Thursday, 24 August 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 16

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 16

========================

புறப்படத் தயாராகின்றனர்!

புனித ஹாஜிகள் புனித ஹஜ்ஜின் அனைத்துக் கடமைகளையும்
பூரணமாக நிறைவேற்றி
புண்ணியம் பெற்ற புனித ஹாஜிகள் ஒரு சில தினங்கள்
புனித மக்காவில்
அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட
விடுதிகளில் வந்து தங்கி
இளைப்பாறுகின்றனர்.
புனித மக்காவின் கடை வீதிகள் நிரம்பி வழிகின்றன. உலகின்
பல்வேறு நாடுகளிலிருந்தும்
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்-
புனித மக்காவின் கடைகள் முழுதும் குவிந்துக் கிடக்கின்றன.
புனித ஹாஜிகள் ஹஜ்ஜை முடித்து தம் இல்லங்களுக்குத்
திரும்பும்போது தம்மை அன்புடன்
எதிர் பார்த்து காத்திருக்கும்
உறவினர்களுக்காகவும்,
நண்பர்களுக்காகவும், அன்பளிப்புப்
பொருட்களை வாங்கிக்
குவிக்கின்றனர்.
திரு மறை குர்ஆன் பிரதிகள், தொழுகை விரிப்புகள், வாசனைத்
திரவியங்கள், சுவையான பேரீத்தம்
பழங்கள், புனித ஹஜ்ஜின்
நினைவாக காலமெல்லாம்
வைத்துப் பாதுகாக்க பல்வேறு
பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.
உறவினர்களுக்கு வழங்க ஜம்ஜம்
தண்ணீரையும் தேவையான அளவு
எடுத்து வைக்கத் தவறவில்லை.

(ஹஜ்ஜின் போது வியாபாரத்தின்
மூலம்) உங்கள் அருளைத் தேடுவது
உங்களுக்குக் குற்றமில்லை.
(திருக் குர்ஆன் 2:198)
உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ்,
ஆகியவை அறியாமைக் காலத்தில் கடை வீதிகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும், அங்கே வியாபாரம்
செய்வதை மக்கள் குற்றம் எனக்
கருதினார்கள். அப்போது உங்கள்
இறைவனின் அருளைத் தேடுவது
உங்கள் மீது குற்றமில்லை (2:198)
என்ற வசனம் இறங்கியது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رضي الله عنه
ஆதாரம்: புகாரி (2050)

எனவே புனித ஹாஜிகள் தமக்குத்
தேவையான பொருட்களை
வாங்கிக் கொள்வதில் தவறில்லை.

*‘தவாபுல் விதா”!*

”தவாபுல் விதா” எனும் பயணத் தவாபு யாரேனும் ஹஜ் செய்தால், அவரது கடைசிக் காரியம்
பைத்துல்லாஹ்வில் (தவாபு செய்வதாக) அமையட்டும்.
மாதவிடாய் ஏற்பட்டவர்களைத் தவிர, என்று நபி صلى الله عليه وسلم   அவர்கள் கூறி
அவர்களுக்கு விதிவிலக்கு
அளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு
உமர் رضي الله عنه  ஆதாரம்: திர்மிதி (866)
பயணத்திற்கான சகல
ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொண்டு பயணத் தவாபு செய்வதற்கு ஹாஜிகள் தயாராகி
விட்டனர். மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்து ஹஜருல் அஸ்வத்
இருக்கும் இடத்திலிருந்து
தவாபைத் தொடங்கி- ஏழு முறை கஃபாவை வலம் வந்து மகாமே
இப்ராஹீமில் தொழுது ஜம்ஜம் நீரருந்தி தங்கள் பயணத் தவாபை நிறைவு செய்கின்றனர்.
புனிதக் கஃபாவிடமிருந்து
பிரியா விடை பெறுகின்றனர்.
கஃபாவைக் காணக் காண ஹாஜிகளின் கண்கள் குளமாகின்றன.
கண்களிலிருந்து குற்றால
அருவியெனக் கொட்டுகிறது
கண்ணீர். ‘இந்தக் கஃபாவை விட்டுப் பிரியப் போகின்றோமே”
என்பதை நினைக்க நினைக்க, இனிய
இறை நேசர்களின் இதயங்கள்
அழுகின்றன. கண்குளிர உளம் மகிழ
இந்தக் கஃபாவைக் கண்டுக் கொண்டே
இங்கேயே இருந்துவிட
மாட்டோமா? என்று இந்த இனியவர்களின் இதயங்கள்
ஏங்குகின்றன. அழிகின்ற இந்த
உலகத்தை இதில் வாழும்
மனிதர்களை அநாச்சாரங்களும்,
அநியாயங்களும், அட்டூழியங்களும்,
நிறைந்த சமூகத்தினரையெல்லாம், கண்டு அலுத்துப் போன
இதயங்களுக்கு இத்தனை நாட்களும்
இங்கே அமைதி கிடைத்தது.
ஆறுதல் கிடைத்தது. இதை விட்டுச் செல்லப் போகின்றோம்
எனும் போது கல் நெஞ்சமும்
கரையத்தானே செய்யும்?

