Friday, 4 August 2017

ஐவேளை தொழுகைக்குப் பின் ஓத வேண்டியவை

ஐவேளை தொழுகைக்குப் பின் ஓத வேண்டியவை

أَسْتَغْفِرُ اللهَ ، أَسْتَغْفِرُ اللهَ ، أَسْتَغْفِرُ اللهَ اللَّهُمَّ أَنْتَ السَّلامُ ، وَمِنْكَ السَّلامُ ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلالِ وَالإِكْرَامِ

(அஸ்தஃக்ஃபிருல்லாஹ் அஸ்தஃக்ஃபிருல்லாஹ் அஸ்தஃக்ஃபிருல்லாஹ்! அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்)

பொருள் : அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! யா அல்லாஹ்! நீ ஈடேற்றமளிப்பவன். உன்னிடமிருந்து ஈடேற்றம் உண்டாகிறது. கண்ணியம் மாண்பும் உடையவனே! நீயே அருட்பேறுடையவன்.

               (ஆதாரம் : முஸ்லிம்)

اللَّهُمَّ أَنْتَ السَّلامُ ، وَمِنْكَ السَّلامُ ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلالِ وَالإِكْرَامِ

( அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்)

பொருள் : அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! யா அல்லாஹ்! நீ ஈடேற்றமளிப்பவன். உன்னிடமிருந்து ஈடேற்றம் உண்டாகிறது. கண்ணியம் மாண்பும் உடையவனே! நீயே அருட்பேறுடையவன்.

             (ஆதாரம் : முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:"முஆதே! எந்தத் தொழுகைக்குப் பின்பும் இந்த துஆவை விட்டு விடாதீர்.

اللهم اعني علي ذكرك وشكرك وحسن عبادتك
(அல்லாஹும்ம அயின்னி அலா திக்ரிக வசுக்ரிக வஹுஸ்னி இபாததிக்)
பொருள்:"யா அல்லாஹ்!உன்னைத் தியானிப்பதற்கும்,நன்றி செலுத்துவதற்கும்,நல்ல முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவி புரிவாயாக."
               
        (அபூதாவூது:1522)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:"ஒவ்வொரு ஃபர்ள் தொழுகைக்குப் பிறகும்,சுப்ஹானல்லாஹ் 33 தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும்,அல்லாஹுஅக்பர் 33 தடவையும் ஓதுபவர் ஒரு போதும் நஷ்டமடையமாட்டார்.

                       (முஸ்லிம்:1349)

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,ஃபர்லான தொழுகைக்குப் பின் இந்த துஆவை ஓதினார்கள்.

لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو علي كل شيء قدير
اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا لجد منك الجد
                          (புகாரி:844)

         மஃரிப் தொழுதபின் ஓதவேண்டிய துஆ

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:"மஃரிப் தொழுததும் اللهم اجرني من النار (அல்லாஹும்ம அஜிர்னி மினன்னார் )என ஓதிக் கொள்பவர் அன்றிரவு மரணித்தால் நரகிலிருந்து பாதுகாப்பு பெறுவார்.அதேபோன்று ஃபஜ்ர் தொழுதபின் ஏழுமுறை ஓதிவருபவர்,அன்றைய பகலில் மரணித்தாலும் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பு பெறுவார்."

                  (அபூதாவூது:5079)

No comments:

Post a Comment