Wednesday, 9 August 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள்! -11

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🌝 ரிலாக்ஸ் மார்னிங் 🌞

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள்!

========================

சாரணர் படை!

சவூதியின் பல்வேறு
பகுதிகளிலும் உள்ள உயர் நிலைப் பள்ளிகள், மற்றும்
கல்லூரிகளிலிருந்து வந்து குவிந்துள்ள சாரணர் படை
மாணவர்களின் பணி மகத்தானது.
பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, ஹாஜிகளுக்கு
வழிகாட்டிகளாகவும்,
உதவியாளர்களாகவும், சீருடை அணிந்து சிறப்புப் பணி
செய்கின்றனர். இயலாத மற்றும்
வயது முதிர்ந்த ஹாஜிகளை
அரவணைத்து அழைத்துச் செல்வதும், தமது
இருப்பிடங்களுக்குச் செல்ல வழி
தெரியாமல் தவிப்பவர்களை
அவர்களிடம் உள்ள அடையாள
அட்டைகளைக் கொண்டு
இருப்பிடத்தை அறிந்து  உரிய இடங்களுக்குக் கொண்டு போய்
சேர்த்தும் உபகாரம் செய்கின்றனர்.
மினாவில் மட்டுமின்றி
ஹாஜிகள் அடுத்தடுத்தக்
கடமைகளை நிறைவேற்றச்
செல்லும், முஸ்தலிபா, அரபா, போன்ற புண்ணியத் தலங்கள்
அனைத்திலும், சாரணர் படை
மாணவர்கள் மிகவும் சிறப்பாகப்
பணி புரிகின்றனர்.

தொலைத் தொடர்பு வசதி!

தபால் தந்தித் துறை, மினாவின் பல்வேறு இடங்களில் அஞ்சல் மற்றும் தந்தி வசதிகளைச் செய்து
வைத்திருக்கிறது. தொலை பேசித் துறையினரின் சேவை
மிகவும் பாராட்டத் தக்கது. மினாவிலும் மற்றும் புனிதத்
தலங்கள் அனைத்திலும்,
நோக்குமிடமெல்லாம் நீக்கமற
நிறைந்திருக்கின்றன தொலை பேசி
 மையங்கள்.உலகின் 180க்கும் அதிகமான நாடுகளுடன் நேரடித்
தொடர்பு கொள்ளத் தக்க இம் மையங்களின் மூலம்
நாளொன்றுக்கு பல இலட்சக் கணக்கான தொலை பேசி
அழைப்புகள் செய்யப் படுவதாக சவூதி தொலைத் தொடர்பு
அமைச்சகம் தெரிவிக்கிறது.
அவரவர் நாடுகளில் உள்ள
உறவினர்களுடன் தொடர்பு கொண்டு  புனித ஹஜ்ஜை இனிய
முறையில் நிறைவேற்றிக்
கொண்டிருக்கும் மகிழ்ச்சியைப்
பகிர்ந்துக் கொள்ள  மக்கள் கூட்டம்
அலைமோதுகிறது.

