السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
🌾 🌾 صباح الخير 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் -12
========================
துல் ஹஜ் 9 ஆம் நாள்
ஹஜ்ஜின் 2 ஆம்
நாள். இன்று தான் ஹஜ். ‘ஹஜ் என்பது அரபாவாகும்” என்பது நபி மொழி!
இது வரை ஹாஜிகள்
செய்த செயல்கள் எல்லாம், ஹஜ்ஜுடன் இணைந்த செயல்கள்.
உண்மையில் ஹஜ் என்பது, துல் ஹஜ் 9 ஆம் நாள் காலையிலிருந்து சூரியன் மறையும் வரை அரபாத் மைதானத்தில் நின்று வணங்குவது தான்.
அந்தப் புனித நாள் இன்று தான். அரபாத்
மைதானம் என்பது, பல மைல் சுற்றளவு
கொண்ட பரந்து விரிந்த ஒரு
பாலைவனத் திடல். ஆனால் இப்போது இந்தப் பாலைவன மைதானம் முழுதும் மரங்கள் வளர்த்து சோலைவனமாக மாற்றப் பட்டுள்ளது.
மினா அளவுக்கு முழுக்க முழுக்க கூடாரங்கள்
அமைக்கப் படாவிட்டாலும், சில இடங்களில் மட்டும் கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
பெரும் பாலானவர்கள் மரங்களின்
நிழல்களில் தங்கி இறை வணக்கத்தில்
ஈடுபடுகின்றனர்.கடும் கோடைக் காலங்களில்
ஹாஜிகளுக்கு வெயிலின் வெப்பத்தைத் தணிப்பதற்காக அரபாத் மைதானம் முழுவதும் குழாய்களைப்
பொருத்தி, குளிர்ந்த தண்ணீரை நீராவி
மாதிரி சன்னமாகத் தெளிக்க ஏற்பாடு
செய்யப் பட்டுள்ளது. பரந்து விரிந்த
பாலைவனத் திடல் முழுவதையும்
இயற்கையாகவும் செயற்கையாகவும் குளிர
வைத்திருக்கிறார்கள். ஹாஜிகளின்
மனங்களையும் தான்.
புனித ஹஜ்ஜுக்காக, புண்ணிய பூமிக்கு
வந்தவர்கள், வந்த நோக்கத்தில்
கண்ணுங்கருத்துமாக இருக்கும்போது, கடும்
வெப்பம் கூட ஒரு பொருட்டாகத்
தெரியாது. என்றாலும் ஹாஜிகளின் உடல் நலனைப் பேண சகல ஏற்பாடுகளும்
சரியான முறையில் செய்யப் பட்டுள்ளன
என்றால் அது மிகையில்லை. உணவு
ஏற்பாடுகளும், மருத்துவ உதவிகளும்,
தாராளமான தண்ணீர் வசதியும், மினாவைப் போலவே அரபாத்திலும் அழகான
முறையில் மிகுந்த அக்கரையுடன் செய்யப்
பட்டுள்ளன.
எண்ணற்ற தனியார் நிறுவனங்கள், போட்டி
போட்டுக் கொண்டு தங்கள்
நிறுவனங்களின் உணவுப் பொருள்
தயாரிப்புகளை பெரும் பெரும் வாகனங்களில் கொண்டு வந்து
வைத்துக் கொண்டு ‘ஃபீ
ஸபீல்” (இறைவனின் பாதையில் இலவசம்)
என்று கூவிக் கூவி அழைத்து வாரி
வழங்குகின்றனர். பழங்கள், பழச்சாறுகள்,
ரொட்டிகள், குளிர் பானங்கள், உணவுப் பொட்டலங்கள், தண்ணீர்
பாட்டில்கள், இப்படி இலவச விநியோகப்
பொருட்களின் பட்டியல் நீள்கிறது.
தனி நபர்களும் அவரவர் தம்மால் இயன்றதைக்
கொண்டு வந்து வல்ல
இறைவனுக்காக அள்ளி வழங்குகின்றனர்.
சவூதி மன்னர் பஹத் அவர்கள் சார்பாக
ஒவ்வொரு நாளும் ஒரு கோடிக்கும்
அதிகமான குளிர்ந்த குடி நீர் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்
படுகிறது.
