Friday, 4 August 2017

தவ்பா நஃபில்

தவ்பா நஃபில்

அபூபக்கர்(ரழி) அறிவிக்கிறார்கள்:
தூதர்(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் “ஒரு மனிதன் ஒரு பாவத்தைச் செய்கிறான். பின் எழுந்து தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டு தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறான். அல்லாஹ்வும் அவனை மன்னிக்கிறான்”

(திர்மிதி: 2/258)

உளுவின் காணிக்கை

"என்னைப் போன்று உழூ செய்து,மனதளவில் கூட எந்தப் பேச்சும் பேசாமல் இரண்டு ரக்அத் உழூவின் காணிக்கையாகத் தொழுபவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக" நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

                         (புஹாரீ:159)

வீட்டில் இரண்டு ரக்அத் தொழுதல்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:நீங்கள் உங்கள் வீடுகளில் நுழைந்தால்,இரண்டு ரக்அத் தொழுதிடுங்கள்.இந்தத் தொழுகை, நுழைவதிலுள்ள தீங்கைத் தடுத்து நிறுத்தி விடும்.மேலும் வீட்டிலிருந்து வெளியே போகும் போதும் இரண்டு ரக்அத் தொழுதிடுங்கள்.இந்தத் தொழுகை வெளியிலுள்ள தீங்கைத் தடுத்து நிறுத்திவிடும்.
                (பைஹகீஃபீஷுஅபில்ஈமான்)

No comments:

Post a Comment