களாக ஓடினார்கள்.
தந்தையே நாங்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு விளையாடி கொண்டு யூசுபிடம் எங்களது பொருட்களை கொடுத்துவிட்டு விளையாட சென்று விட்டோம் அந்த சமயத்தில் யூசுபை ஓநாய்  அடித்து தின்று விட்டது .நாங்கள் எவ்வளவு உண்மையாளர்களாக இருந்தும் நீங்கள் எங்களை நம்ப கூடியவர்களாக இல்லை என்று கூறினார்கள் மேலும் தங்களது வாதத்தை வலுப்படுத்த நபி யூசுப் அலைஹி  வசல்லம் அவர்களது சட்டையை கழற்றி அதில் பொய்யான ரத்தத்தை நனைத்து நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள்   எவ்வளவுதான் திருடன் புத்திசாலியாக இருந்தாலும் ஒரு சிறிய தடயத்தை விட்டிருப்பான் அவ்வாறு  அந்த சட்டையை நபி யாகூப் அலைஹி  வசல்லம்  அவர்கள் கண்டபொழுது அந்த சட்டை எங்கும் கிழியாமல் இருப்பதை கண்ட அவர் புரிந்துகொண்டார்.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *24-04-2017*

🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 7

🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 7🐠

நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் இந்த பெண்ணிடம் இருந்து தற்காத்து கொள்ள வாசலின் பக்கம் ஓடினார் அவள் அதை தடுக்க அவரின் சட்டையை பின்புறமாக இழுத்தால் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது சட்டை கிழிந்து விட்டது வாசலில் அவளுடைய கணவரை இருவரும் கண்டதும் அவள் தப்பிக்க அவரிடம் உம்முடைய மனைவியை துன்புறுத்த நாடியவருக்கு என்ன தண்டனை உங்கள் சட்டத்தில் சிறை தண்டனையா அல்ல துன்புறுத்தும் தண்டனையா என்று கேட்டாள்.
(இதை மறுத்து யூஸுஃப்;) “இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்” என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்: “இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.
“ஆனால் இவருடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்தால், அவள் பொய் சொல்லுகிறாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்.”என்று கூற,

நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களின் சட்டையை பார்த்தபொழுது   அந்த சட்டை பின்புறமாக கிழிந்திருந்ததை கண்ட அந்த பெண்ணின் கணவன்  அந்த பெண்ணிடம் நிச்சயமாக இது பெண்களாகிய உங்களுடைய சூழ்ச்சியே தவிர வேறில்லை. மேலும் அவர் கூறினார் பெண்களாகிய உங்களுடைய சூழ்ச்சி மிகவும் மகத்தானது என்று, இந்த வாக்கு எவ்வளவு உண்மை என்பதை இன்று கூட நாம் அறியலாம். எந்த பெண்ணாவது ஒரு ஆணை பார்த்து தவறாக கூறினால் உடனே நம்மக்கள் பெண்களின் பேச்சைத்தான் கேட்பார்கள் அதற்க்கு ஆயிரம் காரணம் கூறுவார்கள் . அதில் உண்மையும் இருக்கலாம் அனால் சில பொய்யான கூற்றையும் பெண்கள் கூறினால் அது நம்பபட்டுவிடும் .

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *25-04-2017*

🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 6🐠

🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 6🐠

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அந்த வீட்டிலேயே வாழ்கிறார் .
அல்லாஹ்  கூறுகிறான் இன்னும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் தனது வாலிபத்தை அடைந்த பொழுது அவர்களுக்கு மார்க்க அறிவையும்  சட்ட நுணுக்கங்களையும் கற்று கொடுத்தோம் இவ்வாரே நாம் நன்மை செய்வோருக்கு நாம் கூலியை தருகிறோம் .
நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் வாழ்ந்து வந்த அந்த வீட்டில் அவரது எஜமானனின்  மனைவி அந்த பெண்ணின் பெயர் சுலைகா   என்று மார்க்க அறிஞர்களால் அழைக்க படுகிறது அனைத்தையும் அல்லாஹுவே அறிந்தவன் அந்த பெண் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அவர்களுடைய அழகில் மயங்கி அவர்கள் மேல் காதல் கொண்டாள். மேலும் இவரை அடைய சந்தர்ப்பம் தேடி காத்துக்கொண்டிருந்த அந்த பெண் தன் கணவன் இல்லாதபொழுது  அந்த பெண் அணைத்து கதவுகளையும் மூடிவிட்டு என்னிடம் வாரும் என்றழைத்தாள். அவ்வாறு அழைக்கும் தருவாயில் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் இந்த தீய செயலில் இருந்து அல்லாஹுவிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் எனது எஜமான் என்னை நல்ல  முறையில் நடத்தும்பொழுது அவருக்கு துரோகம் இளைத்தால் அணியாயகாரர்களில் ஒருவனாக நான் ஆகி விடுவேன் என்று கூறினார் .மேலும் அநியாயக்காரர்கள் ஒரு பொழுதும் வெற்றியடைய மாட்டார்கள் என்று கூறினார் .
அந்த பெண் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் மீது திடமாக ஆசை கொண்டுவிட்டாள் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு மட்டும் அல்லாஹுவுடைய அச்சம் மட்டும் இல்லையெனில் அவரும் அந்த பெண்ணின் மீது இச்சை கொண்டிருப்பார் ஏன் அந்த பெண்ணும் அழகில் சளைத்தவள் அல்ல .

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *25-04-2017*

🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 5🐠

🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 5🐠

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

அவர் கூறினார் இல்லை உங்களது மனம் ஒரு தீய காரியத்தை அழகாக காட்டிவிட்டது.  ஆகவே இந்த சம்பவத்திற்கு நான் பொறுமையாக இருப்பதே நன்று ஆகையால் யூசுபை காக்க அல்லாஹுவே போதுமானவன் அவனிடமே நான் உதவி தேடுகிறேன் என்று கூறினார்.
அந்த கிணற்றிற்கு அருகில் ஒரு பிரயாண கூட்டம் சென்ற பொழுது அந்த கிணற்றில்  நீர் எடுத்துகொள்ளலாம் என்று  வாளியை உள்ளே விட்டபொழுது அதை பிடித்து கொண்டே நபி யூசுப் அலைஹி  வசல்லம் அவர்கள் மேல வந்துவிட்டார்கள் அதனை கண்ட அந்த மனிதர் இதோ ஓர் அழகிய சிறுவன் கிடைத்துவிட்டான் என்று நபி யூசுப் அலைஹி  வசல்லம் அவர்களை சுட்டி காட்டி கூறினான்.
அப்பொழுது அவர்கள் அவரை வியாபார பொருளாக கருதி   சொற்ப விலைக்கு விற்று விட்டார்கள் மேலும் அவரை வாங்கி சென்ற மிசுறு நாட்டு (Egypt) இன்றைய வரைபடத்தில் எகிப்து நாட்டு வியாபாரி அவரை வாங்கி வந்து அந்த சிறுவனின்அழகை பார்த்து அவரை எகிப்து நாட்டு மந்திரியிடம் விற்று விட்டார் அவர் வாங்கி வந்து அவருடைய மனைவியை பார்த்து இந்த சிறுவனின் தங்குமிடத்தை பத்திரமாக பார்த்து கொள் இவர் நமக்கு பயன் தரலாம் அல்லது இவரை நாம் புத்திரனாக ஏற்று கொள்ளலாம் என்று கூறினார் மேலும் அல்லாஹ் கூறுகிறார் இவ்வாரே நபி யூசுப் அலைஹி  வசல்லம் அவர்களுக்கு நாம் இவ்வுலகில் இடமளித்தோம் மேலும் அவர்க்கு கனவுகளுக்கு விளக்கம் கூறும் ஆற்றலை கற்று கொடுத்தோம் அல்லாஹுதான் அனைத்திலும் ஆட்சிபுரிபவன் ஆனால் இதை பெருபாலானோர் அறியமாட்டார்கள் என்று கூறினான்.

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *25-04-2017*

🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 3🐠

🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 3🐠

♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻

ஏன் இவ்வாறு  அல்லாஹ் கூறுகிறார் வினவுகிரரவர்க்கு அதனை மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் சில பேர் கூறலாம் சகோதரர்கள் சகோதரருக்கே தீங்கிழைக்க முடியுமா என்று அதனை நிறைய விளக்கங்கள் கூறலாம் சொத்துகளுக்காக சகோதரர்களை கொள்ளும் அளவிற்கு துணியும் சகோதரர்களை நீங்கள் நிகழ் காலத்திலேயே காண முடியும் .
மேலும் அல்லாஹ் கூறுகிறான் அந்த சகோதரர்கள் தங்களுக்குள் நான் பலசாலிகளாக பெரும் படையாக பத்து மக்கள் இருந்தும் நம் தந்தை அந்த இருவர் மீதுதான் பாசமாக இருக்கிறார் நிச்சயமாக நமது தந்தை பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்  ஆகவே நாம் அனைவரும் சேர்ந்து யூசுபை கொலை செய்துவிட வேண்டும் அல்லது அவரை எங்காவது  எறிந்துவிட வேண்டும் என்று கூறினார்கள் அப்பொழுதுதான் நமது தந்தை நம்முடன் இணக்கமாக இருப்பார்கள் என்று கூறினார்கள்  மேலும் அந்த கூடத்தில் ஒருவர் கூறினார் நாம் அவரை கொலை செய்ய வேண்டாம் அவரை எங்காவது ஒரு பாழடைந்த கிணற்றில் நாம் எரிந்து விடுவோம் பிரயாணிகள் யாரவது வந்து அவரை எடுத்து கொல்லட்டும் என்று முடிவு செய்தார்கள்.
பிறகு அவர் தங்களது தந்தையிடம் தந்தையே யூசுபுடைய விசியத்தில் நீங்கள் எங்களை நம்பாமல் இருப்பது உங்களுக்கு என்ன நேர்ந்தது அவருக்கு நாங்கள் நம்மையைதானே நாடுவோம் நாங்கள் அவரது சகோதரர்கள்தானே ஏன் ஏங்களிடம் இருந்து அவரை பிரித்து கொள்கிறீர்கள் .
நாளை எங்களுடன் அவரை அனுப்பி வையுங்கள் அவர் காட்டில் உள்ள பலங்களை புசித்துகொண்டும் எங்களுடன் விளையாடி கொண்டும் இருப்பார் நிச்சயமாக நாங்கள் அவரை பாதுகாத்து கொள்பவராகவே இருக்கிறோம்.
அதற்கு நமது தந்தை யாகூப் அளிஹி வசல்லம் அவர்கள கூறினார்கள்.

♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *25-04-2017*

🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 2🐠

🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 2🐠

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

அதனை கண்ட யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் மேலும் அதிகமாக இவ்விருவரையும் நேசிக்க  தொடங்கிவிட்டார்கள் என் என்றால் நாமும் இவரை பராமரிக்கவிட்டால் பெரிய இன்னல்களுக்குள் ஆளாகுவார்கள் என்று அஞ்சினார்கள்.
இவ்வாறு நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் தனது தாயில்லா குழந்தைகள் மீது அதிக நேசமாக இருந்தார்கள்.
அவ்வாறு இருக்க நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் தன தந்தையிடம் தந்தையே நான் ஒரு கனவு கண்டேன் அதில் பதினொரு நட்சத்திரங்களையும் சூரியனையும் சந்திரனையும் நான் எனக்கு சிரம் பணிவதைபோல் கனவு கண்டேன் என்று கூறினார்கள் அப்பொழுது நபி  யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் அல்லா அல்லாஹ் நம் மகனுக்கு எதோ சிறப்பை கொடுக்க போகிறான் என்பதை உணர்ந்து அவர் கூறினார் மகனே இந்த கனவை பற்றி உன்னுடைய மற்ற சகோதர்களுக்கு கூறவேண்டாம் அவர்கள் ஏதேனும் உனக்கு தீங்கு செய்ய நேரலாம் ஏன் என்றால் நிச்சயமாக சைத்தான் மனிதர்களுக்கு பகிரங்கமான எதிரியாக இருக்கிறான் என்று கூறினார்கள்
இந்த சம்பவத்தில் இருந்து மேலும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் மீது நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு நேசம் அதிகமாகி விட்டது எந்நேரமும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுடன் இருப்பதையே  விருபினார் இதனை கண்ட மற்ற பத்து சகோதர்களுக்கு மேலும் வெறுப்பு அதிகமாகிவிட்டது நாளுக்கு நாள் நம் தந்தை அவர்கள் மீதே அன்பு  கட்டுகிறார்கள் என்று மேலும் அவர்கள் இணைந்து ஒரு சதி திட்டம் தீட்டினார்கள் அதனை அல்லாஹ் தனது குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
மேலும் இந்த சம்பவத்தை கூறும் முன் அல்லாஹ் கூறுகிறான் நபியே நிச்சயமாக நபி யூசுப் அலைஹி வசல்லம்  மற்றும் அவர்களது சகோதரர்களில் வரலாறில் வினவுபவருக்கு நிறைய படிப்பினை உண்டு.

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *25-04-2017*

🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 1🐠

🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 1🐠

🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠

அல்லாஹ் கூறுகிறான் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது  வரலாற்றை தொடங்கும் முன் நபியே நாம் உனக்கு இந்த குர்ஆனை அறிவித்ததன் மூலமாக மிக்க அழகான வரலாற்றை உமக்கு கூறுகிறோம் நிச்சயம் நீர் இதனை   பற்றி அறியாதவராய் இருந்தீர்.இவ்வாறு  அல்லாஹ்  தனது வார்த்தையிலேயே அழகான வரலாறு என்று கூறுகிறான் அப்படி என்ன அழகான வரலாறு இன்ஷா அல்லாஹ் காண்போம்.
நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு மொத்தம் 12 குழந்தைகள் அவரது மூத்தமனைவி ரய்யாவின் குழந்தைகள் 10 பேர் இரண்டாவது மனைவி ராகில்லின் வாயிலாக பிறந்த குழந்தைகள் ரெண்டு அதில் மூத்தவர் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் இரண்டாவது புன்யாமின் இந்த புன்யாமின் பிறக்கும் தருவாயில் ராகில் என்ற அம்மையார் இறந்து விடுகிறார்கள் இவர்களது வரலாறு முந்தய நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களது வரலாறில்  நீங்கள் காணலாம்.
இவ்வாறு தாயை இழந்த தன்னுடைய இரு மகன்கள் மீது நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் பாசத்தை அதிகமாக காட்ட ஆரம்பித்தார்கள் மேலும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் மிக அழகானவர்களாக இருந்ததும் காரணாமாக உலமாக்கள் கூறுகிறார்கள்.
நபி யூசுப் அலைஹி வசல்லம்  அவர்களது அழகை பற்றி அல்லாஹுவின் தூதர் நபி முஹம்மத்  (PBUH) அவர்கள்  கூறினார்கள். அல்லாஹ் அழகு என்ற அந்த தோற்றத்தை  அல்லாஹ் இரு பாதியாக  பிரித்து அதில் ஒன்றை நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு மற்றும் ஒன்றைத்தான் நாம் இவ்வுலகில் அழகு என்று எதனை கூறுகிறோமோ அதன் அனைத்திற்கும் அல்லா வழங்கியதாக..........
 "சுபுஹானல்லாஹ்"
இவ்வாறு இருக்க நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களையும் அவரது தம்பியின் மீது அதிக நேசம் வைத்திருப்பதை கண்ட அவர்களது மூத்த சகோதரர்கள் 10 பேர் அவர்களை வெறுக்க ஆரம்பித்தார்கள்.

🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *24-04-2017*

Monday, 24 April 2017

உம்ரா செய்வது எப்படி

📌📌📌📌📌📌📌📌📌📌

       உம்ரா

📌📌📌📌📌📌📌📌📌📌

உம்ரா என்றால் என்ன?

நீ இஹ்ராம் கட்டி

நீ கஃபாவில் தவாஃப் செய்து

நீ இரண்டு ரக்அத்கள் தொழுது

நீ ஸஃபா மர்வாவுக்கிடையே ஏழு தடவை ஓடுவது
ஆகியவையே உம்ராவாகும்.

அதன் பிறகு தலையை மழித்து அல்லது சிறிதளவு முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.

ஹஜ்ஜுக்காக குறிப்பிட்ட நாட்களில் தான் இஹ்ராம் கட்ட வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் தான் அதை நிறைவேற்ற வேண்டும். உம்ராவுக்கென்று குறிப்பிட்ட நாட்கள் கிடையாது. எல்லா நாட்களிலும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.

தமத்துவ் அடிப்படையில் இஹ்ராம் கட்டி மக்காவில் தங்கியிருப்பவர்களும், மக்காவாசிகளும் ஹஜ்ஜுக்காக மக்காவிலேயே இஹ்ராம் கட்டலாம். ஆனால், இவர்கள் உம்ராவுக்காக மக்கா எல்லைக்கு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு மக்காவுக்குள் பிரவேசிக்க வேண்டும்.

-----------------------
உம்ரா சட்டதிட்டங்கள்

உம்ரா

உம்ரா செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் வாழ்நாளில் ஒருமுறை கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான் : அல்லாஹ்வுக்காக உம்ராவையும் ஹஜ்ஜையும் நீங்கள் நிறைவு செய்யுங்கள். (2:196)

உம்ரா ஒரு முஸ்லிம் முடிந்தவரை திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய சிறந்த செயல்களில் ஒன்றாகும். உம்ரா செய்யக் கூடியவா உம்ராவுடைய வணக்கங்களில் முதன் முதலில் செய்ய வேண்டியது இஹ்ராமாகும்.


இஹ்ராம்

இஹ்ராம் என்பது ஹஜ் அல்லது உம்ரா உடைய வணக்கத்தில் பிரவேசிப்பதாகும். இஹ்ராமிலுள்ளவருக்கு அதற்கு முன்னர் ஹலாலாக இருந்த சில காரியங்கள் ஹராமாகி விடுகின்றன. ஏனெனில் அவர் ஒரு வணக்கத்தில் புகுந்து விட்டார். ஹஜ் அல்லது உம்ராவை விரும்புகிறவர் மக்காவிற்கு வெளியில் நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்த எல்லைகளில் ஏதேனும் ஒரு எல்லையிலிருந்து முன்னோக்கி வருபவராக இருந்தால் இஹ்ராம் கட்டாயமாகும்.

எல்லைகள்

துல்குலைஃபா : இது மதீனாவிற்குச் சமீபமாக உள்ள ஒரு கிராமமாகும். தற்போது இதற்கு அப்யார் அலி என்று கூறப்படுகின்றது. இது மதீனாவாசிகளுக்குரிய எல்லையாகும்.
அல் ஜுஹ்ஃபா : இது ராபிஃக் என்னும் ஊருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய ஊராகும். தற்போது மக்கள் ராபிஃகிலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்கிறார்கள். இது சிரியா வாசிகளின் எல்லையாகும்.
கர்னுல் மனாஸில் : (ஸைலுல் கபீர்) இது தாயிஃபிற்குச் சமீபமான ஒரு இடம். இது நஜ்து வாசிகளின் எல்லையாகும்.
யலம்லம் : இது மக்காவிலிருந்து 70 கி.மீ. தூரத்திலுள்ளது. இது யமன் வாசிகளின் எல்லையாகும். (இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கும் இதுவே எல்லையாகும்.)
தாதுல் இர்க் : இது ஈராக் வாசிகளின் எல்லையாகும்.

இவ்வைந்து இடங்களும் மேலே குறிப்பிட்ட ஊர்வாசிகளுக்கு இவ்விடங்கள் வழியாக வருகின்றவர்களுக்கும் எல்லைகளாகும். இந்த எல்லைகளுக்கு உள்ளே உள்ளவர்களும் ஹரமில் உள்ளவர்களும் அவர்கள் இருக்கின்ற இடங்களிலிருந்தே இஹ்ராம் செய்து கொள்ள வேண்டும்.

இஹ்ராமின் சுன்னத்துக்கள்

இஹ்ராமுக்கு முன் செய்ய வேண்டிய சுன்னத்தான காரியங்கள் :

நகங்களை வெட்டுதல், அக்குள் முடிகளைப் பிடுங்குவது அல்லது மழிப்பது, மீசையைக் கத்தரிப்பது, மர்மஸ்தானத்தின் முடியை மழிப்பது, குளிப்பது, ஆடைகளிலன்றி உடம்புக்கு மட்டும் மணம் பூசிக் கொள்வது, ஆடைகளுக்குப் பூசக் கூடாது.

தையலாடைகளைக் களைவது, வேஷ்டி உடுத்தி, துண்டைப் போர்த்திக் கொள்வது, பெண் தான் விரும்பிய ஆடைகளை அணிந்து கொள்ளலாம். தன்னை மூடி மறைத்துக் கொள்வதிலும் அழகலங்காரங்களை வெளிப்படுத்தாதிருப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அன்னிய ஆடவர்கள் வரும்போது முகத்தையும் முன் கைகளையும் மறைத்துக் கொள்ள வேண்டும். கையுறைகளையும் முகத்தை மறைப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பள்ளிக்குச் சென்று அந்நேரம் தொழுகை நேரமாக இருந்தால் ஜமாஅத்துடன் தொழுவது அல்லது உளூவின் சுன்னத்தான இரு ரக்அத்துக்களை தொழுவது. அதன் பின்னர் இஹ்ராமைத் தொடங்குவது.

இஹ்ராம் முறை

''லப்பைக் உம்ரதன்'' என்று கூறி இஹ்ராம் செய்ய வேண்டும். இஹ்ராம் செய்த பின்னர் தல்பியாச் சொல்வதும் அதை இஹ்ராம் செய்ததிலிருந்து கஅபதுல்லாஹ்வை அடைந்து தவாஃப்-வலம் வருவதை ஆரம்பிக்கும் வரை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதும் சுன்னதாகும்.

தல்பியா

லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் லப்பைக்க லாஷரீக்கலக லப்பைக் இன்னல் ஹம்த வன்நிஃமத்த லகவல் முலக், லாஷரீக்க லக்.

(பொருள் : உன்னிடம் வந்து விட்டேன். இறைவா! உன்னிடமே வந்து விட்டேன். உன்னிடமே வந்து விட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்து விட்டேன். நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களுக்கும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை).

இஹ்ராமில் தடுக்கப்பட்டவை

இஹ்ராம் கட்டிக் கொண்டவருக்கு பின்வருபவை ஹராமாகும்.
தலைமுடியையும் உடம்பின் ஏனைய பாகங்களிலுள்ள முடிகளையும் நீக்குவது
எனினும் தேவையின் நிமித்தம் இலேசாகத் தலையைச் சொரிவதால் (முடி விழுவதால்) குற்றமில்லை
நகங்களை வெட்டுதல். எனினும் நகம் உடைந்த விட்டால் அதை வெட்டுவது குற்றமல்ல.
வாசனைப் பொருட்களை உபயோகிப்பது (வாசனைச் சோப்புக்கும் இதே சட்டம் தான்)
உடலுறவு கொள்ளல், அதைத் தூண்டக் கூடிய காரியங்களைச் செய்தல். உதாரணமாக திருமணம் முடித்தல், மனைவியை இச்சையுடன் பார்த்தல், அணைத்தல், முத்தமிடுதல் போன்றவை

கையுறைகள் அணிதல்

வேட்டைப் பிராணிகளைக் கொல்லுதல்

இவையனைத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஹராமானதாகும். ஆண்களுக்கு அதிகப்படியாக இன்னும் சில ஹராமாகின்றன.

