Sunday, 27 August 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 17

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 17

========================

புனிதஹஜ்ஜுக்குப்
புறப்படுவதற்கு முன் புனித ஹஜ்ஜுக்குப் போய் வருவதற்கு
ஹலாலான முறையில் சம்பாதித்த
பணத்தை மட்டுமே
பயன்படுத்துங்கள். பல்வேறு
சிரமங்களுக்குக் கிடையே செய்யும் புனிதப் பயணம்,
விழலுக்கு இறைத்த நீராக வீணாகி
விடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். உற்றார் உறவினர், உடன் பிறந்தோர், அண்டை அயலார்,
அனைவரிடமும் விடை பெறும்
போது அறிந்தும் அறியாமலும்
செய்த தவறுகளுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டு பிராயச் சித்தம்
தேடியவர்களாப் புறப்படுங்கள்.
கடன்கள் இருந்தால் கொடுத்து முடித்து அல்லது போய் வந்த
பிறகு இன்ஷா அல்லாஹ் தருவதாக
வாக்களித்து, கடன் கொடுத்தவர் அதை மனமார ஏற்றுக் கொண்டால்
மட்டுமே, ஹஜ்ஜுக்குப் புறப்பட
ஆயத்தமாகுங்கள்.
புகழுக்காகவும்,
பெருமைக்காகவும்,
ஆடம்பரத்துக்காகவும் இல்லாமல்
மெய்யாகவே இறைவனின்
கட்டளையை நிறைவேற்றும்
எண்ணத்தை இதயத்தில் வைத்துப்
புறப்படுங்கள். வசதிக்காக
அதிகமான உடமைகளை உடன்
எடுத்துச் செல்லாதீர்கள். சென்று
திரும்பும் வரையுள்ள சில தினங்கள், சின்னஞ்சிறு சிரமங்களை
சகித்துக் கொள்ளுங்கள்.
குறைவான உடமைகள் உங்கள்
பயணத்தை எளிதாக்கும்.
அவசரத்திற்கு தேவைப்படும்
மருந்து வகைகளையும்,
முதலுதவி மருந்துகளையும்
மருத்துவர்களின் ஆலோசனைப்படி
முன் கூட்டியே வாங்கி வைத்துக்
கொள்ளுங்கள்.

பயணத்தின் போது, வகை வகையான உணவுகளுக்கு
முக்கியத்துவம் தராமல், எளிமைளான உணவுப் பழக்கத்தைக்
கடைப் பிடியுங்கள். வழிப் பயணம்
இலகுவாக இருக்கும். குறிப்பாக,
ஹஜ்ஜுடைய நாட்களில், மினா
அரபாத், முஸ்தலிபா, ஆகிய இடங்களில் எளிமையான
உணவுகளை உண்ணுங்கள். அதிக
நெரிசல் மிகுந்த இடங்களில் உங்கள்
அவசரத் தேவைகளை நிறைவேற்ற
அதிக நேரம் காத்திருக்க வேண்டி
வரும்.

புனித ஹஜ்ஜுக்குப்
புறப்பட்டதிலிருந்து திரும்பவும் உங்கள் இல்லம் வந்து சேரும் வரை வழிப் பயணத்திலும், புனிதத்
தலங்களில் தங்கியிருக்கும் போதும், சக ஹாஜிகளுடன்
அன்பாகப் பழகி, ஒருவருக் கொருவர்
உதவியாக இருங்கள். எந்த வகையிலும் பிறருக்கு
இடையூறு ஏற்படாதவாறு உங்கள்
நடவடிக்கைகளை அமைத்துக்
கொள்ளுங்கள்.
பல்வேறு குண நலன்கள் கொண்ட
பலருடன் சேர்ந்து பயணம் மேற்
கொள்ளும் போது, எல்லா வகையிலும் அணுசரித்துப் போகப்
பழகிக் கொள்ளுங்கள்.
பொறுமையைக் கடைப் பிடியுங்கள்.

 உடன் வரும் சக
ஹாஜிகள் முதியவர்களாக
இருப்பின், அனைத்து வகையிலும்
அவர்களுக்கு முன்னுரிமைக்
கொடுத்து, அரவணைத்துச்
செல்லுங்கள். அப்படி ஒரு முதுமை நமக்கு ஏற்படும்போது
நமக்கு உதவ சிலரை அல்லாஹ்
ஏற்படுத்துவான்.
புனிதப் பயணம் மேற்கொள்ளும்
பொன்னான வாய்ப்பை அடையப்
பெற்றிருக்கிறீர்கள். வீண் பேச்சுக்கள்,
விதண்டாவாதம், சண்டை சச்சரவுகள்,
ஆகியவற்றைத் தவிர்த்து, அதிகமதிகம் இறைவணக்கத்தில்
பொழுதைக் கழியுங்கள்.
மக்காவில் தங்கியிருக்கும்
நாட்களில், மஸ்ஜிதுல்
ஹராமிலும், மதீனாவில்
தங்கியிருக்கும் நாட்களில்,
மஸ்ஜிதுன்னபவியிலும், ஐவேளைத் தொழுகைகளை
ஜமாஅத்துடன் தொழுவதில் கவனம்
செலுத்துங்கள். இப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் எப்போது
கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

*புறப்படுவோம் வாருங்கள்!*

இஸ்லாத்தின் இறுதிக் கடமையாம், புனித ஹஜ்ஜை
நிறைவேற்றுவதற்கான பொருள் வளமும், உடல் நலமும், பெற்றவர்களே!
இனியும் உங்கள் பொன்னான
வாய்ப்பைத் தவற விடாதீர்கள்.
‘அடுத்தடுத்த ஆண்டுகளில் செய்து கொள்ளலாம்” என்று
காலம் கடத்தாதீர்கள். அது வரை இருப்போம் என்பதற்கு என்ன
உத்தரவாதம் இருக்கின்றது?
இன்றைய தினமே இறந்து
போய்விட்டால், வங்கிக்
கணக்குகளும், வாங்கிவைத்த
சொத்துக்களும் உங்களுடையதல்ல.
பங்கு போட்டுக் கொள்ள பங்காளிகள்
பத்து பேர் தயாராக நிற்கின்றனர்.
அரும்பாடுபட்டு சேர்த்த சொத்துக்களை அப்படியே
போட்டுவிட்டு போகப்
போகின்றீர்கள். அதற்கு முன் அல்லாஹ் உங்களுக்கு விதித்த
கடமையைச் செய்து விட்டு, மறுமைப் பயணத்துக்குத்
தயாராகுங்கள்.
வயோதிகத்தை அடைந்த பிறகு
ஹஜ்ஜுக்குச் செல்வதை விட, நல்ல
உடல் வலிமை இருக்கின்ற போதே
செல்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
ஏனெனில் தள்ளாத வயதில்,
ஹஜ்ஜுடையச் செயல்களை
முறையாக முழுமையாகச்
செய்வது சிரமமாக இருக்கும்.

இளமையுடனும், நல்ல
ஆரோக்கியத்துடனும், இருக்கும் இப்போதே ஹஜ்ஜுக்குச் செல்வது
ஹஜ்ஜின் எல்லாக் கடமைகளையும்
சிறப்பாகச் செய்ய வசதியாக
இருக்கும்.
புனித ஹஜ்ஜின் நேர் முக
வர்ணனையாக நாம்
எழுதியிருப்பது மிகவும் குறைவு.
 நேரடியாக நீங்கள்
அனுபவித்துப் பாருங்கள்.
வார்த்தைகளால் வர்ணிக்க
முடியாதப் பேரின்பம் பெறுவீர்கள்.
அல்லாஹ்வின் பேரருளைப்
பெற்றுக் கொள்ள ‘புனித
ஹஜ்ஜுக்குப் போகவேண்டும்”
என்னும் ஆர்வம் இன்னுமா உங்கள்
இதயத்தில் எழவில்லை?
”புறப்படுவோம் வாருங்கள்
புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப்
பயணம்”!

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

Friday, 25 August 2017

சூராக்களின் சிறப்புக்கள்

சூராக்களின் சிறப்புக்கள்

அல்ஃபாத்திஹா:சூரத்துல் ஃபாத்திஹாவில் சகல நோய்களுக்கும் நிவாரணம் இருக்கிறது என்று நபியவர்கள் அருளினார்கள்.

யாஸீன்:சூரா யாஸீனை ஓதுபவருக்கு உணவு நெருக்கடி இருக்காது.இதை பத்து தடவை ஓதினால் திருக்குர்ஆன் ஓதி முடித்த பலன் உண்டு.

அர்ரஹ்மான்:சூரா அர்ரஹ்மானை ஓதியவர் அல்லாஹ் அருளிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தியவர் போலாவார்.

வாகிஆ:சூரா வாகிஆவை இரவில் ஓதி வருபவரை வறுமை பீடிக்காது என்று நபி (ஸல் )அருளியுள்ளார்கள்.

முல்க்:சூரா முல்கை ஓதியவருக்கு அது அல்லாஹ்விடம் மன்றாடும்.மேலும்,கப்ரில் கஷ்டம் உண்டாகாது பாதுகாக்கும் என்று நபி (ஸல்) அருளியுள்ளார்கள்.

நூஹ்:சூரா நூஹை ஓதினால் கடும் பகைவரின் கொடுமைக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்.

முஜ்ஜமில்:சூரா முஜ்ஜமிலை தினமும் ஓதி வந்தால் நபி (ஸல் )அவர்களைக் கணவில் காணலாம்.

ஸஜ்தா:சூரா முல்கையும்,சூரா சஜ்தாவையும் ஓதாமல் நபி (ஸல் )அவர்கள் தூங்கமாட்டார்கள்.

கஹ்ஃப்:ஜும்ஆ நாளன்று கஹ்ப் சூராவை ஓதுபவர் எட்டு நாட்கள் அடுத்த ஜும்ஆ வரை சகல குழப்பங்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவார்.தஜ்ஜால் வந்துவிட்டாலும் அச்சமயத்தில் அவனுடைய குழப்பத்திலிருந்து பாதுகாக்கப்படுவார் என்று நபியவர்கள் கூறினார்கள்.சூரா கஹ்பை எவர் ஜும்ஆ நாளன்று ஓதுவாரோ அவருக்கு இரண்டு ஜும்ஆவுக்கு இடையே உள்ள கால அளவுக்கு அவரின் (இதயத்திலோ,கப்ரிலோ) ஒளி இலங்கிக் கொண்டிருக்கும்.

துகான்:நபி (ஸல்) அருளியுள்ளதாவது:இரவில் சூரா துகானை ஓதி வருபவருக்கு எழுபதனாயிரம் மலக்குகள் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்.வெள்ளிக்கிழமை இரவில் அல்லது பகலில் ஓதிவருபவருக்கு அல்லாஹுதஆலா சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்.இதனை வெள்ளி இரவில் ஓதிவந்தால் பாவங்கள் மன்னிக்கப்பட்டு,ஹுருல் ஈன்கள் மணமுடித்து கொடுக்கப்படுவார்கள்.

தலைசிறந்த பாவமன்னிப்பு – சையிதுல் இஸ்திஃபார்

தலைசிறந்த பாவமன்னிப்பு – சையிதுல் இஸ்திஃபார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

اَللّهُمَّ أَنْتَ رَبِّي ، لاَ إِلهَ إِلاَّ أَنْتَ ، خَلَقْتَنِي ، وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلىَ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَأَبُوْءُ بِذَنْبِيْ ، فَاغْفِرْ لِيْ ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஃமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த’ என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.
பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)

இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி),

நூல் : புகாரி

Thursday, 24 August 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 16

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 16

========================

புறப்படத் தயாராகின்றனர்!

புனித ஹாஜிகள் புனித ஹஜ்ஜின் அனைத்துக் கடமைகளையும்
பூரணமாக நிறைவேற்றி
புண்ணியம் பெற்ற புனித ஹாஜிகள் ஒரு சில தினங்கள்
புனித மக்காவில்
அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட
விடுதிகளில் வந்து தங்கி
இளைப்பாறுகின்றனர்.
புனித மக்காவின் கடை வீதிகள் நிரம்பி வழிகின்றன. உலகின்
பல்வேறு நாடுகளிலிருந்தும்
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்-
புனித மக்காவின் கடைகள் முழுதும் குவிந்துக் கிடக்கின்றன.
புனித ஹாஜிகள் ஹஜ்ஜை முடித்து தம் இல்லங்களுக்குத்
திரும்பும்போது தம்மை அன்புடன்
எதிர் பார்த்து காத்திருக்கும்
உறவினர்களுக்காகவும்,
நண்பர்களுக்காகவும், அன்பளிப்புப்
பொருட்களை வாங்கிக்
குவிக்கின்றனர்.
திரு மறை குர்ஆன் பிரதிகள், தொழுகை விரிப்புகள், வாசனைத்
திரவியங்கள், சுவையான பேரீத்தம்
பழங்கள், புனித ஹஜ்ஜின்
நினைவாக காலமெல்லாம்
வைத்துப் பாதுகாக்க பல்வேறு
பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.
உறவினர்களுக்கு வழங்க ஜம்ஜம்
தண்ணீரையும் தேவையான அளவு
எடுத்து வைக்கத் தவறவில்லை.

(ஹஜ்ஜின் போது வியாபாரத்தின்
மூலம்) உங்கள் அருளைத் தேடுவது
உங்களுக்குக் குற்றமில்லை.
(திருக் குர்ஆன் 2:198)
உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ்,
ஆகியவை அறியாமைக் காலத்தில் கடை வீதிகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும், அங்கே வியாபாரம்
செய்வதை மக்கள் குற்றம் எனக்
கருதினார்கள். அப்போது உங்கள்
இறைவனின் அருளைத் தேடுவது
உங்கள் மீது குற்றமில்லை (2:198)
என்ற வசனம் இறங்கியது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رضي الله عنه
ஆதாரம்: புகாரி (2050)

எனவே புனித ஹாஜிகள் தமக்குத்
தேவையான பொருட்களை
வாங்கிக் கொள்வதில் தவறில்லை.

*‘தவாபுல் விதா”!*

”தவாபுல் விதா” எனும் பயணத் தவாபு யாரேனும் ஹஜ் செய்தால், அவரது கடைசிக் காரியம்
பைத்துல்லாஹ்வில் (தவாபு செய்வதாக) அமையட்டும்.
மாதவிடாய் ஏற்பட்டவர்களைத் தவிர, என்று நபி صلى الله عليه وسلم   அவர்கள் கூறி
அவர்களுக்கு விதிவிலக்கு
அளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு
உமர் رضي الله عنه  ஆதாரம்: திர்மிதி (866)
பயணத்திற்கான சகல
ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொண்டு பயணத் தவாபு செய்வதற்கு ஹாஜிகள் தயாராகி
விட்டனர். மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்து ஹஜருல் அஸ்வத்
இருக்கும் இடத்திலிருந்து
தவாபைத் தொடங்கி- ஏழு முறை கஃபாவை வலம் வந்து மகாமே
இப்ராஹீமில் தொழுது ஜம்ஜம் நீரருந்தி தங்கள் பயணத் தவாபை நிறைவு செய்கின்றனர்.
புனிதக் கஃபாவிடமிருந்து
பிரியா விடை பெறுகின்றனர்.
கஃபாவைக் காணக் காண ஹாஜிகளின் கண்கள் குளமாகின்றன.
கண்களிலிருந்து குற்றால
அருவியெனக் கொட்டுகிறது
கண்ணீர். ‘இந்தக் கஃபாவை விட்டுப் பிரியப் போகின்றோமே”
என்பதை நினைக்க நினைக்க, இனிய
இறை நேசர்களின் இதயங்கள்
அழுகின்றன. கண்குளிர உளம் மகிழ
இந்தக் கஃபாவைக் கண்டுக் கொண்டே
இங்கேயே இருந்துவிட
மாட்டோமா? என்று இந்த இனியவர்களின் இதயங்கள்
ஏங்குகின்றன. அழிகின்ற இந்த
உலகத்தை இதில் வாழும்
மனிதர்களை அநாச்சாரங்களும்,
அநியாயங்களும், அட்டூழியங்களும்,
நிறைந்த சமூகத்தினரையெல்லாம், கண்டு அலுத்துப் போன
இதயங்களுக்கு இத்தனை நாட்களும்
இங்கே அமைதி கிடைத்தது.
ஆறுதல் கிடைத்தது. இதை விட்டுச் செல்லப் போகின்றோம்
எனும் போது கல் நெஞ்சமும்
கரையத்தானே செய்யும்?