மன்னர் பஹத் திருக் குர்ஆன் வளாகத்தில்
அச்சிடப் பட்ட திருக் குர்ஆன் பிரதிகள், உலகின் பல்வேறு மொழிகளில் திருக் குர்ஆன் மொழி பெயர்ப்புகள், மற்றும்
ஒலி ஒளி நாடாக்கள், ஹஜ் மற்றும்
அறநிலையத் துறை சார்பாக, பல்வேறு
மொழிகளில் ஹஜ் உம்ரா வழிகாட்டி நூல்கள், ‘இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு மையம்” சார்பாக, இஸ்லாமிய கொள்கை விளக்க
சிற்றேடுகள், தமிழ், மலையாளம், போன்ற இந்திய மொழிகள் உட்பட பல்வேறு
மொழிகளில் மார்க்க விளக்க நூல்கள்,
இவை அனைத்துமே இலவசமாக வழங்கப்
படுகின்றன. இவற்றை ஹாஜிகள் அவரவர்
நாடுகளுக்குக் கொண்டு
செல்லும்போது, பல கோடி மக்கள் படித்துப்
பயன் பெறுகின்றனர்.
லுஹரையும் அஸரையும் சேர்த்து தொழுதல்
அரபாத் மைதானத்தில் அமைந்துள்ளது,
‘மஸ்ஜிதுன்னமிரா” என்னும் மாபெரும்
பள்ளிவாசல். ஆர்வத்துடன் அதிகாலையிலேயே
வந்தவர்கள், பக்குவமாகப் பள்ளியின்
உட்பகுதிக்குச் சென்று விட்டனர். பல
இலட்சம் பேர் பள்ளிக்கு வெளியே
அணிவகுத்து நின்று விட்டனர்.
இன்றைய தினம், லுஹரையும் அஸரையும்
ஒன்றாக சேர்த்து, லுஹருடைய நேரத்தில்
இரண்டிரண்டு ரக்அத்கள் மட்டும்
தொழவேண்டும். ஏனெனில் நபி صلى الله عليه وسلم அவர்கள் அப்படித் தான்
தொழுதார்கள்.
இப்னு சுபைர் رضي الله عنه உடன் தாம் போர்
தொடுத்த ஆண்டு ஹஜ்ஜுக்கு வந்த
ஹஜ்ஜாஜ், இப்னு உமர் رضي الله عنه இடம்,
‘அரபாவில் தங்கும் போது நீங்கள் எவ்வாறு
செயல்பட்டீர்கள்?” எனக் கேட்டார்.
அதற்கு ஸாலிம், நீர் நபி வழியைப் பின்பற்ற
நாடினால், அரபா நாளில் நடுப் பகலில்
தொழுவீராக! என்றார். அப்போது,
இப்னு உமர் رضي الله عنه ‘ஸாலிம் கூறியது உண்மை தான் (நபித் தோழர்கள் அரபாவில்) லுஹரையும்,
அஸரையும், நபி வழிப்படி சேர்த்தே
தொழுபவர்களாக இருந்தனர்”
என்றார்.நான் ‘நபி صلى الله عليه وسلم அவர்கள்
இவ்வாறு செய்துள்ளர்களா?” என
ஸாலிமிடம் கேட்டேன். அதற்கவர், இந்த விஷயத்தில் நபி صلى الله عليه وسلم வழியைத் தவிர வேறு யாருடைய
வழிகாட்டுதலை நீங்கள் பின் பற்றுவீர்கள்? எனக்
கேட்டார். அறிவிப்பவர்: இப்னு ஷிஹாப் رضي الله عنه
ஆதாரம்: புகாரி (1662)
மஸ்ஜிதுன் னமிராவிலும் அதன் வெளிப் பகுதியிலும் இடம் பிடித்துக்
கொண்டவர்கள், இமாமுடன் சேர்ந்து,
லுஹரையும், அஸரையும், ஒன்றாகச் சேர்த்து
இரண்டிரண்டு ரக்அத்களாக தொழுதுக்
கொள்கின்றனர்.