தையல் ஆடை அணிவது. எனினும் இஹ்ராமிலுள்ள பெல்ட், கண்ணாடி, வாட்ச் போன்ற தேவையுள்ள பொருட்கள் அணிவது கூடும்.

தலையை ஒட்டினாற் போல ஏதேனும் ஒன்றைக் கொண்டு தலையை மறைத்தல். தலையோடு ஒட்டாமல் சற்று உயரமாக வைத்து தலையை மறைத்துக் கொள்வது குற்றமில்லை. உதாரணமாக குடை, வாகனம், கூடாரம் போன்று!
காலுறை அணிவது,

----------------------

      ஒவ்வொரு முஃமினான இஸ்லாமியருக்கும் உம்ரா செய்வது நன்மையாகும்.

    யா அல்லாஹ் எங்களுக்கும் எங்கள் சமுதாய மக்கள் அனைவருக்கும் உம்ரா செய்யக்கூடிய பாக்கியத்தை தந்து அருள் புரிவாய்யாக

                 ஆமீன்

- மலுக்ஸா இம்ரான் - பள்ளப்பட்டி

📌📌📌📌📌📌📌📌📌📌

Sunday, 23 April 2017

நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் தொடர் - 47*

*🎯உடல் தானம் செய்யலாமா❓❓*


*🔘உடலையும் உடலின் கண் கிட்னி போன்ற உறுப்புக்களையும் தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா❓❓❓*

🔘கண் கிட்னி போன்ற சில மனித உறுப்புக்களை பிற மனிதர்களுக்கு பொருத்தி மருத்துவம் செய்யும் முறை தற்காலத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நவீன முறைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை.

🔘எனவே உலக விஷயத்தில் இது போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த முறை இருந்ததா? என்று கேட்கக் கூடாது. மாறாக இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்கு இவை எதிராக இருக்கின்றதா? என்று மட்டும் பார்க்க வேண்டும். நவீன முறைகள் இஸ்லாமியச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இல்லாவிட்டால் அவை அனுமதிக்கப்பட்டதாகி விடும்.

🔘கண், கிட்னி, இரத்தம் போன்றவற்றை தானமாக கொடுத்து பிறரை வாழவைப்பதை தடை செய்யும் விதமாக குர்ஆன் ஹதீஸில் எந்த சான்றும் இடம் பெறவில்லை. மாறாக மனித உயிரை வாழச் செய்வது என்ற அடிப்படையில் இது ஒரு நல்லறமாகும்.

🔘சிலர் சரியான மார்க்க அறிவு இல்லாமல் மனித உயிரைக் காக்கும் இது போன்ற உறுப்பு தானங்களை எதிர்த்து வருகின்றனர். இவர்களுக்கோ இவர்களின் உறவினர்களுக்கோ பிறருடைய உறுப்பைப் பொறுத்தினால் தான் வாழ முடியும் என்ற நிலை இருந்தால் அப்போது இவர்கள் உறுப்பு தானத்தை எதிர்க்க மாட்டார்கள். இந்த சூழ்நிலையில் அனைத்து மனிதனும் மன உறுத்தலின்றி இதை ஏற்றுக் கொள்வான்.

🔘அதே நேரத்தில் உடல் முழுவதையும் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.  ஏனெனில் உடல் தானம் என்பது கண் தானத்தைப் போன்றதல்ல.  உடல் தானம் செய்யும் மனிதனின் உடலிலுள்ள பாகங்களை எடுத்து பிற மனிதர்களுக்குப் பொருத்துவதில்லை.

🔘மாறாக உடலின் ஒவ்வொரு பாகத்தையும் எடுத்து மருத்துவக் கல்வியின் பாடத்திற்காகவும் ஆய்வுக்காகவுமே பயன்படுத்தப் படுகின்றன.  கண் தானத்தின் போது கண்ணோ மற்ற உறுப்புகளோ சிதைக்கப்படுவதில்லை. இறந்தவரின் கண்ணை எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றது. ஆனால் உடல் தானம் செய்தவரின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சிதைக்கப்படுகின்றன. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

*📚ஹதீஸ்:

*கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.*

*அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி),*

*நூல் : புகாரி 2474, 5516*

🔘உடலைக் குளிப்பாட்டும் போது அவ்வுடலில் பல குறைபாடுகள் இருக்கலாம். உலகில் வாழும் போது அந்தக் குறைபாடுகளை அவர் மறைத்து வாழ்ந்திருக்கலாம்.

🔘உடலைக் குளிப்பாட்டுபவர் அதைக் காண வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு காண்பவர் அந்தக் குறைபாடுகளை வெளியில் சொல்லாமல் மறைப்பது அவசியமாகும்.

*📚ஹதீஸ்:

*'ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*அறிவிப்பவர்: அபூ ராஃபிவு (ரலி)*

*நூல்கள்: பைஹகீ 3/395, ஹாகிம் 1/505, 1/516 தப்ரானி 1/315*

🔘இறந்த பின்னரும் ஒரு மனிதரின் வெட்கத்தலம் மறைத்து பாதுக்காக்கப்பட வேண்டும். ஆனால் உடல் தானம் செய்தால் அந்த உடலை மற்றவர்கள் அன்றாடம் நிர்வாணமாக்க் காணும் நிலை ஏற்படும்.

🔘மருத்துவ படிப்புக்கு உடல் தேவைப்படும் என்ற காரணத்தால் இதை இஸ்லாம் அனுமதிக்காது. மனித உடல் போன்ற மாதிரிகளை வைத்து மருத்துவப் படிப்புக்கு பயன்படுத்த முடியும்.

(♻இன்ஷா அல்லாஹ் வேறொரு பிரச்சினை மற்றும் தீர்வுடன் தொடரும்♻)

பதிவு நாள்: *23-04-2017*

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார்

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார்

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார் (கி.பி 1862 - கி.பி 1931)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

         தனது 16ம் வயதில் தந்தையை இழந்த இவர் தனது மாமாவின் பராமரிப்பில் வளர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து. பிறகு குர்ஆன் ஓதிகொடுக்கும் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் 1912கலில் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைப்பற்றி தனது இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியாவை வைத்தது.

         இதனை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்த்து இயக்கம் நடத்தி அதன் தலைவராக இருந்தார். இவர் தன் இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, வீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்து வந்தார்.

         இத்தாலிக்கும் லிபியாவுக்குமிடையே தொடர்த்து போர் நடந்தது. தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு அறிந்துருந்த உமர் முஃக்தார் அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர் புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். இவர் ஒரு  ஆசிரியராக இருந்தபோதிலும் மிகச்சிறந்த கொரில்லா முறை போர் தந்திரவாதியாக விளங்கினார். தன் இயக்கத்தினருக்கு கொரில்லா போர் முறையை பயிற்றுவித்தார். இதுவே உலகின் முதல் கொரில்லா படை தாக்குதல் என்று கூறப்படுகிறது..

         கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல்கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு, இத்தாலியின் முழு லிபியாவையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் ஆசையை நிறைவேற விடாமல் போராடினார்கள். இத்தனைக்கும் இவரது ஆட்களிடம் பயிர்ச்சியோ நவீன ஆயுதங்களோ, போக்குவரத்து சாதனங்களோ மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களோ கிடையாது. தணியாத சுதந்திர வேட்க்கையும், அந்நியரிடம் அடிமைப் படக்கூடாது என்ற வெறியும், உமர் முக்தார் என்ற ஆசிரியரின் வழிகாட்டுதலும் மட்டுமே இருந்தது.

         பல நேரங்களில் இத்தாலியப் படையை தாக்குதலினால் நிலைகுலையச் செய்திருக்கின்றார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக “பெனிட்டோ” முசோலினியின் படை விளங்கியது. எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர்.

         உமர் முக்தார் வழி காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை, அவரே முன்னின்று போரிட்டார். முதிர்ந்த வயதில் நோய் வாய்ப்பட்ட பிறகும் மலையில் மறைந்து வாழ்ந்து கொரில்லா போர் புரிந்து கொண்டிருந்த போது, அவரது குழுவினர் அவரை தப்பித்து போய் விடும்படி வற்புறுத்தியதையும் மறுத்து சண்டையிட்டு கடைசியில் 1931ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பாசிஸ இத்தாலிப் படையினரால் உமர் முஃக்தார் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் 20 ஆண்டுகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்தது. இறுதியில் இத்தாலியப் படைகளால் மரணதண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

         இத்தாலியப் படை அவரை சலோக் நகரில், 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி எல்லா மனித உணர்வுகளையும் மீறி,  சர்வதேச விதி முறைகளையும் மீறி,  அவரது வயதையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிட்ட போது அவருக்கு வயது 70 (எழுவது). சிறையில் சிறை அதிகாரி இவரிடம் “ஆசிரியரான உங்களுக்கு ஏன் இதெல்லாம் வீண் வேலை?” என்ற போது ”ஆசிரியன் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவனாகவும், அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும்” என்றாராம் ஒமர் முக்தார்.

        உமர் முஃக்தார் கைது செய்யபட்டு தண்டணையை எதிர்நோக்கியிருந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இத்தாலி நாட்டுக்கெதிராக லிபியா மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்களை சித்தரிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப் படம் “உமர் முக்தார்” என்ற பெயரில் 1980களில் வெளியிடப்பட்டது. மக்களிடையே அத்திரைப்படம் மகத்தான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


         நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற போராளிகளின் வரலாறுகள் சொல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Saturday, 22 April 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" அல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்துள்ளவர்களிலிருந்து தான் விரும்பியவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான்; (எனினும் இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன். அவனே (யாவரையும்) அடக்கியாளும் வல்லமை மிக்கவனாகிய ஏகனான அல்லாஹ்.
"

   📚 அல்குர்ஆன் 39:4

💥💥💥💥💥💥💥💥💥💥💥
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

 " நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தம் அடிமையை விடுதலை செய்திருந்தார்கள். பின்னர் தரையிலிருந்து ஒரு குச்சியை, அல்லது வேறு ஏதோ ஒரு பொருளை எடுத்துக்காட்டி, "இதற்குச் சமமான நற்பலன்கூட இ(ந்த அடிமையை விடுதலை செய்த)தில் எனக்குக் கிடைக்காது. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒருவர் தம் அடிமையை அறைந்துவிட்டால், அல்லது அடித்துவிட்டால், அவரை விடுதலை செய்து விடுவதே அதற்குரிய பரிகாரமாகும்"  என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்."

🎭அறிவிப்பவர்:
ஸாதான் அபீஉமர் (ரஹ்)

📓நூல்:
ஸஹீஹ் முஸ்லிம் -3408

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴

✨💧✨💧23-4-17✨💧✨💧

🕋⛩🕋⛩🕋⛩🕋⛩🕋⛩🕋

ரஜபில் நடந்த முக்கிய நிகழ்வுகளும், அதன் படிப்பினைகளும் தொடர் -1

                      بسم الله الرحمن الرحي
☪ரஜபில் நடந்த முக்கிய நிகழ்வுகளும் ,அதன் படிப்பினைகளும் தொடர் -1 ☪

****************************************

اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ‌  ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ َۙ‏ 

📖நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் -(அல்குர்ஆன் : 9:36)

3197- عَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ، السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا، مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ، ثَلاَثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ، وَرَجَبُ مُضَرَ الَّذِي
 بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ)).