புனித ஹஜ்ஜை இனிதே நிறைவேற்றும் பெரும் பேற்றைத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி
செலுத்துகின்றனர். ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த
ஹாஜிகளாய் இங்கிருந்து
செல்கின்றனர். பாவங்கள் மன்னிக்கப்
பட்டவர்களாக பரிசுத்த மனதோடு பக்தி நிறைந்த உள்ளத்தோடு நல்ல இன்பத்தின் பொலிவோடு
இதயத்தின் வலிவோடு ஈமானின்
நிறைவோடு புனித
ஹாஜிகளாய் புண்ணிய சீலர்களாய்
இந்தப் புண்ணிய பூமியை விட்டுப்
புறப்படுகின்றனர்.

 ஹாஜிகள்
தாயகம் திரும்ப தத்தம்
வாகனங்களில் ஏறி அமர்ந்து விட்டனர்.
தரை வழியாக வந்த வாகனங்கள்,
சிங்காரச் சாலைகளில் சீறிப் பாய்ந்த
வண்ணம் புறப்படுகின்றன. நீலத்
திரைக் கடலில் நீந்தி வந்தக் கப்பல்கள்,
நீரைக் கிழித்த வண்ணம்
இஸ்லாமியத்
துறைமுகத்திலிருந்து மிதக்கத் துவங்கி விட்டன.வான் வெளிப்
பாதையில் வந்திறங்கிய
விமானங்கள்  ஜித்தாவின், மன்னர்
அப்துல் அஜீஸ் பன்னாட்டு விமானத்
தளத்திலிருந்து, திரும்பும்
பயணத்தைத் தொடங்கி
விட்டன.ஹாஜிகள் மனத் திரையில்
படக் காட்சிகளைப் போல் ஒவ்வொரு
காட்சிகளாக வந்து போகின்றன.
அவரவர் தம் இல்லங்களிலிருந்து
ஆர்வத்துடன் புறப்பட்டதும்
இஹ்ராம் உடை தரித்து இனிய
ஹஜ்ஜுக்காகத் தயாரானதும்
மக்கத் திரு நகரில் மகிழ்ச்சியுடன்
இறங்கியதும்
மஸ்ஜிதுல் ஹராமில் மனம் குளிர
நுழைந்ததும்
மாண்புடன் கஃபாவைத் தவாபு செய்ததும்
மகாமே இப்ராஹீமில் தொழுததும்
ஜம்ஜம் நீரருந்தியதும்
ஸபா- மர்வாவில் தொங்கோட்டம்
ஓடியதும்
புனித உம்ராவை இனிதே
நிறைவேற்றியதும்
மக்காவைச் சுற்றி ஒரு மகிழ்ச்சிப் பயணம்
 செய்ததும்
மதீனத் திரு நகரில் நுழைந்ததும்
மஸ்ஜிதுன்னபவியில் தொழுததும்
மாநபியின் மண்ணறையை
மாண்புடன் தரிசித்ததும்
மதீனாவைச் சுற்றி மனம் குளிரக்
கண்டதும்
மீண்டும் புறப்பட்டு மக்காவை
வந்தடைந்ததும்
புனித ஹஜ்ஜுக்கு ஆயத்தமானதும்
மினாவின் கூடாரங்களில்
தங்கியதும்
அரபாத் பெருவெளியில் நின்றதும்
அழுதழுது பாவமன்னிப்புக்
கேட்டதும்
முஸ்தலிபாவில் முழு இரவைக்
கழித்ததும்
ஜம்ராவுக்குச் சென்றதும்
மூன்று நாட்கள் கல்லெறிந்ததும்
அல்லாஹ்வுக்காக அறுத்துப்
பலியிட்டதும்
தலை முடிக் களைந்ததும்
தவாபுஸ்ஸியாராச் செய்ததும்
இறுதியாக இன்றைய தினம் பிரியா விடை
 பெற்று பயணத்
தவாபுச் செய்ததும்
பசுமரத்தாணி போல் பதிந்து
விட்டநினைவுகளை அசை
போடுகிறார்கள் அல்லாஹ்வின்
நேசர்கள்.

 ஆண்டாண்டு காலமாக
வந்து சென்ற அத்தனை கோடி
ஹாஜிகளின் அங்கீகரிக்கப் பட்ட
ஹஜ்ஜுக்கு சாட்சி கூறும் அரபாத்
பெருவெளியும்-உண்மை
விசுவாசிகளின் ஒப்புக்
கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு மௌன
சாட்சி கூறும் முஸ்தலிபா நிலப்
பரப்பும்-அடுத்தடுத்த ஆண்டுகளில்
வரப் போகின்ற அல்லாஹ்வின்
நேசர்களுக்காகக் காத்திருக்கின்றன.
இலட்சோப லட்சம் மக்கள் தங்கிச் சென்ற
மினாவின் கூடாரங்கள் வெறிச் சோடிக்
 கிடக்கின்றன. வரும்
ஆண்டுகளில் வரவிருக்கும்
புனிதர்களுக்காகக்
காத்திருக்கின்றன. இறையில்லம்
கஃபாவைச் சுற்றுதல் மட்டும் எப்போதும்
எப்போதும்  தொடர்ந்துக்
கொண்டே இருக்கும். சங்கிலித்
தொடரான இச்சுற்றுதல் சதா சர்வ
காலமும் தொடர்ந்துக் கொண்டே
இருக்கும். தினந் தோறும் வருகின்ற ஏராளமான
 மக்கள்
என்றென்றைக்கும் இந்த
இறையில்லத்தை சுற்றிக் கொண்டே
 இருப்பர்.
அண்டம் அழியும் வரை, மண் மாயும்
வரை, யுகம் முடியும் வரை ஓயாது
 ஒழியாது சுற்றிக்
கொண்டே இருப்பர்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி

கடலங் குடி.

பதிவு நாள்: 25-08-2017

Tuesday, 22 August 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 15

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 15

========================

தவாபுஸ் ஸியாரா!

ஹஜ்ஜின் மிக மிக முக்கியமான
செயல்களில் இந்தத் தவாபுஸ் ஸியாராவும் ஒன்று. இந்தத்
தவாபைச் செய்யாத வரை ஹஜ்
நிறைவு பெறாது.
ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து,
குர்பானி கொடுத்து, தலை முடி நீக்கி, இஹ்ராமிலிருந்து விடுபட்ட ஹாஜிகள், தவாபுஸ்ஸியாராச்
செய்வதற்கு கஃபத்துல்லாஹ்வை
நோக்கி புறப்படுகின்றனர்.
இன்றைய தினம் செய்யும் இந்தத்
தவாபுஸ்ஸியாரா என்பது மிகவும் சிரமமானது தான். இது
நாள் வரை ஹாஜிகள், எத்தனையோ
முறை புனிதக் கஃபாவை தவாப்
செய்திருக்கலாம். அப்போதுள்ள
கூட்ட நெரிசலே அதிகமாக
இருந்திருக்கும். ஆனால் இன்று
பெரும்பாலும் அத்தனை இலட்சம்
ஹாஜிகளும்,
தவாபுஸ்ஸியாராவை
நிறைவேற்ற மஸ்ஜிதுல் ஹராமில்
நுழைந்து விடுகின்றனர்.
இன்றைய தினம், மஸ்ஜிதுல்
ஹராமில் மக்கள் வெள்ளம் அலை மோதுகிறது.
சுப்ஹானல்லாஹ்! இன்று தவாபை
முடித்து வெளியில் வருவது என்பது இலேசான காரியமல்ல.
கஃபா என்னும் இறையாலயத்தை
இன்றைய தினம் புனித ஹாஜிகள்
சுற்றி வரும் காட்சியை
மஸ்ஜிதுல் ஹராமின் இரண்டாவது
மூன்றாவது தளங்களில் நின்று
பார்த்தால் பார்த்துக் கொண்டே
இருக்கலாம். கண்கொள்ளாக் காட்சி!
ஏறக் குறைய இருபது இலட்சம் பேர்
சுற்றுகிறார்கள். கடல் அலையைப்
போல் மனித வெள்ளம் சுற்றிச் சுற்றி வட்டமிடுகின்றது.
ஏழுச் சுற்றுக்களை முடித்தவர்கள்
கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி,
நிம்மதிப் பெருமூச்சு
விடுகின்றனர். புதிதாக
நுழைபவர்கள் தங்கள் சுற்றுக்களைத்
தொடங்குகின்றனர்.
இன்று காலை முதல் தொடங்கிய நெரிசல் இன்று பகல் முழுவதும்
நீடிக்கின்றது. இரவு முழுவதும்
தொடர்கின்றது. உணவை மறந்து,
உறக்கத்தை மறந்து, எப்படி இவர்கள்
கொஞ்சம் கூடக் களைப்பு இல்லாமல்
சுற்றுகிறார்கள்.
இன்றைய தினம்
காலையிலிருந்து ஒவ்வொரு செயலாகச் செய்து முடித்து
விட்டு- எவ்வளவு சுறுசுறுப்பாக
தவாபும் செய்கின்றனர்!
இயலாமையும் சோர்வும் இருந்த
இடம் தெரியாமல் போக இளமையும் வலிமையும்
எங்கிருந்து இவர்களுக்கு வந்தது?
இறைவனின் கட்டளையை சிரமேற்
கொண்டு வந்தவர்களுக்கு,
உற்சாகமும், உத்வேகமும் தாமாக
வந்து விடுமோ! இன்றைய
தினத்தின் செயல்களை,
தவறுதலாகவோ,
அறியாமையாலோ, முன் பின் மாற்றிச் செய்து விட்டாலும்
குற்றமில்லை.

நபி صلى الله عليه وسلم  அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் உரை நிகழ்த்திக்
கொண்டிருக்கும் போது நான் வந்தேன். அப்போது ஒருவர் எழுந்து, ‘நான் இதற்கு முன் இது என
நினைத்தேன்!” என்றார்.
இன்னொருவர் எழுந்து ‘நான் இதற்கு முன் இது என நினைத்தேன்!
பலியிடுவதற்கு முன் தலையை மழித்து விட்டேன்! கல்லெறிவதற்கு
முன் பலியிட்டு விட்டேன்.” என
இது போன்றவற்றைக் கூறலானார்.
அவ்வனைத்திற்குமே, நபி صلى الله عليه وسلم
அவர்கள், ‘குற்றமில்லை!
(விடுபட்டதைச்) செய்யுங்கள்” என்றே கூறினார்கள். அன்றைய
தினம் வினவப்பட்ட
எல்லாவற்றிற்குமே அவர்கள்
‘குற்றமில்லை! (விடுபட்டதைச்)
செய்யுங்கள்” என்றே கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு
அம்ருப்னுல் ஆஸ் رضي الله عنه  ஆதாரம்:
புகாரி (1737)

துல் ஹஜ் 11 ஆம் நாள்  ஹஜ்ஜின் 4 ஆம் நாள்.
தவாபுஸ்ஸியாராவை முடித்த ஹாஜிகள். ஏற்கனவே 8 ஆம் நாள்
மினாவில் தங்கியிருந்த
கூடாரங்களுக்கு மறுபடியும்
வந்து சேருகின்றனர். இன்று முதல்,
மூன்று தினங்கள், ஒவ்வொரு நாளும், சூரியன் உச்சியிலிருந்து
சாய்ந்த பிறகு மூன்று
ஜம்ராவுக்கும் முறையே ஏழு
கற்கள் வீதம் எறிய வேண்டும்.
நபி صلى الله عليه وسلم  அவர்கள் நஹ்ருடைய
நாளில் (துல் ஹஜ் 10 ஆம் நாள்) முற்பகல் நேரத்தில்
கல்லெறிந்தார்கள்.மறு நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்ததும்
கல்லெறிந்தார்கள். அறிவிப்பவர்:
ஜாபிர் رضي الله عنه  ஆதாரம்: புகாரி
(பாடம் 134)
இன்று முதல், மூன்று
தினங்களுக்கு தினமும் ஜம்ரத்துஸ் ஸுக்ரா, ஜம்ரத்துல் உஸ்தா,
ஜம்ரத்துல் அகபா, ஆகிய மூன்று
ஜம்ராக்களிலும் முறையே ஏழு
கற்கள் வீதம் எறிய வேண்டும்.

நபி صلى الله عليه وسلم  மினா பள்ளி வாசலை
அடுத்திருக்கும் (முதல்) ஜம்ராவில்
கல்லெறியும் போது ஏழு கற்களை
எறிவார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போது  தக்பீர்
கூறுவார்கள். பிறகு சற்று முன்னால் சென்று  கிப்லாவை
முன்னோக்கி நீண்ட நேரம் நின்று
கைகளை உயர்த்தி துஆச்
செய்வார்கள். பிறகு இரண்டாவது
ஜம்ராவுக்கு வந்து அங்கும் ஏழு
கற்களை எறிவார்கள். ஒவ்வொரு
கல்லையும் எறியும் போதும் தக்பீர்
கூறுவார்கள். பிறகு இடது பக்கமாகப்
 பள்ளத்தாக்கிற்கு
அடுத்துள்ள பகுதிக்கு வந்து கிப்லாவை
 முன்னோக்கி நின்று
கைகளை உயர்த்தி துஆச் செய்வார்கள்.
 பிறகு ஜம்ரத்துல்
அகபாவுக்கு வந்து ஏழு சிறு கற்களை
 எறிவார்கள். ஒவ்வொரு
கல்லையும் எறியும் போதும் தக்பீர்
கூறுவார்கள் பின்பு அங்கிருந்து திரும்பி
 விடுவார்கள். அங்கு நிற்க மாட்டார்கள்.
 அறிவிப்பவர்: ஸுஹ்ரி رضي الله عنه
 ஆதாரம்: புகாரி (1753)

அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்கள் செய்துக் காட்டிய  அதே முறையைப்
பின்பற்றி ஹாஜிகள் ஜம்ராக்களில்
கல் எறிகிறார்கள். முதல் நாள்
இருந்த அளவுக்கு மக்கள் நெரிசல்
அடுத்தடுத்த நாட்களில் இல்லை.
அவரவர் தம் வசதிப்பட்ட நேரங்களில்
வருவதால்
 கூட்டம் சற்று
குறைவாகத் தெரிகிறது.
ஒவ்வொரு நாளும் கல்லெறிந்து விட்டு
 மினாவில் அவரவர்
கூடாரங்களில் சென்று ஹாஜிகள்
ஓய்வெடுக்கின்றனர். கிடைக்கின்ற
நேரமெல்லாம் இறைவணக்கத்தில்
பொழுதைக் கழிக்கின்றனர்.
மினாவில், பல்வேறு
நாடுகளிலிருந்து
வந்தவர்களுக்கும் அந்தந்த நாட்டு ஹஜ்
கமிட்டியினராலும் தனியார் ஹஜ்
சர்வீஸ்கள் மூலம் வந்தவர்களுக்கு
அந்தந்த நிறுவனத்தினராலும்,
தனித்தனியே கூடாரங்கள் அமைக்கப்
பட்டுள்ளன.
ஒவ்வொரு நாட்டினருக்காகவும்,
அமைக்கப்பட்டுள்ள கூடாரப் பகுதிகளில்
 அந்தந்த நாட்டு
தேசியக் கொடி
அடையாளத்துக்காக
பறக்கவிடப்பட்டுள்ளது.

