Saturday, 22 April 2017

ரஜபில் நடந்த முக்கிய நிகழ்வுகளும், அதன் படிப்பினைகளும் தொடர் -1

                      بسم الله الرحمن الرحي
☪ரஜபில் நடந்த முக்கிய நிகழ்வுகளும் ,அதன் படிப்பினைகளும் தொடர் -1 ☪

****************************************

اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ‌  ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ َۙ‏ 

📖நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் -(அல்குர்ஆன் : 9:36)

3197- عَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ، السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا، مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ، ثَلاَثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ، وَرَجَبُ مُضَرَ الَّذِي
 بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ)).

🎓3197. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை - துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.  என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

☸ரஜப் மாதம் வரலாற்றில் பல தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்த மாதமாகும். ஒரு சூழலை வேறொரு சூழல் மூலம் மாற்றி அமைக்க முடியும் என்று அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ள விதி பலமுறை அரங்கேறிய மாதமாகும். அப்படி நிகழ்ந்த பல தலைகீழ் மாற்றங்களில் மூன்று மாற்றங்கள் அறிவுடையோர் பாடமும் படிப்பினையும் பெற்றுக் கொள்ள வேண்டிய அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொண்ட மாற்றங்களாகும்.

💐1) பைத்துல் முகத்தஸ் மீட்பு
2) கிலாபத் முடிவடைந்தது
3) மிஃராஜ். இந்த மூன்று நிகழ்வுகளும் ரஜபு மாதத்தில்தான் நடந்தது.

🌾முதலாவதாக பைத்துல் முகத்தஸைப் பற்றி விரிவாக பார்போம். ஏனென்றால் கஃபாவின் வரலாற்றை மட்டுமே அதிகம் தெரிந்து வைத்திருக்கக்கூடியநாம் முஸ்லிம்களுக்கே சொந்தமான பைத்துல் முகத்தஸின் வரலாற்றையும் அதன் சிறப்புக்களையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

💈முஸ்லிம்களின் உள்ளத்தில் பைத்துல் முகத்தஸிற்கு தனி மரியாதை உண்டு. காரணம் அது அதிகமான நபிமார்கள் வாழ்ந்த பூமி. நபி ( ஸல்) அவர்கள் மிஃராஜூக்கு அங்கிருந்தே சென்றார்கள்.மேலும் முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகவும் உள்ளது.

🐠லூத் ( அலை) அவர்களை இந்த புனித பூமியிலே அல்லாஹ் குடியமர்த்தினான்

وَنَجَّيْنٰهُ وَلُوْطًا اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا لِلْعٰلَمِيْنَ‏ 
🌴இன்னும், நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் பரக்கத்தான - பாக்கியமுள்ள - பூமியாக நாம் ஆக்கியுள்ள (பைத்துல் முகத்தஸில்) ஈடேற்றம் பெறச் செய்தோம்.
(அல்குர்ஆன் : 21:71).

🔛சுலைமான் நபியை அந்த பூமிக்கு அழைத்துச் சென்றது பற்றி அல் குர்ஆன்

وَلِسُلَيْمٰنَ الرِّيْحَ عَاصِفَةً تَجْرِىْ بِاَمْرِهٖۤ اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا‌ وَكُنَّا بِكُلِّ شَىْءٍ عٰلِمِيْنَ‏ 

♻இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது; இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 21:81)

❤மூஸா ( அலை) தங்களின் கூட்டத்தார்களை  பைத்துல் முகத்தஸில் நுழையும்படி கூறிய நிகழ்வு.

يٰقَوْمِ ادْخُلُوا الْاَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِىْ كَتَبَ اللّٰهُ لَـكُمْ وَلَا تَرْتَدُّوْا عَلٰٓى اَدْبَارِكُمْ فَتَـنْقَلِبُوْا خٰسِرِيْنَ‏ 

✅(தவிர, அவர்) “என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்” என்றும் கூறினார்.
(அல்குர்ஆன் : 5:21)

🎓மூஸா ( அலை) அவர்களும் பைத்துல் முகத்தஸிற்கு அருகில் அடக்கமாகுவதை விரும்பினார்கள்.

