Friday, 28 April 2017

☪ரஜபில் நடந்த முக்கிய நிகழ்வுகளும் ,அதன் படிப்பினைகளும் தொடர் -5

2) கிலாஃபத் ஆட்சி முடிவடைந்தது ரஜபில்தான்

**********************************************
அண்ணல் நபி( ஸல்) அவர்களால் நிலைநாட்டப்பட்ட நபித்துவ அரசு.அவர்களின் மறைவிற்குப் பிறகு கிலாஃபா பேரரசாக விரிவடைந்தது 1924 ஆம் ஆண்டுவரை கம்பீரமாக உலகை மேலாண்மை செலுத்தியது. அந்த பேரரசின் கீழ் ஒரே கொடியின் கீழ் ஒரே கலீஃபாவின் கீழ் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமுதாயமாகப் பின்னிப் பிணைந்து பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். ஆனால் அதைச் சகித்துக் கொள்ள விரும்பாத நிராகரிப்புச் சர்வாதிகாரிகள் சதிகள். பேரங்கள். தந்திரங்கள். கூலிப்படைகள். கைக்கூலிகள் முதலான ஆள்.அம்பு. சேனை என்று அனைத்தையும் களத்தில் இறக்கிவிட்டு.நீண்ட கால முயற்சிக்குப் பின்னர் அந்தப் பேரரசை - உலக முஸ்லிம்களுக்கு எந்தப் பேரரசு பாதுகாப்புக் கேடயமாக விளங்கியதோ அந்தப் பேரரசை - ஹிஜ்ரி 1342 ஆம் ஆண்டு ரஜப் மாதம் 28 ஆம் நாள் அன்று( 03/03/1924) துண்டு துண்டாக உடைத்தெறிந்தார்கள்.

وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌ وَاصْبِرُوْا‌  اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‌‏ 

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 8:46).

முடிவுற்றது.

பதிவு நாள்: 28-04-2017

No comments:

Post a Comment