நாட்டிலிருந்து தனிப்பட்ட
முறையில் வந்தவர்கள்
கூடாரங்களை வாடகைக்கு எடுத்து
 தங்கிக் கொள்கின்றனர்.
கூடாரங்கள் கிடைக்கப்
பெறாதவர்கள், தங்குவதற்கென நீண்ட
பெரும் அரங்கங்களும்
அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கங்களில்
 இலவசகமாகத் தங்கிக்
கொள்ளலாம். எல்லா இடங்களிலும்
தாராளமாகத் தண்ணீர் வசதியும் கழிவறை
 வசதிகளும்
செய்யப்பட்டுள்ளன.

துல் ஹஜ் 12 ஆம் நாள்- ஹஜ்ஜின் 5
ஆம் நாள் மு
 தினத்தைப் போலவே
இன்றும் ஹாஜிகள் சூரியன் உச்சியை
 விட்டு சாய்ந்த பிறகு
தங்கள் கூடாரங்களிலிருந்து
புறப்பட்டு மூன்று
ஜம்ராக்களிலும், முறையே ஏழு
கற்கள் வீதம் எறிகின்றனர்.
முதியவர்கள் மற்றும்,
இயலாதவர்களுக்குப் பகரமாக
மற்றவர்கள் கல்லெறியலாம். பகரமாக எறிபவர்கள்
 முதலில் தமக்காக
எறிந்துக் கொள்ள வேண்டும்.
பிறகு தம்மைப் பகரமாக
நியமித்தவர்களுக்காக எறிய வேண்டும்.
 வழக்கம் போல் ஹாஜிகள் ஒவ்வொரு
 கல்லாக எறிகின்றார்கள்.
ஒவ்வொரு கல் எறியும் போதும்
தக்பீர் கூறுகிறார்கள். முதல் இரண்டு
 ஜம்ராக்களிலும் நின்று
துஆச் செய்து விட்டு
மூன்றாவது ஜம்ரவாகிய ஜம்ரத்துல்
அகபாவில் கல்லெறிந்ததும், நின்று துஆச் செய்யாமல் திரும்பி
விடுகின்றனர்.

துல் ஹஜ் 13 ஆம் நாள்- ஹஜ்ஜின் 6
ஆம் நாள்...
குறிப்பிட்ட நாட்களில்
அல்லாஹ்வை நினையுங்கள்!
இரண்டு நாட்களில் விரைபவர் மீதும்
எந்தக் குற்றமும் இல்லை.
தாமதிப்பவர் மீதும் குற்றம் இல்லை.
(இது இறைவனை)
அஞ்சுவோருக்கு உரியது.
அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவனிடம்
ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதை அறிந்து
 கொள்ளுங்கள்! (திருக்
குர்ஆன் 2:203)

 11 ஆம் நாளும், 12 ஆம் நாளும் ஆகிய
 இரு தினங்கள்
மட்டும் கல்லெறிந்து விட்டு
புறப்படுபவர்கள் புறப்படலாம்.
ஆனால் மஃரிபுக்கு முன் புறப்பட்டு விட
 வேண்டும். இன்று
மினாவில் தங்கினால், 13 ஆம் நாளும்
 கல்லெறிந்து விட்டுத்
தான் புறப்படவேண்டும்.
இரண்டு நாட்கள் மட்டும் கல்லெறிந்து
 விட்டு
புறப்படுபவர்கள் மிகவும் குறைவு.
 பெரும்பாலானவர்கள் 13 ஆம் நாளும்
 கல்லெறிந்து
பூரணமாகத் தங்கள் ஹஜ்ஜுக் கடமையை
 நிறைவேற்றி விட்டுத்
தான் புறப்படுகின்றனர். இன்றைய
தினத்துடன் புனித ஹஜ்ஜின்
அனைத்து செயல்களும்
நிறைவடைகின்றன. எந்தப் புனிதக்
கடமையை நிறைவேற்ற
இப்பூவுலகின் பல்வேறு
பாகங்களிலிருந்தும் இப்புனித பூமிக்கு
 வந்தனரோ! அந்தப் புனிதக் கடமையின்
 அனைத்து செயல்களும்
இன்றோடு முடிவடைந்து விட்டன.
அல்ஹம்து லில்லாஹ் .

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்: 22-08-2017

ஜூலை 2017 வெற்றியாளர்கள்

🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖

கியாமத் நாளை  நோக்கியின் ஜூலை 2017 வெற்றியாளர்கள்:

🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌

🎁🎁🎁 முதல் பரிசு 🎁🎁🎁

முதல் குழுமத்தில் உள்ள சகோ :👇

      1: ராஜா முஹம்மது - கட்டுமாவடி 65

🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌
💠💠💠💠💠💠💠💠💠💠💠

💰 இரண்டாம் பரிசு 💰

முதல் குழுமத்தில் உள்ள சகோ:👇

1.  முஹம்மது சஃபி - வவளையப்பட்டி(நாமக்கல்) 64

2 வது குழுமத்தில் உள்ள சகோ:👇

2. அப்துல் காதர் - திருநெல்வேலி 64

💠💠💠💠💠💠💠💠💠💠💠
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

 🚏 மூன்றாம் பரிசு🚏

2வது குழுமத்தில் உள்ள சகோ:👇

🍭1. முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 62

முதல் குழுமத்தில் உள்ள சகோ:👇

🍭2. பீர் முஹம்மது - திருநெல்வேலி 63

🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕
💙💙💙💙💙💙💙💙💙💙💙

❇❇ சிறப்பு பரிசு ❇❇

 முதல் குழுமத்தில் உள்ள சகோ:👇

☂ 1. ஹக்கிம் - தென்காசி 59

2வது குழுமத்தில் உள்ள சகோ:👇

☂ 2. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 66

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
💙💙💙💙💙💙💙💙💙💙

🎁🎁🎁  ஆறுதல்  பரிசு 🎁🎁🎁

💍💍💍💍💍💍💍💍💍💍💍

🍋1. அம்மார் அதிராம்பட்டினம் 58

🍋2. முஹம்மது ஃபயாஸ் - சென்னை 57

🍋3. நைனா முஹம்மது அலி - ஜெகதாப்பட்டினம் 57

🍋4. முஹம்மது இர்ஃபான் - பண்டாரவாடை 39

🍋5. அப்பாஸ் அலி - சென்னை 25

🍋6. ஆயிஷா ஃபர்வின் - ராஜகிரி (தஞ்ஞாவூர்) 21

🍋7. முஹம்மது யூசுஃப் சேட் - திருநெல்வேலி 18

🍋8. அப்துல் பாசித் - சவுதி 16

💍💍💍💍💍💍💍💍💍💍💍

 🌴 கியாமத் நாளை நோக்கி குழுமம் 🌴                                        
             அட்மின் குழு.





Saturday, 19 August 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் -14

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋


ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் -14

========================

துல் ஹஜ் 10 ஆம் நாள்!

ஹஜ்ஜின் 3 ஆம் நாள் உலகம் முழுவதும் வாழும்
முஸ்லிம்களுக்கு, இன்று தான்
ஹஜ்ஜுப் பெருநாள். ஈதுல் அல்ஹா
என்னும் தியாகத் திரு நாள். உலக முஸ்லிம்கள் இன்று பெருநாள் தொழுகைத் தொழுவார்கள்.
ஆனால் ஹஜ் செய்பவர்களுக்கு
இன்று பெருநாள் தொழுகை கிடையாது. இன்று காலை பஜ்ருத்
தொழுகையை, முஸ்தலிபாவில்
முடித்து விட்டு மினாவுக்குச்
செல்கின்றனர்.
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்
அவர்கள், தம் அருமந்த மைந்தர், இஸ்மாயீல் عليه السلام  அவர்களை அல்லாஹ்வின்
ஆணைப்படி அறுத்துப்
பலியிடுவதற்காக அழைத்துச் சென்ற போது, ஷைத்தான் வழி
மறித்து தடுக்கப் பார்த்தான். உறுதியான உள்ளத்துடன் சென்ற நபி இப்ராஹீம் عليه السلام அவர்கள், அவன்
மீது கல் வீசி விரட்டினார்கள்.
அதன் நினைவாக ஹஜ்ஜுக்கு
வருபவர்கள், அந்த இடத்தில் இன்றளவும்
கல் எறிகின்றனர். இது ஹஜ்ஜின் கடமைகளில் ஒன்றாகும்.
இன்றைய தினம், ஹாஜிகள் முற் பகல்
நேரத்தில் கல் எறிகிறார்கள். இன்று
‘ஜம்ரத்துல் அகபா”வில் மட்டும் கல்லெறிய வேண்டும். இந்த
ஜம்ரத்துல் அகபாவுக்கு ‘ஜம்ரத்துல் ஊலா” என்றும் சொல்லப்படும்.
பத்தாம் நாளில் முற்பகல் நேரத்தில்
நபி صلى الله عليه وسلم  அவர்கள் கல்லெறிந்தார்கள்.
அதன் பிறகுள்ள நாட்களில் சூரியன்
உச்சியிலிருந்து விலகிய பின்
கல்லெறிந்தார்கள். அறிவிப்பவர்:
ஜாபிர் رضي الله عنه  ஆதாரம்: திர்மிதி (818)

ஏழு பொடிக் கற்களை எறிய வேண்டும். அதுவும் ஒன்றன் பின்
ஒன்றாக எறிய வேண்டும். ஒவ்வொரு கல்லையும் எறியும்
போதும் தக்பீர் கூற வேண்டும். இவ்வாறு நபி صلى الله عليه وسلم  அவர்கள் செய்ததாக இப்னு உமர் رضي الله عنه  அவர்கள்
அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி

அத்தனை இலட்சம் ஹாஜிகளும் கல்
எறிகிறார்கள். சிலர் கோபமாக ஷைத்தானை அடிப்பது போல் பெரிய கற்களையும்
செருப்புகளையும் வீசுகிறார்கள்.
இது தவறு. கல் எறியும் கடமைக்கு
இவை முரணானதாகும்.

நபி صلى الله عليه وسلم  அவர்கள், சுண்டி
விளையாடும் அளவு சிறிய கற்களையே எறிந்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் رضي الله عنه  ஆதாரம்:
திர்மிதி (821)

கல் எறியும் இடத்தில் நெரிசல் அதிகம். அரபா, மினா, முஸ்தலிபா
ஆகிய இடங்கள் பரந்து விரிந்த மாபெரும் திடல்கள். அத்தனை
இலட்சம் ஹாஜிகளும் பரந்தத் திடலில்
தங்கியிருப்பதில் சிரமம் இல்லை.
ஆனால், ஜம்ரா என்னும் ஒரு
குறிப்பிட்ட இடத்தில், அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,
அத்தனை இலட்சம் பேரும் கல் எறிய
வேண்டும் என்பதால் இங்கு நெரிசல் அதிகம்.
கல்லெறியும் இடத்துக்கு செல்லும் போது  கையில் பணமோ அல்லது பொருட்களோ எடுத்துச் செல்லக் கூடாது. கூட்ட
நெரிசலில் தவறிவிட
வாய்ப்புண்டு. கையில் இருக்கும் பொருள் தவறி கீழே விழுந்து
விட்டால் குனிந்து எடுக்க முயலக்
கூடாது. முன்னேறி வரும் கூட்டம் கீழே
தள்ளிவிடலாம்.கூட்டத்தை சமாளிக்க ‘கல்லெறியும் இடம்”
இப்போது, மக்கள் போவதற்கும்,
வருவதற்குமாகத் தனித்தனிப் பாதைகள் அமைக்கப் பட்டு ஒழுங்கு
படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் பலமானத்
தடுப்புகளை ஏற்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அனுப்புகின்றனர்.
பல் வேறு வருடங்களில் கூட்ட
நெரிசலில் இந்த ஜம்ராவில் தான்
விபத்துக்கள் நடந்துள்ளன. சில
சமயங்களில் உயிர்ச் சேதங்களும் கூட
ஏற்பட்டதுண்டு. இப்போது
நெரிசலின்றி மக்கள் சென்று வர பல்
வேறு வசதிகள்
செய்யப்பட்டுள்ளன.
கூட்டம் கூட்டமாகச் சென்று ஜம்ரத்துல்
அகபாவில் கல்லெறிந்து
திரும்புகின்றனர்
ஹாஜிகள்.கல்லெறி நிகழ்ச்சி முடிந்தவுடன் இதுவரை முழங்கிக்
கொண்டிருந்த தல்பிய்யாவை
நிறுத்தி விடுகின்றனர். இதுவே
நபி வழியாகும்.

நபி صلى الله عليه وسلم  அவர்கள் ஜம்ராவில்
கல்லெறிகின்றவரை தல்பிய்யா
கூறிக் கொண்டே
இருந்தார்கள்.அறிவிப்பவர்: பள்ல் பின்
அப்பாஸ் رضي الله عنه
 ஆதாரம்: புகாரி
(1685)

*குர்பானி கொடுப்பது!*

இனி அடுத்த செயல், அறுத்து
பலியிடுவதாகும்.
ஹஜ்ஜின் செயல்களில் சிறப்பானது
எது? என்று நபி صلى الله عليه وسلم  அவர்களிடம்
கேட்கப் பட்டது. அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள்...  ‘தல்பிய்யாவை உரத்த
குரலில் கூறுவதும், ஒட்டகத்தை அறுத்து
 பலியிடுவதும்,” என்று
விடையளித்தார்கள். அறிவிப்பவர்:
அபூ பக்ர் رضي الله عنه  ஆதாரம்: புகாரி (757)

தனியொரு நபர் ஒரு ஆட்டையோ,
அல்லது ஏழு பேர் சேர்ந்து ஒரு
மாட்டையோ, ஒட்டகத்தையோ
குர்பானி கொடுக்கலாம்.
ஹுதைபிய்யா வருடத்தில் ஏழு
பேர் சேர்ந்து ஒரு மாட்டையும்,
ஏழு பேர் சேர்ந்து ஒரு
ஒட்டகத்தையும், நபி صلى الله عليه وسلم
அவர்களுடன் நாங்கள்
அறுத்துள்ளோம் அறிவிப்பவர்:
ஜாபிர் رضي الله عنه  ஆதாரம்: திர்மிதி (828)

ஹாஜிகள் குர்பானி கொடுக்கும்
இடத்திற்கு வந்து குர்பானிக்காகப்
பிராணிகளை வாங்கி
அல்லாஹ்வுக்காகள் அறுத்துப்
பலியிடுகின்றனர்.
அவற்றின்
மாமிசங்களோ, அவற்றின்
இரத்தங்களோ அல்லாஹ்வை
அடைவதில்லை. மாறாக
உங்களிடமுள்ள (இறை) அச்சமே
அவனைச் சென்றடையும். (திருக்
குர்ஆன் 22:37)

ஆண்டு தோறும் வெளி
நாடுகளிலிருந்து இலட்சக் கணக்கான ஆடுகளும், மாடுகளும்,
ஒட்டகங்களும், இறக்கு மதி செய்யப்
படுகின்றன.
இறக்குமதி செய்யப்படும்
அனைத்துப் பிராணிகளும், கால்
நடை மருத்துவர்களால்,
முறையாகப் பரிசோதிக்கப்பட்டு
முத்திரையிடப்பட்டுள்ளன.

ஹாஜிகள் நேரடியாகச் சென்று,
பிராணியைத் தேர்ந்தெடுத்து, விலை
 கொடுத்து வாங்கி அவரவர் தம்
 கரங்களால் அறுக்கின்றனர்.
இயலாதவர்கள், அடுத்தவர்களை
நியமித்து அறுக்கச் செய்கின்றனர்.
இது போக, ஒரு குறிப்பிட்ட விலையை
 நிர்ணயம் செய்து
வங்கிகளில் கூப்பன்கள்
விற்கப்படுகின்றன. வங்கிகளில் பணம்
செலுத்திவிட்டால், துல் ஹஜ்
மாதம் 10 ஆம் நாளன்று பிராணிகள்
அறுக்கப் பட்டு உரிய முறையில் பக்குவப்
 படுத்தப்பட்டு ஏழை
நாடுகளுக்கு அனுப்பி
வைக்கப்படுகின்றது.