🎓3197. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை - துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.  என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

☸ரஜப் மாதம் வரலாற்றில் பல தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்த மாதமாகும். ஒரு சூழலை வேறொரு சூழல் மூலம் மாற்றி அமைக்க முடியும் என்று அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ள விதி பலமுறை அரங்கேறிய மாதமாகும். அப்படி நிகழ்ந்த பல தலைகீழ் மாற்றங்களில் மூன்று மாற்றங்கள் அறிவுடையோர் பாடமும் படிப்பினையும் பெற்றுக் கொள்ள வேண்டிய அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொண்ட மாற்றங்களாகும்.

💐1) பைத்துல் முகத்தஸ் மீட்பு
2) கிலாபத் முடிவடைந்தது
3) மிஃராஜ். இந்த மூன்று நிகழ்வுகளும் ரஜபு மாதத்தில்தான் நடந்தது.

🌾முதலாவதாக பைத்துல் முகத்தஸைப் பற்றி விரிவாக பார்போம். ஏனென்றால் கஃபாவின் வரலாற்றை மட்டுமே அதிகம் தெரிந்து வைத்திருக்கக்கூடியநாம் முஸ்லிம்களுக்கே சொந்தமான பைத்துல் முகத்தஸின் வரலாற்றையும் அதன் சிறப்புக்களையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

💈முஸ்லிம்களின் உள்ளத்தில் பைத்துல் முகத்தஸிற்கு தனி மரியாதை உண்டு. காரணம் அது அதிகமான நபிமார்கள் வாழ்ந்த பூமி. நபி ( ஸல்) அவர்கள் மிஃராஜூக்கு அங்கிருந்தே சென்றார்கள்.மேலும் முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகவும் உள்ளது.

🐠லூத் ( அலை) அவர்களை இந்த புனித பூமியிலே அல்லாஹ் குடியமர்த்தினான்

وَنَجَّيْنٰهُ وَلُوْطًا اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا لِلْعٰلَمِيْنَ‏ 
🌴இன்னும், நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் பரக்கத்தான - பாக்கியமுள்ள - பூமியாக நாம் ஆக்கியுள்ள (பைத்துல் முகத்தஸில்) ஈடேற்றம் பெறச் செய்தோம்.
(அல்குர்ஆன் : 21:71).

🔛சுலைமான் நபியை அந்த பூமிக்கு அழைத்துச் சென்றது பற்றி அல் குர்ஆன்

وَلِسُلَيْمٰنَ الرِّيْحَ عَاصِفَةً تَجْرِىْ بِاَمْرِهٖۤ اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا‌ وَكُنَّا بِكُلِّ شَىْءٍ عٰلِمِيْنَ‏ 

♻இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது; இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 21:81)

❤மூஸா ( அலை) தங்களின் கூட்டத்தார்களை  பைத்துல் முகத்தஸில் நுழையும்படி கூறிய நிகழ்வு.

يٰقَوْمِ ادْخُلُوا الْاَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِىْ كَتَبَ اللّٰهُ لَـكُمْ وَلَا تَرْتَدُّوْا عَلٰٓى اَدْبَارِكُمْ فَتَـنْقَلِبُوْا خٰسِرِيْنَ‏ 

✅(தவிர, அவர்) “என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்” என்றும் கூறினார்.
(அல்குர்ஆன் : 5:21)

🎓மூஸா ( அலை) அவர்களும் பைத்துல் முகத்தஸிற்கு அருகில் அடக்கமாகுவதை விரும்பினார்கள்.

1339- حَدَّثَنَا مَحْمُودٌ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: ((أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى- عَلَيْهِمَا السَّلاَمُ- فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لاَ يُرِيدُ الْمَوْتَ. فَرَدَّ اللَّهُ عَلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ، فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ بِهِ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ. قَالَ أَيْ رَبِّ، ثُمَّ مَاذَا قَالَ ثُمَّ الْمَوْتُ. قَالَ فَالآنَ. فَسَأَلَ اللَّهَ أَنْ يُدْنِيَهُ مِنَ الأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ)). قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((فَلَوْ كُنْتُ ثَمَّ لأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ عِنْدَ الْكَثِيبِ الأَحْمَرِ)).

 👔அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் மூஸா(ரலி) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்தபோது மூஸா(அலை) அவர்கள் அவரின் கண் பிதுங்கும் அளவுக்கு அடித்துவிட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய், “இறைவா! மரணிக்க விரும்பாத ஓர் அடியானிடம் நீ என்னை அனுப்பிவிட்டாய்“ என்றார். பிறகு அல்லாஹ் அவரின் கண்ணைச் சரிப்படுத்திவிட்டு, “நீர் மீண்டும் அவரிடம் சென்று, அவரை ஒரு மாட்டின் முதுகில் கையை வைக்கச் சொல்லி, அவரின் கை எத்தனை ரோமங்களை அடக்கிக் கொள்கிறதோ அத்தனை ஆண்டுகள் அவர் உயிர் வாழலாம் என்பதையும் கூறும்” என அனுப்பி வைத்தான். (அவ்வாறே அவர் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கூறியபோது,) மூஸா(அலை) “இறைவா! அதற்குப் பிறகு?“ எனக் கேட்டதும் அல்லாஹ், “பிறகு மரணம் தான்“ என்றான். உடனே மூஸா(அலை) அவர்கள் “அப்படியானால் இப்பொழுதே (தயார்)“ எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும்) பூனிதத்தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள (புனிதத் தலத்திற்கு மிக அருகிலுள்ள) இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டினார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறும்போது, “நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஸா(அலை) அவர்களின் கப்ரைக் காட்டியிருப்பேன்” எனக் குறிப்பிட்டார்கள். ஸஹீஹ் புகாரி

மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தபின் சுமார் 17 மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கியே தொழுதார்கள்

 وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِىْ كُنْتَ عَلَيْهَآ اِلَّا لِنَعْلَمَ مَنْ يَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ يَّنْقَلِبُ عَلٰى عَقِبَيْهِ ‌ وَاِنْ كَانَتْ لَكَبِيْرَةً اِلَّا عَلَى الَّذِيْنَ هَدَى اللّٰهُ  وَمَا كَانَ اللّٰهُ لِيُضِيْعَ اِيْمَانَكُمْ‌  اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِيْمٌ‏ 

🚩யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள் யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.
(அல்குர்ஆன் : 2:143)

7252- ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻳَﺤْﻴَﻰ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻭَﻛِﻴﻊٌ ﻋَﻦْ ﺇِﺳْﺮَاﺋِﻴﻞَ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﺇِﺳْﺤَﺎﻕَ ﻋَﻦِ اﻟْﺒَﺮَاءِ ﻗَﺎﻝَ ﻟَﻤَّﺎ ﻗَﺪِﻡَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ اﻟْﻤَﺪِﻳﻨَﺔَ ﺻَﻠَّﻰ ﻧَﺤْﻮَ ﺑَﻴْﺖِ اﻟْﻤَﻘْﺪِﺱِ ﺳِﺘَّﺔَ ﻋَﺸَﺮَ، ﺃَﻭْ ﺳَﺒْﻌَﺔَ ﻋَﺸَﺮَ ﺷَﻬْﺮًا، ﻭَﻛَﺎﻥَ ﻳُﺤِﺐُّ ﺃَﻥْ ﻳُﻮَﺟَّﻪَ ﺇِﻟَﻰ اﻟْﻜَﻌْﺒَﺔِ ﻓَﺄَﻧْﺰَﻝَ اﻟﻠَّﻪُ ﺗَﻌَﺎﻟَﻰ: {ﻗَﺪْ ﻧَﺮَﻯ ﺗَﻘَﻠُّﺐَ ﻭَﺟْﻬِﻚَ ﻓِﻲ اﻟﺴَّﻤَﺎءِ ﻓَﻠَﻨُﻮَﻟِّﻴَﻨَّﻚَ ﻗِﺒْﻠَﺔً ﺗَﺮْﺿَﺎﻫَﺎ} ﻓَﻮُﺟِّﻪَ ﻧَﺤْﻮَ اﻟْﻜَﻌْﺒَﺔِ، ﻭَﺻَﻠَّﻰ ﻣَﻌَﻪُ ﺭَﺟُﻞٌ اﻟْﻌَﺼْﺮَ، ﺛُﻢَّ ﺧَﺮَﺝَ ﻓَﻤَﺮَّ ﻋَﻠَﻰ ﻗَﻮْﻡٍ ﻣِﻦَ اﻷَﻧْﺼَﺎﺭِ ﻓَﻘَﺎﻝَ ﻫُﻮَ ﻳَﺸْﻬَﺪُ ﺃَﻧَّﻪُ ﺻَﻠَّﻰ ﻣَﻊَ اﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻭَﺃَﻧَّﻪُ ﻗَﺪْ ﻭُﺟِّﻪَ ﺇِﻟَﻰ اﻟْﻜَﻌْﺒَﺔِ. ﻓَﺎﻧْﺤَﺮَﻓُﻮا ﻭَﻫُﻢْ ﺭُﻛُﻮﻉٌ ﻓِﻲ ﺻَﻼَﺓِ اﻟْﻌَﺼْﺮِ.

🇬🇷7252. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது பைத்துல் மக்தீஸ் (நகரிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா இறையில்லத்தை) நோக்கி பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் தொழுதார்கள். (தொழுகையில்) கஅபாவை நோக்கி முகம் திருப்புவதையே அவர்கள் விரும்பிவந்தார்கள். எனவே, அல்லாஹ் “(நபியே!) உம்முடைய முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம்; எனவே, நீர் விரும்பும் கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் (இதோ) உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்“ எனும் (திருக்குர்ஆன் 02:144 வது) வசனத்தை அருளினான். இவ்விதம் (தொழுகையிலிருந்தபோதே) கஅபாவை நோக்கி முகம் திருப்பப்பட்டார்கள். அந்த அஸ்ர்தொழுகையில் நபி(ஸல்) அவர்களுடன் ஒருவர் தொழுதார். அவர் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறி அன்சாரிகளில் ஒரு குலத்தாரைக் கடந்து சென்றபோது, “நபி(ஸல்) அவர்களுடன் தாம் தொழுததாகவும், (தொழுகையிலேயே) அவர்கள் முகம் கஅபாவை நோக்கித் திருப்பப்பட்டதாகவும் தாம் சாட்சியம் அளிப்பதாகச் சொன்னார். உடனே அம்மக்கள் அஸ்ர் தொழுகையில் ருகூஉ செய்து கொண்டிருந்த நிலையில் அப்படியே கஅபாவை நோக்கித் திரும்பினார்கள். ஸஹீஹ் புகாரி.