அரபாவின் பிற பகுதிகளில் தங்கியிருப்போர்,
அவரவர் தங்கியுள்ள இடங்களில் கூட்டம்
கூட்டமாகச் சேர்ந்து ஜமாஅத்துடன்
தொழுகைகளை நிறை வேற்றுகின்றனர்.
மஸ்ஜிதுன்னமிராவில் இமாம் குத்பா உரை
நிகழ்த்துகிறார். ஹஜ்ஜின் நிகழ்ச்சிகள்
அனைத்தையும் தொலைக் காட்சியில்
நேரடி ஒளிபரப்பு செய்யப் படுகின்றது.
உலகம் முழுவதும் பல கோடி மக்கள் நேரடி ஒளி பரப்பைக்
கண்டு களிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்ததாகக் கருதப்படும், இந்த உரையை உலகமே உன்னிப்பாகக் கவனிக்கின்றது. இந்தப்
பிரசங்கம் உடனுக்குடன் ஆங்கிலத்திலும்
மொழிபெயர்க்கப் படுகிறது.
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள்- அரபாத்
பெருவெளியில் நிகழ்த்திய இறுதிப் பேருரை
பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட
வேண்டிய
உரையாகும்.அதோ! தூரத்தில் தெரிகிறதே! அதுதான் ‘ஜபலுர் ரஹ்மத்” என்னும்
அருட்கொடை மலை. இம்
மலையடிவாரத்தில் தான், அண்ணல் நபி صلى الله عليه وسلم
அவர்கள், புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் போது
தங்கியிருந்தார்கள்.
அங்கு சென்று சிறிது நேரமேனும் நிற்க
ஆசைப்பட்டு ஹாஜிகள் கூட்டம் அலை மோதுகிறது.
ஆர்வத்தின் காரணமாக, சிலர் தட்டுத் தடுமாறி
மலையின் மீது ஏறுகின்றனர். மலை
முழுதும் மனிதத் தலைகள். தூரத்திலிருந்து
பார்க்கும் போது மனிதக் குவியல் போல் தெரிகிறது.
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள், இந்த மலையின்
அடிவாரத்தில் தான் தங்கியிருந்தார்கள்.
ஆர்வம் என்ற பெயரில் அறியாமையால்
மக்கள் மலையின் மீது ஏறுகின்றனர். இது
தவிர்க்கப்பட வேண்டிய செயலாகும்.
அந்திச் சூரியன் அஸ்தமிக்கும் வரை, இந்த அரபாத்
பெருவெளியில் நின்று
இறைவனை வணங்க வேண்டும். மாலைப்
பொழுது நெருங்க நெருங்க, தல்பியா
முழக்கம் எட்டுத் திக்கும்
எதிரொலிக்கிறது. தனித் தனியாக, சிறு
சிறு குழுக்களாக, எப்படியெல்லாம் இறை தியானத்தில்
ஈடுபட முடியுமோ
அப்படியெல்லாம் அமர்ந்து பிரார்த்தித்த
வண்ணம், இந்தப் பொன் மாலைப்
பொழுதில் ஹாஜிகள்
பெறற்கரியப் பேற்றைப் பெறுகின்றனர்.
இதயம் திறந்து இறைவனிடம்
மன்றாடுகின்றனர். இனியொரு
வாய்ப்பு எப்போது கிடைக்கும்? இதுவே இறுதி வாய்ப்பாகி
விடுமோ? இறைவன் ஒருவனைத் தவிர
வேறு எவருக்கும் தெரியாது.
அவரவர் மொழிகளில்
அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறார்கள். இரு கண்களும்
கண்ணீர் மல்க இரு கரங்களும் ஏந்தி
நின்று இறைஞ்சுகிறார்கள். இந்த அரபாத்
பெருவெளியில் அனைத்துப் பேர்களுடன்
கூடி நின்று இறைஞ்சும் பெரும் பேற்றைப்
பெற்றதை எண்ணி ஆனந்தக் கண்ணீர்
வடிக்கிறார்கள். இதயங்கள் அழுகின்றன.
கண்கள் கண்ணீரை வடிக்கின்றன. கல்
நெஞ்சங்கள் கூட இங்கே கரைந்து போகின்றன.
