Tuesday, 22 August 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 15

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 15

========================

தவாபுஸ் ஸியாரா!

ஹஜ்ஜின் மிக மிக முக்கியமான
செயல்களில் இந்தத் தவாபுஸ் ஸியாராவும் ஒன்று. இந்தத்
தவாபைச் செய்யாத வரை ஹஜ்
நிறைவு பெறாது.
ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து,
குர்பானி கொடுத்து, தலை முடி நீக்கி, இஹ்ராமிலிருந்து விடுபட்ட ஹாஜிகள், தவாபுஸ்ஸியாராச்
செய்வதற்கு கஃபத்துல்லாஹ்வை
நோக்கி புறப்படுகின்றனர்.
இன்றைய தினம் செய்யும் இந்தத்
தவாபுஸ்ஸியாரா என்பது மிகவும் சிரமமானது தான். இது
நாள் வரை ஹாஜிகள், எத்தனையோ
முறை புனிதக் கஃபாவை தவாப்
செய்திருக்கலாம். அப்போதுள்ள
கூட்ட நெரிசலே அதிகமாக
இருந்திருக்கும். ஆனால் இன்று
பெரும்பாலும் அத்தனை இலட்சம்
ஹாஜிகளும்,
தவாபுஸ்ஸியாராவை
நிறைவேற்ற மஸ்ஜிதுல் ஹராமில்
நுழைந்து விடுகின்றனர்.
இன்றைய தினம், மஸ்ஜிதுல்
ஹராமில் மக்கள் வெள்ளம் அலை மோதுகிறது.
சுப்ஹானல்லாஹ்! இன்று தவாபை
முடித்து வெளியில் வருவது என்பது இலேசான காரியமல்ல.
கஃபா என்னும் இறையாலயத்தை
இன்றைய தினம் புனித ஹாஜிகள்
சுற்றி வரும் காட்சியை
மஸ்ஜிதுல் ஹராமின் இரண்டாவது
மூன்றாவது தளங்களில் நின்று
பார்த்தால் பார்த்துக் கொண்டே
இருக்கலாம். கண்கொள்ளாக் காட்சி!
ஏறக் குறைய இருபது இலட்சம் பேர்
சுற்றுகிறார்கள். கடல் அலையைப்
போல் மனித வெள்ளம் சுற்றிச் சுற்றி வட்டமிடுகின்றது.
ஏழுச் சுற்றுக்களை முடித்தவர்கள்
கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி,
நிம்மதிப் பெருமூச்சு
விடுகின்றனர். புதிதாக
நுழைபவர்கள் தங்கள் சுற்றுக்களைத்
தொடங்குகின்றனர்.
இன்று காலை முதல் தொடங்கிய நெரிசல் இன்று பகல் முழுவதும்
நீடிக்கின்றது. இரவு முழுவதும்
தொடர்கின்றது. உணவை மறந்து,
உறக்கத்தை மறந்து, எப்படி இவர்கள்
கொஞ்சம் கூடக் களைப்பு இல்லாமல்
சுற்றுகிறார்கள்.
இன்றைய தினம்
காலையிலிருந்து ஒவ்வொரு செயலாகச் செய்து முடித்து
விட்டு- எவ்வளவு சுறுசுறுப்பாக
தவாபும் செய்கின்றனர்!
இயலாமையும் சோர்வும் இருந்த
இடம் தெரியாமல் போக இளமையும் வலிமையும்
எங்கிருந்து இவர்களுக்கு வந்தது?
இறைவனின் கட்டளையை சிரமேற்
கொண்டு வந்தவர்களுக்கு,
உற்சாகமும், உத்வேகமும் தாமாக
வந்து விடுமோ! இன்றைய
தினத்தின் செயல்களை,
தவறுதலாகவோ,
அறியாமையாலோ, முன் பின் மாற்றிச் செய்து விட்டாலும்
குற்றமில்லை.

நபி صلى الله عليه وسلم  அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் உரை நிகழ்த்திக்
கொண்டிருக்கும் போது நான் வந்தேன். அப்போது ஒருவர் எழுந்து, ‘நான் இதற்கு முன் இது என
நினைத்தேன்!” என்றார்.
இன்னொருவர் எழுந்து ‘நான் இதற்கு முன் இது என நினைத்தேன்!
பலியிடுவதற்கு முன் தலையை மழித்து விட்டேன்! கல்லெறிவதற்கு
முன் பலியிட்டு விட்டேன்.” என
இது போன்றவற்றைக் கூறலானார்.
அவ்வனைத்திற்குமே, நபி صلى الله عليه وسلم
அவர்கள், ‘குற்றமில்லை!
(விடுபட்டதைச்) செய்யுங்கள்” என்றே கூறினார்கள். அன்றைய
தினம் வினவப்பட்ட
எல்லாவற்றிற்குமே அவர்கள்
‘குற்றமில்லை! (விடுபட்டதைச்)
செய்யுங்கள்” என்றே கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு
அம்ருப்னுல் ஆஸ் رضي الله عنه  ஆதாரம்:
புகாரி (1737)

