السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
🌾 🌾 صباح الخير 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 13.
========================
துல் ஹஜ் 9 ஆம் நாள்- அரபா நாளாகிய இன்றைய தினம்,
சூரியன் உச்சியை விட்டு
சாய்ந்ததிலிருந்து மறையும் வரை எவர் சிறிது நேரமேனும்,
இந்த அரபாத் பெருவெளியில் நிற்க
வில்லையோ அவருக்கு ஹஜ்
இல்லை.
ஹஜ்ஜின் மிக மிக முக்கியமான செயலே இந்த நேரத்தில் இந்தத்
திடலில் நின்று பிரார்த்திப்பதுதான். ஏனெனில், ‘ஹஜ் என்பது அரபாவாகும்” என்பது நபி மொழி.
திரு மறைக் குர்ஆனின் சட்டங்கள் பற்றிய இறுதி வசனம் இன்றைய தினத்தில் இந்த அரபாத்
பெருவெளியில் தான்
அருளப்பட்டது....
…..இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக
நிறைவு செய்து விட்டேன். எனது
அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன். இஸ்லாத்தை
உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக்
கொண்டேன். பாவம் செய்யும்
நாட்டமில்லாமல் வறுமையின்
காரணமாக நிர்ப்பந்தத்துக்கு
உள்ளானோரை அல்லாஹ்
மன்னிப்பவன். நிகரற்ற
அன்புடையோன். (திருக் குர்ஆன் 5:3)
அரஃபாத்தை விட்டுப் புறப்படுதல்!
மஃரிபுடைய நேரம் நெருங்கிக்
கொண்டிருக்கிறது. அரேபியப் பாலையில், அரபாத் பெருவெளியில் ஆதவன் தனது
அரும் பணியை நிறைவு செய்து விட்டு அந்திவானத்தில் மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது.
விலை மதிக்கவொன்னா பொன் மாலைப் பொழுது முடியப்
போகிறது. வாழ்வில்
கிடைத்தற்கரிய இச்சந்தர்ப்பத்தின்
இறுதி நேரம் வரை ஹாஜிகள்
பிரார்த்தனையில் ஈடு
படுகின்றனர்.
சிலர் அவசரப்பட்டு, அரபாவை விட்டுப் புறப்படத் தயாராகின்றனர்.
சூரியன் நன்றாக மறைந்த பிறகுதான் அரபாவை விட்டுப் புறப்பட வேண்டும். மஃரிபுடைய நேரம்
முடியும் வரை இருந்து விட்டு, மஃரிபைத் தொழாமல் இங்கிருந்து
புறப்பட வேண்டும்.
முஸ்தலிபாவுக்குச் சென்று மஃரிபையும் இஷாவையும்
இஷாவுடைய நேரத்தில்
முஸ்தலிபாவில் தொழவேண்டும்.
இது தான் நபி வழி.
இறுதி ஹஜ்ஜின் போது நபி صلى الله عليه وسلم
அவர்கள் முஸ்தலிபாவில்
மஃரிபையும் இஷாவையும்
இணைத்துத் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்
அன்ஸாரி رضي الله عنه ஆதாரம்: புகாரி (1674)
இப்னு உமர் رضي الله عنه முஸ்தலிபாவில்
(மஃரிப், இஷா ஆகிய) இரு தொழுகைகளை ஒரு இகாமத் கூறி சேர்த்துத் தொழுதார்கள். நபி صلى الله عليه وسلم அவர்கள் இந்த இடத்தில்
இவ்வாறு செய்ததை நான்
பார்த்திருக்கிறேன் எனவும் அவர்
கூறினார். அறிவிப்பவர்:
அப்துல்லாஹ் இப்னு மாலிக் رضي الله عنه
ஆதாரம்: திர்மிதி (813)
இதோ மாலைக் கதிரவன் மறைந்து
விட்டான். புனித ஹாஜிகளும்
அரபாவை விட்டு விடை பெறுகின்றனர். அழுதழுது கேட்ட
பாவமன்னிப்பை அடையப்
பெற்றவர்களாக அல்லாஹ்வின்
பேரருள் கிடைக்கப் பெற்றவர்களாக
அல்லாஹ்வின் நேசர்கள் அனைவரும்
புறப்படுகின்றனர் முஸ்தலிபாவை
நோக்கி!
புனித ஹாஜிகளாக புண்ணிய
சீலர்களாக புறப்படுகின்றனர்
முஸ்தலிபாவை நோக்கி! கூட்டம்
கூட்டமாக மக்கள்- குதூகலத்துடன்
முஸ்தலிபாவை நோக்கி!
வரிசை வரிசையாக வாகனங்கள்
அனைத்துமே முஸ்தலிபாவை
நோக்கி!திக்கெட்டும் கேட்கிறது
தல்பிய்யா முழக்கம்!
