Wednesday, 9 August 2017

இந்நூல் தொகுக்கப்பட்டதின் நோக்கம்...


இந்நூல் தொகுக்கப்பட்டதின் நோக்கம்...

1.காலத்தின் மீது சத்தியமாக!
2.நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.
3.விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்து,சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும்,(பாவங்களை விடுவதிலும் நன்மைகளை செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களை சகித்து) பொறுமையைக் கொண்டும் ஒருடருக்கொருவர் உபதேசிக்கிறார்களே அத்தகையோரைத் தவிர...

               (அல்குர்ஆன்
அத்தியாயம்:103,வசனங்கள் :3)

நமக்கு இறைவன் அளித்துள்ள அருட்கொடைகளில் மகத்தானது காலமாகும்.அந்தக் காலத்தை முறையாக நாம் பயன்படுத்தாமல் வீணடிக்கிறோம்.நம்முடைய காலங்கள் அனைத்தும் வீணான விஷயங்களை பார்ப்பதிலும்,கேட்பதிலும் கழிந்துகொண்டிருக்கிறது.நபியவர்களும் நபித்தோழர்களும் காலங்களை முறையாக செலவிட்டதால் ஈருலகிலும் வெற்றிபெற்றார்கள்.

நாம் செய்யவேண்டிய அமல்களை இஸ்லாம் நமக்கு முறைப்படுத்தியுள்ளது.காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை நாம் புரிய வேண்டிய அமல்கள் அதிகமாக உள்ளன.அவற்றில் நாம் கவனம் செலுத்தினால் நிச்சயமாக நம்முடைய காலங்கள் விரயமாகாது.

நாம் அன்றாடம் செய்ய வேண்டிய அமல்களின் அவசியத்தைப் பற்றியும்,அந்த அமல்களை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றியும் விரிவாக இந்நூலில் தரப்பட்டுள்ளது.

இந்நூலில் கூறப்பட்டள்ள அனைத்து விஷயங்களையும் மவ்த் வரை கடைபிடிக்க வல்ல ரஹ்மான் நமக்கு தௌஃபீக் செய்வானாக!

No comments:

Post a Comment