السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
🌾 🌾 صباح الخير 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் -14
========================
துல் ஹஜ் 10 ஆம் நாள்!
ஹஜ்ஜின் 3 ஆம் நாள் உலகம் முழுவதும் வாழும்
முஸ்லிம்களுக்கு, இன்று தான்
ஹஜ்ஜுப் பெருநாள். ஈதுல் அல்ஹா
என்னும் தியாகத் திரு நாள். உலக முஸ்லிம்கள் இன்று பெருநாள் தொழுகைத் தொழுவார்கள்.
ஆனால் ஹஜ் செய்பவர்களுக்கு
இன்று பெருநாள் தொழுகை கிடையாது. இன்று காலை பஜ்ருத்
தொழுகையை, முஸ்தலிபாவில்
முடித்து விட்டு மினாவுக்குச்
செல்கின்றனர்.
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்
அவர்கள், தம் அருமந்த மைந்தர், இஸ்மாயீல் عليه السلام அவர்களை அல்லாஹ்வின்
ஆணைப்படி அறுத்துப்
பலியிடுவதற்காக அழைத்துச் சென்ற போது, ஷைத்தான் வழி
மறித்து தடுக்கப் பார்த்தான். உறுதியான உள்ளத்துடன் சென்ற நபி இப்ராஹீம் عليه السلام அவர்கள், அவன்
மீது கல் வீசி விரட்டினார்கள்.
அதன் நினைவாக ஹஜ்ஜுக்கு
வருபவர்கள், அந்த இடத்தில் இன்றளவும்
கல் எறிகின்றனர். இது ஹஜ்ஜின் கடமைகளில் ஒன்றாகும்.
இன்றைய தினம், ஹாஜிகள் முற் பகல்
நேரத்தில் கல் எறிகிறார்கள். இன்று
‘ஜம்ரத்துல் அகபா”வில் மட்டும் கல்லெறிய வேண்டும். இந்த
ஜம்ரத்துல் அகபாவுக்கு ‘ஜம்ரத்துல் ஊலா” என்றும் சொல்லப்படும்.
பத்தாம் நாளில் முற்பகல் நேரத்தில்
நபி صلى الله عليه وسلم அவர்கள் கல்லெறிந்தார்கள்.
அதன் பிறகுள்ள நாட்களில் சூரியன்
உச்சியிலிருந்து விலகிய பின்
கல்லெறிந்தார்கள். அறிவிப்பவர்:
ஜாபிர் رضي الله عنه ஆதாரம்: திர்மிதி (818)
ஏழு பொடிக் கற்களை எறிய வேண்டும். அதுவும் ஒன்றன் பின்
ஒன்றாக எறிய வேண்டும். ஒவ்வொரு கல்லையும் எறியும்
போதும் தக்பீர் கூற வேண்டும். இவ்வாறு நபி صلى الله عليه وسلم அவர்கள் செய்ததாக இப்னு உமர் رضي الله عنه அவர்கள்
அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
அத்தனை இலட்சம் ஹாஜிகளும் கல்
எறிகிறார்கள். சிலர் கோபமாக ஷைத்தானை அடிப்பது போல் பெரிய கற்களையும்
செருப்புகளையும் வீசுகிறார்கள்.
இது தவறு. கல் எறியும் கடமைக்கு
இவை முரணானதாகும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள், சுண்டி
விளையாடும் அளவு சிறிய கற்களையே எறிந்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் رضي الله عنه ஆதாரம்:
திர்மிதி (821)
கல் எறியும் இடத்தில் நெரிசல் அதிகம். அரபா, மினா, முஸ்தலிபா
ஆகிய இடங்கள் பரந்து விரிந்த மாபெரும் திடல்கள். அத்தனை
இலட்சம் ஹாஜிகளும் பரந்தத் திடலில்
தங்கியிருப்பதில் சிரமம் இல்லை.
ஆனால், ஜம்ரா என்னும் ஒரு
குறிப்பிட்ட இடத்தில், அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,
அத்தனை இலட்சம் பேரும் கல் எறிய
வேண்டும் என்பதால் இங்கு நெரிசல் அதிகம்.