📖மறுமை நாளில் படைப்பினங்கள் அனைவர்களையும் ஒன்று சேர்ப்பதற்காக ஒரு வாணவர் பைத்துல் முகத்தஸ் பள்ளியில் உள்ள ஒரு பாறையின்மீது நின்றே அழைப்பார். மேலும் இந்த இடம்தான் பூமியின் நடுப்பகுதியாகவும். பூமியிலேயே உயரமான இடமாகவும் வானத்திற்கு சமீபமான இடமாகவும் உள்ளது.இது பற்றியே கீழ் வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான் என முஃபஸ்ஸிரீன்கள் கூறுகின்றார்கள்

وَاسْتَمِعْ يَوْمَ يُنَادِ الْمُنَادِ مِنْ مَّكَانٍ قَرِيْبٍۙ‏ 

👀மேலும், சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே!) நீர் செவிமடுப்பீராக.
(அல்குர்ஆன் : 50:41)

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *23-04-2017*


உள்ளத்திற்கு அமைதி தரும் அன்பளிப்புகள்

 உள்ளத்திற்கு அமைதி தரும் அன்பளிப்புகள்:

1)மனிதர்களின் அன்பைப் பெறுவதை உனது முயற்சியாக ஆக்கிக் கொள்ளாதே!ஏனெனில் மனிதர்களின் உள்ளங்கள், அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதையே, உனது முழு நோக்கமாக ஆக்கிக் கொள். அல்லாஹ் உன்னை விரும்பி விட்டால், மனித உள்ளங்களை உன்னை விரும்புமாறு செய்து விடுவான்.

2)சோதனைகளின் போது பொறுமை ,"ஈமான்"ஆகும். உணவில் பொறுமை, "திருப்தி"ஆகும். இரகசியங்களைப் பாதுகாப்பதில் பொறுமை ,"குறை மறைத்தல்"ஆகும். உறவைப் பேணுவதில் பொறுமை ,கடமையை "நிறைவு" செய்வதாகும் ஆகும்.

3)உனது வாழ்வில் ஏற்படும் அனைத்துத் தாமதங்களும், அல்லாஹ் மட்டுமே அறிந்த, உன்னதமானதொரு காரணத்திற்கேயாகும். உனது கருமங்களை அவனிடமே பொறுப்புச் சாட்டி விடு. அவனையே நம்பு. நம்பிக்கை இழந்து விடாதே. உனக்கேற்பட்ட இழப்புகளுக்குப் பகரமாக, உனது உள்ளம் விரும்பும் விதமான நலவுகளைத் தருவான் என்பதில் உறுதியுடன் இரு.

4)பின் வரும் ஐந்து விடயங்களை துன்யா, உன்னிடமிருந்து களவாட அனுமதித்து விடாதே!(1)அல்லாஹ்வுடன் நீ தொடர்பு கொள்வது.
(2)பெற்றோருடன் பாசமாக நடப்பது
(3)குடும்த்தினருடனான அன்பு, (4)உன்னுடனிருப்பவர்களுக்கு உபகாரம் புரிவது.
(5)உனது காரியங்களில் தூய உள்ளம்.

5)மனிதர்களுடனான உனது தொடர்பை, மரத்தின் இலைகளாக எண்ணிக் கொள். கிளைகளில் மீதமிருப்பை பழம் தருகின்றன. கீழே விழுந்தவைகள், மீண்டும் கிளைகளுக்கு மீள்வதில்லை.

6)மனிதர்கள் உனக்கு என்ன செய்கிறார்கள் என்பதை மாத்திரம் பார்த்து, அவர்களுடன் தொடர்பு கொள்ளாதே! நீயும், அவர்களைப் போலவே ஆகிவிடுவாய். எனினும் உனது அடிப்படை நல்லகுணங்களுடன் அவர்களுடன் பழகு, அவர்கள் அதற்குத் தகுதியில்லா விட்டாலும் சரி.

7)உண்மையான மனநிம்மதி, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நீ, "அல்ஹம்து லில்லாஹ்"என்று கூறுவதாகும். உலக விடயங்களில், அதிகம் அலட்டிக் கொள்ளாதே. அனைத்தும் முடிவுசெய்யப்பட்டு எழுதப்பட்டு விட்டன. நீ அதைச் சந்தித்தே ஆகவேண்டும்.

8)உனது முயற்சிகளையும், நீ புரியும் நற்காரியங்களையும் யாராவது ஒருவர், மதிக்க வில்லை என்பதற்காக கவலைப்படாதே! அருட்கொடை நீங்கியதற்குப் பின், பெறுமதியைப் புரிந்து கொள்வதுதான் மனித இயற்கை.

9)உன் சகோதரனுக்குத் தோழ் கொடுப்பவனாக, சகோதரிக்கு உதவியாளனாக, மனைவியிடம் பாசமுள்ளவனாக, தோழனுடன் நம்பிக்கைக்குறியவனாக, அடுத்த வீட்டினருக்கு உபகாரம் புரிபவனாக இருந்து கொள். உலகம் ஒரு நாள், நீங்கிவிடும். நாமெல்லாம் இதைவிட்டுப் போய்விடுவோம்.

10) "ரஹ்மானான அல்லாஹ்வுக்கு மிகவிருப்பமான இரண்டு வார்த்தைகள்"என்று நீ அறிந்து கொண்டவுடன், பகலிலோ இரவிலோ அதை நீ  விட்டுவிடாமலிக்கத் தூண்டும் இரண்டு வார்த்தைகளாவன; "சுBப்ஹானல்லாஹி வBபிஹம்திஹீ  சுBப்ஹானல்லாஹில் அளீம்"

பதிவு நாள்: *22-04-2017*

Friday, 21 April 2017

தண்ணீர் ஒர் மாபெரும் அருட்கொடை குறித்த தொடர் - 6

எச்சரிக்கையும், சோபனமும்:



இன்றைய விஞ்ஞானிகள்தண்ணீரை ஆய்வு செய்து “பூமிபடைக்கப்பட்ட நாள் முதல்இன்றுவரை பூமியிலுள்ள மொத்ததண்ணீரின் கன அளவு மாறவேஇல்லை என்று கூறுகிறார்கள்”ஆனாலும், தண்ணீர் உலகத்தில்மிகப்பெரும் பிரச்சனையாகஉருவெடுத்துள்ளதை பார்க்கமுடிகிறது.

வாழ்வின் இன்றியமையாதஒன்றாகிய தண்ணீரின்பயன்பாட்டை தொடர்ந்துஅனுபவிக்க வேண்டுமென்றால்இஸ்லாம் கூறுகிறஆலோசனைகளையும்,எச்சரிக்கைகளையும் ஒட்டுமொத்த மனித சமூகமும் பின்பற்றிநடக்க வேண்டும்.

வீண் விரயம் கூடாது.

“உண்ணுங்கள், பருகுங்கள்;பருகுங்கள், ஆனால் வீண் விரயம்செய்யாதீர்கள்!திண்ணமாகஅல்லாஹ் விரயம் செய்வோரைநேசிப்பதில்லை.

அல் குர் ஆன் : 7:32

ஒரு சமயம் ஸஅத் (ரலி) எனும்நபித்தோழரிடம் “ஓடும் நதியில் நீர்உளூச் செய்தாலும் விரயம்செய்யாதீர்” என நபி (ஸல்)அவர்கள் எச்சரித்தார்கள்.

மாசுபடுத்துதல் கூடாது:

ஜாபிர் (ரலி) அவர்கள்கூறுகின்றார்கள், குளம், ஏரி,குட்டை போன்ற் நீர் நிலைகளில்சிறுநீர் கழிப்பதையும், அசுத்தம்செய்வதையும் நபி (ஸல்) அவர்கள்தடை செய்துள்ளார்கள். அபூஹூரைரா (ரலி) அவர்கள்அறிவிக்கும் மற்றொருஅறிவிப்பில், மக்கள் குளிக்கபயன்படுத்தும் நீர் நிலைகளில்(ஆறு, குளம்) போன்றவற்றில்சிறுநீர் கழிக்கவும், மாசுபடுத்தவும்வேண்டாம் என நபி (ஸல்)அவர்கள் எச்சரித்தார்கள்

நூல்: ரியானாஸ் – ஸாலிஹீன்;பக்கம் 667

இறுதியாக..

அல்லாஹ்வழங்கியிருக்கின்ற எந்தவொருஅருட்கொடையும் நம்மிடம் இருந்துபிடுங்கப்படாமல் இருக்கவேண்டுமானால் படைத்தஇறைவனுக்கு நாம்நன்றியாளர்களாக இருக்கவேண்டும்.

நீங்கள் நன்றியுணர்வோடுநடந்து கொள்வீர்களானால் நாம்(நமது அருட்கொடைகளை)இன்னும் அதிகப்படுத்திதருவோம்”

அல்குர் ஆன்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் தண்ணீர் அருந்திய பின்பின்வரும் துஆவை ஓதுவார்கள்என இமாம் நவபீ (ரஹ்) அவர்கள்கூறுகின்றார்கள்,

இறைவா! நீயேபுகழுகுறியவன், உன்னுடையதனிபெரும் கருணையால் தான் நீஎங்களுக்கு சுவையானதண்ணீரை வழங்குகின்றாய்!எங்கள் பாவங்களை நீ மனதில்கொண்டிருப்பாயேயானால் நீஉப்பு கரிக்கும் நீராகவும், கசப்பானநீராகவும் ஆக்கியிருப்பாய்”

எனவே,

மாபெரும் அருட்கொடையானதண்ணீரை நாம் ஒவ்வொரு முறைபருகும் போதும், பயன்படுத்தும்போதும் அது நம்மை விட்டும்நீங்காமலிருக்க வல்லரஹ்மானுக்கு நன்றிணர்வைவெளிப்படுத்துகிற நன் மக்களாகஅல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக! ஆமின

வஸ்ஸலாம்.

முடிவுற்றது.

பதிவு நாள்: 21-04-2017

Thursday, 20 April 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" அல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்துள்ளவர்களிலிருந்து தான் விரும்பியவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான்; (எனினும் இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன். அவனே (யாவரையும்) அடக்கியாளும் வல்லமை மிக்கவனாகிய ஏகனான அல்லாஹ்.
"

   📚 அல்குர்ஆன் 39:4

💥💥💥💥💥💥💥💥💥💥💥
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

 " நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தம் அடிமையை விடுதலை செய்திருந்தார்கள். பின்னர் தரையிலிருந்து ஒரு குச்சியை, அல்லது வேறு ஏதோ ஒரு பொருளை எடுத்துக்காட்டி, "இதற்குச் சமமான நற்பலன்கூட இ(ந்த அடிமையை விடுதலை செய்த)தில் எனக்குக் கிடைக்காது. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒருவர் தம் அடிமையை அறைந்துவிட்டால், அல்லது அடித்துவிட்டால், அவரை விடுதலை செய்து விடுவதே அதற்குரிய பரிகாரமாகும்"  என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்."

🎭அறிவிப்பவர்:
ஸாதான் அபீஉமர் (ரஹ்)

📓நூல்:
ஸஹீஹ் முஸ்லிம் -3408

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴

பதிவு நாள்: 21-04-2017

🕋⛩🕋⛩🕋⛩🕋⛩🕋⛩🕋

இல்மிற்கு உதவும் கரங்கள் குழுமம்

*இல்மிற்கு உதவும் கரங்கள் குழுமம்*


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ​ நீங்களும் எங்களுடன்  இணைந்து கொள்ளுங்கள் கீழே உள்ள நிபந்தனை அனைத்தையும் படித்து பார்த்துவிட்டு  இணையவும்:👇​

🎖இஸ்லாமிய சமூகத்தில் கல்வி தேவையில் உள்ளவர்களுக்கும், ஏழைகளின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவும் உதவும் மனப்பான்மையில் உருவாக்கப்பட்டுள்ள குழுமம் தான்.
🌾 ​​இல்மிற்கு உதவும் கரங்கள் குழுமம்​​ 🌾

‼நமது குழுமத்தின் நிபந்தனைகள்:👇

1.மாத சந்தா Rs: 300/=  1ம் தேதியில் இருந்து 10ம் தேதிக்குள்​ செலுத்த வேண்டும். இது குழுமத்தில் இணைவதற்கான ஆரம்ப நிபந்தனை.

