Friday, 4 August 2017

பாங்கு மற்றும் ஒழுவிற்கான துவாக்கள்

*உழு செய்த பின் ஓதும் துஆ*

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:எவர் நன்கு உழு செய்து கீழ்க்காணும் துஆவை ஓதுகிறாரோ,அவருக்காக சுவனத்தின் எட்டு வாசல்களும் திறந்து விடப்படுகின்றன.அவர் விரும்பிய வாசலில் நுழைந்து கொள்ளலாம்.

اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين

(அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு.அல்லாஹும்மஜ்அல்னி மினத்தவ்வாபீன வஜ்அல்னி மினல் முததஹ்ஹிரீன்.)

                              (திர்மிதீ:65)

*பாங்கு ஆரம்பிக்கும் பொழுது ஓதும் துஆ*

முஅத்தின் பாங்குசொல்ல ஆரம்பித்ததும்,அதைக் கேட்டவர் கீழ்க்காணும் துஆவை ஓதுவாரானால்,அவர் பாவங்கள் மன்னிக்கப்படுவதாக அண்ணலார் கூறினார்கள்.

اشهد ان لا اله الا الله وحده لا شريك له وان محمدا عبده ورسوله رضيت بالله ربا وبمحمد رسولا وبا الاسلام دينا
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீகலஹு  வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு  ரலீது பில்லாஹி ரப்பன் வபிமுஹம்மதின் ரஸுலன் வபில்இஸ்லாமி தீனன்.
                         (முஸ்லிம்:851)


*பாங்கு முடிந்தவுடன் ஓதும் துஆ*

பாங்கு முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.

اَللّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا اَلْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِيْ وَعَدْتَهُ

(அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ஃபளீல(த்)த வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு)

பொருள் : இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!

                       ஆதாரம்: புகாரி

No comments:

Post a Comment