 அரசு
கண்காணிப்பில், பல்வேறு
இஸ்லாமிய சங்கங்கள் இப் பொறுப்பை
 ஏற்றுக் கொண்டு
சிறப்பாகச் செயல்படுகின்றன.
புனிதத் தலங்கள் அனைத்திலும்,
சிறப்புக் கிளைகளை அமைத்து
அல்ரஜ்ஹி வங்கி குர்பானி
கூப்பன்களை விற்க ஏற்பாடு
செய்துள்ளது. ஹாஜிகளுக்காக
இச்சேவையை அல்ரஜ்ஹி வங்கி
இலவசமாகச் செய்கிறது.
ஆண்டு தோறும் பல்லாயிரக்
கணக்கான டன் இறைச்சி
பதப்படுத்தப்பட்டு இந்த முறையில் ஏற்றுமதி
 செய்யப்படுகின்றது.
எத்தனையோ நாடுகளில் வாழும்
ஏழைகள் இதனால் பயன் பெறுகின்றனர்.

அல்லாஹ்வுக்காக அறுத்துப்
பலியிட்டு அளப்பெறும்
நன்மையை அடைந்த புனித ஹாஜிகள் தமது  அடுத்த
செயலாகிய  தலை முடியைக் களையத்
 தயாராகின்றனர்.

*தலை முடி களைதல்!*

ஆண்கள் தலை முடியை
முழுவதுமாக மழித்துக்
கொள்ளவோ, கத்தரித்துக்
கொள்ளவோ செய்யலாம், தலை
முடியை முழுவதுமாக
மழித்துக் கொள்வதே சிறந்தது.
நபி صلى الله عليه وسلم  அவர்கள் ‘இறைவா!
தலையை மழித்துக் கொள்பவர்களை
மன்னிப்பாயாக!” எனப்
பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள்
 ‘முடியைக் குறைத்துக்
கொள்பவர்களையும்” என்றனர்.
(மீண்டும்) நபி صلى الله عليه وسلم  அவர்கள்,
‘இறைவா! தலையை மழித்துக்
கொள்பவர்களை மன்னிப்பாயாக!”
என்று பிரார்த்தித்தபோது
தோழர்கள், “முடியைக் குறைத்துக்
கொள்பவர்களையும்” என்றனர். நபி صلى الله عليه وسلم அவர்கள் மூன்றாவது
தடவையாகவும், அதைக் கூறிய
போது ‘முடியைக் குறைத்துக்
கொள்பவர்களையும்
(மன்னிப்பாயாக)” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா رضي الله عنه
ஆதாரம்: புகாரி (1728)

தலை முடியை முழுவதுமாக
மழித்துக் கொண்டோ, அல்லது குறைத்துக்
 கொண்டோ, ஹாஜிகள்
இஹ்ராமிலிருந்து
விடுபடுகின்றனர். இது வரை அணிந்திருந்த
 இஹ்ராம் உடைகளைக்
களைந்து விட்டு வழக்கமாக
அணியும் ஆடைகளை அணிந்துக்
கொள்கின்றனர்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு....

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்: 19-08-2017

Wednesday, 16 August 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 13.

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 13.

========================

துல் ஹஜ் 9 ஆம் நாள்- அரபா நாளாகிய இன்றைய தினம்,
சூரியன் உச்சியை விட்டு
சாய்ந்ததிலிருந்து மறையும் வரை எவர் சிறிது நேரமேனும்,
இந்த அரபாத் பெருவெளியில் நிற்க
வில்லையோ அவருக்கு ஹஜ்
இல்லை.
ஹஜ்ஜின் மிக மிக முக்கியமான செயலே இந்த நேரத்தில் இந்தத்
திடலில் நின்று பிரார்த்திப்பதுதான். ஏனெனில், ‘ஹஜ் என்பது அரபாவாகும்” என்பது நபி மொழி.
திரு மறைக் குர்ஆனின் சட்டங்கள் பற்றிய இறுதி வசனம் இன்றைய தினத்தில் இந்த அரபாத்
பெருவெளியில் தான்
அருளப்பட்டது....

…..இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக
நிறைவு செய்து விட்டேன். எனது
அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன். இஸ்லாத்தை
உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக்
கொண்டேன். பாவம் செய்யும்
நாட்டமில்லாமல் வறுமையின்
காரணமாக நிர்ப்பந்தத்துக்கு
உள்ளானோரை அல்லாஹ்
மன்னிப்பவன். நிகரற்ற
அன்புடையோன். (திருக் குர்ஆன் 5:3)

அரஃபாத்தை விட்டுப் புறப்படுதல்!

மஃரிபுடைய நேரம் நெருங்கிக்
கொண்டிருக்கிறது. அரேபியப் பாலையில், அரபாத் பெருவெளியில் ஆதவன் தனது
அரும் பணியை நிறைவு செய்து விட்டு அந்திவானத்தில் மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது.
விலை மதிக்கவொன்னா பொன் மாலைப் பொழுது முடியப்
போகிறது. வாழ்வில்
கிடைத்தற்கரிய இச்சந்தர்ப்பத்தின்
இறுதி நேரம் வரை ஹாஜிகள்
பிரார்த்தனையில் ஈடு
படுகின்றனர்.
சிலர் அவசரப்பட்டு, அரபாவை விட்டுப் புறப்படத் தயாராகின்றனர்.
சூரியன் நன்றாக மறைந்த பிறகுதான் அரபாவை விட்டுப் புறப்பட வேண்டும். மஃரிபுடைய நேரம்
முடியும் வரை இருந்து விட்டு, மஃரிபைத் தொழாமல் இங்கிருந்து
புறப்பட வேண்டும்.
முஸ்தலிபாவுக்குச் சென்று மஃரிபையும் இஷாவையும்
இஷாவுடைய நேரத்தில்
முஸ்தலிபாவில் தொழவேண்டும்.
இது தான் நபி வழி.

இறுதி ஹஜ்ஜின் போது நபி صلى الله عليه وسلم
அவர்கள் முஸ்தலிபாவில்
மஃரிபையும் இஷாவையும்
இணைத்துத் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்
அன்ஸாரி رضي الله عنه  ஆதாரம்: புகாரி (1674)

இப்னு உமர் رضي الله عنه  முஸ்தலிபாவில்
(மஃரிப், இஷா ஆகிய) இரு தொழுகைகளை ஒரு இகாமத் கூறி சேர்த்துத் தொழுதார்கள். நபி صلى الله عليه وسلم அவர்கள் இந்த இடத்தில்
இவ்வாறு செய்ததை நான்
பார்த்திருக்கிறேன் எனவும் அவர்
கூறினார். அறிவிப்பவர்:
அப்துல்லாஹ் இப்னு மாலிக் رضي الله عنه
ஆதாரம்: திர்மிதி (813)

இதோ மாலைக் கதிரவன் மறைந்து
விட்டான். புனித ஹாஜிகளும்
அரபாவை விட்டு விடை பெறுகின்றனர். அழுதழுது கேட்ட
பாவமன்னிப்பை அடையப்
பெற்றவர்களாக அல்லாஹ்வின்
பேரருள் கிடைக்கப் பெற்றவர்களாக
அல்லாஹ்வின் நேசர்கள் அனைவரும்
புறப்படுகின்றனர் முஸ்தலிபாவை
நோக்கி!
புனித ஹாஜிகளாக புண்ணிய
சீலர்களாக புறப்படுகின்றனர்
முஸ்தலிபாவை நோக்கி! கூட்டம்
கூட்டமாக மக்கள்- குதூகலத்துடன்
முஸ்தலிபாவை நோக்கி!
வரிசை வரிசையாக வாகனங்கள்
அனைத்துமே முஸ்தலிபாவை
நோக்கி!திக்கெட்டும் கேட்கிறது
தல்பிய்யா முழக்கம்!

மஷ்அருல் ஹராம்!

மஷ்அருல் ஹராம் என்பது
முஸ்தலிபாவில் இருக்கும் ஒரு
மலைக் குன்றின் பெயராகும்.
புனித ஹாஜிகள் முஸ்தலிபா
வரும்போது இந்த இடத்தில் நின்று
இறைவனை நினைவு
கூறுகிறார்கள். ஏனெனில் இது
இறைவனின் கட்டளையாகும்
…..அரபாத் பெரு வெளியிலிருந்து
நீங்கள் திரும்பும் போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை
நினையுங்கள். அவன் உங்களுக்குக்
காட்டித் தந்தவாறு அவனை
நினையுங்கள்! இதற்கு முன் நீங்கள் வழி தவறி இருந்தீர்கள். (திருக்குர்ஆன் 2:198)
மஷ்அருல் ஹராம் என்னும் மகிமை
மிக்க இடத்தில் இறைக் கட்டளைப்படி
இறைவனை நினைவு கூர்ந்த ஹாஜிகள், முஸ்தலிபாவுக்கு
வந்து இரவுப் பொழுதை இங்கேயே கழிக்கிறார்கள். இரவின்
பிற்பகுதியில், எங்கு நோக்கினும்
பாங்கு சப்தம். இது தஹஜ்ஜுத்
என்னும் நடுநிசித்
தொழுகைக்கான பாங்கு.
தனித்தனியாகவும், கூட்டமாகவும்
நடுநிசித் தொழுகையை
நிறைவேற்றுகின்றனர்.
பொழுது புலரப் போகின்றது.
அதற்கு முன் மறுபடியும்
பாங்கோசை. ஆம் இது வழக்கம் போல்
பஜ்ர் என்னும் அதிகாலைத்
தொழுகைக்கான பாங்கு சப்தம்.
களைப்புத் தீர சற்று நேரம் உறங்கி
ஓய்வெடுத்தவர்கள் ஆர்வத்துடன்
எழுகின்றனர். பஜ்ருத்
தொழுகையை நிறைவேற்றத்
தயாராகின்றனர்.
இங்கே முஸ்தலிபாவிலும், தண்ணீர் வசதி, கழிவறை வசதிகள்
அனைத்தும் சிறப்பாகச் செய்யப்
பட்டுள்ளன. பஜ்ருத் தொழுகையை
முடித்து விட்டு இனி
அடுத்தடுத்தக் கடடைகளை
நிறைவேற்ற அவசர அவசரமாகப்
புறப்படுகின்றனர்.
முஸ்தலிபாவில், பஜ்ருத் தொழுகையை அதன் முன்
நேரத்திலேயே தொழுது விட
வேண்டும். இது
 தான் நபி வழியாகும்.
நபி صلى الله عليه وسلم  அவர்கள் எந்தத்
தொழுகையையும் (அதற்குரிய நேரத்தில் தொழாமல்) வேறு
நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை. இரண்டு
தொழுகைகளைத் தவிர. ஒன்று
(முஸ்தலிபாவில்) மஃரிபையும்,
இஷாவையும் சேர்த்துத்
தொழுதது. இன்னொன்று பஜ்ரை
அதற்கான (வழக்கமான) நேரத்திற்கு முன் (முஸ்தலிபாவிலேயே) தொழுதது. அறிவிப்பவர்:
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் رضي الله عنه
ஆதாரம்: புகாரி (1682)
பஜ்ருத் தொழுகையை சீக்கிரமே முடித்து விட்டு சூரியன்
உதிப்பதற்கு முன்பே
முஸ்தலிபாவை விட்டு புறப்பட
வேண்டும் என்பதால் ஹாஜிகள் அவசர அவசரமாகப் புறப்படுகின்றனர்
மினாவை நோக்கி!

நபி صلى الله عليه وسلم  அவர்கள் சூரியன்
உதிப்பதற்கு முன்பே
முஸ்தலிபாவிலிருந்து
புறப்பட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் رضي الله عنه  ஆதாரம்: திர்மிதி (819)

பெண்கள், குழந்தைகள், இயலாத முதியோர்கள், சற்று முன் கூட்டியே புறப்பட்டுச் செல்வது
தவறில்லை. அப்படியே முன்
கூட்டியே மினா
சென்றடைந்தவர்கள்- சூரியன் உதிக்கும் வரை கல்லெறியக்
கூடாது.
நபி (ஸல்) அவர்கள், தமது
குடும்பத்தினரில் பலவீனர்களை
முன் கூட்டியே அனுப்பி
வைத்தார்கள். ‘சூரியன் உதிக்கும்
வரை நீங்கள் கல்லெறிய வேண்டாம்”
எனவும் கூறியனுப்பினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
ஆதாரம்: திர்மிதி (817)

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்.....

தொகுப்பு....

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்: 17-08-2017.

Tuesday, 15 August 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் -12

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் -12

========================
துல் ஹஜ் 9 ஆம் நாள்

 ஹஜ்ஜின் 2 ஆம்
நாள். இன்று தான் ஹஜ். ‘ஹஜ் என்பது அரபாவாகும்” என்பது நபி மொழி!
இது வரை ஹாஜிகள்
செய்த செயல்கள் எல்லாம், ஹஜ்ஜுடன் இணைந்த செயல்கள்.
உண்மையில் ஹஜ் என்பது, துல் ஹஜ் 9 ஆம் நாள் காலையிலிருந்து சூரியன் மறையும் வரை அரபாத் மைதானத்தில் நின்று வணங்குவது தான்.
அந்தப் புனித நாள் இன்று தான். அரபாத்
மைதானம் என்பது, பல மைல் சுற்றளவு
கொண்ட பரந்து விரிந்த ஒரு
பாலைவனத் திடல். ஆனால் இப்போது இந்தப் பாலைவன மைதானம் முழுதும் மரங்கள் வளர்த்து சோலைவனமாக மாற்றப் பட்டுள்ளது.
மினா அளவுக்கு முழுக்க முழுக்க கூடாரங்கள்
அமைக்கப் படாவிட்டாலும், சில இடங்களில் மட்டும் கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
பெரும் பாலானவர்கள் மரங்களின்
நிழல்களில் தங்கி இறை வணக்கத்தில்
ஈடுபடுகின்றனர்.கடும் கோடைக் காலங்களில்
ஹாஜிகளுக்கு வெயிலின் வெப்பத்தைத் தணிப்பதற்காக அரபாத் மைதானம் முழுவதும் குழாய்களைப்
பொருத்தி, குளிர்ந்த தண்ணீரை நீராவி
மாதிரி சன்னமாகத் தெளிக்க ஏற்பாடு
செய்யப் பட்டுள்ளது. பரந்து விரிந்த
பாலைவனத் திடல் முழுவதையும்
இயற்கையாகவும் செயற்கையாகவும் குளிர
வைத்திருக்கிறார்கள். ஹாஜிகளின்
மனங்களையும் தான்.

புனித ஹஜ்ஜுக்காக, புண்ணிய பூமிக்கு
வந்தவர்கள், வந்த நோக்கத்தில்
கண்ணுங்கருத்துமாக இருக்கும்போது, கடும்
வெப்பம் கூட ஒரு பொருட்டாகத்
தெரியாது. என்றாலும் ஹாஜிகளின் உடல் நலனைப் பேண சகல ஏற்பாடுகளும்
சரியான முறையில் செய்யப் பட்டுள்ளன
என்றால் அது மிகையில்லை. உணவு
ஏற்பாடுகளும், மருத்துவ உதவிகளும்,
தாராளமான தண்ணீர் வசதியும், மினாவைப் போலவே அரபாத்திலும் அழகான
முறையில் மிகுந்த அக்கரையுடன் செய்யப்
பட்டுள்ளன.
எண்ணற்ற தனியார் நிறுவனங்கள், போட்டி
போட்டுக் கொண்டு தங்கள்
நிறுவனங்களின் உணவுப் பொருள்
தயாரிப்புகளை பெரும் பெரும் வாகனங்களில் கொண்டு வந்து
வைத்துக் கொண்டு ‘ஃபீ
ஸபீல்” (இறைவனின் பாதையில் இலவசம்)
என்று கூவிக் கூவி அழைத்து வாரி
வழங்குகின்றனர். பழங்கள், பழச்சாறுகள்,
ரொட்டிகள், குளிர் பானங்கள், உணவுப் பொட்டலங்கள், தண்ணீர்
பாட்டில்கள், இப்படி இலவச விநியோகப்
பொருட்களின் பட்டியல் நீள்கிறது.
தனி நபர்களும் அவரவர் தம்மால் இயன்றதைக்
கொண்டு வந்து வல்ல
இறைவனுக்காக அள்ளி வழங்குகின்றனர்.
சவூதி மன்னர் பஹத் அவர்கள் சார்பாக
ஒவ்வொரு நாளும் ஒரு கோடிக்கும்
அதிகமான குளிர்ந்த குடி நீர் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்
படுகிறது.