மஹ்ஷர் மைதானத்தில் நிராயுத
பாணிகளாக நிற்கப் போகும் நாளை நினைத்து
அழுகிறார்கள். வாய்களுக்கு முத்திரையிடப்பட்டு,
கரங்களைப் பேசவும், கால்களை சாட்சி
சொல்லவும் வைக்கப்படும் அந்த ஒரு நாளை நினைத்து அழுகிறார்கள்.
அறியாமையால் வாழ்க்கையில் செய்து
விட்ட தவறுகளை நினைத்து அழுகிறார்கள்.
மறுமையில் வலக்கரத்தில் பட்டோலை வழங்கப்பட
வேண்டுமே என்று வேண்டி அழுகிறார்கள்.
அறிந்தும் அறியாமலும் செய்து விட்ட பாவங்களை
நினைத்து அழுகிறார்கள். அழுதழுது
பாவமன்னிப்புக் கேட்கிறார்கள்.
அருகில் உள்ளவர் அழுகின்றார்.
அல்லாஹ்விடம் ஏதோ கேட்கின்றார்.
ஆப்கானிய மொழி நமக்குப்
புரியவில்லை. கதறி ஒருவர் அழுகின்றார். கருப்பு நிறத்து
ஹபஷி அவர். பக்கத்தில் ஒருவர்
பிரார்த்திக்கிறார். பாகிஸ்தானிய ஹாஜி
அவர். உருது மொழியில் கேட்கின்றார்.
அங்கே ஒருவர் அழுகின்றார். அரபி
மொழியில் இறைஞ்சுகிறார். இங்கே ஒருவர்
அழுகின்றார். இனிய தமிழில்
இறைஞ்சுகிறார்.
எல்லோரும் இறைஞ்சுகிறார்கள்.
எல்லோருக்காகவும் இறைஞ்சுகிறார்கள்.
தமக்காக இறைஞ்சுகிறார்கள். தம்
பெற்றோருக்காக இறைஞ்சுகிறார்கள். உடன்
பிறந்தவர்களுக்காக, உற்றார்,
உறவினர்களுக்காக, உலக மக்களுக்காக
இறைஞ்சுகிறார்கள். பரந்து விரிந்த இந்த
அரபாத் பெருவெளி முழுவதும்
ஏங்கிய நெஞ்சங்களும், ஏந்திய கரங்களும்,
அழுத கண்களும், பிரார்த்தித்த வாய்களும்தான்.
இத்தனை மனிதர்களின், இத்தனை மொழிப்
பிரார்த்தனைகளையும் ஒரே நேரத்தில், ஒரே ஒருவன்
கேட்கின்றான். பாவமன்னிப்புக் கேட்டவர்களின்
பாவங்களை மன்னிக்கிறான். அருட்
கொடைகளைக் கேட்டவர்களுக்கு அள்ளி
வழங்குகிறான். இப்புனித நன்னாளில்,
இப்புனித இடத்தில், இப்புனித நேரத்தில்
கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும்
என்பதில் எள்ளவும் நமக்குச் சந்தேகம் இல்லை.
ஹலாலான உணவுண்டு, ஹலாலான
உடையுடுத்தி, ஹலாலான முறையில் ஈட்டிய
பொருளில் செலவு செய்து
வந்தவர்களின் நேரிய பிரார்த்தனைகளும்,
நியாயமான கோரிக்கைகளும் அங்கீகரிக்கப்படும்
என்பதில் கடுகளவும் நமக்குச் சந்தேகம் இல்லை.
ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு
சுவர்க்கமே கூலி என்னும் அண்ணல் நபி صلى الله عليه
அவர்களின் அற்புத வாக்கில் நமக்கு
அணுவளவும் சந்தேகம் இல்லை.
இன்று முதல்- இந்த நேரம் முதல்
தூய்மையானவர்களாக பாவங்கள்
மன்னிக்கப் பட்டவர்களாக கோரிக்கைகள் ஏற்றுக்
கொள்ளப்பட்டவர்களாக குறைகள்
மறைக்கப் பட்டவர்களாக குற்றங்கள் நீக்கப்
பட்டவர்களாக இவர்களை இறைவன்
ஆக்கியருள்வானாக. ஆமீன்!
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்....
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங் குடி.
பதிவு நாள்: 16-08-2017.