மஷ்அருல் ஹராம்!
மஷ்அருல் ஹராம் என்பது
முஸ்தலிபாவில் இருக்கும் ஒரு
மலைக் குன்றின் பெயராகும்.
புனித ஹாஜிகள் முஸ்தலிபா
வரும்போது இந்த இடத்தில் நின்று
இறைவனை நினைவு
கூறுகிறார்கள். ஏனெனில் இது
இறைவனின் கட்டளையாகும்
…..அரபாத் பெரு வெளியிலிருந்து
நீங்கள் திரும்பும் போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை
நினையுங்கள். அவன் உங்களுக்குக்
காட்டித் தந்தவாறு அவனை
நினையுங்கள்! இதற்கு முன் நீங்கள் வழி தவறி இருந்தீர்கள். (திருக்குர்ஆன் 2:198)
மஷ்அருல் ஹராம் என்னும் மகிமை
மிக்க இடத்தில் இறைக் கட்டளைப்படி
இறைவனை நினைவு கூர்ந்த ஹாஜிகள், முஸ்தலிபாவுக்கு
வந்து இரவுப் பொழுதை இங்கேயே கழிக்கிறார்கள். இரவின்
பிற்பகுதியில், எங்கு நோக்கினும்
பாங்கு சப்தம். இது தஹஜ்ஜுத்
என்னும் நடுநிசித்
தொழுகைக்கான பாங்கு.
தனித்தனியாகவும், கூட்டமாகவும்
நடுநிசித் தொழுகையை
நிறைவேற்றுகின்றனர்.
பொழுது புலரப் போகின்றது.
அதற்கு முன் மறுபடியும்
பாங்கோசை. ஆம் இது வழக்கம் போல்
பஜ்ர் என்னும் அதிகாலைத்
தொழுகைக்கான பாங்கு சப்தம்.
களைப்புத் தீர சற்று நேரம் உறங்கி
ஓய்வெடுத்தவர்கள் ஆர்வத்துடன்
எழுகின்றனர். பஜ்ருத்
தொழுகையை நிறைவேற்றத்
தயாராகின்றனர்.
இங்கே முஸ்தலிபாவிலும், தண்ணீர் வசதி, கழிவறை வசதிகள்
அனைத்தும் சிறப்பாகச் செய்யப்
பட்டுள்ளன. பஜ்ருத் தொழுகையை
முடித்து விட்டு இனி
அடுத்தடுத்தக் கடடைகளை
நிறைவேற்ற அவசர அவசரமாகப்
புறப்படுகின்றனர்.
முஸ்தலிபாவில், பஜ்ருத் தொழுகையை அதன் முன்
நேரத்திலேயே தொழுது விட
வேண்டும். இது
தான் நபி வழியாகும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் எந்தத்
தொழுகையையும் (அதற்குரிய நேரத்தில் தொழாமல்) வேறு
நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை. இரண்டு
தொழுகைகளைத் தவிர. ஒன்று
(முஸ்தலிபாவில்) மஃரிபையும்,
இஷாவையும் சேர்த்துத்
தொழுதது. இன்னொன்று பஜ்ரை
அதற்கான (வழக்கமான) நேரத்திற்கு முன் (முஸ்தலிபாவிலேயே) தொழுதது. அறிவிப்பவர்:
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் رضي الله عنه
ஆதாரம்: புகாரி (1682)
பஜ்ருத் தொழுகையை சீக்கிரமே முடித்து விட்டு சூரியன்
உதிப்பதற்கு முன்பே
முஸ்தலிபாவை விட்டு புறப்பட
வேண்டும் என்பதால் ஹாஜிகள் அவசர அவசரமாகப் புறப்படுகின்றனர்
மினாவை நோக்கி!
நபி صلى الله عليه وسلم அவர்கள் சூரியன்
உதிப்பதற்கு முன்பே
முஸ்தலிபாவிலிருந்து
புறப்பட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் رضي الله عنه ஆதாரம்: திர்மிதி (819)
பெண்கள், குழந்தைகள், இயலாத முதியோர்கள், சற்று முன் கூட்டியே புறப்பட்டுச் செல்வது
தவறில்லை. அப்படியே முன்
கூட்டியே மினா
சென்றடைந்தவர்கள்- சூரியன் உதிக்கும் வரை கல்லெறியக்
கூடாது.
நபி (ஸல்) அவர்கள், தமது
குடும்பத்தினரில் பலவீனர்களை
முன் கூட்டியே அனுப்பி
வைத்தார்கள். ‘சூரியன் உதிக்கும்
வரை நீங்கள் கல்லெறிய வேண்டாம்”
எனவும் கூறியனுப்பினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
ஆதாரம்: திர்மிதி (817)
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்.....
தொகுப்பு....
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங் குடி.
பதிவு நாள்: 17-08-2017.