மன்னர் பஹத் திருக் குர்ஆன் வளாகத்தில்
அச்சிடப் பட்ட திருக் குர்ஆன் பிரதிகள், உலகின் பல்வேறு மொழிகளில் திருக் குர்ஆன் மொழி பெயர்ப்புகள், மற்றும்
ஒலி ஒளி நாடாக்கள், ஹஜ் மற்றும்
அறநிலையத் துறை சார்பாக, பல்வேறு
மொழிகளில் ஹஜ் உம்ரா வழிகாட்டி நூல்கள், ‘இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு மையம்” சார்பாக, இஸ்லாமிய கொள்கை விளக்க
சிற்றேடுகள், தமிழ், மலையாளம், போன்ற இந்திய மொழிகள் உட்பட பல்வேறு
மொழிகளில் மார்க்க விளக்க நூல்கள்,
இவை அனைத்துமே இலவசமாக வழங்கப்
படுகின்றன. இவற்றை ஹாஜிகள் அவரவர்
நாடுகளுக்குக் கொண்டு
செல்லும்போது, பல கோடி மக்கள் படித்துப்
பயன் பெறுகின்றனர்.

லுஹரையும் அஸரையும் சேர்த்து தொழுதல்

அரபாத் மைதானத்தில் அமைந்துள்ளது,
‘மஸ்ஜிதுன்னமிரா” என்னும் மாபெரும்
பள்ளிவாசல். ஆர்வத்துடன் அதிகாலையிலேயே
வந்தவர்கள், பக்குவமாகப் பள்ளியின்
உட்பகுதிக்குச் சென்று விட்டனர். பல
இலட்சம் பேர் பள்ளிக்கு வெளியே
அணிவகுத்து நின்று விட்டனர்.
இன்றைய தினம், லுஹரையும் அஸரையும்
ஒன்றாக சேர்த்து, லுஹருடைய நேரத்தில்
இரண்டிரண்டு ரக்அத்கள் மட்டும்
தொழவேண்டும். ஏனெனில் நபி صلى الله عليه وسلم  அவர்கள் அப்படித் தான்
தொழுதார்கள்.
இப்னு சுபைர் رضي الله عنه  உடன் தாம் போர்
தொடுத்த ஆண்டு ஹஜ்ஜுக்கு வந்த
ஹஜ்ஜாஜ், இப்னு உமர் رضي الله عنه  இடம்,
‘அரபாவில் தங்கும் போது நீங்கள் எவ்வாறு
செயல்பட்டீர்கள்?” எனக் கேட்டார்.
அதற்கு ஸாலிம், நீர் நபி வழியைப் பின்பற்ற
நாடினால், அரபா நாளில் நடுப் பகலில்
தொழுவீராக! என்றார். அப்போது,
இப்னு உமர் رضي الله عنه  ‘ஸாலிம் கூறியது உண்மை தான் (நபித் தோழர்கள் அரபாவில்) லுஹரையும்,
அஸரையும், நபி வழிப்படி சேர்த்தே
தொழுபவர்களாக இருந்தனர்”
என்றார்.நான் ‘நபி صلى الله عليه وسلم  அவர்கள்
இவ்வாறு செய்துள்ளர்களா?” என
ஸாலிமிடம் கேட்டேன். அதற்கவர், இந்த விஷயத்தில் நபி صلى الله عليه وسلم  வழியைத் தவிர வேறு யாருடைய
வழிகாட்டுதலை நீங்கள் பின் பற்றுவீர்கள்? எனக்
கேட்டார். அறிவிப்பவர்: இப்னு ஷிஹாப் رضي الله عنه
ஆதாரம்: புகாரி (1662)

மஸ்ஜிதுன் னமிராவிலும் அதன் வெளிப் பகுதியிலும் இடம் பிடித்துக்
கொண்டவர்கள், இமாமுடன் சேர்ந்து,
லுஹரையும், அஸரையும், ஒன்றாகச் சேர்த்து
இரண்டிரண்டு ரக்அத்களாக தொழுதுக்
கொள்கின்றனர்.
அரபாவின் பிற பகுதிகளில் தங்கியிருப்போர்,
அவரவர் தங்கியுள்ள இடங்களில் கூட்டம்
கூட்டமாகச் சேர்ந்து ஜமாஅத்துடன்
தொழுகைகளை நிறை வேற்றுகின்றனர்.
மஸ்ஜிதுன்னமிராவில் இமாம் குத்பா உரை
நிகழ்த்துகிறார். ஹஜ்ஜின் நிகழ்ச்சிகள்
அனைத்தையும் தொலைக் காட்சியில்
 நேரடி ஒளிபரப்பு செய்யப் படுகின்றது.
 உலகம் முழுவதும் பல கோடி மக்கள் நேரடி ஒளி பரப்பைக்
கண்டு களிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வரலாற்று  முக்கியத்துவம்
வாய்ந்ததாகக் கருதப்படும், இந்த உரையை உலகமே உன்னிப்பாகக் கவனிக்கின்றது. இந்தப்
பிரசங்கம் உடனுக்குடன் ஆங்கிலத்திலும்
மொழிபெயர்க்கப் படுகிறது.

அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்கள்- அரபாத்
பெருவெளியில் நிகழ்த்திய இறுதிப் பேருரை
பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட
 வேண்டிய
உரையாகும்.அதோ! தூரத்தில் தெரிகிறதே! அதுதான் ‘ஜபலுர் ரஹ்மத்” என்னும்
அருட்கொடை மலை. இம்
மலையடிவாரத்தில் தான், அண்ணல் நபி صلى الله عليه وسلم
 அவர்கள், புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் போது
தங்கியிருந்தார்கள்.
அங்கு சென்று சிறிது நேரமேனும் நிற்க
ஆசைப்பட்டு ஹாஜிகள் கூட்டம் அலை மோதுகிறது.
ஆர்வத்தின் காரணமாக, சிலர் தட்டுத் தடுமாறி
 மலையின் மீது ஏறுகின்றனர். மலை
முழுதும் மனிதத் தலைகள். தூரத்திலிருந்து
பார்க்கும் போது மனிதக் குவியல் போல் தெரிகிறது.

அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்கள், இந்த மலையின்
அடிவாரத்தில் தான் தங்கியிருந்தார்கள்.
ஆர்வம் என்ற பெயரில் அறியாமையால்
மக்கள் மலையின் மீது ஏறுகின்றனர். இது
தவிர்க்கப்பட வேண்டிய செயலாகும்.
அந்திச் சூரியன் அஸ்தமிக்கும் வரை, இந்த அரபாத்
 பெருவெளியில் நின்று
இறைவனை வணங்க வேண்டும். மாலைப்
பொழுது நெருங்க நெருங்க, தல்பியா
 முழக்கம் எட்டுத் திக்கும்
எதிரொலிக்கிறது. தனித் தனியாக, சிறு
சிறு குழுக்களாக, எப்படியெல்லாம் இறை தியானத்தில்
 ஈடுபட முடியுமோ
அப்படியெல்லாம் அமர்ந்து பிரார்த்தித்த
வண்ணம், இந்தப் பொன் மாலைப்
பொழுதில் ஹாஜிகள்
பெறற்கரியப் பேற்றைப் பெறுகின்றனர்.

இதயம் திறந்து இறைவனிடம்
மன்றாடுகின்றனர். இனியொரு
வாய்ப்பு எப்போது கிடைக்கும்? இதுவே இறுதி வாய்ப்பாகி
 விடுமோ? இறைவன் ஒருவனைத் தவிர
வேறு எவருக்கும் தெரியாது.
அவரவர் மொழிகளில்
அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறார்கள். இரு கண்களும்
 கண்ணீர் மல்க இரு கரங்களும் ஏந்தி
நின்று இறைஞ்சுகிறார்கள். இந்த அரபாத்
பெருவெளியில் அனைத்துப் பேர்களுடன்
கூடி நின்று இறைஞ்சும் பெரும் பேற்றைப்
பெற்றதை எண்ணி ஆனந்தக் கண்ணீர்
வடிக்கிறார்கள். இதயங்கள் அழுகின்றன.

கண்கள் கண்ணீரை வடிக்கின்றன. கல்
நெஞ்சங்கள் கூட இங்கே கரைந்து போகின்றன.
மஹ்ஷர் மைதானத்தில் நிராயுத
பாணிகளாக நிற்கப் போகும் நாளை நினைத்து
அழுகிறார்கள். வாய்களுக்கு முத்திரையிடப்பட்டு,
கரங்களைப் பேசவும், கால்களை சாட்சி
சொல்லவும் வைக்கப்படும்  அந்த ஒரு நாளை நினைத்து அழுகிறார்கள்.
அறியாமையால் வாழ்க்கையில் செய்து
விட்ட தவறுகளை நினைத்து அழுகிறார்கள்.
மறுமையில் வலக்கரத்தில் பட்டோலை வழங்கப்பட
வேண்டுமே என்று வேண்டி அழுகிறார்கள்.
அறிந்தும் அறியாமலும் செய்து விட்ட பாவங்களை
 நினைத்து அழுகிறார்கள். அழுதழுது
பாவமன்னிப்புக் கேட்கிறார்கள்.
அருகில் உள்ளவர் அழுகின்றார்.
அல்லாஹ்விடம் ஏதோ கேட்கின்றார்.
ஆப்கானிய மொழி நமக்குப்
புரியவில்லை. கதறி ஒருவர் அழுகின்றார். கருப்பு நிறத்து
 ஹபஷி அவர். பக்கத்தில் ஒருவர்
பிரார்த்திக்கிறார். பாகிஸ்தானிய ஹாஜி
அவர். உருது மொழியில் கேட்கின்றார்.
அங்கே ஒருவர் அழுகின்றார். அரபி
மொழியில் இறைஞ்சுகிறார். இங்கே ஒருவர்
 அழுகின்றார். இனிய தமிழில்
இறைஞ்சுகிறார்.
எல்லோரும் இறைஞ்சுகிறார்கள்.
எல்லோருக்காகவும் இறைஞ்சுகிறார்கள்.
தமக்காக இறைஞ்சுகிறார்கள். தம்
பெற்றோருக்காக இறைஞ்சுகிறார்கள். உடன்
பிறந்தவர்களுக்காக, உற்றார்,
உறவினர்களுக்காக, உலக மக்களுக்காக
இறைஞ்சுகிறார்கள். பரந்து விரிந்த இந்த
அரபாத் பெருவெளி முழுவதும்
ஏங்கிய நெஞ்சங்களும், ஏந்திய கரங்களும்,
அழுத கண்களும், பிரார்த்தித்த வாய்களும்தான்.
இத்தனை மனிதர்களின், இத்தனை மொழிப்
பிரார்த்தனைகளையும் ஒரே நேரத்தில், ஒரே ஒருவன்
கேட்கின்றான். பாவமன்னிப்புக் கேட்டவர்களின்
பாவங்களை மன்னிக்கிறான். அருட்
கொடைகளைக் கேட்டவர்களுக்கு அள்ளி
வழங்குகிறான். இப்புனித நன்னாளில்,
இப்புனித இடத்தில், இப்புனித நேரத்தில்
கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும்
என்பதில் எள்ளவும் நமக்குச் சந்தேகம் இல்லை.

ஹலாலான உணவுண்டு, ஹலாலான
உடையுடுத்தி, ஹலாலான முறையில் ஈட்டிய
பொருளில் செலவு செய்து
வந்தவர்களின் நேரிய பிரார்த்தனைகளும்,
நியாயமான கோரிக்கைகளும் அங்கீகரிக்கப்படும்
என்பதில் கடுகளவும் நமக்குச் சந்தேகம் இல்லை.
ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு
சுவர்க்கமே கூலி என்னும் அண்ணல் நபி صلى الله عليه
அவர்களின் அற்புத வாக்கில் நமக்கு
அணுவளவும் சந்தேகம் இல்லை.
இன்று முதல்- இந்த நேரம் முதல்
தூய்மையானவர்களாக பாவங்கள்
மன்னிக்கப் பட்டவர்களாக கோரிக்கைகள் ஏற்றுக்
கொள்ளப்பட்டவர்களாக குறைகள்
மறைக்கப் பட்டவர்களாக குற்றங்கள் நீக்கப்
பட்டவர்களாக இவர்களை இறைவன்
ஆக்கியருள்வானாக. ஆமீன்!

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்....

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

 கடலங் குடி.

பதிவு நாள்: 16-08-2017.

Friday, 11 August 2017

கப்ருகளை ஸியாரத் செய்யும் போது

கப்ருகளை ஸியாரத் செய்யும் போது

السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُون
َ
அஸ்ஸலாமு அலை(க்)கும் தாரகவ்மின் மூமினீன் வஇன்னா இன்ஷா அல்லாஹு பி(B)கும் லாஹி(க்)கூன்.

இதன் பொருள் :

இறை நம்பிக்கையுள்ள சமுதாயமே! உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே.

ஆதாரம்: முஸ்லிம் 367

ஜனாஸா தொழுகை முறை

ஜனாஸா தொழுகை முறை: –

1) பிற தொழுகைகளைப் போலவே ஜனாஸா தொழுகைக்கும் உடல், உடை சுத்தமாக இருத்தல், உளு செய்தல், ஜனாஸா தொழுகைக்காக நிய்யத்து செய்தல், கிப்லாவை முன்னோக்குதல் போன்றவைகள் முக்கியமானதாகும்.

2) மய்யித் ஆணாக இருந்தால் இமாம் அதனுடைய தலைக்கு அருகிலும், பெண்ணாக இருந்தால் இமாம் அதற்கு மத்தியிலும் நிற்பார்.

3) தொழக் கூடியவர்கள் இமாமின் பின்னால் நிற்க வேண்டும்.

4) ஜனாஸா தொழுகைக்கு இமாம் நான்கு தக்பீர் கூறுவார்.

5) முதல் தக்பீருக்குப் பிறகு, அவூது பிஸ்மியுடன் தொழுகையில் ஓதும் சனாவை ஓத வேண்டும்.

6) இரண்டாவது தக்பீருக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓத வேண்டும். (ஸலவாத்து என்பது பிற தொழுகையில் அத்தஹிய்யாத்துக்குப் பிறகு நாம் ஓதக் கூடிய ஸலவாத்து ஆகும்)

7) மூன்றாவது தக்பீருக்குப் பிறகு மய்யித்துக்காக நாம் துஆச் செய்ய வேண்டும். (கீழே பார்க்கவும்).

8.) நான்காம் தக்பீருக்குப் பிறகு இரண்டு பக்கமும் சலாம் கொடுக்க வேண்டும்.

ஜனாஸா தொழுகை 

முதல் தக்பீருக்குப் பின் சனா ஓத வேண்டும்.

سبحانك اللهم وبحمدك ، وتبارك اسمك وتعالى جدك ، وجل ثناؤك ولا إله غيرك ،

உச்சரிப்பு:சுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக வதபாகஸ்முக வதஆலா ஜத்துக வஜல்ல  ஸனாஉக வலா இலாஹ  அஃய்ருக்.

இரண்டாவது தக்பீருக்கு பின்
நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும்.

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى  إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى  إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

உச்சரிப்பு: அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வஆலா இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத்,

அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பராக்த அலா இப்ராஹீம, வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத்.