துல் ஹஜ் 11 ஆம் நாள்  ஹஜ்ஜின் 4 ஆம் நாள்.
தவாபுஸ்ஸியாராவை முடித்த ஹாஜிகள். ஏற்கனவே 8 ஆம் நாள்
மினாவில் தங்கியிருந்த
கூடாரங்களுக்கு மறுபடியும்
வந்து சேருகின்றனர். இன்று முதல்,
மூன்று தினங்கள், ஒவ்வொரு நாளும், சூரியன் உச்சியிலிருந்து
சாய்ந்த பிறகு மூன்று
ஜம்ராவுக்கும் முறையே ஏழு
கற்கள் வீதம் எறிய வேண்டும்.
நபி صلى الله عليه وسلم  அவர்கள் நஹ்ருடைய
நாளில் (துல் ஹஜ் 10 ஆம் நாள்) முற்பகல் நேரத்தில்
கல்லெறிந்தார்கள்.மறு நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்ததும்
கல்லெறிந்தார்கள். அறிவிப்பவர்:
ஜாபிர் رضي الله عنه  ஆதாரம்: புகாரி
(பாடம் 134)
இன்று முதல், மூன்று
தினங்களுக்கு தினமும் ஜம்ரத்துஸ் ஸுக்ரா, ஜம்ரத்துல் உஸ்தா,
ஜம்ரத்துல் அகபா, ஆகிய மூன்று
ஜம்ராக்களிலும் முறையே ஏழு
கற்கள் வீதம் எறிய வேண்டும்.

நபி صلى الله عليه وسلم  மினா பள்ளி வாசலை
அடுத்திருக்கும் (முதல்) ஜம்ராவில்
கல்லெறியும் போது ஏழு கற்களை
எறிவார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போது  தக்பீர்
கூறுவார்கள். பிறகு சற்று முன்னால் சென்று  கிப்லாவை
முன்னோக்கி நீண்ட நேரம் நின்று
கைகளை உயர்த்தி துஆச்
செய்வார்கள். பிறகு இரண்டாவது
ஜம்ராவுக்கு வந்து அங்கும் ஏழு
கற்களை எறிவார்கள். ஒவ்வொரு
கல்லையும் எறியும் போதும் தக்பீர்
கூறுவார்கள். பிறகு இடது பக்கமாகப்
 பள்ளத்தாக்கிற்கு
அடுத்துள்ள பகுதிக்கு வந்து கிப்லாவை
 முன்னோக்கி நின்று
கைகளை உயர்த்தி துஆச் செய்வார்கள்.
 பிறகு ஜம்ரத்துல்
அகபாவுக்கு வந்து ஏழு சிறு கற்களை
 எறிவார்கள். ஒவ்வொரு
கல்லையும் எறியும் போதும் தக்பீர்
கூறுவார்கள் பின்பு அங்கிருந்து திரும்பி
 விடுவார்கள். அங்கு நிற்க மாட்டார்கள்.
 அறிவிப்பவர்: ஸுஹ்ரி رضي الله عنه
 ஆதாரம்: புகாரி (1753)

அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்கள் செய்துக் காட்டிய  அதே முறையைப்
பின்பற்றி ஹாஜிகள் ஜம்ராக்களில்
கல் எறிகிறார்கள். முதல் நாள்
இருந்த அளவுக்கு மக்கள் நெரிசல்
அடுத்தடுத்த நாட்களில் இல்லை.
அவரவர் தம் வசதிப்பட்ட நேரங்களில்
வருவதால்
 கூட்டம் சற்று
குறைவாகத் தெரிகிறது.
ஒவ்வொரு நாளும் கல்லெறிந்து விட்டு
 மினாவில் அவரவர்
கூடாரங்களில் சென்று ஹாஜிகள்
ஓய்வெடுக்கின்றனர். கிடைக்கின்ற
நேரமெல்லாம் இறைவணக்கத்தில்
பொழுதைக் கழிக்கின்றனர்.
மினாவில், பல்வேறு
நாடுகளிலிருந்து
வந்தவர்களுக்கும் அந்தந்த நாட்டு ஹஜ்
கமிட்டியினராலும் தனியார் ஹஜ்
சர்வீஸ்கள் மூலம் வந்தவர்களுக்கு
அந்தந்த நிறுவனத்தினராலும்,
தனித்தனியே கூடாரங்கள் அமைக்கப்
பட்டுள்ளன.
ஒவ்வொரு நாட்டினருக்காகவும்,
அமைக்கப்பட்டுள்ள கூடாரப் பகுதிகளில்
 அந்தந்த நாட்டு
தேசியக் கொடி
அடையாளத்துக்காக
பறக்கவிடப்பட்டுள்ளது.