கல்லெறியும் இடத்துக்கு செல்லும் போது கையில் பணமோ அல்லது பொருட்களோ எடுத்துச் செல்லக் கூடாது. கூட்ட
நெரிசலில் தவறிவிட
வாய்ப்புண்டு. கையில் இருக்கும் பொருள் தவறி கீழே விழுந்து
விட்டால் குனிந்து எடுக்க முயலக்
கூடாது. முன்னேறி வரும் கூட்டம் கீழே
தள்ளிவிடலாம்.கூட்டத்தை சமாளிக்க ‘கல்லெறியும் இடம்”
இப்போது, மக்கள் போவதற்கும்,
வருவதற்குமாகத் தனித்தனிப் பாதைகள் அமைக்கப் பட்டு ஒழுங்கு
படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் பலமானத்
தடுப்புகளை ஏற்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அனுப்புகின்றனர்.
பல் வேறு வருடங்களில் கூட்ட
நெரிசலில் இந்த ஜம்ராவில் தான்
விபத்துக்கள் நடந்துள்ளன. சில
சமயங்களில் உயிர்ச் சேதங்களும் கூட
ஏற்பட்டதுண்டு. இப்போது
நெரிசலின்றி மக்கள் சென்று வர பல்
வேறு வசதிகள்
செய்யப்பட்டுள்ளன.
கூட்டம் கூட்டமாகச் சென்று ஜம்ரத்துல்
அகபாவில் கல்லெறிந்து
திரும்புகின்றனர்
ஹாஜிகள்.கல்லெறி நிகழ்ச்சி முடிந்தவுடன் இதுவரை முழங்கிக்
கொண்டிருந்த தல்பிய்யாவை
நிறுத்தி விடுகின்றனர். இதுவே
நபி வழியாகும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஜம்ராவில்
கல்லெறிகின்றவரை தல்பிய்யா
கூறிக் கொண்டே
இருந்தார்கள்.அறிவிப்பவர்: பள்ல் பின்
அப்பாஸ் رضي الله عنه
ஆதாரம்: புகாரி
(1685)
*குர்பானி கொடுப்பது!*
இனி அடுத்த செயல், அறுத்து
பலியிடுவதாகும்.
ஹஜ்ஜின் செயல்களில் சிறப்பானது
எது? என்று நபி صلى الله عليه وسلم அவர்களிடம்
கேட்கப் பட்டது. அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள்... ‘தல்பிய்யாவை உரத்த
குரலில் கூறுவதும், ஒட்டகத்தை அறுத்து
பலியிடுவதும்,” என்று
விடையளித்தார்கள். அறிவிப்பவர்:
அபூ பக்ர் رضي الله عنه ஆதாரம்: புகாரி (757)
தனியொரு நபர் ஒரு ஆட்டையோ,
அல்லது ஏழு பேர் சேர்ந்து ஒரு
மாட்டையோ, ஒட்டகத்தையோ
குர்பானி கொடுக்கலாம்.
ஹுதைபிய்யா வருடத்தில் ஏழு
பேர் சேர்ந்து ஒரு மாட்டையும்,
ஏழு பேர் சேர்ந்து ஒரு
ஒட்டகத்தையும், நபி صلى الله عليه وسلم
அவர்களுடன் நாங்கள்
அறுத்துள்ளோம் அறிவிப்பவர்:
ஜாபிர் رضي الله عنه ஆதாரம்: திர்மிதி (828)
ஹாஜிகள் குர்பானி கொடுக்கும்
இடத்திற்கு வந்து குர்பானிக்காகப்
பிராணிகளை வாங்கி
அல்லாஹ்வுக்காகள் அறுத்துப்
பலியிடுகின்றனர்.
அவற்றின்
மாமிசங்களோ, அவற்றின்
இரத்தங்களோ அல்லாஹ்வை
அடைவதில்லை. மாறாக
உங்களிடமுள்ள (இறை) அச்சமே
அவனைச் சென்றடையும். (திருக்
குர்ஆன் 22:37)
ஆண்டு தோறும் வெளி
நாடுகளிலிருந்து இலட்சக் கணக்கான ஆடுகளும், மாடுகளும்,
ஒட்டகங்களும், இறக்கு மதி செய்யப்
படுகின்றன.