பொருள்: இறைவா! இப்றாஹீம்(அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப்போல், முஹம்மது அவர்களின் மீதும், முஹம்மது அவர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.

இறைவா இப்றாஹீம்(அலை) அவர்களுக்கும், இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் அவர்களுக்கும், முஹம்மத் அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.

மூன்றாவது நான்காவது தக்பீருக்கு பின்

மய்யித்திற்காக வேண்டி தூய மனதுடன் பிரார்தனை செய்யவேண்டும்

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنْ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ مِنْ عَذَابِ النَّارِ

உச்சரிப்பு: அல்லஹும்ம ஃபிர்லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரீம் நஸுலஹு வவஸ்ஸிஃ மத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைதஸ் ஸவ்பல் அப்யழ மினத்தனஸ் வ அப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்ஹில்ஹுல் ஜன்னத வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார்

பொருள் : இறைவா இவரை மன்னிப்பாயாக. இவருக்கு அருள் பாலிப்பாயாக. இவருக்கு நற்சுகம் அளிப்பாயாக. இவரைப் பொறுத்தருள்வாயாக. இவரது விருந்துபச்சாரத்தைக் கண்ணியமாக்குவாயாக. இவர் புகும் இடத்தை (மண்ணறையை) விரிவாக்குவாயாக. மேலும் இவரை தண்ணீர், பனி, பனிக்கட்டி கொண்டு கழுவுவாயாக. வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து நீ தூய்மைப்படுத்துவதைப் போல் இவரை இவரது பாவங்களிலிருந்து நீ தூய்மைப் படுத்துவாயாக. இவரது வீட்டுக்குப் பகரமாக சிறந்த வீட்டையும், இவரது குடும்பத்தாருக்குப் பகரமாக சிறந்த குடும்பத்தாரையும் இவரது மனைவிக்குப் பகரமாக சிறந்த மனைவியையும் இவருக்கு வழங்குவாயாக. மேலும் இவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய். மேலும் மண்ணறையின் வேதனையிலிருந்தும், நரகத்தின் தண்டனையிலிருந்தும் இவரைக் காப்பாற்றுவாயாக.

ஜனாஸா தொழுகையில் ஓதக் கூடிய மற்றொரு துஆ: –

اللَّهُمَّ اغْفِرْ لحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا ، فَأَحْيِهِ عَلَى الإِسْلامِ ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيمَانِ

உச்சரிப்பு:அல்லஹும்மஃபிர் லிஹய்யினா, வமய்யிதினா  வஷாஹிதினா, வகாயிபினா, வஸகீரினா, வகபீரினா, வதகரினா, வஉன்ஸானா,  அல்லஹும்ம மன் அஹ்யைதஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃபைதஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான்.

பொருள் : இறைவா! எங்களில் உயிருடன் இருப்பவர்களுக்கும் இறந்து விட்டவர்களுக்கும் இங்கு வந்திருப்பவர்களுக்கும் வராதவர்களுக்கும் எங்களில் சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக. இறைவா! எங்களில் எவரை நீ உயிர் வாழச் செய்கிறாயோ அவரை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக. மேலும் எங்களில் எவரை நீ மரணிக்கச் செய்கிறாயோ அவரை ஈமானுடன் மரணிக்கச் செய்வாயாக.

Wednesday, 9 August 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள்! -11

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🌝 ரிலாக்ஸ் மார்னிங் 🌞

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள்!

========================

சாரணர் படை!

சவூதியின் பல்வேறு
பகுதிகளிலும் உள்ள உயர் நிலைப் பள்ளிகள், மற்றும்
கல்லூரிகளிலிருந்து வந்து குவிந்துள்ள சாரணர் படை
மாணவர்களின் பணி மகத்தானது.
பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, ஹாஜிகளுக்கு
வழிகாட்டிகளாகவும்,
உதவியாளர்களாகவும், சீருடை அணிந்து சிறப்புப் பணி
செய்கின்றனர். இயலாத மற்றும்
வயது முதிர்ந்த ஹாஜிகளை
அரவணைத்து அழைத்துச் செல்வதும், தமது
இருப்பிடங்களுக்குச் செல்ல வழி
தெரியாமல் தவிப்பவர்களை
அவர்களிடம் உள்ள அடையாள
அட்டைகளைக் கொண்டு
இருப்பிடத்தை அறிந்து  உரிய இடங்களுக்குக் கொண்டு போய்
சேர்த்தும் உபகாரம் செய்கின்றனர்.
மினாவில் மட்டுமின்றி
ஹாஜிகள் அடுத்தடுத்தக்
கடமைகளை நிறைவேற்றச்
செல்லும், முஸ்தலிபா, அரபா, போன்ற புண்ணியத் தலங்கள்
அனைத்திலும், சாரணர் படை
மாணவர்கள் மிகவும் சிறப்பாகப்
பணி புரிகின்றனர்.

தொலைத் தொடர்பு வசதி!

தபால் தந்தித் துறை, மினாவின் பல்வேறு இடங்களில் அஞ்சல் மற்றும் தந்தி வசதிகளைச் செய்து
வைத்திருக்கிறது. தொலை பேசித் துறையினரின் சேவை
மிகவும் பாராட்டத் தக்கது. மினாவிலும் மற்றும் புனிதத்
தலங்கள் அனைத்திலும்,
நோக்குமிடமெல்லாம் நீக்கமற
நிறைந்திருக்கின்றன தொலை பேசி
 மையங்கள்.உலகின் 180க்கும் அதிகமான நாடுகளுடன் நேரடித்
தொடர்பு கொள்ளத் தக்க இம் மையங்களின் மூலம்
நாளொன்றுக்கு பல இலட்சக் கணக்கான தொலை பேசி
அழைப்புகள் செய்யப் படுவதாக சவூதி தொலைத் தொடர்பு
அமைச்சகம் தெரிவிக்கிறது.
அவரவர் நாடுகளில் உள்ள
உறவினர்களுடன் தொடர்பு கொண்டு  புனித ஹஜ்ஜை இனிய
முறையில் நிறைவேற்றிக்
கொண்டிருக்கும் மகிழ்ச்சியைப்
பகிர்ந்துக் கொள்ள  மக்கள் கூட்டம்
அலைமோதுகிறது.

காவல் துறையினரின் கண்காணிப்பு

ஆண்டு தோறும் இலட்சக் கணக்கான
ஹாஜிகள் ஒன்று கூடும் புனித
ஹஜ்ஜில், எவ்வித அசம்பாவிதமும்
ஏற்பட்டு விடக் கூடாது
என்பதற்காக, காவல் துறை எல்லா
வகையானக் கண்காணிப்பு
ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
பொதுவாகவே முஸ்லிம்கள் ஒன்று
கூடும் எந்த ஒரு விழாவிலும் காவல் துறைக்கு எந்த வேலையும்
இருக்காது.
நியாய உள்ளம் படைத்த எத்தனையோ
காவல் துறை அதிகாரிகள் இதற்கு
சாட்சி பகர்வர். கண்ணியத்தையும்
கட்டுப்பாட்டையும் கடமையாகக்
கொண்டவர்கள் அதிலும் புனித
ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற
வந்த புண்ணிய சீலர்கள் எவ்வளவு
கட்டுப்பாட்டைக்
கடைப்பிடிப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை.
காவல் துறையும், ராணுவமும்,
தீயணைப்புப் படையினரும், சாரணர்
படையும், தரையில் தங்கள்
கண்காணிப்பைத் தொடர, ஆகாயத்தில் ஹெலிகாப்டர்கள்
அனைத்தையும் கண்காணித்தபடி
வட்டமடித்துக் கொண்டே
இருக்கின்றன. இவை எதைப் பற்றியும் கவலைப் படாமல்
அத்தனை இலட்சம் ஹாஜிகளும்,
இறை வணக்கத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அவரவர் தம் சொந்த ஊர்களில் மாட
மாளிகைகளில் வசித்தவர்கள் சுக
போக வாழ்க்கை வாழ்ந்தவர்கள், இங்கே
மினாவில் வந்து கூடாரங்களில்
தங்கள் பொழுதைக்
கழிக்கின்றனர்.மறு உலகின் நிரந்தர
வாழ்க்கைப் பயணத்தில் சற்றுத் தங்கி இளைப்பாறுவது தான் இவ்வுலக
வாழ்க்கை. இவ்வுலக வாழக்கைப்
பயணத்தில் சற்றுத் தங்கி
இளைப்பாறுவது போல் மினாவில்
இந்த சின்னஞ்சிறு கூடாரங்களில்
தங்கி ஹாஜிகள்
இளைப்பாறுகின்றனரோ! இல்லை. இவர்கள் இங்கு இளைப்பாற
வரவில்லை! பொன்னான பொழுதை
வீணில் போக்க இங்கு வரவில்லை!
காட்சிகளைக் கண்டு களிப்படைய
வரவில்லை! இறைவனின் அழைப்பை ஏற்று வந்திருக்கின்றனர்.
இறைவனுக்காக இங்கு
வந்திருக்கின்றனர். இறை வணக்கத்துக்காக இங்கு
வந்திருக்கின்றனர்.
குழுக்களாகவும்,
தனித்தனியாகவும், அமர்ந்து இன்றைய தினத்தை இறை
வணக்கத்தில் கழிக்கின்றனர். இறை
தியானத்தில் கழிக்கின்றனர்.
இயன்றவரை திரு மறையை ஓதுவதிலும், நபிலான
தொழுகைகளிலும்,
பிரார்த்தனையிலும் திக்ருகளை
மொழிவதிலும் கழிக்கின்றனர்.

துல் ஹஜ் எட்டாம் நாள் ஹஜ்ஜின்
முதல் நாளாகிய இன்றைய
தினத்தின் லுஹர், அஸர், மஃரிப்,
இஷா, ஆகிய ஐவேளைத்
தொழுகைகளையும் இங்கேயே
நிறைவேற்றுகின்றனர்.இன்றைய
தினத்தின் இரவுப் பொழுதும்
இங்கேயே இறை தியானத்தில்
கழிகின்றது.
இரவுப் பொழுதிலும் இங்கு உறக்கமா வரும்? உறங்கவா இங்கு வந்தோம்? என்ற எண்ணம் இதயத்தில் எழ
சிறிது நேரமே கண்ணயர்ந்தவர்கள்
கூட  நடு நிசித் தொழுகையான
தஹஜ்ஜஜுத் தொழுகையை
நிறைவேற்றத் தயாராகின்றனர்.
மினாவில் லுஹர், அஸர், இஷா
ஆகிய, நான்கு ரக்அத்
தொழுகைகளை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழுவது
சிறந்ததாகும்.
மக்கள் முன்னெப்போதும்
இருந்திராத அளவுக்கு அச்சமற்ற நிலையிலும், முன்னெப்போதும்
இல்லாத அளவுக்கு அதிக
எண்ணிக்கையிலும் இருந்த போது
நான் நபி صلى الله عليه وسلم  அவர்களுடன் (நான்கு
ரக்அத் கொண்ட தொழுகைகளை)
இரண்டு ரக்அத்களாகத்
தொழுதிருக்கிறேன். என்று ஹாரிஸா பின் வஹ்ப் رضي الله عنه
அறிவிக்கும் ஹதீஸ் திர்மிதியில்
பதிவாகியுள்ளது. (ஹதீஸ் எண் 808)

நான் நபி صلى الله عليه وسلم  அவர்களுடன்
மினாவில் இரண்டு ரக்அத்களாகத்
தொழுதிருக்கிறேன்.
அபூ பக்ர் உமர் رضي الله عنهما  ஆகியோருடனும்
இரண்டு ரக்அத்களாகத்
தொழுதிருக்கிறேன். உஸ்மான் رضي الله عنه
 அவர்களின் ஆட்சியின் துவக்க
காலத்திலும் இரண்டு ரக்அத்களாகத்
தொழுதிருக்கிறேன். என்று இப்னு
மஸ்வூத் கூறியதாக அறிவிக்கப்
பட்டுள்ளது.
மறு நாள், துல் ஹஜ் 9 ஆம் நாள்
அதிகாலை பஜ்ருத்
தொழுகையையும்- இங்கு
மினாவிலேயே நிறை வேற்றி விட்டு  அடுத்தக் கடமையை
நிறைவேற்ற அரபாத்தை நோக்கி
ஹாஜிகள் புறப்படுகின்றனர்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்....

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்: 09-08-2017

இந்நூல் தொகுக்கப்பட்டதின் நோக்கம்...


இந்நூல் தொகுக்கப்பட்டதின் நோக்கம்...

1.காலத்தின் மீது சத்தியமாக!
2.நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.
3.விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்து,சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும்,(பாவங்களை விடுவதிலும் நன்மைகளை செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களை சகித்து) பொறுமையைக் கொண்டும் ஒருடருக்கொருவர் உபதேசிக்கிறார்களே அத்தகையோரைத் தவிர...

               (அல்குர்ஆன்
அத்தியாயம்:103,வசனங்கள் :3)

நமக்கு இறைவன் அளித்துள்ள அருட்கொடைகளில் மகத்தானது காலமாகும்.அந்தக் காலத்தை முறையாக நாம் பயன்படுத்தாமல் வீணடிக்கிறோம்.நம்முடைய காலங்கள் அனைத்தும் வீணான விஷயங்களை பார்ப்பதிலும்,கேட்பதிலும் கழிந்துகொண்டிருக்கிறது.நபியவர்களும் நபித்தோழர்களும் காலங்களை முறையாக செலவிட்டதால் ஈருலகிலும் வெற்றிபெற்றார்கள்.

நாம் செய்யவேண்டிய அமல்களை இஸ்லாம் நமக்கு முறைப்படுத்தியுள்ளது.காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை நாம் புரிய வேண்டிய அமல்கள் அதிகமாக உள்ளன.அவற்றில் நாம் கவனம் செலுத்தினால் நிச்சயமாக நம்முடைய காலங்கள் விரயமாகாது.

நாம் அன்றாடம் செய்ய வேண்டிய அமல்களின் அவசியத்தைப் பற்றியும்,அந்த அமல்களை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றியும் விரிவாக இந்நூலில் தரப்பட்டுள்ளது.

இந்நூலில் கூறப்பட்டள்ள அனைத்து விஷயங்களையும் மவ்த் வரை கடைபிடிக்க வல்ல ரஹ்மான் நமக்கு தௌஃபீக் செய்வானாக!

இதழின் உள்ளே


உள்ளே...