🌾 🌾 صباح الخير 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் -12
========================
துல் ஹஜ் 9 ஆம் நாள்
ஹஜ்ஜின் 2 ஆம்
நாள். இன்று தான் ஹஜ். ‘ஹஜ் என்பது அரபாவாகும்” என்பது நபி மொழி!
இது வரை ஹாஜிகள்
செய்த செயல்கள் எல்லாம், ஹஜ்ஜுடன் இணைந்த செயல்கள்.
உண்மையில் ஹஜ் என்பது, துல் ஹஜ் 9 ஆம் நாள் காலையிலிருந்து சூரியன் மறையும் வரை அரபாத் மைதானத்தில் நின்று வணங்குவது தான்.
அந்தப் புனித நாள் இன்று தான். அரபாத்
மைதானம் என்பது, பல மைல் சுற்றளவு
கொண்ட பரந்து விரிந்த ஒரு
பாலைவனத் திடல். ஆனால் இப்போது இந்தப் பாலைவன மைதானம் முழுதும் மரங்கள் வளர்த்து சோலைவனமாக மாற்றப் பட்டுள்ளது.
மினா அளவுக்கு முழுக்க முழுக்க கூடாரங்கள்
அமைக்கப் படாவிட்டாலும், சில இடங்களில் மட்டும் கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
பெரும் பாலானவர்கள் மரங்களின்
நிழல்களில் தங்கி இறை வணக்கத்தில்
ஈடுபடுகின்றனர்.கடும் கோடைக் காலங்களில்
ஹாஜிகளுக்கு வெயிலின் வெப்பத்தைத் தணிப்பதற்காக அரபாத் மைதானம் முழுவதும் குழாய்களைப்
பொருத்தி, குளிர்ந்த தண்ணீரை நீராவி
மாதிரி சன்னமாகத் தெளிக்க ஏற்பாடு
செய்யப் பட்டுள்ளது. பரந்து விரிந்த
பாலைவனத் திடல் முழுவதையும்
இயற்கையாகவும் செயற்கையாகவும் குளிர
வைத்திருக்கிறார்கள். ஹாஜிகளின்
மனங்களையும் தான்.
புனித ஹஜ்ஜுக்காக, புண்ணிய பூமிக்கு
வந்தவர்கள், வந்த நோக்கத்தில்
கண்ணுங்கருத்துமாக இருக்கும்போது, கடும்
வெப்பம் கூட ஒரு பொருட்டாகத்
தெரியாது. என்றாலும் ஹாஜிகளின் உடல் நலனைப் பேண சகல ஏற்பாடுகளும்
சரியான முறையில் செய்யப் பட்டுள்ளன
என்றால் அது மிகையில்லை. உணவு
ஏற்பாடுகளும், மருத்துவ உதவிகளும்,
தாராளமான தண்ணீர் வசதியும், மினாவைப் போலவே அரபாத்திலும் அழகான
முறையில் மிகுந்த அக்கரையுடன் செய்யப்
பட்டுள்ளன.
எண்ணற்ற தனியார் நிறுவனங்கள், போட்டி
போட்டுக் கொண்டு தங்கள்
நிறுவனங்களின் உணவுப் பொருள்
தயாரிப்புகளை பெரும் பெரும் வாகனங்களில் கொண்டு வந்து
வைத்துக் கொண்டு ‘ஃபீ
ஸபீல்” (இறைவனின் பாதையில் இலவசம்)
என்று கூவிக் கூவி அழைத்து வாரி
வழங்குகின்றனர். பழங்கள், பழச்சாறுகள்,
ரொட்டிகள், குளிர் பானங்கள், உணவுப் பொட்டலங்கள், தண்ணீர்
பாட்டில்கள், இப்படி இலவச விநியோகப்
பொருட்களின் பட்டியல் நீள்கிறது.
தனி நபர்களும் அவரவர் தம்மால் இயன்றதைக்
கொண்டு வந்து வல்ல
இறைவனுக்காக அள்ளி வழங்குகின்றனர்.
சவூதி மன்னர் பஹத் அவர்கள் சார்பாக
ஒவ்வொரு நாளும் ஒரு கோடிக்கும்
அதிகமான குளிர்ந்த குடி நீர் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்
படுகிறது.