2. குழுமத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஆண் சகோதரர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் இணையலாம்.

குழுமத்தில் நீங்கள் தர கூடிய சந்தா தொகை நாம் என்ன செய்ய போகிறோம் என்ற கேள்விக்கு பதில் :👇

1. 🌴​​கியாமத் நாளை நோக்கி🌴 வாட்ஸ் அப் குழுமத்தில் தினம் ஒரு மார்க்க கேள்வி பதிலின் வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பாக இஸ்லாமிய புத்தகங்கள் வழங்குவதற்காகவும்.

2.  ​​நம்முடைய சமூகத்தில் கல்வி தேவையில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது.​​
​குறிப்பு : நமது குழுமத்தில் இணைந்து உள்ள சகோதரர்கள் இருக்க கூடிய ஊர்களில் உள்ள ஏழை  மாணவர்கள்/மாணவிகளுக்கு உதவி செய்வதற்கும்.

3. ​​நமது குழுமத்தில் இருக்கும் சகோதரர் ஊரில் மிகவும் கஷ்டப்படக்கூடிய குடும்பத்திற்கும் , அவர்களின் பெண் பிள்ளைகளின் நிக்காஹ்விற்கு உதவி செய்வதற்கும்

4. ​​நமது குழுமத்தில் இருக்கும் சகோதரர் சொந்த பந்தங்களுக்கும் மற்றும் உங்கள் ஊரில் உள்ளவர்களுக்கும் சிறிய சிறிய மருத்துவ செலவிற்கு உதவி செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

‼👆இவை அனைத்தும் இந்த குழுமத்தில் இணைந்துள்ள சகோதரர் இருக்கும் ஊரில் வசிக்கும் நபர்களுக்கு மட்டும் பொருந்தும்.

கடந்த ஆறு மாத காலமாக ஹக்கீம் தென்காசி சகோதரர் ஆறு மாத காலமாக என்று தொடங்கும் இடத்தில்

அல்லாஹூத்தாலாவின் பெருங்கிருபையினாலும் மார்க்க சகோதரர்களின் ஆதரவினாலும் கடந்த ஆறு மாத காலமாக நல்ல முறையில் ஏழைகளுக்கும், கல்வி தேவையில் உள்ளவர்களுக்கும் உதவிகள் செய்து கொண்டு வருகின்றோம். தாங்களும் எங்களுடன் இணைந்து உங்கள் ஜகாத் மற்றும் சதகா தொகைகளை அளித்து ஏழைகளுக்கு உதவி  மறுமையில் வெற்றியடைய அன்போடு அழைக்கிறோம்.

‼குறிப்பு : 👆மேலே உள்ள அனைத்தையும் படித்து விட்டு இந்த குழுமத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு இணையவும்.👇

📮 ​தொடர்புக்கு:​
🎗 *ஜுபைர் சவூதி
📲 00966507839976  0570465171

முஹம்மது முஸ்தபா - சென்னை
+91-9486703710 (வாட்ஸப்).
+91-8190818546 (தொடர்புக்கு)

🌾 ​இல்மிற்கு உதவும் கரங்கள் குழுமம்​ 🌾
பதிவு நாள்: 01- 05- 2017

அல் அக்ஸாவை மீட்போம்


அல்லாவின் சாந்தியும் சமாதானமும் நம்  அனைவரின்
மீதும் நிலவட்டுமாக

கடந்த மாத இதழில் பாலஸ்தீனத்தில் உள்ள அல்அக்ஸா பள்ளிசாலின் சிறப்பை பற்றி
நாம் படித்தோம்

இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அல்அக்ஸா பள்ளிவாசலின் இருப்பிடத்தை
எதற்காக
தெரிந்து கொள்ள வேண்டும்
அதற்கு அவசியம் என்ன
என்பதை
இப்பகுதியில்
படிக்கலாம்

அன்புள்ள தமிழ் இஸ்லாமியர்களே,

உலகில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமிய சகோதர்களும் அரபுநாட்டில் உள்ள
மக்கா,மதினாவுக்கு
எதற்காக செல்கிறார்கள் என்றால்

உலகில் உள்ள மனிதர்கள்
தன்னை படைத்த (உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும்)இறையை வழங்கும் இறைவனாகிய
அல்லா ஒருவனே
என்று அவன் படைத்த வல்லமைகளையும்
படைப்புகளையும்
சிறந்த படைப்பாக
மனிதனாகிய நாம் தான்
 என்று உணர்வதன் மூலம் மனிதனுக்கு நன்றிகடன் செலுத்த அவசியம் ஏற்படுகிறது,
நன்றிகடன் உணர்பவர்கள் நன்மையை பயன்படுத்தி கொள்கின்றனர்,
நன்றியை உணராதவர்கள்
அறியாமையினால்
பூமியில் உள்ள வல்லமைகளையும்
படைப்புகளையும்
அறிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்,

இஸ்லாத்தை ஏற்காதவர்கள் சில மனிதர்கள் அல்லாவுக்கு எதற்காக நன்றிகடன் செலுத்த வேண்டும்,
நன்றிகடன் என்ற வார்த்தையை
அடிமை போல் நினைக்கின்றார்கள்,
அப்படி அல்ல
அவர்களுக்கு
சகோதரத்துவம் மூலம்
நாம் சொல்வது என்னவென்றால்
நம்மை கருவறையில் சுமந்து பெற்றெடுக்கும் தாய் அந்த குழந்தைக்கு எதற்காக "பாலுட்டி"
வளர்கின்றார்கள்  பெற்றெடுத்த அந்த குழந்தைக்கு "அன்பை"
எதற்காக பகிர்ந்துகொள்கின்றார்கள்,அந்த குழந்தை வளர்ந்து திருமணம் முடிக்கும் வரை பெற்றோர்கள் செய்ய வேண்டிய சில கடமைகள் அவர்களுக்கு கட்டாயம் ஏற்படுகிறது,

இப்படி பெற்று வளர்த்த அந்த பெற்றோர்களுக்கு
ஒரு குறிபிட்ட வயது கடந்த பிறகு
அவர்கள்
தானாக வேலை செய்ய தொடங்குவார்கள்,
அதாவது
(இறையை)
தேடுவார்கள்
அந்த குழந்தையை வளர்த்த முதியவர்களாக
இருக்கும் பெற்றோர்களுக்கு
மகன்/கள்
செய்யவேண்டியதும் சில கடமைகள் உள்ளது ,அந்த கடமைகள் அவர்களுக்கு செய்ய
கட்டாயம்
ஏற்படுகிறது(இதற்கு பெயர்தான் நன்றிகடன் என்பதாகும்.)
அந்த நன்றிகடன் அடைக்க தான் மனிதர்களாகிய நாம் இந்த வாழ்க்கையை நோக்கி பயனிக்கின்றோம்

அதுபோல
இந்த இயற்கையை அமைத்து
காற்று ,மழை,மரம்,மணல்,சூரியன்,
சந்திரன்,இப்படி பூமியை உருவாக்கி அந்த பூமியில் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி,
இறையை
வழங்குகிறான் அந்த இறையை வழங்கும்
இறைவனாகிய ஒருவன்
"லா"
அவன் தான் அல்லா

ஆக இவன் படைப்புகளை நாம் உணர வேண்டும்
அவன் படைப்புகள் தெரிந்து கொள்ள நாம் வாழ வேண்டும்,
வாழ்வது "லா" வை
 வணங்க வேண்டும்,வணங்க வேண்டும் என்றால்("லா")வை முழுமையாக தெரிந்துகொள்ள பூமியில் உள்ள படிப்பினைகளை கற்று கொள்ள வேண்டும் ,
அப்படி கற்றுக்கொள்ள வேண்டியவை தான் இஸ்லாம் என்கின்றோம்,அது என்ன ஒரு எழுத்து
"லா"என்று கேள்வி கேட்கலாம்,
"லா"இந்த ஒரு எழுத்தின் அர்த்தம் எண்ணில் அடங்காதவை
"லா"  என்ற ஒற்றை எழுத்தை பல முறை இந்த ஒற்றை எழுத்தை உச்சரித்தால்
நிச்சயம்
தினந்தோறும் வாழ்வதற்கு இறைச்சியை மனிதனுக்கு
தரக்கூடிய இறைவனாகிய
"அல்லா"என்று
வரும்.
அலிப் ("லா")மீம்
நிச்யம் இந்த வார்த்தை அனைத்து இஸ்லாமியர்களும் அறிவார்கள்.

ஆக
"அல்லாவை"
மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
என்ற அடிப்படையில்
அனைத்து மனிதர்களும்
அதாவது இந்த பூமியல்
இஸ்லாத்தை ஏற்றுகொண்டு சகோதரத்துவம் முறையில் "நிறம்"
"மொழி"
ஆண்
பெண்
இப்படி மொழியை கடந்து அனைவரும் சகோதரத்துவம் முறையில் ஒரே இடத்தில் இணைவதால்
இந்த பூமியின் மேல் உள்ள "காஸ்மிக்"
கதிர்கள் பிரபஞ்சத்தில்
இருந்து மனிதர்களின் மூளைகளுக்கு
கிடைக்கப்பெறும்,
இப்படி பல நன்மைகள் இருப்பதால்
உலக இஸ்லாமியர்கள் அனைவரும்
தமக்கு கிடைக்கும்
ஒரு வாய்ப்பாக அந்த ஆற்றலை பெற்றுகொள்வதற்காகவும்,
அதை தம் கடமையாகவும்
மக்கா,மதினாவுக்கு
(ஹஜ்)புனிதபயணமாகவும்
மேற்கொள்கிறார்கள்

"அல்அக்ஸா"பள்ளிவாசலின்
சிறப்பு என்று இந்த கட்டுரையில் போட்டுள்ளனர் ஆனால்
தொடர்புஇல்லாதவற்றை எழுதியிருக்கின்றார்கள்
என்று சிலர் நினைக்கலாம்,
அப்படி இல்லை இஸ்லாமிய உறவுகளே
இதில் தொடர்பு உள்ளது,


நம் உலக இஸ்லாமியர்களுக்கு
எப்படி மக்கா மதினா "காபத்துல்லா"
போல
இந்த பூமியில்
உள்ள பாலஸ்தீனத்தில் உள்ள
"அல்அக்ஸா"பள்ளிவாசலும் ஆகும்

ஆனால்
இன்றோ பல
இஸ்லாமிய உறவுகளுக்கு
"அல்அக்ஸா"
என்பது என்ன ?
என்று கேள்வி கேட்கிறார்கள்,
ஏன் இந்த கட்டுரையை எழுபவரின்
என் பெற்றோர்கள் கூட "அல்அக்ஸா" (
பைத்துல்முகத்தஸ்)என்றால் என்ன ?எங்கு உள்ளது?
என்று
மறக்கடிப்பட்டுள்ளனர்,
ஆக இப்படி பல
இஸ்லாமிய உறவுகள்
பாலஸ்தீனத்தில் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசலின்
சிறப்பு,மகிமை,
நினைவுகள்,
வரலாறு,என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்காமல்
மறக்கடிக்கபடுகின்றார்கள்.