இறக்குமதி செய்யப்படும்
அனைத்துப் பிராணிகளும், கால்
நடை மருத்துவர்களால்,
முறையாகப் பரிசோதிக்கப்பட்டு
முத்திரையிடப்பட்டுள்ளன.
ஹாஜிகள் நேரடியாகச் சென்று,
பிராணியைத் தேர்ந்தெடுத்து, விலை
கொடுத்து வாங்கி அவரவர் தம்
கரங்களால் அறுக்கின்றனர்.
இயலாதவர்கள், அடுத்தவர்களை
நியமித்து அறுக்கச் செய்கின்றனர்.
இது போக, ஒரு குறிப்பிட்ட விலையை
நிர்ணயம் செய்து
வங்கிகளில் கூப்பன்கள்
விற்கப்படுகின்றன. வங்கிகளில் பணம்
செலுத்திவிட்டால், துல் ஹஜ்
மாதம் 10 ஆம் நாளன்று பிராணிகள்
அறுக்கப் பட்டு உரிய முறையில் பக்குவப்
படுத்தப்பட்டு ஏழை
நாடுகளுக்கு அனுப்பி
வைக்கப்படுகின்றது.
அரசு
கண்காணிப்பில், பல்வேறு
இஸ்லாமிய சங்கங்கள் இப் பொறுப்பை
ஏற்றுக் கொண்டு
சிறப்பாகச் செயல்படுகின்றன.
புனிதத் தலங்கள் அனைத்திலும்,
சிறப்புக் கிளைகளை அமைத்து
அல்ரஜ்ஹி வங்கி குர்பானி
கூப்பன்களை விற்க ஏற்பாடு
செய்துள்ளது. ஹாஜிகளுக்காக
இச்சேவையை அல்ரஜ்ஹி வங்கி
இலவசமாகச் செய்கிறது.
ஆண்டு தோறும் பல்லாயிரக்
கணக்கான டன் இறைச்சி
பதப்படுத்தப்பட்டு இந்த முறையில் ஏற்றுமதி
செய்யப்படுகின்றது.
எத்தனையோ நாடுகளில் வாழும்
ஏழைகள் இதனால் பயன் பெறுகின்றனர்.
அல்லாஹ்வுக்காக அறுத்துப்
பலியிட்டு அளப்பெறும்
நன்மையை அடைந்த புனித ஹாஜிகள் தமது அடுத்த
செயலாகிய தலை முடியைக் களையத்
தயாராகின்றனர்.
*தலை முடி களைதல்!*
ஆண்கள் தலை முடியை
முழுவதுமாக மழித்துக்
கொள்ளவோ, கத்தரித்துக்
கொள்ளவோ செய்யலாம், தலை
முடியை முழுவதுமாக
மழித்துக் கொள்வதே சிறந்தது.
நபி صلى الله عليه وسلم அவர்கள் ‘இறைவா!
தலையை மழித்துக் கொள்பவர்களை
மன்னிப்பாயாக!” எனப்
பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள்
‘முடியைக் குறைத்துக்
கொள்பவர்களையும்” என்றனர்.
(மீண்டும்) நபி صلى الله عليه وسلم அவர்கள்,
‘இறைவா! தலையை மழித்துக்
கொள்பவர்களை மன்னிப்பாயாக!”
என்று பிரார்த்தித்தபோது
தோழர்கள், “முடியைக் குறைத்துக்
கொள்பவர்களையும்” என்றனர். நபி صلى الله عليه وسلم அவர்கள் மூன்றாவது
தடவையாகவும், அதைக் கூறிய
போது ‘முடியைக் குறைத்துக்
கொள்பவர்களையும்
(மன்னிப்பாயாக)” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா رضي الله عنه
ஆதாரம்: புகாரி (1728)
தலை முடியை முழுவதுமாக
மழித்துக் கொண்டோ, அல்லது குறைத்துக்
கொண்டோ, ஹாஜிகள்
இஹ்ராமிலிருந்து
விடுபடுகின்றனர். இது வரை அணிந்திருந்த
இஹ்ராம் உடைகளைக்
களைந்து விட்டு வழக்கமாக
அணியும் ஆடைகளை அணிந்துக்
கொள்கின்றனர்.
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...
தொகுப்பு....
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங் குடி.