மன்னர் பஹத் திருக் குர்ஆன் வளாகத்தில்
அச்சிடப் பட்ட திருக் குர்ஆன் பிரதிகள், உலகின் பல்வேறு மொழிகளில் திருக் குர்ஆன் மொழி பெயர்ப்புகள், மற்றும்
ஒலி ஒளி நாடாக்கள், ஹஜ் மற்றும்
அறநிலையத் துறை சார்பாக, பல்வேறு
மொழிகளில் ஹஜ் உம்ரா வழிகாட்டி நூல்கள், ‘இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு மையம்” சார்பாக, இஸ்லாமிய கொள்கை விளக்க
சிற்றேடுகள், தமிழ், மலையாளம், போன்ற இந்திய மொழிகள் உட்பட பல்வேறு
மொழிகளில் மார்க்க விளக்க நூல்கள்,
இவை அனைத்துமே இலவசமாக வழங்கப்
படுகின்றன. இவற்றை ஹாஜிகள் அவரவர்
நாடுகளுக்குக் கொண்டு
செல்லும்போது, பல கோடி மக்கள் படித்துப்
பயன் பெறுகின்றனர்.
லுஹரையும் அஸரையும் சேர்த்து தொழுதல்
அரபாத் மைதானத்தில் அமைந்துள்ளது,
‘மஸ்ஜிதுன்னமிரா” என்னும் மாபெரும்
பள்ளிவாசல். ஆர்வத்துடன் அதிகாலையிலேயே
வந்தவர்கள், பக்குவமாகப் பள்ளியின்
உட்பகுதிக்குச் சென்று விட்டனர். பல
இலட்சம் பேர் பள்ளிக்கு வெளியே
அணிவகுத்து நின்று விட்டனர்.
இன்றைய தினம், லுஹரையும் அஸரையும்
ஒன்றாக சேர்த்து, லுஹருடைய நேரத்தில்
இரண்டிரண்டு ரக்அத்கள் மட்டும்
தொழவேண்டும். ஏனெனில் நபி صلى الله عليه وسلم அவர்கள் அப்படித் தான்
தொழுதார்கள்.
இப்னு சுபைர் رضي الله عنه உடன் தாம் போர்
தொடுத்த ஆண்டு ஹஜ்ஜுக்கு வந்த
ஹஜ்ஜாஜ், இப்னு உமர் رضي الله عنه இடம்,
‘அரபாவில் தங்கும் போது நீங்கள் எவ்வாறு
செயல்பட்டீர்கள்?” எனக் கேட்டார்.
அதற்கு ஸாலிம், நீர் நபி வழியைப் பின்பற்ற
நாடினால், அரபா நாளில் நடுப் பகலில்
தொழுவீராக! என்றார். அப்போது,
இப்னு உமர் رضي الله عنه ‘ஸாலிம் கூறியது உண்மை தான் (நபித் தோழர்கள் அரபாவில்) லுஹரையும்,
அஸரையும், நபி வழிப்படி சேர்த்தே
தொழுபவர்களாக இருந்தனர்”
என்றார்.நான் ‘நபி صلى الله عليه وسلم அவர்கள்
இவ்வாறு செய்துள்ளர்களா?” என
ஸாலிமிடம் கேட்டேன். அதற்கவர், இந்த விஷயத்தில் நபி صلى الله عليه وسلم வழியைத் தவிர வேறு யாருடைய
வழிகாட்டுதலை நீங்கள் பின் பற்றுவீர்கள்? எனக்
கேட்டார். அறிவிப்பவர்: இப்னு ஷிஹாப் رضي الله عنه
ஆதாரம்: புகாரி (1662)
மஸ்ஜிதுன் னமிராவிலும் அதன் வெளிப் பகுதியிலும் இடம் பிடித்துக்
கொண்டவர்கள், இமாமுடன் சேர்ந்து,
லுஹரையும், அஸரையும், ஒன்றாகச் சேர்த்து
இரண்டிரண்டு ரக்அத்களாக தொழுதுக்
கொள்கின்றனர்.