1339- حَدَّثَنَا مَحْمُودٌ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: ((أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى- عَلَيْهِمَا السَّلاَمُ- فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لاَ يُرِيدُ الْمَوْتَ. فَرَدَّ اللَّهُ عَلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ، فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ بِهِ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ. قَالَ أَيْ رَبِّ، ثُمَّ مَاذَا قَالَ ثُمَّ الْمَوْتُ. قَالَ فَالآنَ. فَسَأَلَ اللَّهَ أَنْ يُدْنِيَهُ مِنَ الأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ)). قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((فَلَوْ كُنْتُ ثَمَّ لأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ عِنْدَ الْكَثِيبِ الأَحْمَرِ)).

 👔அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் மூஸா(ரலி) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்தபோது மூஸா(அலை) அவர்கள் அவரின் கண் பிதுங்கும் அளவுக்கு அடித்துவிட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய், “இறைவா! மரணிக்க விரும்பாத ஓர் அடியானிடம் நீ என்னை அனுப்பிவிட்டாய்“ என்றார். பிறகு அல்லாஹ் அவரின் கண்ணைச் சரிப்படுத்திவிட்டு, “நீர் மீண்டும் அவரிடம் சென்று, அவரை ஒரு மாட்டின் முதுகில் கையை வைக்கச் சொல்லி, அவரின் கை எத்தனை ரோமங்களை அடக்கிக் கொள்கிறதோ அத்தனை ஆண்டுகள் அவர் உயிர் வாழலாம் என்பதையும் கூறும்” என அனுப்பி வைத்தான். (அவ்வாறே அவர் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கூறியபோது,) மூஸா(அலை) “இறைவா! அதற்குப் பிறகு?“ எனக் கேட்டதும் அல்லாஹ், “பிறகு மரணம் தான்“ என்றான். உடனே மூஸா(அலை) அவர்கள் “அப்படியானால் இப்பொழுதே (தயார்)“ எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும்) பூனிதத்தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள (புனிதத் தலத்திற்கு மிக அருகிலுள்ள) இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டினார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறும்போது, “நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஸா(அலை) அவர்களின் கப்ரைக் காட்டியிருப்பேன்” எனக் குறிப்பிட்டார்கள். ஸஹீஹ் புகாரி

மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தபின் சுமார் 17 மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கியே தொழுதார்கள்

 وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِىْ كُنْتَ عَلَيْهَآ اِلَّا لِنَعْلَمَ مَنْ يَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ يَّنْقَلِبُ عَلٰى عَقِبَيْهِ ‌ وَاِنْ كَانَتْ لَكَبِيْرَةً اِلَّا عَلَى الَّذِيْنَ هَدَى اللّٰهُ  وَمَا كَانَ اللّٰهُ لِيُضِيْعَ اِيْمَانَكُمْ‌  اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِيْمٌ‏ 

🚩யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள் யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.
(அல்குர்ஆன் : 2:143)