பதிவு நாள்: 19-08-2017
🌾 🌾 صباح الخير 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் -14
========================
துல் ஹஜ் 10 ஆம் நாள்!
ஹஜ்ஜின் 3 ஆம் நாள் உலகம் முழுவதும் வாழும்
முஸ்லிம்களுக்கு, இன்று தான்
ஹஜ்ஜுப் பெருநாள். ஈதுல் அல்ஹா
என்னும் தியாகத் திரு நாள். உலக முஸ்லிம்கள் இன்று பெருநாள் தொழுகைத் தொழுவார்கள்.
ஆனால் ஹஜ் செய்பவர்களுக்கு
இன்று பெருநாள் தொழுகை கிடையாது. இன்று காலை பஜ்ருத்
தொழுகையை, முஸ்தலிபாவில்
முடித்து விட்டு மினாவுக்குச்
செல்கின்றனர்.
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்
அவர்கள், தம் அருமந்த மைந்தர், இஸ்மாயீல் عليه السلام அவர்களை அல்லாஹ்வின்
ஆணைப்படி அறுத்துப்
பலியிடுவதற்காக அழைத்துச் சென்ற போது, ஷைத்தான் வழி
மறித்து தடுக்கப் பார்த்தான். உறுதியான உள்ளத்துடன் சென்ற நபி இப்ராஹீம் عليه السلام அவர்கள், அவன்
மீது கல் வீசி விரட்டினார்கள்.
அதன் நினைவாக ஹஜ்ஜுக்கு
வருபவர்கள், அந்த இடத்தில் இன்றளவும்
கல் எறிகின்றனர். இது ஹஜ்ஜின் கடமைகளில் ஒன்றாகும்.
இன்றைய தினம், ஹாஜிகள் முற் பகல்
நேரத்தில் கல் எறிகிறார்கள். இன்று
‘ஜம்ரத்துல் அகபா”வில் மட்டும் கல்லெறிய வேண்டும். இந்த
ஜம்ரத்துல் அகபாவுக்கு ‘ஜம்ரத்துல் ஊலா” என்றும் சொல்லப்படும்.
பத்தாம் நாளில் முற்பகல் நேரத்தில்
நபி صلى الله عليه وسلم அவர்கள் கல்லெறிந்தார்கள்.
அதன் பிறகுள்ள நாட்களில் சூரியன்
உச்சியிலிருந்து விலகிய பின்
கல்லெறிந்தார்கள். அறிவிப்பவர்:
ஜாபிர் رضي الله عنه ஆதாரம்: திர்மிதி (818)
ஏழு பொடிக் கற்களை எறிய வேண்டும். அதுவும் ஒன்றன் பின்
ஒன்றாக எறிய வேண்டும். ஒவ்வொரு கல்லையும் எறியும்
போதும் தக்பீர் கூற வேண்டும். இவ்வாறு நபி صلى الله عليه وسلم அவர்கள் செய்ததாக இப்னு உமர் رضي الله عنه அவர்கள்
அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
அத்தனை இலட்சம் ஹாஜிகளும் கல்
எறிகிறார்கள். சிலர் கோபமாக ஷைத்தானை அடிப்பது போல் பெரிய கற்களையும்
செருப்புகளையும் வீசுகிறார்கள்.
இது தவறு. கல் எறியும் கடமைக்கு
இவை முரணானதாகும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள், சுண்டி
விளையாடும் அளவு சிறிய கற்களையே எறிந்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் رضي الله عنه ஆதாரம்:
திர்மிதி (821)
கல் எறியும் இடத்தில் நெரிசல் அதிகம். அரபா, மினா, முஸ்தலிபா
ஆகிய இடங்கள் பரந்து விரிந்த மாபெரும் திடல்கள். அத்தனை
இலட்சம் ஹாஜிகளும் பரந்தத் திடலில்
தங்கியிருப்பதில் சிரமம் இல்லை.
ஆனால், ஜம்ரா என்னும் ஒரு
குறிப்பிட்ட இடத்தில், அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,
அத்தனை இலட்சம் பேரும் கல் எறிய
வேண்டும் என்பதால் இங்கு நெரிசல் அதிகம்.