அரபாவின் பிற பகுதிகளில் தங்கியிருப்போர்,
அவரவர் தங்கியுள்ள இடங்களில் கூட்டம்
கூட்டமாகச் சேர்ந்து ஜமாஅத்துடன்
தொழுகைகளை நிறை வேற்றுகின்றனர்.
மஸ்ஜிதுன்னமிராவில் இமாம் குத்பா உரை
நிகழ்த்துகிறார். ஹஜ்ஜின் நிகழ்ச்சிகள்
அனைத்தையும் தொலைக் காட்சியில்
நேரடி ஒளிபரப்பு செய்யப் படுகின்றது.
உலகம் முழுவதும் பல கோடி மக்கள் நேரடி ஒளி பரப்பைக்
கண்டு களிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்ததாகக் கருதப்படும், இந்த உரையை உலகமே உன்னிப்பாகக் கவனிக்கின்றது. இந்தப்
பிரசங்கம் உடனுக்குடன் ஆங்கிலத்திலும்
மொழிபெயர்க்கப் படுகிறது.
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள்- அரபாத்
பெருவெளியில் நிகழ்த்திய இறுதிப் பேருரை
பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட
வேண்டிய
உரையாகும்.அதோ! தூரத்தில் தெரிகிறதே! அதுதான் ‘ஜபலுர் ரஹ்மத்” என்னும்
அருட்கொடை மலை. இம்
மலையடிவாரத்தில் தான், அண்ணல் நபி صلى الله عليه وسلم
அவர்கள், புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் போது
தங்கியிருந்தார்கள்.
அங்கு சென்று சிறிது நேரமேனும் நிற்க
ஆசைப்பட்டு ஹாஜிகள் கூட்டம் அலை மோதுகிறது.
ஆர்வத்தின் காரணமாக, சிலர் தட்டுத் தடுமாறி
மலையின் மீது ஏறுகின்றனர். மலை
முழுதும் மனிதத் தலைகள். தூரத்திலிருந்து
பார்க்கும் போது மனிதக் குவியல் போல் தெரிகிறது.
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள், இந்த மலையின்
அடிவாரத்தில் தான் தங்கியிருந்தார்கள்.
ஆர்வம் என்ற பெயரில் அறியாமையால்
மக்கள் மலையின் மீது ஏறுகின்றனர். இது
தவிர்க்கப்பட வேண்டிய செயலாகும்.
அந்திச் சூரியன் அஸ்தமிக்கும் வரை, இந்த அரபாத்
பெருவெளியில் நின்று
இறைவனை வணங்க வேண்டும். மாலைப்
பொழுது நெருங்க நெருங்க, தல்பியா
முழக்கம் எட்டுத் திக்கும்
எதிரொலிக்கிறது. தனித் தனியாக, சிறு
சிறு குழுக்களாக, எப்படியெல்லாம் இறை தியானத்தில்
ஈடுபட முடியுமோ
அப்படியெல்லாம் அமர்ந்து பிரார்த்தித்த
வண்ணம், இந்தப் பொன் மாலைப்
பொழுதில் ஹாஜிகள்
பெறற்கரியப் பேற்றைப் பெறுகின்றனர்.
இதயம் திறந்து இறைவனிடம்
மன்றாடுகின்றனர். இனியொரு
வாய்ப்பு எப்போது கிடைக்கும்? இதுவே இறுதி வாய்ப்பாகி
விடுமோ? இறைவன் ஒருவனைத் தவிர
வேறு எவருக்கும் தெரியாது.
அவரவர் மொழிகளில்
அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறார்கள். இரு கண்களும்
கண்ணீர் மல்க இரு கரங்களும் ஏந்தி
நின்று இறைஞ்சுகிறார்கள். இந்த அரபாத்
பெருவெளியில் அனைத்துப் பேர்களுடன்
கூடி நின்று இறைஞ்சும் பெரும் பேற்றைப்
பெற்றதை எண்ணி ஆனந்தக் கண்ணீர்
வடிக்கிறார்கள். இதயங்கள் அழுகின்றன.
கண்கள் கண்ணீரை வடிக்கின்றன. கல்
நெஞ்சங்கள் கூட இங்கே கரைந்து போகின்றன.