7252- ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻳَﺤْﻴَﻰ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻭَﻛِﻴﻊٌ ﻋَﻦْ ﺇِﺳْﺮَاﺋِﻴﻞَ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﺇِﺳْﺤَﺎﻕَ ﻋَﻦِ اﻟْﺒَﺮَاءِ ﻗَﺎﻝَ ﻟَﻤَّﺎ ﻗَﺪِﻡَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ اﻟْﻤَﺪِﻳﻨَﺔَ ﺻَﻠَّﻰ ﻧَﺤْﻮَ ﺑَﻴْﺖِ اﻟْﻤَﻘْﺪِﺱِ ﺳِﺘَّﺔَ ﻋَﺸَﺮَ، ﺃَﻭْ ﺳَﺒْﻌَﺔَ ﻋَﺸَﺮَ ﺷَﻬْﺮًا، ﻭَﻛَﺎﻥَ ﻳُﺤِﺐُّ ﺃَﻥْ ﻳُﻮَﺟَّﻪَ ﺇِﻟَﻰ اﻟْﻜَﻌْﺒَﺔِ ﻓَﺄَﻧْﺰَﻝَ اﻟﻠَّﻪُ ﺗَﻌَﺎﻟَﻰ: {ﻗَﺪْ ﻧَﺮَﻯ ﺗَﻘَﻠُّﺐَ ﻭَﺟْﻬِﻚَ ﻓِﻲ اﻟﺴَّﻤَﺎءِ ﻓَﻠَﻨُﻮَﻟِّﻴَﻨَّﻚَ ﻗِﺒْﻠَﺔً ﺗَﺮْﺿَﺎﻫَﺎ} ﻓَﻮُﺟِّﻪَ ﻧَﺤْﻮَ اﻟْﻜَﻌْﺒَﺔِ، ﻭَﺻَﻠَّﻰ ﻣَﻌَﻪُ ﺭَﺟُﻞٌ اﻟْﻌَﺼْﺮَ، ﺛُﻢَّ ﺧَﺮَﺝَ ﻓَﻤَﺮَّ ﻋَﻠَﻰ ﻗَﻮْﻡٍ ﻣِﻦَ اﻷَﻧْﺼَﺎﺭِ ﻓَﻘَﺎﻝَ ﻫُﻮَ ﻳَﺸْﻬَﺪُ ﺃَﻧَّﻪُ ﺻَﻠَّﻰ ﻣَﻊَ اﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻭَﺃَﻧَّﻪُ ﻗَﺪْ ﻭُﺟِّﻪَ ﺇِﻟَﻰ اﻟْﻜَﻌْﺒَﺔِ. ﻓَﺎﻧْﺤَﺮَﻓُﻮا ﻭَﻫُﻢْ ﺭُﻛُﻮﻉٌ ﻓِﻲ ﺻَﻼَﺓِ اﻟْﻌَﺼْﺮِ.

🇬🇷7252. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது பைத்துல் மக்தீஸ் (நகரிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா இறையில்லத்தை) நோக்கி பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் தொழுதார்கள். (தொழுகையில்) கஅபாவை நோக்கி முகம் திருப்புவதையே அவர்கள் விரும்பிவந்தார்கள். எனவே, அல்லாஹ் “(நபியே!) உம்முடைய முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம்; எனவே, நீர் விரும்பும் கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் (இதோ) உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்“ எனும் (திருக்குர்ஆன் 02:144 வது) வசனத்தை அருளினான். இவ்விதம் (தொழுகையிலிருந்தபோதே) கஅபாவை நோக்கி முகம் திருப்பப்பட்டார்கள். அந்த அஸ்ர்தொழுகையில் நபி(ஸல்) அவர்களுடன் ஒருவர் தொழுதார். அவர் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறி அன்சாரிகளில் ஒரு குலத்தாரைக் கடந்து சென்றபோது, “நபி(ஸல்) அவர்களுடன் தாம் தொழுததாகவும், (தொழுகையிலேயே) அவர்கள் முகம் கஅபாவை நோக்கித் திருப்பப்பட்டதாகவும் தாம் சாட்சியம் அளிப்பதாகச் சொன்னார். உடனே அம்மக்கள் அஸ்ர் தொழுகையில் ருகூஉ செய்து கொண்டிருந்த நிலையில் அப்படியே கஅபாவை நோக்கித் திரும்பினார்கள். ஸஹீஹ் புகாரி.

📖மறுமை நாளில் படைப்பினங்கள் அனைவர்களையும் ஒன்று சேர்ப்பதற்காக ஒரு வாணவர் பைத்துல் முகத்தஸ் பள்ளியில் உள்ள ஒரு பாறையின்மீது நின்றே அழைப்பார். மேலும் இந்த இடம்தான் பூமியின் நடுப்பகுதியாகவும். பூமியிலேயே உயரமான இடமாகவும் வானத்திற்கு சமீபமான இடமாகவும் உள்ளது.இது பற்றியே கீழ் வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான் என முஃபஸ்ஸிரீன்கள் கூறுகின்றார்கள்

وَاسْتَمِعْ يَوْمَ يُنَادِ الْمُنَادِ مِنْ مَّكَانٍ قَرِيْبٍۙ‏ 

👀மேலும், சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே!) நீர் செவிமடுப்பீராக.
(அல்குர்ஆன் : 50:41)

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *23-04-2017*


No comments:

Post a Comment