கல்லெறியும் இடத்துக்கு செல்லும் போது கையில் பணமோ அல்லது பொருட்களோ எடுத்துச் செல்லக் கூடாது. கூட்ட
நெரிசலில் தவறிவிட
வாய்ப்புண்டு. கையில் இருக்கும் பொருள் தவறி கீழே விழுந்து
விட்டால் குனிந்து எடுக்க முயலக்
கூடாது. முன்னேறி வரும் கூட்டம் கீழே
தள்ளிவிடலாம்.கூட்டத்தை சமாளிக்க ‘கல்லெறியும் இடம்”
இப்போது, மக்கள் போவதற்கும்,
வருவதற்குமாகத் தனித்தனிப் பாதைகள் அமைக்கப் பட்டு ஒழுங்கு
படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் பலமானத்
தடுப்புகளை ஏற்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அனுப்புகின்றனர்.
பல் வேறு வருடங்களில் கூட்ட
நெரிசலில் இந்த ஜம்ராவில் தான்
விபத்துக்கள் நடந்துள்ளன. சில
சமயங்களில் உயிர்ச் சேதங்களும் கூட
ஏற்பட்டதுண்டு. இப்போது
நெரிசலின்றி மக்கள் சென்று வர பல்
வேறு வசதிகள்
செய்யப்பட்டுள்ளன.
கூட்டம் கூட்டமாகச் சென்று ஜம்ரத்துல்
அகபாவில் கல்லெறிந்து
திரும்புகின்றனர்
ஹாஜிகள்.கல்லெறி நிகழ்ச்சி முடிந்தவுடன் இதுவரை முழங்கிக்
கொண்டிருந்த தல்பிய்யாவை
நிறுத்தி விடுகின்றனர். இதுவே
நபி வழியாகும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஜம்ராவில்
கல்லெறிகின்றவரை தல்பிய்யா
கூறிக் கொண்டே
இருந்தார்கள்.அறிவிப்பவர்: பள்ல் பின்
அப்பாஸ் رضي الله عنه
ஆதாரம்: புகாரி
(1685)
*குர்பானி கொடுப்பது!*
இனி அடுத்த செயல், அறுத்து
பலியிடுவதாகும்.
ஹஜ்ஜின் செயல்களில் சிறப்பானது
எது? என்று நபி صلى الله عليه وسلم அவர்களிடம்
கேட்கப் பட்டது. அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள்... ‘தல்பிய்யாவை உரத்த
குரலில் கூறுவதும், ஒட்டகத்தை அறுத்து
பலியிடுவதும்,” என்று
விடையளித்தார்கள். அறிவிப்பவர்:
அபூ பக்ர் رضي الله عنه ஆதாரம்: புகாரி (757)
தனியொரு நபர் ஒரு ஆட்டையோ,
அல்லது ஏழு பேர் சேர்ந்து ஒரு
மாட்டையோ, ஒட்டகத்தையோ
குர்பானி கொடுக்கலாம்.
ஹுதைபிய்யா வருடத்தில் ஏழு
பேர் சேர்ந்து ஒரு மாட்டையும்,
ஏழு பேர் சேர்ந்து ஒரு
ஒட்டகத்தையும், நபி صلى الله عليه وسلم
அவர்களுடன் நாங்கள்
அறுத்துள்ளோம் அறிவிப்பவர்:
ஜாபிர் رضي الله عنه ஆதாரம்: திர்மிதி (828)
ஹாஜிகள் குர்பானி கொடுக்கும்
இடத்திற்கு வந்து குர்பானிக்காகப்
பிராணிகளை வாங்கி
அல்லாஹ்வுக்காகள் அறுத்துப்
பலியிடுகின்றனர்.
அவற்றின்
மாமிசங்களோ, அவற்றின்
இரத்தங்களோ அல்லாஹ்வை
அடைவதில்லை. மாறாக
உங்களிடமுள்ள (இறை) அச்சமே
அவனைச் சென்றடையும். (திருக்
குர்ஆன் 22:37)
ஆண்டு தோறும் வெளி
நாடுகளிலிருந்து இலட்சக் கணக்கான ஆடுகளும், மாடுகளும்,
ஒட்டகங்களும், இறக்கு மதி செய்யப்
படுகின்றன.