மஹ்ஷர் மைதானத்தில் நிராயுத
பாணிகளாக நிற்கப் போகும் நாளை நினைத்து
அழுகிறார்கள். வாய்களுக்கு முத்திரையிடப்பட்டு,
கரங்களைப் பேசவும், கால்களை சாட்சி
சொல்லவும் வைக்கப்படும் அந்த ஒரு நாளை நினைத்து அழுகிறார்கள்.
அறியாமையால் வாழ்க்கையில் செய்து
விட்ட தவறுகளை நினைத்து அழுகிறார்கள்.
மறுமையில் வலக்கரத்தில் பட்டோலை வழங்கப்பட
வேண்டுமே என்று வேண்டி அழுகிறார்கள்.
அறிந்தும் அறியாமலும் செய்து விட்ட பாவங்களை
நினைத்து அழுகிறார்கள். அழுதழுது
பாவமன்னிப்புக் கேட்கிறார்கள்.
அருகில் உள்ளவர் அழுகின்றார்.
அல்லாஹ்விடம் ஏதோ கேட்கின்றார்.
ஆப்கானிய மொழி நமக்குப்
புரியவில்லை. கதறி ஒருவர் அழுகின்றார். கருப்பு நிறத்து
ஹபஷி அவர். பக்கத்தில் ஒருவர்
பிரார்த்திக்கிறார். பாகிஸ்தானிய ஹாஜி
அவர். உருது மொழியில் கேட்கின்றார்.
அங்கே ஒருவர் அழுகின்றார். அரபி
மொழியில் இறைஞ்சுகிறார். இங்கே ஒருவர்
அழுகின்றார். இனிய தமிழில்
இறைஞ்சுகிறார்.
எல்லோரும் இறைஞ்சுகிறார்கள்.
எல்லோருக்காகவும் இறைஞ்சுகிறார்கள்.
தமக்காக இறைஞ்சுகிறார்கள். தம்
பெற்றோருக்காக இறைஞ்சுகிறார்கள். உடன்
பிறந்தவர்களுக்காக, உற்றார்,
உறவினர்களுக்காக, உலக மக்களுக்காக
இறைஞ்சுகிறார்கள். பரந்து விரிந்த இந்த
அரபாத் பெருவெளி முழுவதும்
ஏங்கிய நெஞ்சங்களும், ஏந்திய கரங்களும்,
அழுத கண்களும், பிரார்த்தித்த வாய்களும்தான்.
இத்தனை மனிதர்களின், இத்தனை மொழிப்
பிரார்த்தனைகளையும் ஒரே நேரத்தில், ஒரே ஒருவன்
கேட்கின்றான். பாவமன்னிப்புக் கேட்டவர்களின்
பாவங்களை மன்னிக்கிறான். அருட்
கொடைகளைக் கேட்டவர்களுக்கு அள்ளி
வழங்குகிறான். இப்புனித நன்னாளில்,
இப்புனித இடத்தில், இப்புனித நேரத்தில்
கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும்
என்பதில் எள்ளவும் நமக்குச் சந்தேகம் இல்லை.
ஹலாலான உணவுண்டு, ஹலாலான
உடையுடுத்தி, ஹலாலான முறையில் ஈட்டிய
பொருளில் செலவு செய்து
வந்தவர்களின் நேரிய பிரார்த்தனைகளும்,
நியாயமான கோரிக்கைகளும் அங்கீகரிக்கப்படும்
என்பதில் கடுகளவும் நமக்குச் சந்தேகம் இல்லை.
ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு
சுவர்க்கமே கூலி என்னும் அண்ணல் நபி صلى الله عليه
அவர்களின் அற்புத வாக்கில் நமக்கு
அணுவளவும் சந்தேகம் இல்லை.
இன்று முதல்- இந்த நேரம் முதல்
தூய்மையானவர்களாக பாவங்கள்
மன்னிக்கப் பட்டவர்களாக கோரிக்கைகள் ஏற்றுக்
கொள்ளப்பட்டவர்களாக குறைகள்
மறைக்கப் பட்டவர்களாக குற்றங்கள் நீக்கப்
பட்டவர்களாக இவர்களை இறைவன்
ஆக்கியருள்வானாக. ஆமீன்!
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்....
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங் குடி.
பதிவு நாள்: 16-08-2017.
No comments:
Post a Comment