நாட்டிலிருந்து தனிப்பட்ட
முறையில் வந்தவர்கள்
கூடாரங்களை வாடகைக்கு எடுத்து
 தங்கிக் கொள்கின்றனர்.
கூடாரங்கள் கிடைக்கப்
பெறாதவர்கள், தங்குவதற்கென நீண்ட
பெரும் அரங்கங்களும்
அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கங்களில்
 இலவசகமாகத் தங்கிக்
கொள்ளலாம். எல்லா இடங்களிலும்
தாராளமாகத் தண்ணீர் வசதியும் கழிவறை
 வசதிகளும்
செய்யப்பட்டுள்ளன.

துல் ஹஜ் 12 ஆம் நாள்- ஹஜ்ஜின் 5
ஆம் நாள் மு
 தினத்தைப் போலவே
இன்றும் ஹாஜிகள் சூரியன் உச்சியை
 விட்டு சாய்ந்த பிறகு
தங்கள் கூடாரங்களிலிருந்து
புறப்பட்டு மூன்று
ஜம்ராக்களிலும், முறையே ஏழு
கற்கள் வீதம் எறிகின்றனர்.
முதியவர்கள் மற்றும்,
இயலாதவர்களுக்குப் பகரமாக
மற்றவர்கள் கல்லெறியலாம். பகரமாக எறிபவர்கள்
 முதலில் தமக்காக
எறிந்துக் கொள்ள வேண்டும்.
பிறகு தம்மைப் பகரமாக
நியமித்தவர்களுக்காக எறிய வேண்டும்.
 வழக்கம் போல் ஹாஜிகள் ஒவ்வொரு
 கல்லாக எறிகின்றார்கள்.
ஒவ்வொரு கல் எறியும் போதும்
தக்பீர் கூறுகிறார்கள். முதல் இரண்டு
 ஜம்ராக்களிலும் நின்று
துஆச் செய்து விட்டு
மூன்றாவது ஜம்ரவாகிய ஜம்ரத்துல்
அகபாவில் கல்லெறிந்ததும், நின்று துஆச் செய்யாமல் திரும்பி
விடுகின்றனர்.

துல் ஹஜ் 13 ஆம் நாள்- ஹஜ்ஜின் 6
ஆம் நாள்...
குறிப்பிட்ட நாட்களில்
அல்லாஹ்வை நினையுங்கள்!
இரண்டு நாட்களில் விரைபவர் மீதும்
எந்தக் குற்றமும் இல்லை.
தாமதிப்பவர் மீதும் குற்றம் இல்லை.
(இது இறைவனை)
அஞ்சுவோருக்கு உரியது.
அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவனிடம்
ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதை அறிந்து
 கொள்ளுங்கள்! (திருக்
குர்ஆன் 2:203)

 11 ஆம் நாளும், 12 ஆம் நாளும் ஆகிய
 இரு தினங்கள்
மட்டும் கல்லெறிந்து விட்டு
புறப்படுபவர்கள் புறப்படலாம்.
ஆனால் மஃரிபுக்கு முன் புறப்பட்டு விட
 வேண்டும். இன்று
மினாவில் தங்கினால், 13 ஆம் நாளும்
 கல்லெறிந்து விட்டுத்
தான் புறப்படவேண்டும்.
இரண்டு நாட்கள் மட்டும் கல்லெறிந்து
 விட்டு
புறப்படுபவர்கள் மிகவும் குறைவு.
 பெரும்பாலானவர்கள் 13 ஆம் நாளும்
 கல்லெறிந்து
பூரணமாகத் தங்கள் ஹஜ்ஜுக் கடமையை
 நிறைவேற்றி விட்டுத்
தான் புறப்படுகின்றனர். இன்றைய
தினத்துடன் புனித ஹஜ்ஜின்
அனைத்து செயல்களும்
நிறைவடைகின்றன. எந்தப் புனிதக்
கடமையை நிறைவேற்ற
இப்பூவுலகின் பல்வேறு
பாகங்களிலிருந்தும் இப்புனித பூமிக்கு
 வந்தனரோ! அந்தப் புனிதக் கடமையின்
 அனைத்து செயல்களும்
இன்றோடு முடிவடைந்து விட்டன.
அல்ஹம்து லில்லாஹ் .

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்: 22-08-2017

No comments:

Post a Comment