Saturday, 22 April 2017

உள்ளத்திற்கு அமைதி தரும் அன்பளிப்புகள்

 உள்ளத்திற்கு அமைதி தரும் அன்பளிப்புகள்:

1)மனிதர்களின் அன்பைப் பெறுவதை உனது முயற்சியாக ஆக்கிக் கொள்ளாதே!ஏனெனில் மனிதர்களின் உள்ளங்கள், அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதையே, உனது முழு நோக்கமாக ஆக்கிக் கொள். அல்லாஹ் உன்னை விரும்பி விட்டால், மனித உள்ளங்களை உன்னை விரும்புமாறு செய்து விடுவான்.

2)சோதனைகளின் போது பொறுமை ,"ஈமான்"ஆகும். உணவில் பொறுமை, "திருப்தி"ஆகும். இரகசியங்களைப் பாதுகாப்பதில் பொறுமை ,"குறை மறைத்தல்"ஆகும். உறவைப் பேணுவதில் பொறுமை ,கடமையை "நிறைவு" செய்வதாகும் ஆகும்.

3)உனது வாழ்வில் ஏற்படும் அனைத்துத் தாமதங்களும், அல்லாஹ் மட்டுமே அறிந்த, உன்னதமானதொரு காரணத்திற்கேயாகும். உனது கருமங்களை அவனிடமே பொறுப்புச் சாட்டி விடு. அவனையே நம்பு. நம்பிக்கை இழந்து விடாதே. உனக்கேற்பட்ட இழப்புகளுக்குப் பகரமாக, உனது உள்ளம் விரும்பும் விதமான நலவுகளைத் தருவான் என்பதில் உறுதியுடன் இரு.

4)பின் வரும் ஐந்து விடயங்களை துன்யா, உன்னிடமிருந்து களவாட அனுமதித்து விடாதே!(1)அல்லாஹ்வுடன் நீ தொடர்பு கொள்வது.
(2)பெற்றோருடன் பாசமாக நடப்பது
(3)குடும்த்தினருடனான அன்பு, (4)உன்னுடனிருப்பவர்களுக்கு உபகாரம் புரிவது.
(5)உனது காரியங்களில் தூய உள்ளம்.

5)மனிதர்களுடனான உனது தொடர்பை, மரத்தின் இலைகளாக எண்ணிக் கொள். கிளைகளில் மீதமிருப்பை பழம் தருகின்றன. கீழே விழுந்தவைகள், மீண்டும் கிளைகளுக்கு மீள்வதில்லை.

6)மனிதர்கள் உனக்கு என்ன செய்கிறார்கள் என்பதை மாத்திரம் பார்த்து, அவர்களுடன் தொடர்பு கொள்ளாதே! நீயும், அவர்களைப் போலவே ஆகிவிடுவாய். எனினும் உனது அடிப்படை நல்லகுணங்களுடன் அவர்களுடன் பழகு, அவர்கள் அதற்குத் தகுதியில்லா விட்டாலும் சரி.

7)உண்மையான மனநிம்மதி, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நீ, "அல்ஹம்து லில்லாஹ்"என்று கூறுவதாகும். உலக விடயங்களில், அதிகம் அலட்டிக் கொள்ளாதே. அனைத்தும் முடிவுசெய்யப்பட்டு எழுதப்பட்டு விட்டன. நீ அதைச் சந்தித்தே ஆகவேண்டும்.

8)உனது முயற்சிகளையும், நீ புரியும் நற்காரியங்களையும் யாராவது ஒருவர், மதிக்க வில்லை என்பதற்காக கவலைப்படாதே! அருட்கொடை நீங்கியதற்குப் பின், பெறுமதியைப் புரிந்து கொள்வதுதான் மனித இயற்கை.

9)உன் சகோதரனுக்குத் தோழ் கொடுப்பவனாக, சகோதரிக்கு உதவியாளனாக, மனைவியிடம் பாசமுள்ளவனாக, தோழனுடன் நம்பிக்கைக்குறியவனாக, அடுத்த வீட்டினருக்கு உபகாரம் புரிபவனாக இருந்து கொள். உலகம் ஒரு நாள், நீங்கிவிடும். நாமெல்லாம் இதைவிட்டுப் போய்விடுவோம்.

10) "ரஹ்மானான அல்லாஹ்வுக்கு மிகவிருப்பமான இரண்டு வார்த்தைகள்"என்று நீ அறிந்து கொண்டவுடன், பகலிலோ இரவிலோ அதை நீ  விட்டுவிடாமலிக்கத் தூண்டும் இரண்டு வார்த்தைகளாவன; "சுBப்ஹானல்லாஹி வBபிஹம்திஹீ  சுBப்ஹானல்லாஹில் அளீம்"

பதிவு நாள்: *22-04-2017*

No comments:

Post a Comment