🌾 🌾 صباح الخير 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 13.
========================
துல் ஹஜ் 9 ஆம் நாள்- அரபா நாளாகிய இன்றைய தினம்,
சூரியன் உச்சியை விட்டு
சாய்ந்ததிலிருந்து மறையும் வரை எவர் சிறிது நேரமேனும்,
இந்த அரபாத் பெருவெளியில் நிற்க
வில்லையோ அவருக்கு ஹஜ்
இல்லை.
ஹஜ்ஜின் மிக மிக முக்கியமான செயலே இந்த நேரத்தில் இந்தத்
திடலில் நின்று பிரார்த்திப்பதுதான். ஏனெனில், ‘ஹஜ் என்பது அரபாவாகும்” என்பது நபி மொழி.
திரு மறைக் குர்ஆனின் சட்டங்கள் பற்றிய இறுதி வசனம் இன்றைய தினத்தில் இந்த அரபாத்
பெருவெளியில் தான்
அருளப்பட்டது....
…..இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக
நிறைவு செய்து விட்டேன். எனது
அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன். இஸ்லாத்தை
உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக்
கொண்டேன். பாவம் செய்யும்
நாட்டமில்லாமல் வறுமையின்
காரணமாக நிர்ப்பந்தத்துக்கு
உள்ளானோரை அல்லாஹ்
மன்னிப்பவன். நிகரற்ற
அன்புடையோன். (திருக் குர்ஆன் 5:3)
அரஃபாத்தை விட்டுப் புறப்படுதல்!
மஃரிபுடைய நேரம் நெருங்கிக்
கொண்டிருக்கிறது. அரேபியப் பாலையில், அரபாத் பெருவெளியில் ஆதவன் தனது
அரும் பணியை நிறைவு செய்து விட்டு அந்திவானத்தில் மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது.
விலை மதிக்கவொன்னா பொன் மாலைப் பொழுது முடியப்
போகிறது. வாழ்வில்
கிடைத்தற்கரிய இச்சந்தர்ப்பத்தின்
இறுதி நேரம் வரை ஹாஜிகள்
பிரார்த்தனையில் ஈடு
படுகின்றனர்.
சிலர் அவசரப்பட்டு, அரபாவை விட்டுப் புறப்படத் தயாராகின்றனர்.
சூரியன் நன்றாக மறைந்த பிறகுதான் அரபாவை விட்டுப் புறப்பட வேண்டும். மஃரிபுடைய நேரம்
முடியும் வரை இருந்து விட்டு, மஃரிபைத் தொழாமல் இங்கிருந்து
புறப்பட வேண்டும்.
முஸ்தலிபாவுக்குச் சென்று மஃரிபையும் இஷாவையும்
இஷாவுடைய நேரத்தில்
முஸ்தலிபாவில் தொழவேண்டும்.
இது தான் நபி வழி.
இறுதி ஹஜ்ஜின் போது நபி صلى الله عليه وسلم
அவர்கள் முஸ்தலிபாவில்
மஃரிபையும் இஷாவையும்
இணைத்துத் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்
அன்ஸாரி رضي الله عنه ஆதாரம்: புகாரி (1674)
இப்னு உமர் رضي الله عنه முஸ்தலிபாவில்
(மஃரிப், இஷா ஆகிய) இரு தொழுகைகளை ஒரு இகாமத் கூறி சேர்த்துத் தொழுதார்கள். நபி صلى الله عليه وسلم அவர்கள் இந்த இடத்தில்
இவ்வாறு செய்ததை நான்
பார்த்திருக்கிறேன் எனவும் அவர்
கூறினார். அறிவிப்பவர்:
அப்துல்லாஹ் இப்னு மாலிக் رضي الله عنه
ஆதாரம்: திர்மிதி (813)
இதோ மாலைக் கதிரவன் மறைந்து
விட்டான். புனித ஹாஜிகளும்
அரபாவை விட்டு விடை பெறுகின்றனர். அழுதழுது கேட்ட
பாவமன்னிப்பை அடையப்
பெற்றவர்களாக அல்லாஹ்வின்
பேரருள் கிடைக்கப் பெற்றவர்களாக
அல்லாஹ்வின் நேசர்கள் அனைவரும்
புறப்படுகின்றனர் முஸ்தலிபாவை
நோக்கி!
புனித ஹாஜிகளாக புண்ணிய
சீலர்களாக புறப்படுகின்றனர்
முஸ்தலிபாவை நோக்கி! கூட்டம்
கூட்டமாக மக்கள்- குதூகலத்துடன்
முஸ்தலிபாவை நோக்கி!
வரிசை வரிசையாக வாகனங்கள்
அனைத்துமே முஸ்தலிபாவை
நோக்கி!திக்கெட்டும் கேட்கிறது
தல்பிய்யா முழக்கம்!
