சூராக்களின் சிறப்புக்கள்
அல்ஃபாத்திஹா:சூரத்துல் ஃபாத்திஹாவில் சகல நோய்களுக்கும் நிவாரணம் இருக்கிறது என்று நபியவர்கள் அருளினார்கள்.
யாஸீன்:சூரா யாஸீனை ஓதுபவருக்கு உணவு நெருக்கடி இருக்காது.இதை பத்து தடவை ஓதினால் திருக்குர்ஆன் ஓதி முடித்த பலன் உண்டு.
அர்ரஹ்மான்:சூரா அர்ரஹ்மானை ஓதியவர் அல்லாஹ் அருளிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தியவர் போலாவார்.
வாகிஆ:சூரா வாகிஆவை இரவில் ஓதி வருபவரை வறுமை பீடிக்காது என்று நபி (ஸல் )அருளியுள்ளார்கள்.
முல்க்:சூரா முல்கை ஓதியவருக்கு அது அல்லாஹ்விடம் மன்றாடும்.மேலும்,கப்ரில் கஷ்டம் உண்டாகாது பாதுகாக்கும் என்று நபி (ஸல்) அருளியுள்ளார்கள்.
நூஹ்:சூரா நூஹை ஓதினால் கடும் பகைவரின் கொடுமைக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்.
முஜ்ஜமில்:சூரா முஜ்ஜமிலை தினமும் ஓதி வந்தால் நபி (ஸல் )அவர்களைக் கணவில் காணலாம்.
ஸஜ்தா:சூரா முல்கையும்,சூரா சஜ்தாவையும் ஓதாமல் நபி (ஸல் )அவர்கள் தூங்கமாட்டார்கள்.
கஹ்ஃப்:ஜும்ஆ நாளன்று கஹ்ப் சூராவை ஓதுபவர் எட்டு நாட்கள் அடுத்த ஜும்ஆ வரை சகல குழப்பங்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவார்.தஜ்ஜால் வந்துவிட்டாலும் அச்சமயத்தில் அவனுடைய குழப்பத்திலிருந்து பாதுகாக்கப்படுவார் என்று நபியவர்கள் கூறினார்கள்.சூரா கஹ்பை எவர் ஜும்ஆ நாளன்று ஓதுவாரோ அவருக்கு இரண்டு ஜும்ஆவுக்கு இடையே உள்ள கால அளவுக்கு அவரின் (இதயத்திலோ,கப்ரிலோ) ஒளி இலங்கிக் கொண்டிருக்கும்.
துகான்:நபி (ஸல்) அருளியுள்ளதாவது:இரவில் சூரா துகானை ஓதி வருபவருக்கு எழுபதனாயிரம் மலக்குகள் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்.வெள்ளிக்கிழமை இரவில் அல்லது பகலில் ஓதிவருபவருக்கு அல்லாஹுதஆலா சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்.இதனை வெள்ளி இரவில் ஓதிவந்தால் பாவங்கள் மன்னிக்கப்பட்டு,ஹுருல் ஈன்கள் மணமுடித்து கொடுக்கப்படுவார்கள்.
அல்ஃபாத்திஹா:சூரத்துல் ஃபாத்திஹாவில் சகல நோய்களுக்கும் நிவாரணம் இருக்கிறது என்று நபியவர்கள் அருளினார்கள்.
யாஸீன்:சூரா யாஸீனை ஓதுபவருக்கு உணவு நெருக்கடி இருக்காது.இதை பத்து தடவை ஓதினால் திருக்குர்ஆன் ஓதி முடித்த பலன் உண்டு.
அர்ரஹ்மான்:சூரா அர்ரஹ்மானை ஓதியவர் அல்லாஹ் அருளிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தியவர் போலாவார்.
வாகிஆ:சூரா வாகிஆவை இரவில் ஓதி வருபவரை வறுமை பீடிக்காது என்று நபி (ஸல் )அருளியுள்ளார்கள்.
முல்க்:சூரா முல்கை ஓதியவருக்கு அது அல்லாஹ்விடம் மன்றாடும்.மேலும்,கப்ரில் கஷ்டம் உண்டாகாது பாதுகாக்கும் என்று நபி (ஸல்) அருளியுள்ளார்கள்.
நூஹ்:சூரா நூஹை ஓதினால் கடும் பகைவரின் கொடுமைக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்.
முஜ்ஜமில்:சூரா முஜ்ஜமிலை தினமும் ஓதி வந்தால் நபி (ஸல் )அவர்களைக் கணவில் காணலாம்.
ஸஜ்தா:சூரா முல்கையும்,சூரா சஜ்தாவையும் ஓதாமல் நபி (ஸல் )அவர்கள் தூங்கமாட்டார்கள்.
கஹ்ஃப்:ஜும்ஆ நாளன்று கஹ்ப் சூராவை ஓதுபவர் எட்டு நாட்கள் அடுத்த ஜும்ஆ வரை சகல குழப்பங்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவார்.தஜ்ஜால் வந்துவிட்டாலும் அச்சமயத்தில் அவனுடைய குழப்பத்திலிருந்து பாதுகாக்கப்படுவார் என்று நபியவர்கள் கூறினார்கள்.சூரா கஹ்பை எவர் ஜும்ஆ நாளன்று ஓதுவாரோ அவருக்கு இரண்டு ஜும்ஆவுக்கு இடையே உள்ள கால அளவுக்கு அவரின் (இதயத்திலோ,கப்ரிலோ) ஒளி இலங்கிக் கொண்டிருக்கும்.
துகான்:நபி (ஸல்) அருளியுள்ளதாவது:இரவில் சூரா துகானை ஓதி வருபவருக்கு எழுபதனாயிரம் மலக்குகள் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்.வெள்ளிக்கிழமை இரவில் அல்லது பகலில் ஓதிவருபவருக்கு அல்லாஹுதஆலா சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்.இதனை வெள்ளி இரவில் ஓதிவந்தால் பாவங்கள் மன்னிக்கப்பட்டு,ஹுருல் ஈன்கள் மணமுடித்து கொடுக்கப்படுவார்கள்.
இதில் ஆதாரங்களை பதிவிடவும் .. பலகீனமான ஹதீஸ்களையும் படித்துள்ளீர்கள்
ReplyDelete