இறக்குமதி செய்யப்படும்
அனைத்துப் பிராணிகளும், கால்
நடை மருத்துவர்களால்,
முறையாகப் பரிசோதிக்கப்பட்டு
முத்திரையிடப்பட்டுள்ளன.
ஹாஜிகள் நேரடியாகச் சென்று,
பிராணியைத் தேர்ந்தெடுத்து, விலை
கொடுத்து வாங்கி அவரவர் தம்
கரங்களால் அறுக்கின்றனர்.
இயலாதவர்கள், அடுத்தவர்களை
நியமித்து அறுக்கச் செய்கின்றனர்.
இது போக, ஒரு குறிப்பிட்ட விலையை
நிர்ணயம் செய்து
வங்கிகளில் கூப்பன்கள்
விற்கப்படுகின்றன. வங்கிகளில் பணம்
செலுத்திவிட்டால், துல் ஹஜ்
மாதம் 10 ஆம் நாளன்று பிராணிகள்
அறுக்கப் பட்டு உரிய முறையில் பக்குவப்
படுத்தப்பட்டு ஏழை
நாடுகளுக்கு அனுப்பி
வைக்கப்படுகின்றது.
அரசு
கண்காணிப்பில், பல்வேறு
இஸ்லாமிய சங்கங்கள் இப் பொறுப்பை
ஏற்றுக் கொண்டு
சிறப்பாகச் செயல்படுகின்றன.
புனிதத் தலங்கள் அனைத்திலும்,
சிறப்புக் கிளைகளை அமைத்து
அல்ரஜ்ஹி வங்கி குர்பானி
கூப்பன்களை விற்க ஏற்பாடு
செய்துள்ளது. ஹாஜிகளுக்காக
இச்சேவையை அல்ரஜ்ஹி வங்கி
இலவசமாகச் செய்கிறது.
ஆண்டு தோறும் பல்லாயிரக்
கணக்கான டன் இறைச்சி
பதப்படுத்தப்பட்டு இந்த முறையில் ஏற்றுமதி
செய்யப்படுகின்றது.
எத்தனையோ நாடுகளில் வாழும்
ஏழைகள் இதனால் பயன் பெறுகின்றனர்.
அல்லாஹ்வுக்காக அறுத்துப்
பலியிட்டு அளப்பெறும்
நன்மையை அடைந்த புனித ஹாஜிகள் தமது அடுத்த
செயலாகிய தலை முடியைக் களையத்
தயாராகின்றனர்.
*தலை முடி களைதல்!*
ஆண்கள் தலை முடியை
முழுவதுமாக மழித்துக்
கொள்ளவோ, கத்தரித்துக்
கொள்ளவோ செய்யலாம், தலை
முடியை முழுவதுமாக
மழித்துக் கொள்வதே சிறந்தது.
நபி صلى الله عليه وسلم அவர்கள் ‘இறைவா!
தலையை மழித்துக் கொள்பவர்களை
மன்னிப்பாயாக!” எனப்
பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள்
‘முடியைக் குறைத்துக்
கொள்பவர்களையும்” என்றனர்.
(மீண்டும்) நபி صلى الله عليه وسلم அவர்கள்,
‘இறைவா! தலையை மழித்துக்
கொள்பவர்களை மன்னிப்பாயாக!”
என்று பிரார்த்தித்தபோது
தோழர்கள், “முடியைக் குறைத்துக்
கொள்பவர்களையும்” என்றனர். நபி صلى الله عليه وسلم அவர்கள் மூன்றாவது
தடவையாகவும், அதைக் கூறிய
போது ‘முடியைக் குறைத்துக்
கொள்பவர்களையும்
(மன்னிப்பாயாக)” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா رضي الله عنه
ஆதாரம்: புகாரி (1728)
தலை முடியை முழுவதுமாக
மழித்துக் கொண்டோ, அல்லது குறைத்துக்
கொண்டோ, ஹாஜிகள்
இஹ்ராமிலிருந்து
விடுபடுகின்றனர். இது வரை அணிந்திருந்த
இஹ்ராம் உடைகளைக்
களைந்து விட்டு வழக்கமாக
அணியும் ஆடைகளை அணிந்துக்
கொள்கின்றனர்.
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...
தொகுப்பு....
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங் குடி.
பதிவு நாள்: 19-08-2017
No comments:
Post a Comment