மஷ்அருல் ஹராம்!
மஷ்அருல் ஹராம் என்பது
முஸ்தலிபாவில் இருக்கும் ஒரு
மலைக் குன்றின் பெயராகும்.
புனித ஹாஜிகள் முஸ்தலிபா
வரும்போது இந்த இடத்தில் நின்று
இறைவனை நினைவு
கூறுகிறார்கள். ஏனெனில் இது
இறைவனின் கட்டளையாகும்
…..அரபாத் பெரு வெளியிலிருந்து
நீங்கள் திரும்பும் போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை
நினையுங்கள். அவன் உங்களுக்குக்
காட்டித் தந்தவாறு அவனை
நினையுங்கள்! இதற்கு முன் நீங்கள் வழி தவறி இருந்தீர்கள். (திருக்குர்ஆன் 2:198)
மஷ்அருல் ஹராம் என்னும் மகிமை
மிக்க இடத்தில் இறைக் கட்டளைப்படி
இறைவனை நினைவு கூர்ந்த ஹாஜிகள், முஸ்தலிபாவுக்கு
வந்து இரவுப் பொழுதை இங்கேயே கழிக்கிறார்கள். இரவின்
பிற்பகுதியில், எங்கு நோக்கினும்
பாங்கு சப்தம். இது தஹஜ்ஜுத்
என்னும் நடுநிசித்
தொழுகைக்கான பாங்கு.
தனித்தனியாகவும், கூட்டமாகவும்
நடுநிசித் தொழுகையை
நிறைவேற்றுகின்றனர்.
பொழுது புலரப் போகின்றது.
அதற்கு முன் மறுபடியும்
பாங்கோசை. ஆம் இது வழக்கம் போல்
பஜ்ர் என்னும் அதிகாலைத்
தொழுகைக்கான பாங்கு சப்தம்.
களைப்புத் தீர சற்று நேரம் உறங்கி
ஓய்வெடுத்தவர்கள் ஆர்வத்துடன்
எழுகின்றனர். பஜ்ருத்
தொழுகையை நிறைவேற்றத்
தயாராகின்றனர்.
இங்கே முஸ்தலிபாவிலும், தண்ணீர் வசதி, கழிவறை வசதிகள்
அனைத்தும் சிறப்பாகச் செய்யப்
பட்டுள்ளன. பஜ்ருத் தொழுகையை
முடித்து விட்டு இனி
அடுத்தடுத்தக் கடடைகளை
நிறைவேற்ற அவசர அவசரமாகப்
புறப்படுகின்றனர்.
முஸ்தலிபாவில், பஜ்ருத் தொழுகையை அதன் முன்
நேரத்திலேயே தொழுது விட
வேண்டும். இது
தான் நபி வழியாகும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் எந்தத்
தொழுகையையும் (அதற்குரிய நேரத்தில் தொழாமல்) வேறு
நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை. இரண்டு
தொழுகைகளைத் தவிர. ஒன்று
(முஸ்தலிபாவில்) மஃரிபையும்,
இஷாவையும் சேர்த்துத்
தொழுதது. இன்னொன்று பஜ்ரை
அதற்கான (வழக்கமான) நேரத்திற்கு முன் (முஸ்தலிபாவிலேயே) தொழுதது. அறிவிப்பவர்:
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் رضي الله عنه
ஆதாரம்: புகாரி (1682)
பஜ்ருத் தொழுகையை சீக்கிரமே முடித்து விட்டு சூரியன்
உதிப்பதற்கு முன்பே
முஸ்தலிபாவை விட்டு புறப்பட
வேண்டும் என்பதால் ஹாஜிகள் அவசர அவசரமாகப் புறப்படுகின்றனர்
மினாவை நோக்கி!
நபி صلى الله عليه وسلم அவர்கள் சூரியன்
உதிப்பதற்கு முன்பே
முஸ்தலிபாவிலிருந்து
புறப்பட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் رضي الله عنه ஆதாரம்: திர்மிதி (819)
பெண்கள், குழந்தைகள், இயலாத முதியோர்கள், சற்று முன் கூட்டியே புறப்பட்டுச் செல்வது
தவறில்லை. அப்படியே முன்
கூட்டியே மினா
சென்றடைந்தவர்கள்- சூரியன் உதிக்கும் வரை கல்லெறியக்
கூடாது.
நபி (ஸல்) அவர்கள், தமது
குடும்பத்தினரில் பலவீனர்களை
முன் கூட்டியே அனுப்பி
வைத்தார்கள். ‘சூரியன் உதிக்கும்
வரை நீங்கள் கல்லெறிய வேண்டாம்”
எனவும் கூறியனுப்பினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
ஆதாரம்: திர்மிதி (817)
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்.....
தொகுப்பு....
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங் குடி.
பதிவு நாள்: 17-08-2017.
No comments:
Post a Comment