1) ரஜப் பைத்துல் முகத்தஸ் மீட்கப்பட்ட புரட்சி மாதம்
**********************************************
11,12, 13. ஆகிய நூற்றாண்டுகளில் நடைபெற்ற சிலுவைப் போர்களின் காலத்தில் அந்தப் புனித மிக்கப் பள்ளியும் புனிதமிக்கப் பகுதியும் நிராகரிப்பாளர்களின் அதிகாரத்தின் கீழ் சென்றது.இதனால் உலக முஸ்லிம்கள் அனைவரும் மிகுந்த துக்கமும் கவலையும் மனவேதனையும் அடைந்தார்கள்.அதை மீட்கும் நாள் இனி வராதா என்று ஏங்கினார்கள்.
அன்றைய இஸ்லாமிய பேரரசுக்குள் நிகழ்ந்த உள்ளார்ந்த குழப்பங்களும் சுமார் 200 ஆண்டுகாலம் நடைபெற்ற சிலுவைப் போர்கள் தோற்றுவித்திருந்த உயிர் மற்றும் பொருளாதார இழப்பும் இஸ்லாமியப் பேரரசை மிகவும் பலவீனப் படுத்தி இருந்தது இதனால் குதுஸூம் பைத்துல் முகத்தஸூம் நிராகரிப்பாளர்களிடமிருந்து மீட்கப்படும் வாய்ப்பே இனி இல்லை என்றும் ஒரு வேளை அவை மீட்கப்பட்டு விட்டால் அது உலக வரலாற்றில் ஒரு தலைகீழ் புரட்சியாகத்தான் இருக்க முடியும் என்றும் கணிசமானோர் கருதினார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் எல்லாம் வல்ல அல்லாஹ் இஸ்லாமிய கிலாஃபா பேரரசின் தளபதியும் ஆட்சியாளருமான சுல்தான் சலாஹூத்தீன் அய்யூபி( ரஹ்) அவர்கள் மூலம் பைத்துல் முகத்தஸையும் அதைச் சுற்றியுள்ள குதுஸ் பகுதியையும் நிராகரிப்பாளர்களின் கரங்களிலிகுந்து இதே ரஜப் மாதத்தில் மீட்டெடுத்து மீண்டும் இஸ்லாமிய பேரரசின் மடியில் தவழச் செய்தான். அதனால் உலக முஸ்லிம்களின் துக்கமும் கவலையும் வேதனையும் மறைந்து மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது.
மேலும் பைத்துல் முகத்தஸ் மற்றும் குதுஸ் ஆகியவற்றின் மீட்பு ரஜப் மாதத்தில் நடந்தது. அதைத் தொடர்ந்து இரண்டே மாதங்களில் சிரியா உள்ளிட்ட இஸ்லாத்தின் நிலப்பரப்புகள் சிலுவைக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டது.
வியக்கத்தகு சம்பவம் ஒன்று:
**********************************
மன்னர் சுல்தான் சலாஹூத்தீன் நல்ல முறையில் எகிப்து நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கும் தருணத்தில் மீண்டும் ஜெருசலத்தை பிடிப்பதற்காக ஐரோப்பிய கிருஸ்தவர்கள் பெரும் படை ஒன்றை திரட்டி வந்தார்கள். இப்படைக்கு தளபதியாக இங்கிலாந்தைச் சார்ந்த முதலாம் ரிச்சார்டு என்ற மன்னர் தலைமை தாங்கினார். இப்போர் பாலைவனத்தில் பல நாட்கள் நடந்தது. அவ்வேளையில் ரிச்சார்டுக்கு விஷக்காய்ச்சல் ஏற்பட்டு உயிர் போகும் நிலையில் இருக்கிறார். அவர்களின் ஆங்கில மருந்து எந்த பலனையும் தரவில்லை. ஒரு நாள் ஒரு வைத்தியர் ரிச்சார்டின் கூடாரத்திற்கு முன்பு வந்து நின்று என்னை வைத்தியம் செய்வதற்காக சலாஹூத்தீன் என்ற அரசர் அனுப்பி வைத்தார் எனக்கூற அங்கிருந்தவர்கள் அவரை சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்கள். இதையறிந்த வைத்தியர் உங்கள் தளபதிக்கு மருந்து கொடுக்குமுன் அதை நான் சாப்பிட்ட பிறகே கொடுக்கிறேன் எனக் கூறினார். அவர்களும் அனுமதித்தார்கள். மருத்துவம் செய்தார் வைத்தியர். நோயும் குணமடைந்தது. மன்னர் ரிச்சார்டு மனம் திருந்தி சமாதான உடன்படிக்கையை சமர்ப்பித்தார். சுல்த்தான் சலாஹூத்தீன் அவர்களின் அரசவைக்கு மன்னர் ரிச்சார்டு நேரில் சென்றார். சுல்தான் சலாஹூத்தீன் ரிச்சார்டுவை அன்புடன் வரவேற்றார். என்ன ஆச்சர்யம்! மன்னர் ரிச்சார்டுவின் கண்கள் படபடத்தன. என் நோயினை போக்க வைத்தியராக வந்தவர் சுல்தான் சலாஹூத்தீன் அவர்களா? இத்தகு வீரரை நான் கேள்விப்பட்டது கூட இல்லை. என்னை மன்னித்து விடுங்கள் எனக் கூறி கரம்பற்றி அழுகிறார். இதுவல்லவா மனித நேயம் ஆம் இஸ்லாம் இதைத்தான் போதிக்கிறது.