நாம்
சென்ற மாத இதழில் பாலஸ்தீனத்தில் உள்ள அல் அக்ஸா பள்ளிசாலின் சிறப்பை பற்றி
நாம் படித்தோம்

இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அல்அக்ஸா பள்ளிவாசலின் இருப்பிடத்தை
எதற்காக
தெரிந்து கொள்ள வேண்டும்
அதற்கு அவசியம் என்ன
என்பதை
இப்பகுதியில்
படிக்கலாம்

அன்புள்ள தமிழ் இஸ்லாமியர்களே,

உலகில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமிய சகோதர்களும் அரபுநாட்டில் உள்ள
மக்கா,மதினாவுக்கு
எதற்காக செல்கிறார்கள் என்றால்

உலகில் உள்ள மனிதர்கள்
தன்னை படைத்த (உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும்)இறையை வழங்கும் இறைவனாகிய
அல்லா ஒருவனே
என்று அவன் படைத்த வல்லமைகளையும்
படைப்புகளையும்
சிறந்த படைப்பாக
மனிதனாகிய நாம் தான்
 என்று உணர்வதன் மூலம் மனிதனுக்கு நன்றிகடன் செலுத்த அவசியம் ஏற்படுகிறது,
நன்றிகடன் உணர்பவர்கள் நன்மையை பயன்படுத்தி கொள்கின்றனர்,
நன்றியை உணராதவர்கள்
அறியாமையினால்
பூமியில் உள்ள வல்லமைகளையும்
படைப்புகளையும்
அறிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்,

இஸ்லாத்தை ஏற்காதவர்கள் சில மனிதர்கள் அல்லாவுக்கு எதற்காக நன்றிகடன் செலுத்த வேண்டும்,
நன்றிகடன் என்ற வார்த்தையை
அடிமை போல் நினைக்கின்றார்கள்,
அப்படி அல்ல
அவர்களுக்கு
சகோதரத்துவம் மூலம்
நாம் சொல்வது என்னவென்றால்
நம்மை கருவறையில் சுமந்து பெற்றெடுக்கும் தாய் அந்த குழந்தைக்கு எதற்காக "பாலுட்டி"
வளர்கின்றார்கள்  பெற்றெடுத்த அந்த குழந்தைக்கு "அன்பை"
எதற்காக பகிர்ந்துகொள்கின்றார்கள்,அந்த குழந்தை வளர்ந்து திருமணம் முடிக்கும் வரை பெற்றோர்கள் செய்ய வேண்டிய சில கடமைகள் அவர்களுக்கு கட்டாயம் ஏற்படுகிறது,

இப்படி பெற்று வளர்த்த அந்த பெற்றோர்களுக்கு
ஒரு குறிபிட்ட வயது கடந்த பிறகு
அவர்கள்
தானாக வேலை செய்ய தொடங்குவார்கள்,
அதாவது
(இறையை)
தேடுவார்கள்
அந்த குழந்தையை வளர்த்த முதியவர்களாக
இருக்கும் பெற்றோர்களுக்கு
மகன்/கள்
செய்யவேண்டியதும் சில கடமைகள் உள்ளது ,அந்த கடமைகள் அவர்களுக்கு செய்ய
கட்டாயம்
ஏற்படுகிறது(இதற்கு பெயர்தான் நன்றிகடன் என்பதாகும்.)
அந்த நன்றிகடன் அடைக்க தான் மனிதர்களாகிய நாம் இந்த வாழ்க்கையை நோக்கி பயனிக்கின்றோம்

அதுபோல
இந்த இயற்கையை அமைத்து
காற்று ,மழை,மரம்,மணல்,சூரியன்,
சந்திரன்,இப்படி பூமியை உருவாக்கி அந்த பூமியில் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி,
இறையை
வழங்குகிறான் அந்த இறையை வழங்கும்
இறைவனாகிய ஒருவன்
"லா"
அவன் தான் அல்லா

ஆக இவன் படைப்புகளை நாம் உணர வேண்டும்
அவன் படைப்புகள் தெரிந்து கொள்ள நாம் வாழ வேண்டும்,
வாழ்வது "லா" வை
 வணங்க வேண்டும்,வணங்க வேண்டும் என்றால்("லா")வை முழுமையாக தெரிந்துகொள்ள பூமியில் உள்ள படிப்பினைகளை கற்று கொள்ள வேண்டும் ,
அப்படி கற்றுக்கொள்ள வேண்டியவை தான் இஸ்லாம் என்கின்றோம்,அது என்ன ஒரு எழுத்து
"லா"என்று கேள்வி கேட்கலாம்,
"லா"இந்த ஒரு எழுத்தின் அர்த்தம் எண்ணில் அடங்காதவை
"லா"  என்ற ஒற்றை எழுத்தை பல முறை இந்த ஒற்றை எழுத்தை உச்சரித்தால்
நிச்சயம்
தினந்தோறும் வாழ்வதற்கு இறைச்சியை மனிதனுக்கு
தரக்கூடிய இறைவனாகிய
"அல்லா"என்று
வரும்.
அலிப் ("லா")மீம்
நிச்யம் இந்த வார்த்தை அனைத்து இஸ்லாமியர்களும் அறிவார்கள்.

ஆக
"அல்லாவை"
மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
என்ற அடிப்படையில்
அனைத்து மனிதர்களும்
அதாவது இந்த பூமியல்
இஸ்லாத்தை ஏற்றுகொண்டு சகோதரத்துவம் முறையில் "நிறம்" "மொழி" ஆண் பெண் இப்படி மொழியை கடந்து அனைவரும் சகோதரத்துவம் முறையில் ஒரே இடத்தில் இணைவதால்
இந்த பூமியின் மேல் உள்ள "காஸ்மிக்"
கதிர்கள் பிரபஞ்சத்தில்
இருந்து மனிதர்களின் மூளைகளுக்கு
கிடைக்கப்பெறும்,
இப்படி பல நன்மைகள் இருப்பதால்
உலக இஸ்லாமியர்கள் அனைவரும்
தமக்கு கிடைக்கும்
ஒரு வாய்ப்பாக அந்த ஆற்றலை பெற்று கொள்வதற்காகவும்,
அதை தம் கடமையாகவும்
மக்கா, மதினாவுக்கு
(ஹஜ்)புனித பயணமாகவும்
மேற்கொள்கிறார்கள்

"அல்அக்ஸா"பள்ளிவாசலின்
சிறப்பு என்று இந்த கட்டுரையில் போட்டுள்ளனர் ஆனால்
தொடர்புஇல்லாதவற்றை எழுதியிருக்கின்றார்கள்
என்று சிலர் நினைக்கலாம்,
அப்படி இல்லை இஸ்லாமிய உறவுகளே
இதில் தொடர்பு உள்ளது,

நம் உலக இஸ்லாமியர்களுக்கு
எப்படி மக்கா மதினா "காபத்துல்லா"
போல
இந்த பூமியில்
உள்ள பாலஸ்தீனத்தில் உள்ள
"அல்அக்ஸா"பள்ளிவாசலும் ஆகும்

ஆனால்
இன்றோ பல
இஸ்லாமிய உறவுகளுக்கு
"அல்அக்ஸா"
என்பது என்ன ?
என்று கேள்வி கேட்கிறார்கள்,
ஏன் இந்த கட்டுரையை எழுபவரின்
என் பெற்றோர்கள் கூட "அல்அக்ஸா" (
பைத்துல்முகத்தஸ்)என்றால் என்ன ?எங்கு உள்ளது?
என்று
மறக்கடிப்பட்டுள்ளனர்,
ஆக இப்படி பல
இஸ்லாமிய உறவுகள்
பாலஸ்தீனத்தில் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசலின்
சிறப்பு,மகிமை,
நினைவுகள்,
வரலாறு,என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்காமல்
மறக்கடிக்கபடுகின்றார்கள்.

நாம்
சென்ற மாத இதழில் கூறியது
நினைவில் கொள்ளுங்கள்
யூதர்களின் ஒரு பிரிவினர்களாகிய
காலத்திற்க்கு
ஏற்ற வகையில்
அமைப்பின்
பெயரை மாற்றி கொள்ளும்
இலுமினாட்டி அதாவது
 (சீக்ரேட்
சொசைட்டி) இப்படி ஒரு பிரிவுகள்
குழுவாக
செயல்படுகிறார்கள்
இவர்கள்தான் இஸ்ரேலில் உள்ள யூதர்களின் ஒரு பிரவினர்கள்

இந்த அமைப்பு தான், ஜின்களுடன்
ஒன்றினைந்து மனிதர்களை இஸ்லாத்திற்கு
ஒன்றினைக்காமல்
பல
பல இயக்கங்கள்
ஏற்படுத்தி
குழப்பங்களுக்கு காரணங்களாக இருக்கின்றார்கள்
அந்த இயக்கங்களுடன்
சண்டைபோட்டு
நாம் காலங்களையும்
கழிக்கின்றோம்,
காரணம் மனிதர்கள் ஒன்றினைய கூடாது,
இந்த யூதர்களின் ஒரு பிரிவுகளாகிய
இலுமினாட்டிகள்
உலகில்
உள்ள அனைத்தையும்
வியாபாரமாக்கிவிட்டார்கள்,
இப்படி கல்வி,மருத்துவம்,
என்று நாம் நம் வாழ்க்கையை
கழிக்கின்றோம், இதற்காக உழைக்க பல நாடுகளுக்கு ஓடுகின்றோம்,

பிறகு எப்படி நாம் ஒன்றினைந்து
பிரபஞ்ச ஆற்றலை
"காஸ்மிக்"கதிர் வீச்சுகள்
நம் மூளைகளுக்கு பெற முடியும்,
இதனை தடுக்க தான் இஸ்ரேலில் உள்ள இந்த இலுமினாட்டி அமைப்பு
இந்த பூமியில் வாழ கூடிய அடுத்த தலைமுறைகள்
அதாவது இன்றைய குழந்தைகள்
தொலைகாட்சியில் "கார்டூன்"வீடியோ கேம் என்று
குழந்தைகளின் மூளையை மழுங்கிட செய்கின்றனர்,
அதாவது
ஆட்டுமந்தையாக ஆக்கியுள்ளனர்
என்று கூட சொல்லலாம்
சில பெற்றோர்கள்
இதுதான் "ஞானம்"என்றும்
தன் குழந்தை கேம் விளையாடுவதால் அறிவாளி
என்றும் பெருமையாக
நினைத்துகொள்கின்றனர்
அப்படி இல்லை.
உண்மையான ஞானம் என்பது
இறுதி இறை தூதர் முஹம்மத் ரசூல் சல் அலை அவர்கள் மூலம் "அல்லா "
நமக்கு அல்குர்ஆனை வழிங்கியுள்ளான்,
அந்த ஞானத்தை நம் உலகமக்களுக்காக இறுதி இறை தூதர் கொடுத்துவிட்டார்
அதனால்தான் முஹம்மத் ரசூல் சல் அலை அவர்கள் இறுதி இறை தூதர் என்றும்
கூறுகின்றோம்
அல்லாவின் சாந்தியும் சமாதானமும் அவர் மீது நிலவட்டுமாக

ஆக இந்த ஞானத்தை குழந்தைக்கு அல்குர்ஆன்
 மூலம் அர்த்தங்களுடன் கற்றுகொடுப்போம்,
ஆக இவ்வாறாக
இந்த யூதர்களின் ஒரு பிரிவினர்களாகிய
அரச குடம்பங்கள் இலுமினாட்டிகள் என்ற அமைப்புத்தான்
பல இயக்கங்கள் ஏற்படுத்தி
இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக
மீடியா மூலம்
ஏற்படுத்துகின்றனர்
மீடியாவும் ஒரு கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்,
அதே போல் அந்த மீடியா மூலம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள்
ஒரு பெரிய பிரச்சனைகளை காலம் காலமாக சந்திக்க வேண்டும் என்பதற்காக
தான் பாபர் மசூதி பிரச்சனை,
(நினைவில் கொள்ளவும் ஒரு புதிய பிரச்சனைகள்
ஏற்படுத்துவதே
முக்கிய பிரச்சனைகள் மறக்கடிக்கபடுவதற்காக மட்டுமே)