காவல் துறையினரின் கண்காணிப்பு

ஆண்டு தோறும் இலட்சக் கணக்கான
ஹாஜிகள் ஒன்று கூடும் புனித
ஹஜ்ஜில், எவ்வித அசம்பாவிதமும்
ஏற்பட்டு விடக் கூடாது
என்பதற்காக, காவல் துறை எல்லா
வகையானக் கண்காணிப்பு
ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
பொதுவாகவே முஸ்லிம்கள் ஒன்று
கூடும் எந்த ஒரு விழாவிலும் காவல் துறைக்கு எந்த வேலையும்
இருக்காது.
நியாய உள்ளம் படைத்த எத்தனையோ
காவல் துறை அதிகாரிகள் இதற்கு
சாட்சி பகர்வர். கண்ணியத்தையும்
கட்டுப்பாட்டையும் கடமையாகக்
கொண்டவர்கள் அதிலும் புனித
ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற
வந்த புண்ணிய சீலர்கள் எவ்வளவு
கட்டுப்பாட்டைக்
கடைப்பிடிப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை.
காவல் துறையும், ராணுவமும்,
தீயணைப்புப் படையினரும், சாரணர்
படையும், தரையில் தங்கள்
கண்காணிப்பைத் தொடர, ஆகாயத்தில் ஹெலிகாப்டர்கள்
அனைத்தையும் கண்காணித்தபடி
வட்டமடித்துக் கொண்டே
இருக்கின்றன. இவை எதைப் பற்றியும் கவலைப் படாமல்
அத்தனை இலட்சம் ஹாஜிகளும்,
இறை வணக்கத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அவரவர் தம் சொந்த ஊர்களில் மாட
மாளிகைகளில் வசித்தவர்கள் சுக
போக வாழ்க்கை வாழ்ந்தவர்கள், இங்கே
மினாவில் வந்து கூடாரங்களில்
தங்கள் பொழுதைக்
கழிக்கின்றனர்.மறு உலகின் நிரந்தர
வாழ்க்கைப் பயணத்தில் சற்றுத் தங்கி இளைப்பாறுவது தான் இவ்வுலக
வாழ்க்கை. இவ்வுலக வாழக்கைப்
பயணத்தில் சற்றுத் தங்கி
இளைப்பாறுவது போல் மினாவில்
இந்த சின்னஞ்சிறு கூடாரங்களில்
தங்கி ஹாஜிகள்
இளைப்பாறுகின்றனரோ! இல்லை. இவர்கள் இங்கு இளைப்பாற
வரவில்லை! பொன்னான பொழுதை
வீணில் போக்க இங்கு வரவில்லை!
காட்சிகளைக் கண்டு களிப்படைய
வரவில்லை! இறைவனின் அழைப்பை ஏற்று வந்திருக்கின்றனர்.
இறைவனுக்காக இங்கு
வந்திருக்கின்றனர். இறை வணக்கத்துக்காக இங்கு
வந்திருக்கின்றனர்.
குழுக்களாகவும்,
தனித்தனியாகவும், அமர்ந்து இன்றைய தினத்தை இறை
வணக்கத்தில் கழிக்கின்றனர். இறை
தியானத்தில் கழிக்கின்றனர்.
இயன்றவரை திரு மறையை ஓதுவதிலும், நபிலான
தொழுகைகளிலும்,
பிரார்த்தனையிலும் திக்ருகளை
மொழிவதிலும் கழிக்கின்றனர்.

துல் ஹஜ் எட்டாம் நாள் ஹஜ்ஜின்
முதல் நாளாகிய இன்றைய
தினத்தின் லுஹர், அஸர், மஃரிப்,
இஷா, ஆகிய ஐவேளைத்
தொழுகைகளையும் இங்கேயே
நிறைவேற்றுகின்றனர்.இன்றைய
தினத்தின் இரவுப் பொழுதும்
இங்கேயே இறை தியானத்தில்
கழிகின்றது.
இரவுப் பொழுதிலும் இங்கு உறக்கமா வரும்? உறங்கவா இங்கு வந்தோம்? என்ற எண்ணம் இதயத்தில் எழ
சிறிது நேரமே கண்ணயர்ந்தவர்கள்
கூட  நடு நிசித் தொழுகையான
தஹஜ்ஜஜுத் தொழுகையை
நிறைவேற்றத் தயாராகின்றனர்.
மினாவில் லுஹர், அஸர், இஷா
ஆகிய, நான்கு ரக்அத்
தொழுகைகளை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழுவது
சிறந்ததாகும்.
மக்கள் முன்னெப்போதும்
இருந்திராத அளவுக்கு அச்சமற்ற நிலையிலும், முன்னெப்போதும்
இல்லாத அளவுக்கு அதிக
எண்ணிக்கையிலும் இருந்த போது
நான் நபி صلى الله عليه وسلم  அவர்களுடன் (நான்கு
ரக்அத் கொண்ட தொழுகைகளை)
இரண்டு ரக்அத்களாகத்
தொழுதிருக்கிறேன். என்று ஹாரிஸா பின் வஹ்ப் رضي الله عنه
அறிவிக்கும் ஹதீஸ் திர்மிதியில்
பதிவாகியுள்ளது. (ஹதீஸ் எண் 808)

நான் நபி صلى الله عليه وسلم  அவர்களுடன்
மினாவில் இரண்டு ரக்அத்களாகத்
தொழுதிருக்கிறேன்.
அபூ பக்ர் உமர் رضي الله عنهما  ஆகியோருடனும்
இரண்டு ரக்அத்களாகத்
தொழுதிருக்கிறேன். உஸ்மான் رضي الله عنه
 அவர்களின் ஆட்சியின் துவக்க
காலத்திலும் இரண்டு ரக்அத்களாகத்
தொழுதிருக்கிறேன். என்று இப்னு
மஸ்வூத் கூறியதாக அறிவிக்கப்
பட்டுள்ளது.
மறு நாள், துல் ஹஜ் 9 ஆம் நாள்
அதிகாலை பஜ்ருத்
தொழுகையையும்- இங்கு
மினாவிலேயே நிறை வேற்றி விட்டு  அடுத்தக் கடமையை
நிறைவேற்ற அரபாத்தை நோக்கி
ஹாஜிகள் புறப்படுகின்றனர்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்....

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்: 09-08-2017

No comments:

Post a Comment