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: 28-04-2017
**********************************************
11,12, 13. ஆகிய நூற்றாண்டுகளில் நடைபெற்ற சிலுவைப் போர்களின் காலத்தில் அந்தப் புனித மிக்கப் பள்ளியும் புனிதமிக்கப் பகுதியும் நிராகரிப்பாளர்களின் அதிகாரத்தின் கீழ் சென்றது.இதனால் உலக முஸ்லிம்கள் அனைவரும் மிகுந்த துக்கமும் கவலையும் மனவேதனையும் அடைந்தார்கள்.அதை மீட்கும் நாள் இனி வராதா என்று ஏங்கினார்கள்.
அன்றைய இஸ்லாமிய பேரரசுக்குள் நிகழ்ந்த உள்ளார்ந்த குழப்பங்களும் சுமார் 200 ஆண்டுகாலம் நடைபெற்ற சிலுவைப் போர்கள் தோற்றுவித்திருந்த உயிர் மற்றும் பொருளாதார இழப்பும் இஸ்லாமியப் பேரரசை மிகவும் பலவீனப் படுத்தி இருந்தது இதனால் குதுஸூம் பைத்துல் முகத்தஸூம் நிராகரிப்பாளர்களிடமிருந்து மீட்கப்படும் வாய்ப்பே இனி இல்லை என்றும் ஒரு வேளை அவை மீட்கப்பட்டு விட்டால் அது உலக வரலாற்றில் ஒரு தலைகீழ் புரட்சியாகத்தான் இருக்க முடியும் என்றும் கணிசமானோர் கருதினார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் எல்லாம் வல்ல அல்லாஹ் இஸ்லாமிய கிலாஃபா பேரரசின் தளபதியும் ஆட்சியாளருமான சுல்தான் சலாஹூத்தீன் அய்யூபி( ரஹ்) அவர்கள் மூலம் பைத்துல் முகத்தஸையும் அதைச் சுற்றியுள்ள குதுஸ் பகுதியையும் நிராகரிப்பாளர்களின் கரங்களிலிகுந்து இதே ரஜப் மாதத்தில் மீட்டெடுத்து மீண்டும் இஸ்லாமிய பேரரசின் மடியில் தவழச் செய்தான். அதனால் உலக முஸ்லிம்களின் துக்கமும் கவலையும் வேதனையும் மறைந்து மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்கி வழிந்தது.
மேலும் பைத்துல் முகத்தஸ் மற்றும் குதுஸ் ஆகியவற்றின் மீட்பு ரஜப் மாதத்தில் நடந்தது. அதைத் தொடர்ந்து இரண்டே மாதங்களில் சிரியா உள்ளிட்ட இஸ்லாத்தின் நிலப்பரப்புகள் சிலுவைக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டது.
வியக்கத்தகு சம்பவம் ஒன்று:
**********************************
மன்னர் சுல்தான் சலாஹூத்தீன் நல்ல முறையில் எகிப்து நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கும் தருணத்தில் மீண்டும் ஜெருசலத்தை பிடிப்பதற்காக ஐரோப்பிய கிருஸ்தவர்கள் பெரும் படை ஒன்றை திரட்டி வந்தார்கள். இப்படைக்கு தளபதியாக இங்கிலாந்தைச் சார்ந்த முதலாம் ரிச்சார்டு என்ற மன்னர் தலைமை தாங்கினார். இப்போர் பாலைவனத்தில் பல நாட்கள் நடந்தது. அவ்வேளையில் ரிச்சார்டுக்கு விஷக்காய்ச்சல் ஏற்பட்டு உயிர் போகும் நிலையில் இருக்கிறார். அவர்களின் ஆங்கில மருந்து எந்த பலனையும் தரவில்லை. ஒரு நாள் ஒரு வைத்தியர் ரிச்சார்டின் கூடாரத்திற்கு முன்பு வந்து நின்று என்னை வைத்தியம் செய்வதற்காக சலாஹூத்தீன் என்ற அரசர் அனுப்பி வைத்தார் எனக்கூற அங்கிருந்தவர்கள் அவரை சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்கள். இதையறிந்த வைத்தியர் உங்கள் தளபதிக்கு மருந்து கொடுக்குமுன் அதை நான் சாப்பிட்ட பிறகே கொடுக்கிறேன் எனக் கூறினார். அவர்களும் அனுமதித்தார்கள். மருத்துவம் செய்தார் வைத்தியர். நோயும் குணமடைந்தது. மன்னர் ரிச்சார்டு மனம் திருந்தி சமாதான உடன்படிக்கையை சமர்ப்பித்தார். சுல்த்தான் சலாஹூத்தீன் அவர்களின் அரசவைக்கு மன்னர் ரிச்சார்டு நேரில் சென்றார். சுல்தான் சலாஹூத்தீன் ரிச்சார்டுவை அன்புடன் வரவேற்றார். என்ன ஆச்சர்யம்! மன்னர் ரிச்சார்டுவின் கண்கள் படபடத்தன. என் நோயினை போக்க வைத்தியராக வந்தவர் சுல்தான் சலாஹூத்தீன் அவர்களா? இத்தகு வீரரை நான் கேள்விப்பட்டது கூட இல்லை. என்னை மன்னித்து விடுங்கள் எனக் கூறி கரம்பற்றி அழுகிறார். இதுவல்லவா மனித நேயம் ஆம் இஸ்லாம் இதைத்தான் போதிக்கிறது.
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: 28-04-2017
No comments:
Post a Comment