Tuesday, 25 April 2017

🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 7

🐠ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 7🐠

நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் இந்த பெண்ணிடம் இருந்து தற்காத்து கொள்ள வாசலின் பக்கம் ஓடினார் அவள் அதை தடுக்க அவரின் சட்டையை பின்புறமாக இழுத்தால் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது சட்டை கிழிந்து விட்டது வாசலில் அவளுடைய கணவரை இருவரும் கண்டதும் அவள் தப்பிக்க அவரிடம் உம்முடைய மனைவியை துன்புறுத்த நாடியவருக்கு என்ன தண்டனை உங்கள் சட்டத்தில் சிறை தண்டனையா அல்ல துன்புறுத்தும் தண்டனையா என்று கேட்டாள்.
(இதை மறுத்து யூஸுஃப்;) “இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்” என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்: “இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.
“ஆனால் இவருடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்தால், அவள் பொய் சொல்லுகிறாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்.”என்று கூற,

நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களின் சட்டையை பார்த்தபொழுது   அந்த சட்டை பின்புறமாக கிழிந்திருந்ததை கண்ட அந்த பெண்ணின் கணவன்  அந்த பெண்ணிடம் நிச்சயமாக இது பெண்களாகிய உங்களுடைய சூழ்ச்சியே தவிர வேறில்லை. மேலும் அவர் கூறினார் பெண்களாகிய உங்களுடைய சூழ்ச்சி மிகவும் மகத்தானது என்று, இந்த வாக்கு எவ்வளவு உண்மை என்பதை இன்று கூட நாம் அறியலாம். எந்த பெண்ணாவது ஒரு ஆணை பார்த்து தவறாக கூறினால் உடனே நம்மக்கள் பெண்களின் பேச்சைத்தான் கேட்பார்கள் அதற்க்கு ஆயிரம் காரணம் கூறுவார்கள் . அதில் உண்மையும் இருக்கலாம் அனால் சில பொய்யான கூற்றையும் பெண்கள் கூறினால் அது நம்பபட்டுவிடும் .

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *25-04-2017*

No comments:

Post a Comment