Friday, 4 August 2017

காலை மாலை ஓதும் துஆக்கள்*

*காலை மாலை ஓதும் துஆக்கள்*

اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

பொருள்: அல்லாஹுத் தஆலாவின் பதிபூரணமான கலிமாக்களின் பொருட்டால் அவன் அவன் படைத்தவற்றின் தீங்குகளை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

இதனைக் காலையிலும் மாலையிலும் மும்மூன்று தடவை ஓதி வந்தால் எல்லாத் தீங்குகளை விட்டும் பாதுகாப்பு கிடைக்கும். குறிப்பாக பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் தீங்குகளை விட்டும, துன்பம் தரும் மிருகங்களின் தீங்குகளை விட்டும் பாதுகாப்பு கிடைக்கும். குறிப்பாக இரவு நேரங்களில் ஓதிக் கொள்வது நல்லது.

ஒரு மனிதர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, யாரஸூலல்லாஹ் கடந்த இரவு ஒரு தேள் என்னை கொட்டி விட்டது என்று கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நீ மாலை நேரத்தில் அஊது பி கலிமாத்தித் தாமாத்தி மின் ஷர்ரி மாகலக்க’ என்று ஓதிக் கொண்டிருந்தால் உனக்கு அது எவ்வித இடையூறும் செய்யாது என்று கூறினார்கள்.

ஆதாரம்: மிஷ்காத்.

بِسْمِ اللهِ الَّذِيْ لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْاَرْضِ وَلاَ فِي السَّمَآءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரைக் கொண்டு ஆரம்பிக்கிறேன். அவன் எத்தகையவன் என்றால், அவனுடைய திருப் பெயருடன் பூமியிலுவும் வானத்திலும் உள்ள எப்பொருளும் எந்த இடையூறும் செய்யாது. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், முற்றும் அறிந்தவன்.

இதனைக் காலையிலும் மாலையிலும் மும்மூன்று தடவை ஓதிக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஓதி வந்தால் அல்லாஹு தஆலா அவரை துன்பங்கள், இடையூறுகள் அனைத்தையும் விட்டும் பாதுகாத்திடுவான். –

 நபிமொழி.

اَعُوْذُ باِ للهِ السَّمِيْعِ الْعَلِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

பொருள்: செவியுறுவோனும் முற்றும் அறிந்தவனுமாகிய அல்லாஹுத்தஆலாவைக் கொண்டு சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.-நபிமொழி.

இதனைக் காலையிலும் மாலையிலும் மும்மூன்று தடவை ஓதியபின், சூரத்துல் ஹஷ்ரின் கடைசியிலுள்ள மூன்று ஆயத்துக்களை ஓதிக் கொள்ள வேண்டும்.

هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۖ هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ٭ هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ ٭ هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ ۖ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ٭

மேற்கூறப்பட்ட படி இஸ்மு மற்றும் ஆயத்துக்களை  ஸுபுஹு நேரத்தில் ஓதிக் கொள்பவருக்காக எழுபதினாயிரம் மலக்குகள் சாட்டப்படுகின்றனர். அவர்கள் அவருக்காக அன்று மாலை வரை துஆ செய்து கொண்டிருக்கின்றனர். அன்று பகலில் அவர் இறந்து விட்டால் ஷஹீதுடைய அந்தஸ்துள்ளவராக மரணமடைகிறார். அவ்வாறே மாலையில் இதைன ஓதிக்கொண்டால் அதே அந்தஸ்து கிடைக்கிறது’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளர்கள்.

நூல்: மிஷ்காத்.

No comments:

Post a Comment