இந்நூல் தொகுக்கப்பட்டதின் நோக்கம்...
1.அன்றாட அமல்களின் கால அட்டவணை
2.ஃபர்ளான தொழுகையின் முக்கியத்துவமும் அதன் முறைகளும்
3.ஐங்காலத் தொழுகையின் முன்பின் சுன்னத்துகளின் அவசியம் மற்றும் விவரங்கள்
4.நஃபிலான தொழுகையால் ஏற்படும் மகத்தான நன்மைகள்
5.தஹஜ்ஜுத் தொழுகை
6.இஷ்ராக் தொழகை
7.லுஹா தொழுகை
8.அவ்வாபீன் தொழுகை
9.தஸ்பீஹ் தொழுகை
10.இஸ்திகாரா தொழுகை தொழும் முறை
11.ஹாஜத் நஃபில் தொழுகை
12.தவ்பா நஃபில்,தஹிய்யதுல் உளு
13.தினமும் ஓத வேண்டிய துஆக்கள்
14.தஹஜ்ஜுதுக்காக எழும்போது ஓதும் துஆ
15.பாங்கு மற்றும் உளுவிற்கான துஆக்கள்
16.ஐவேளை தொழுகைக்குப் பின் ஓத வேணடியவை
17காலை மாலை ஓதும் துஆக்கள்
18.காலை மாலை ஓத வேண்டிய சூராக்கள்
19.சாப்பிடுவது மற்றும் தண்ணீர் அருந்துவதின் சுன்னத்தான முறை
20.கழிவறையின் சுன்னத்துகள்
21.குளிப்பின் சுன்னத்துகள்
22.தூங்குவதின் சுன்னத்துகள்

தஹஜ்ஜுதுக்காக எழும்போது ஓதும் துஆ


*தஹஜ்ஜுதுக்காக எழும்போது ஓதும் துஆ*

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தஹஜ்ஜுத் தொழுகைக்கு எழுந்தவுடன் கீழ்க்காணும் துஆவை ஓதுவார்கள்.
اَللّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُوْرُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيْهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ حَقٌّ وَقَوْلُكَ حَقٌّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ وَالنَّبِيُّوْنَ حَقٌّ وَمُحَمَّدٌ حَقٌّ اَللّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَبِكَ آمَنْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الْمُقَدّمُ وَأَنْتَ الْمُؤَخّرُ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ
அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து அன்(த்)த நூருஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி வமன் ஃபீஹின்ன, வல(க்)கல் ஹம்து அன்(த்)த கையிமுஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி, வல(க்)கல் ஹம்து அன்தல் ஹக்கு, வ வஃது(க்)க ஹக்குன், வ கவ்லு(க்)க ஹக்குன், வ லி(க்)காவு(க்)க ஹக்குன், வல் ஜன்ன(த்)து ஹக்குன், வன்னாரு ஹக்குன், வஸ்ஸாஅ(த்)து ஹக்குன், வன்னபிய்யூன ஹக்குன், வ முஹம்மதுன் ஹக்குன், அல்லாஹும்ம ல(க்)க அஸ்லம்(த்)து, வ அலை(க்)க தவக்கல்(த்)து, வபி(க்)க ஆமன்(த்)து, வஇலை(க்)க அனப்(த்)து, வபி(க்)க காஸம்(த்)து, வஇலை(க்)க ஹாகம்(த்)து ஃபக்ஃபிர் லீ மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து அன்(த்)தல் முகத்திமு வஅன்(த்)தல் முஅக்கிரு லாயிலாஹ இல்லா அன்(த்)த

பொருள் : இறைவா! உனக்கே புகழனைத்தும். வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு இடைப்பட்டவைகளுக்கும் நீயே ஒளியாவாய். உனக்கே புகழனைத்தும். வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப் பட்டவைகளையும் நிர்வகிப்பவன் நீயே. உனக்கே புகழனைத்தும். நீயே மெய்யானவன். உனது வாக்குறுதி மெய்யானது. உன் சொல் மெய்யானது. உன்னை (நாங்கள்) சந்திப்பது மெய்யானது. சொர்க்கம் மெய்யானது. நரகமும் மெய்யானது. யுக முடிவு நாளும் மெய்யானது. நபிமார்கள் மெய்யானவர்கள். முஹம்மதும் மெய்யானவர். இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன் மீது நம்பிக்கை வைத்தேன். உன்னையே நம்பினேன். உன்னிடமே மீள்கிறேன். உன்னைக் கொண்டே வழக்குரைக்கிறேன். உன்னிடமே தீர்ப்புக் கோருகிறேன். எனவே நான் முன் செய்தவைகளையும், பின்னால் செய்யவிருப்பதையும், நான் இரகசிய மாகச் செய்ததையும், நான் வெளிப்படையாகச் செய்ததையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.

ஆதாரம்: புகாரி

Friday, 4 August 2017

வெள்ளிக்கிழமை

*வெள்ளிக்கிழமை*

1. நாட்களில் சிறந்த நாள்.
2.ஏழைகளின் பெருநாள்.
3.புனிதம் நிறைந்த நாள்.

 முறையாக செய்ய வேண்டியவைகள்

 1.நகம் வெட்டுதல்.

2.மீசை கத்தரித்தல்.

3.அக்குள் முடி பிடுங்குதல்.

4.மறைவான முடி சிரைத்தல்.
 குளித்தல்.

5.தலைக்கு எண்ணெய் தேய்த்தல்.

6.சிறந்த ஆடை அணிதல்.

7.மனம் பூசுதல்.

8.நேர காலத்தோடு மஸ்ஜிதிற்கு செல்லுதல்
நடந்து செல்லுதல்.

9.தஹிய்யதுல் மஸ்ஜித் இரண்டு றக்அத் தொழுதல்.

10.சூரதுல் கஃப் ஓதுதல்.

11.அதிகம் ஸலவாத் சொல்லுதல்.

12.அதிகம் துஆ கேட்டல்.

 13.இமாமிற்கு  நெருக்கமாக உக்காருதல்.

 14.குத்பாவை செவிசாய்த்து கேட்டல்.

*கழிவறையின் மற்றும் குளிப்பின் சுன்னத்துக்கள்:*

*கழிவறையின் சுன்னத்துக்கள்:*

1.தலையை மூடிச் செல்வது.

2.காலணி அணிந்து செல்வது.

3.துஆ ஒதிய பின் உள்ளே நுழைவது.

4.முதலாவதாக இடது காலை உள்ளே        வைப்பது.

5.கிப்லாவின் பக்கம்முகத்தையோ,முதுகையோ காட்டாமல் இருப்பது.

6.முற்றிலும் பேசாமல் இருப்பது.

7.நின்ற நிலையில் சிறுநீர் கழிக்காமல் இருப்பது.

8.இடது கையால் சுத்தம் செய்வது.

9.சுத்தம் செய்த பின் மண் அல்லது சோப்பு  கொண்டு கையை நன்கு கழுவது.

10.வலது காலை முன் வைத்து வெளியேவருவது.
வெளியே வந்த பின் துஆ ஓதுவது.

   *குளிப்பின் சுன்னத்தான முறை*

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடமையான குளிப்பை கீழ்காணும் முறையில் நிறைவேற்றுவார்கள்.

1.இரண்டு கைகளையும் கழுவுவது.

2.இடது கையில் தண்ணீரை ஊற்றி வெட்கஸ்தளத்தை கழுவுவது.

3.தொழுகைக்கு உழூ செய்வது போல உழூ செய்வது.

4.தண்ணீரை எடுத்து தமது விரல்கள் மூலம் தலை முடியின் வேர் கால்களில் செலுத்துவது.

5.இரண்டு கைநிறைய தண்ணீரை எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக தலையில் ஊற்றுவது.

6.உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவது.

7.இரண்டு கால்களையும் கழுவுவது.

சாப்பிடுவது மற்றும் தண்ணீர் அருந்துவதின் சுன்னத்தான முறைகள்

சாப்பிடுவதின் சுன்னத்தான முறை

1.விரிப்பு விரித்து சாப்பிடுதல்.

2.இரு கைகளையும் கழுவுதல்.

3.சாப்பிடும் முன் துஆ ஓதுவது.

4.சுன்னத்தான முறைப்படி அமர்வது.

5.வலது கையால் சாப்பிடுவது.

6.தனக்கு முன்னுள்ளதை சாப்பிடுவது.

7.மூன்று விரல்களால் சாப்பிடுவது.

8.எதன் மீதும் சாயாமல் சாப்பிடுவது.

9.உணவைக் குறைகூறாமல் இருப்பது.

10.உணவு கீழே விழுந்துவிட்டால் அதை எடுத்து சாப்பிடுவது.

11.அதிக சூடாக சாப்பிமாலிருப்பது.

12.உணவுப் பாத்தரத்தையும்,விரல்களையும் சூப்பி சுத்தமாக சாப்பிடுவது.

13.சாப்பிட்ட பின் துஆ ஓதுவது.

14.கைகளைக் கழுவி,வாய் கொப்பளிப்பது.                                                                                               தண்ணீர் அருந்துவதின்   சுன்னத்துகள்:
1.    வலது கையால் அருந்துவது.

2.    உட்கார்ந்து அருந்துவது.

3.    தண்ணீரை பார்த்து அருந்துவது.

4.    பிஸ்மில்லாஹ் கூறி அருந்துவது.
5.    மூன்று முறை சுவாசித்து அருந்துவது.

6.    அருந்திய பின் அல்ஹம்துலில்லாஹ்

காலையிலும் மாலையிலும் ஓத வேண்டிய சூராக்கள்

காலையிலும் மாலையிலும் ஓத வேண்டிய சூராக்கள்

காலையிலும், மாலையிலும் 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை மூன்று தடவை ஓதினால் அதுவே அனைத்துக் காரியங்களுக்காகவும் ஒருவருக்குப் போதுமானது என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
﴿﴾قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ﴿﴾ اللَّهُ الصَّمَدُ ﴿﴾لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿﴾وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَد

ٌ ﴿﴾بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
 ﴿﴾قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ﴿﴾مِن شَرِّ مَا خَلَقَ ﴿﴾وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿﴾وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ﴿﴾وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

﴿﴾بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
ِ ﴿﴾قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ﴿﴾مَلِكِ النَّاسِ ﴿﴾إِلَٰهِ النَّاسِ ﴿﴾مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ﴿﴾الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ﴿﴾مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்,
குல்ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத். லம் யலித், வலம் யூலத். வலம் யகுன் லஹு குஃபுவன் அஹத்.

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்,
குல் அவூது பி ரப்பில் ஃபலக். மின் ஷர்ரி மா ஃகலக். வமின் ஷர்ரி ஃகாஸி(க்)கின் இதா வ(க்)கப். வமின் ஷர்ரின் னப்ஃபஸாத்தி ஃபில் உ(க்)கத். வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்.

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்,
குல்அவூது பிரப்பின் னாஸ். மலி(க்)கின் னாஸ். இலாஹின் னாஸ். மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ். அல்லதீ யுவஸ்விஸு ஃபீ ஸுதூரின் னாஸ். மினல் ஜின்னத்தி வன்னாஸ்.

பொருள் : அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
(112 வது அத்தியாயம்)

 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!
 (113 வது அத்தியாயம்)

 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும்இத்தகையோர் உள்ளனர்.
(114வது அத்தியாயம்)

ஆதாரம்: நஸயீ

காலை மாலை ஓதும் துஆக்கள்*

*காலை மாலை ஓதும் துஆக்கள்*

اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

பொருள்: அல்லாஹுத் தஆலாவின் பதிபூரணமான கலிமாக்களின் பொருட்டால் அவன் அவன் படைத்தவற்றின் தீங்குகளை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

இதனைக் காலையிலும் மாலையிலும் மும்மூன்று தடவை ஓதி வந்தால் எல்லாத் தீங்குகளை விட்டும் பாதுகாப்பு கிடைக்கும். குறிப்பாக பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் தீங்குகளை விட்டும, துன்பம் தரும் மிருகங்களின் தீங்குகளை விட்டும் பாதுகாப்பு கிடைக்கும். குறிப்பாக இரவு நேரங்களில் ஓதிக் கொள்வது நல்லது.

ஒரு மனிதர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, யாரஸூலல்லாஹ் கடந்த இரவு ஒரு தேள் என்னை கொட்டி விட்டது என்று கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நீ மாலை நேரத்தில் அஊது பி கலிமாத்தித் தாமாத்தி மின் ஷர்ரி மாகலக்க’ என்று ஓதிக் கொண்டிருந்தால் உனக்கு அது எவ்வித இடையூறும் செய்யாது என்று கூறினார்கள்.

ஆதாரம்: மிஷ்காத்.

بِسْمِ اللهِ الَّذِيْ لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْاَرْضِ وَلاَ فِي السَّمَآءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரைக் கொண்டு ஆரம்பிக்கிறேன். அவன் எத்தகையவன் என்றால், அவனுடைய திருப் பெயருடன் பூமியிலுவும் வானத்திலும் உள்ள எப்பொருளும் எந்த இடையூறும் செய்யாது. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், முற்றும் அறிந்தவன்.

இதனைக் காலையிலும் மாலையிலும் மும்மூன்று தடவை ஓதிக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஓதி வந்தால் அல்லாஹு தஆலா அவரை துன்பங்கள், இடையூறுகள் அனைத்தையும் விட்டும் பாதுகாத்திடுவான். –

 நபிமொழி.

اَعُوْذُ باِ للهِ السَّمِيْعِ الْعَلِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

பொருள்: செவியுறுவோனும் முற்றும் அறிந்தவனுமாகிய அல்லாஹுத்தஆலாவைக் கொண்டு சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.-நபிமொழி.

இதனைக் காலையிலும் மாலையிலும் மும்மூன்று தடவை ஓதியபின், சூரத்துல் ஹஷ்ரின் கடைசியிலுள்ள மூன்று ஆயத்துக்களை ஓதிக் கொள்ள வேண்டும்.

هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۖ هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ٭ هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ ٭ هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ ۖ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ٭

மேற்கூறப்பட்ட படி இஸ்மு மற்றும் ஆயத்துக்களை  ஸுபுஹு நேரத்தில் ஓதிக் கொள்பவருக்காக எழுபதினாயிரம் மலக்குகள் சாட்டப்படுகின்றனர். அவர்கள் அவருக்காக அன்று மாலை வரை துஆ செய்து கொண்டிருக்கின்றனர். அன்று பகலில் அவர் இறந்து விட்டால் ஷஹீதுடைய அந்தஸ்துள்ளவராக மரணமடைகிறார். அவ்வாறே மாலையில் இதைன ஓதிக்கொண்டால் அதே அந்தஸ்து கிடைக்கிறது’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளர்கள்.

நூல்: மிஷ்காத்.

ஐவேளை தொழுகைக்குப் பின் ஓத வேண்டியவை

ஐவேளை தொழுகைக்குப் பின் ஓத வேண்டியவை

أَسْتَغْفِرُ اللهَ ، أَسْتَغْفِرُ اللهَ ، أَسْتَغْفِرُ اللهَ اللَّهُمَّ أَنْتَ السَّلامُ ، وَمِنْكَ السَّلامُ ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلالِ وَالإِكْرَامِ

(அஸ்தஃக்ஃபிருல்லாஹ் அஸ்தஃக்ஃபிருல்லாஹ் அஸ்தஃக்ஃபிருல்லாஹ்! அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்)

பொருள் : அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! யா அல்லாஹ்! நீ ஈடேற்றமளிப்பவன். உன்னிடமிருந்து ஈடேற்றம் உண்டாகிறது. கண்ணியம் மாண்பும் உடையவனே! நீயே அருட்பேறுடையவன்.

               (ஆதாரம் : முஸ்லிம்)

اللَّهُمَّ أَنْتَ السَّلامُ ، وَمِنْكَ السَّلامُ ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلالِ وَالإِكْرَامِ

( அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்)

பொருள் : அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! யா அல்லாஹ்! நீ ஈடேற்றமளிப்பவன். உன்னிடமிருந்து ஈடேற்றம் உண்டாகிறது. கண்ணியம் மாண்பும் உடையவனே! நீயே அருட்பேறுடையவன்.

             (ஆதாரம் : முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:"முஆதே! எந்தத் தொழுகைக்குப் பின்பும் இந்த துஆவை விட்டு விடாதீர்.

اللهم اعني علي ذكرك وشكرك وحسن عبادتك
(அல்லாஹும்ம அயின்னி அலா திக்ரிக வசுக்ரிக வஹுஸ்னி இபாததிக்)
பொருள்:"யா அல்லாஹ்!உன்னைத் தியானிப்பதற்கும்,நன்றி செலுத்துவதற்கும்,நல்ல முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவி புரிவாயாக."
               
        (அபூதாவூது:1522)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:"ஒவ்வொரு ஃபர்ள் தொழுகைக்குப் பிறகும்,சுப்ஹானல்லாஹ் 33 தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும்,அல்லாஹுஅக்பர் 33 தடவையும் ஓதுபவர் ஒரு போதும் நஷ்டமடையமாட்டார்.

                       (முஸ்லிம்:1349)

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,ஃபர்லான தொழுகைக்குப் பின் இந்த துஆவை ஓதினார்கள்.

لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو علي كل شيء قدير
اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا لجد منك الجد
                          (புகாரி:844)

         மஃரிப் தொழுதபின் ஓதவேண்டிய துஆ

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:"மஃரிப் தொழுததும் اللهم اجرني من النار (அல்லாஹும்ம அஜிர்னி மினன்னார் )என ஓதிக் கொள்பவர் அன்றிரவு மரணித்தால் நரகிலிருந்து பாதுகாப்பு பெறுவார்.அதேபோன்று ஃபஜ்ர் தொழுதபின் ஏழுமுறை ஓதிவருபவர்,அன்றைய பகலில் மரணித்தாலும் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பு பெறுவார்."

                  (அபூதாவூது:5079)

பாங்கு மற்றும் ஒழுவிற்கான துவாக்கள்

*உழு செய்த பின் ஓதும் துஆ*

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:எவர் நன்கு உழு செய்து கீழ்க்காணும் துஆவை ஓதுகிறாரோ,அவருக்காக சுவனத்தின் எட்டு வாசல்களும் திறந்து விடப்படுகின்றன.அவர் விரும்பிய வாசலில் நுழைந்து கொள்ளலாம்.

اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين

(அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு.அல்லாஹும்மஜ்அல்னி மினத்தவ்வாபீன வஜ்அல்னி மினல் முததஹ்ஹிரீன்.)

                              (திர்மிதீ:65)

*பாங்கு ஆரம்பிக்கும் பொழுது ஓதும் துஆ*

முஅத்தின் பாங்குசொல்ல ஆரம்பித்ததும்,அதைக் கேட்டவர் கீழ்க்காணும் துஆவை ஓதுவாரானால்,அவர் பாவங்கள் மன்னிக்கப்படுவதாக அண்ணலார் கூறினார்கள்.

اشهد ان لا اله الا الله وحده لا شريك له وان محمدا عبده ورسوله رضيت بالله ربا وبمحمد رسولا وبا الاسلام دينا
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீகலஹு  வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு  ரலீது பில்லாஹி ரப்பன் வபிமுஹம்மதின் ரஸுலன் வபில்இஸ்லாமி தீனன்.
                         (முஸ்லிம்:851)


*பாங்கு முடிந்தவுடன் ஓதும் துஆ*

பாங்கு முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.

اَللّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا اَلْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِيْ وَعَدْتَهُ

(அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ஃபளீல(த்)த வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு)

பொருள் : இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!

                       ஆதாரம்: புகாரி

தினமும் ஓத வேண்டிய துஆக்கள்

தினமும் ஓத வேண்டிய துஆக்கள்

பள்ளிவாசலுக்குள் நுழையும் போது
‎*اللّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ*
தமிழில்:(அல்லாஹீம்மஃப்தஹ்லி அப்வாப ரஹ்மதிக)

பள்ளிவாசலிலிருந்து வெளியேறும் போது
‎*اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ*
(அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக மின் ஃபள்லிக)

வீட்டில் நுழையும் போது 
‎*بِسْمِ اللهِ وَلَجْنَا وَبِسْمِ اللهِ خَرَجْنَا وَعَلَى اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا*
(பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி ஹரஜ்னா வஅலல்லாஹி ரப்பினா தவக்கல்னா)

வீட்டிலிருந்து வெளியேறும் போது
‎*بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ لا حَوْلَ وَلا قُوَّةَ إِلاَّ بِاللَّه*
(பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்)

கழிவறைக்குள் செல்லும் போது
‎*بِسْمِ اللهِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ*
(பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம இன்னி அஊதுபிக மினல்குபுஸி வல்கபாயிஸி)

கழிவறையிலிருந்து வெளியே வரும் போது
‎*غُفْرَانَكَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّيَ الأَذَى وَعَافَانِي*
‎*اللَّهُمَّ طَهِّرْ قَلْبِي مِنَ النِّفَاقِ وَحَصِّنْ فَرْجِي مِنَ الْفَوَاحِشِ*
(உஃப்ரானக அல்ஹம்து லில்லாஹில்லதி அத்ஹப அன்னில்அதா வஆஃபானி)
(அல்லாஹம்ம தஹ்ஹிர் கல்பீ மினன்னிஃபாகி வஹஸ்ஸின் ஃபர்ஜி மினல் ஃபவாஹிஸி)

தூங்குவதற்கு முன்
‎*بِسْمِكَ اللَّهُمَّ أَحْيَا وَأَمُوتُ*
(பிஸ்மிகல்லாஹும்ம அஹ்யா வஅமூது)

தூங்கி எழுந்த பின்
‎*اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُور*
(அல்ஹம்து லில்லாஹில்ல்தி அஹ்யானா பஃதமா அமாதனா வஇலைஹின்னுஸுர்)

ஆடை அணியும் போது
‎*اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّي وَلا قُوَّة*
(அல்ஹம்து லில்லாஹில்லதி கசானி ஹாதா வரஜகனிஹி மின் அஃய்றி ஹவ்லிம் மின்னி வலா குவ்வதின்)

ஆடையைக் களையும் போது
بسم الله الذي لا اله الا هو
(பிஸ்மில்லாஹில்லதீ லாஇலாஹ இல்லா ஹுவ)

உணவருந்திய பின் 
‎*اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَ رَقََنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّي وَلا قُوَّة*
(அல்ஹம்து லில்லாஹில்லதி அத்அமனி ஹாதா வரஜகனிஹி மின் அஃய்றி ஹவ்லிம் மின்னி வலா குவ்வதின்)

பால் அருந்திய பின்
اللهم بارك لنا فيه وزدنا فيه
(அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீஹி வஜித்னா மின்ஹு)

பயணம் செய்வதற்கு முன்
‎*سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَٰذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَىٰ رَبِّنَا لَمُنْقَلِبُونَ*
(சுப்ஹானல்லதி சஹ்ஹரலனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினின்.வஇன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்).

கண்ணாடி பார்க்கும் போது
‎*اَلْحَمْدُ لِلَّه اَللَّهُمَّ كَمَا حَسَّنْتَ خَلْقِي فَحَسِّنْ خُلُقِي*
(அல்ஹம்து லில்லாஹி அல்லாஹும்ம கமா ஹஸ்ஸன்த ஹல்கி ஃபஹஸ்ஸின் ஹுலுகி)

ஆச்சர்யமானதைக் கண்டால்
‎*مَا شَاءَ الله لا قُوَّةَ إِلَّا بِالله*
(மாஷா அல்லாஹு லா குவ்வத இல்லா பில்லாஹ்)

உதவி செய்தவருக்கு
‎*جَزَاكَ اللهُ خَيْرًا*
(ஜஜாகல்லாஹு கைரா)

கல்வி ஞானம் அதிகரிக்க
‎*رَبِّ زِدْنِي عِلْمًا*
(ரப்பி ஜித்னி இல்மா)

கொட்டாவி விடும் போது
‎*أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ*
(அஊது பில்லாஹி மினஸ்ஸய்தானிர்ரஜீம்)

உடலில் வலி ஏற்பட்டால்
‎*بِسْمِ الله(3)*
‎*أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرْ(7)*
(பிஸ்மில்லாஹி)
(அஊது பில்லாஹி வகுத்ரதிஹி மின் ஷர்ரி மா உஜாதிரு வஉஹாதிரு)

பிரச்சனைகள் தீர
‎*لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ*
(லாஇலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னி குன்து மினள்ளாலிமீன்.)

பெற்றோருக்காக
‎*رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا*
(ரப்பிஃபிர்ளி வலிவாலிதய்ய)
(ரப்பிர்ஹம்ஹுமா கமா ரப்பயானி ஸயீரா)

நோயாளி நோயிலிருந்து விடுபட
‎*لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ الله*
‎*أَسْأَلُ اللهَ الْعَظِيمْ رَبَّ الْعَرْشِ الْعَظِيمْ أَنْ يَشْفِيَكَ*
(லா பஃஸ தஹுருன் இன்ஷா அல்லாஹ்)
(அஸ்அலுல்லாஹுல் அளீம் ரப்பல் அர்ஷில் அளீம் அய்யஷ்ஃபியக்)

மழை பெய்யும் பொழுது
‎*اَللَّهُمَّ صَيِّبًا نَافِعًا*
(அல்லாஹும்ம ஸய்யிபன்னாஃபியா)

இடி இடிக்கும் பொழுது
‎*سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ وَالْمَلَائكَةُ مِنْ خِيفَتِهِ*
(சுப்ஹானல்லதீ யுஸப்பிஹுர்ரஃது வல்மலாயிகது மின் ஹீஃபதிஹி)

அன்றாட அமல்களின் கால அட்டவணை

ஆண்களுக்கு

காலை 4 மணிக்கு முன் கண்விழித்தல்

4.15 am - 4.45 am
தஹஜ்ஜுத் தொழுதல், அதிக நேரம் துஆ கேட்டல் (முழு உம்மத்திற்காகவும்)

👉🏻 *4.45 am - 5.30* குர்ஆன் ஓதுதல்

👉🏻 *5.30 am - 6.30 am*
சுபஹ் சுன்னத் தொழுகை, சுபஹ் தொழுகை,
தஃப்ஸீர் பயான்

 6.30 am - 7.15 am

காலை திக்ர்
🕋சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் - 100தடவை

🕋நபி (ஸல்) அவர்கள் மீது சலவாத்
(வசல்லல்லாஹு அலன்நபிய்யுல் உம்மிய்யீ) - 100
🕋இஸ்திஹ்பார்
(ரப்பிங்பிர்லீ வலிவாலி தெய்ய) - *100*
துஆ கேட்டல்

*6.20 am - 7.30 am*
இஷ்ராக் தொழுத பின் குர்ஆன் ஓதுதல்

*7.30 am - 11.45*
உங்களுடைய தேவைக்கான நேரம், ளுஹா தொழுகை

*11.55 am - 12.45 pm*
குர்ஆன் ஓதுதல், ளுஹர் முன் : பின்
சுன்னத் தொழுகை, ளுஹர் தொழுகை

 *12.45 pm - 3.10 pm*
உங்களுடைய தேவைகளுக்கான நேரம்

*3.20 pm - 4.05 pm*
குர்ஆன் ஓதுதல், அஸர் முன் சுன்னத் தொழுகை, அஸர் தொழுகை

 *4.10 pm - 4.40 pm*
மாலை திக்ர்
🕋சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் - *100* தடவை
🕋நபி (ஸல்) அவர்கள் மீது சலவாத்
(வசல்லல்லாஹு அலன்நபிய்யுல் உம்மிய்யீ) - *100*
🕋இஸ்திஹ்பார்
(ரப்பிங்பிர்லீ வலிவாலி தெய்ய) - *100*
துஆ கேட்டல்

*4.40 pm - 5.30 pm*
உங்களுடைய தேவைக்கான நேரம்
 *5.30 pm - 6.00 pm*
குர்ஆன் ஓதுதல்

*6.00 pm - மஃரிப் வரை
குடும்பத்தாரோடு உறையாடுதல்

*- 7.05 pm வரை*
மஃரிப் முன் : பின் சுன்னத் தொழுகை, மஃரிப் தொழுகை

 *7.10 pm - 7.40 pm*
உங்களுடைய தேவைக்கான நேரம்

*8.00 pm - 9.45 pm*
குர்ஆன் ஓதுதல், இஷா முன் : பின்
சுன்னத் தொழுகை, இஷா தொழுகை,  வித்ர் தொழுகை


🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌


             *பெண்களுக்கு*

காலை 4 மணிக்கு முன் கண்விழித்தல்

4.15 am - 4.45 am*
தஹஜ்ஜுத் தொழுதல், அதிக நேரம் துஆ கேட்டல் (முழு உம்மத்திற்காகவும்)

*4.45 am - 5.30 am*
 குர்ஆன் ஓதுதல்

 *5.30 am - 6.15 am*
சுபஹ் சுன்னத் தொழுகை, சுபஹ் தொழுகை, குர்ஆன் ஓதுதல்

 *6.15 am - 7.00 am*
காலை திக்ர்
🕋சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் - *100* தடவை
🕋நபி (ஸல்) அவர்கள் மீது சலவாத்
(வசல்லல்லாஹு அலன்நபிய்யுல் உம்மிய்யீ) - *100*
🕋இஸ்திஹ்பார்
(ரப்பிங்பிர்லீ வலிவாலி தெய்ய) - *100*
துஆ கேட்டல்

 *7.00 am - 7.30 am*
இஷ்ராக் தொழுத பின் குர்ஆன் ஓதுதல்

*7.30 am - 9.00 am* உங்களுடைய தேவைக்கான நேரம்

 *9.00 am - 9.45 am*
குடும்பத்தவர்களை சேர்த்து குர்ஆன் ஹதீஸை படிப்பது

 *10.00 am - 10.30 am*
ளுஹா தொழுதல், துஆ கேட்டல்

10.30 am - 11.40 am*
உங்களுடைய தேவைக்கான நேரம்

*11.45 am - 12.30 pm*
குர்ஆன் ஓதுதல், ளுஹர் முன் : பின் சுன்னத் தொழுகை, ளுஹர் தொழுகை

*12.30 pm - 3.15 pm*
உங்களுடைய தேவைக்கான நேரம்

*3.20 pm - 4.00 pm*
குர்ஆன் ஓதுதல், அஸர் முன் சுன்னத் தொழுகை, அஸர் தொழுகை

 *4.00 pm - 4.45 pm*
மாலை திக்ர்
🕋சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் - *100* தடவை
🕋நபி (ஸல்) அவர்கள் மீது சலவாத்
(வசல்லல்லாஹு அலன்நபிய்யுல் உம்மிய்யீ) - *100*
🕋இஸ்திஹ்பார்
(ரப்பிங்பிர்லீ வலிவாலி தெய்ய) - *100*
துஆ கேட்டல்

*4.45 pm - 5.45 pm*
உங்களுடைய தேவைக்கான நேரம்

 *5.50 pm - 6.40 pm*
கணவரோடு உறையாடுதல்

*6.40 pm - 7.00 pm*
மஃரிப் முன் : பின் சுன்னத் தொழுகை, மஃரிப் தொழுகை

*7.00 pm - 7.40 pm*
உங்களுடைய தேவைக்கான நேரம்

*8.00 pm - 9.45 pm*
குர்ஆன் ஓதுதல், இஷா முன் : பின்
சுன்னத் தொழுகை, இஷா தொழுகை, வித்ர் தொழுகை

 🕍🕍🕍 *குறிப்புகள்* 🕍🕍🕍

🕋 தேவையான விடயங்களை பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அப்படியென்றால் பொய், புறம் பேச இடமே இல்லை.

🕋 தேவையில்லாத விடயங்களை பார்ப்பதை விட்டு தவிர்த்து கொள்ளவும்.

தவ்பா நஃபில்

தவ்பா நஃபில்

அபூபக்கர்(ரழி) அறிவிக்கிறார்கள்:
தூதர்(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் “ஒரு மனிதன் ஒரு பாவத்தைச் செய்கிறான். பின் எழுந்து தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டு தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறான். அல்லாஹ்வும் அவனை மன்னிக்கிறான்”

(திர்மிதி: 2/258)

உளுவின் காணிக்கை

"என்னைப் போன்று உழூ செய்து,மனதளவில் கூட எந்தப் பேச்சும் பேசாமல் இரண்டு ரக்அத் உழூவின் காணிக்கையாகத் தொழுபவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக" நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

                         (புஹாரீ:159)

வீட்டில் இரண்டு ரக்அத் தொழுதல்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:நீங்கள் உங்கள் வீடுகளில் நுழைந்தால்,இரண்டு ரக்அத் தொழுதிடுங்கள்.இந்தத் தொழுகை, நுழைவதிலுள்ள தீங்கைத் தடுத்து நிறுத்தி விடும்.மேலும் வீட்டிலிருந்து வெளியே போகும் போதும் இரண்டு ரக்அத் தொழுதிடுங்கள்.இந்தத் தொழுகை வெளியிலுள்ள தீங்கைத் தடுத்து நிறுத்திவிடும்.
                (பைஹகீஃபீஷுஅபில்ஈமான்)