இப்படி இந்தியாவில் மட்டும் அல்ல உலகில் பல நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு
இது போல பிரச்சனைகள் ஏற்படுத்துபவர்கள்தான்
இந்த யூதர்களின் ஒரு பிரவினராகிய இலுமினாட்டி என்ற  அமைப்பு,

காரணம் உலக இஸ்லாமியர்கள்
ஒன்றினைந்து மக்கா,மதினாவில்
எப்படி தினந்தோறும் இலட்ச கணக்கான மக்கள்
ஒன்றினைந்து காஸ்மிக் கதிர்வீச்சுக்களை மனிதர்களுக்கு கிடைக்க இருக்கின்றதோ

அதேபோல் பாலஸ்தீனத்தில் உள்ள
அல்அக்ஸா பள்ளிவாசலும் காஸ்மிக் கதிர்
வீச்சுகள் மனிதர்களுக்கு அதிகம் கிடைக்கும்

அதர்க்கு ஏராளமான ஆதாரங்கள்
உள்ளது
1)நபி இப்ராஹிம் அலை அவர்கள் வாழ்ந்த இடம்
2)நபி இஸ்மாயில் அலை அவர்கள் பிறந்த இடம்
3)இசாக் அலை பிறந்து, வளர்ந்து வாழ்ந்த இடம்
4)இப்ராஹிம் (அலை) வாழ்ந்த பைத்துல் முகத்தஸ் பகுதியில் தனது கடைசிக் காலம் கழிய வேண்டுமென்று விரும்புகிறார்கள். தனது நூற்றி எண்பதாவது வயதில் அங்கேயே வபாதாகி விடுகிறார்கள்.
5)இசாக் (அலை) அவர்களை மகன்கள் ஈசு மற்றும் யாகூபும் இப்ராஹிம் (அலை) அவர்களை அடக்கம் செய்த இடத்திற்குப் பக்கத்திலேயே நல்லடக்கம் செய்துவிடுகிறார்கள்.
6)பின்பு யாகூப் (அலை) அவர்கள் தனது பதினோறு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு மனைவிகள், இரண்டு அடிமைப் பெண்கள், வேலையாட்கள், ஆடுகள், மாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் என்று எல்லாரையும் கூட்டிக் கொண்டு தற்போது அல்அக்ஸா பள்ளிவாசலின் இருக்கும் பகுதிக்கு அருகே தங்கிவிடுகிறார்கள்.
7)யாகூப் அலை
மகன்
நபி யூசூப் அவர்கள் பிறந்து சில வருடங்கள் வாழ்ந்த இடம் பைத்துல்முகத்தஸ் அல்அக்ஸா பள்ளிவாசல் இருக்கும் பகுதியில்
8)மூசா அலை
அவர்கள் பிர்அவ்ன் கூட்டத்தாரிடம் இருந்து யூதர்களை மீட்டு பாலஸ்தீனத்திற்கு
வந்நது,
மூசா அலை அவர்கள் அல்அக்ஸா பைத்துல் முகத்தஸ் பகுதியின் அருகே அடக்கம் செய்யபட்டது
9)ஏனைய நபிமார்கள்
 அல்அக்ஸா பள்ளியின் இருக்கும்
பகுதியில்
அடக்கம் செய்யப்பட்டார்கள்
10)தாவூத்
அலை
அவர் பின் சுலைமான்
அலை ஜின்கள் மூலம் அல்அக்ஸா பள்ளிவாசல் முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டது
11)ஈசா அலை பிறந்த ஊர்
அவர்கள் விண்ணுக்கு உயர்த்த பட்ட இடம்
12)நபி முஹம்மத் ரசூல் அலை அவர்கள் மக்காவில் இருந்து
அல்அக்ஸா பள்ளிவாசலுக்கு இஸ்ரா பயணித்தார்கள்
13)மிஹ்ராஜ் எனும் விண்ணுலக பயணம்
அல்அக்ஸாவில் இருந்துதான் பயணித்தார்கள்
14)இப்போது இஸ்லாமியர்கள்
5வேலை கடமையாக்கப்பட்ட தொழுகை இந்த மிஹ்ராஜ் பயணித்த பிறகே
கடமையாக்கப்பட்டது
15)சிறுது காலம் இஸ்லாமியர்கள்
அல்அக்ஸா இருக்கும்
பகுதியை நோக்கி தொழுதார்கள்

ஆக இப்படி அல்அக்ஸா பள்ளிவாசலை சுற்றி எத்தனையோ அதிசயங்கள் வரலாறு
ஏராளம்

அப்படி இருக்கும் இன்றைய சூழ்நிலையில்
பாலஸ்தீன மக்கள் ஒதுக்கப்பட்டு அந்த இடத்திலேயே
இஸ்ரேல் என்ற பெயரை
உருவாக்கி பாலஸ்தீன நாட்டிற்கு தலைமை ஆக்கிவிட்டார்கள்

அதுமட்டுமல்ல அல்சக்ரா என்ற தங்க நிற டூம் பள்ளியை மீடியா
மூலம்காட்டி
இதுதான் அல்அக்ஸா என்று உண்மையான பள்ளியை மறைக்கின்றார்கள்
காரணம்
இவர்களது ஆராய்ச்சிகள்
இராக்கெட் மூலம் விண்வெளி பயணம் மேற்கொண்டு
அதாவது
நபி முஹம்மத் ரசூல் அலை அவர்கள் எப்படி விண்ணுலக பயணம் மேற்கொண்டார்களோ
அதன் அடிப்படையில்
தனது ஆராய்ச்சியை
செய்துகொண்டு வருகின்றனர்
அவர்கள் தான் யூதர்களின்
 ஒரு பிரிவினரான
இலுமினாட்டி அமைப்பு
ஆனால் இவர்களது
ஆராய்ச்சியில்
அன்று முதல் இன்று வரை தடையாக இருப்பவர்கள்
பாலஸ்தீன மக்கள்
நம் பாலஸ்தீன சகோதர்கள் தினந்தோறும்
பல இன்னல்களை
அல்அக்ஸாவிற்காக
தியாகம்
செய்கிறார்கள்
நம் பாலஸ்தீன சகோதரர்களின் நோக்கம்
எப்படியாவது கியாமத்நாள் வரும் முன்பு "அல்அக்ஸா"பள்ளிவாசலை யூதர்களின் ஒரு பிரிவினராகிய இல்லுமினாட்டி அமைப்பிடம் இருந்து உலக இஸ்லாமியர்களுக்கு
சொந்தமாக்க வேண்டும் என்பதே
ஆகும்
இதனை படிக்கும்
உங்களுது குழந்தைக்கு "அல்அக்ஸா"
பள்ளி வாசலின்
சிறப்பை
வரலாற்றை நினைவூட்டவும்.

"இன்ஷாஅல்லா"
நிச்சயம் பைத்துல்முகத்தஸ்
அல்அக்ஸா பள்ளி வாசலுக்கு உலக இஸ்லாமியர்களுக்குஎப்படி மக்கா,மதினா
போல
"அல்அக்ஸா"பள்ளிவாசலுக்கும்
புனிதபயணம் மேற்கொள்ளவேண்டும்
என்ற எண்ணங்கள்
ஏற்படும்,
அல்அக்ஸா பள்ளிவாசல் உலக இஸ்லாமியர்களுக்கு முழுவதுமாக
சொந்தமாகும்
அந்த
நாட்கள் வெகுதொலைவில்
இல்லை,
இறுதி இறை தூதர் முஹம்மத் ரசூல் அலை அவர்களது உம்மத்தாகியவர்கள்
"அல்அக்ஸா"பள்ளிவாசலை வெற்றிபெற செய்வார்கள்
இன்ஷாஅல்லா
"ஆமின்".

*🔴நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் தொடர் -46*

*🎯வீடுகளில் கழிப்பறை அமைக்கலாமா❓❓❓*

🔘வீடுகளில் கழிப்பறை அமைப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல. அது வரவேற்கத்தக்க நல்ல காரியம் தான்.

🔘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மலஜலம் கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி தூரமான வெற்றிடத்துக்குச் செல்லும் வழக்கம் ஆரம்பத்தில் இருந்தது.

*📚ஹதீஸ்*

*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழிப்பிடம் செல்வதாக இருந்தால் தூரமாகச் சென்று விடுவார்கள்.*

*அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)*

*நூல்கள் : அபூதாவூத் 1, நஸாயீ 17*

🔘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துப் பெண்கள் மாலை மயங்கும் வரை கட்டுப்படுத்தி இருந்து விட்டு மாலை மயங்கியதும் திறந்தவெளி கழிப்பிடம் செல்வார்கள்.

*📚ஹதீஸ்*

*இது பற்றி ஆயிஷா (ரலி) கூறும் போது*

*நானும், உம்மு மிஸ்தஹ் (ரலி) அவர்களும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த மனாஸிஉ' என்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வது வழக்கம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்று கொண்டிருந்தோம். (இயற்கைத் தேவைக்காக) நகருக்கு வெளியே செல்லும் முற்கால அரபுகளின் வழக்கமே அப்போது எங்களது வழக்கமாயிருந்தது.*

*நூல் : புகாரி (சுருக்கம்) 2661*

🔘இதே கருத்து *புகாரி 4141, 4750* ஆகிய எண்களிலும் பதிவாகியுள்ளது.

🔘ஊருக்கு வெளியே மலஜலம் கழிக்கச் செல்வது அறியாமைக் கால மக்களின் வழக்கமாக இருந்தது என்பதையும் அதே வழக்கத்தை நபித்தோழர்களும் கடைப்பிடித்துள்ளனர் என்பதும் பின்னர் வீடுகளை ஒட்டி கழிவறை அமைக்கப்பட்டன என்பதும் மேற்கண்ட செய்தியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

🔘இன்று நாகரீகமான செயலாகக் கருதப்பட்டு ஐநா சபை மூலம் வலியுறுத்தப்படும் நாகரீகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தான் உலகுக்கு முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

🔘மலஜலத்தை அடக்கிக் கொள்ளக் கூடாது என்ற இஸ்லாத்தின் வழிகாட்டுதலை வீட்டில் கழிவறை இருந்தால் தான் செயல்படுத்த முடியும்.

🔘மேலும் பிறர் பார்க்காமல் முடிந்த அளவு மறைத்துக் கொள்ள வேண்டும். இதை திறந்த வெளியில் நிறைவாகச் செய்ய முடியாது.

🔘மேலும் மலஜலம் கழித்து விட்டு கழுவாமல் அப்படியே வந்து பின்னர் கழுவும் அநாகரீகமும் இதனால் தடுக்கப்படும்.

🔘பெண்களைப் பொருத்த வரை காமகொடூரர்களின் திருட்டுத் தனமான ரசனையில் இருந்தும் வெட்ட வெளியில் பாதுகாப்பு பெற முடியாது.

🔘எனவே வீடுகளில் கழிவறை அமைப்பது வரவேற்க வேண்டிய நபிவழியாகும்.

*📚ஹதீஸ்*

*நான் ஒரு நாள் என் வீட்டின் மாடியில் ஏறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தமது வீட்டில்) இரண்டு செங்கற்கள் மீது பைத்துல் முகத்தஸை நோக்கி அமர்ந்து கொண்டு தமது இயற்கைத் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருந்ததை பார்த்தேன் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்*

*நூல் : புகாரி 145, 149*

🔘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்து வீட்டுக்குள் கழிப்பறை அமைத்துக் கொண்டார்கள் என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

(♻இன்ஷா அல்லாஹ் வேறொரு பிரச்சினை மற்றும் தீர்வுடன் தொடரும்♻)

பதிவு நாள்: 20-04-2017