புனித ஹஜ்ஜை இனிதே நிறைவேற்றும் பெரும் பேற்றைத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி
செலுத்துகின்றனர். ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த
ஹாஜிகளாய் இங்கிருந்து
செல்கின்றனர். பாவங்கள் மன்னிக்கப்
பட்டவர்களாக பரிசுத்த மனதோடு பக்தி நிறைந்த உள்ளத்தோடு நல்ல இன்பத்தின் பொலிவோடு
இதயத்தின் வலிவோடு ஈமானின்
நிறைவோடு புனித
ஹாஜிகளாய் புண்ணிய சீலர்களாய்
இந்தப் புண்ணிய பூமியை விட்டுப்
புறப்படுகின்றனர்.

 ஹாஜிகள்
தாயகம் திரும்ப தத்தம்
வாகனங்களில் ஏறி அமர்ந்து விட்டனர்.
தரை வழியாக வந்த வாகனங்கள்,
சிங்காரச் சாலைகளில் சீறிப் பாய்ந்த
வண்ணம் புறப்படுகின்றன. நீலத்
திரைக் கடலில் நீந்தி வந்தக் கப்பல்கள்,
நீரைக் கிழித்த வண்ணம்
இஸ்லாமியத்
துறைமுகத்திலிருந்து மிதக்கத் துவங்கி விட்டன.வான் வெளிப்
பாதையில் வந்திறங்கிய
விமானங்கள்  ஜித்தாவின், மன்னர்
அப்துல் அஜீஸ் பன்னாட்டு விமானத்
தளத்திலிருந்து, திரும்பும்
பயணத்தைத் தொடங்கி
விட்டன.ஹாஜிகள் மனத் திரையில்
படக் காட்சிகளைப் போல் ஒவ்வொரு
காட்சிகளாக வந்து போகின்றன.
அவரவர் தம் இல்லங்களிலிருந்து
ஆர்வத்துடன் புறப்பட்டதும்
இஹ்ராம் உடை தரித்து இனிய
ஹஜ்ஜுக்காகத் தயாரானதும்
மக்கத் திரு நகரில் மகிழ்ச்சியுடன்
இறங்கியதும்
மஸ்ஜிதுல் ஹராமில் மனம் குளிர
நுழைந்ததும்
மாண்புடன் கஃபாவைத் தவாபு செய்ததும்
மகாமே இப்ராஹீமில் தொழுததும்
ஜம்ஜம் நீரருந்தியதும்
ஸபா- மர்வாவில் தொங்கோட்டம்
ஓடியதும்
புனித உம்ராவை இனிதே
நிறைவேற்றியதும்
மக்காவைச் சுற்றி ஒரு மகிழ்ச்சிப் பயணம்
 செய்ததும்
மதீனத் திரு நகரில் நுழைந்ததும்
மஸ்ஜிதுன்னபவியில் தொழுததும்
மாநபியின் மண்ணறையை
மாண்புடன் தரிசித்ததும்
மதீனாவைச் சுற்றி மனம் குளிரக்
கண்டதும்
மீண்டும் புறப்பட்டு மக்காவை
வந்தடைந்ததும்
புனித ஹஜ்ஜுக்கு ஆயத்தமானதும்
மினாவின் கூடாரங்களில்
தங்கியதும்
அரபாத் பெருவெளியில் நின்றதும்
அழுதழுது பாவமன்னிப்புக்
கேட்டதும்
முஸ்தலிபாவில் முழு இரவைக்
கழித்ததும்
ஜம்ராவுக்குச் சென்றதும்
மூன்று நாட்கள் கல்லெறிந்ததும்
அல்லாஹ்வுக்காக அறுத்துப்
பலியிட்டதும்
தலை முடிக் களைந்ததும்
தவாபுஸ்ஸியாராச் செய்ததும்
இறுதியாக இன்றைய தினம் பிரியா விடை
 பெற்று பயணத்
தவாபுச் செய்ததும்
பசுமரத்தாணி போல் பதிந்து
விட்டநினைவுகளை அசை
போடுகிறார்கள் அல்லாஹ்வின்
நேசர்கள்.

 ஆண்டாண்டு காலமாக
வந்து சென்ற அத்தனை கோடி
ஹாஜிகளின் அங்கீகரிக்கப் பட்ட
ஹஜ்ஜுக்கு சாட்சி கூறும் அரபாத்
பெருவெளியும்-உண்மை
விசுவாசிகளின் ஒப்புக்
கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு மௌன
சாட்சி கூறும் முஸ்தலிபா நிலப்
பரப்பும்-அடுத்தடுத்த ஆண்டுகளில்
வரப் போகின்ற அல்லாஹ்வின்
நேசர்களுக்காகக் காத்திருக்கின்றன.
இலட்சோப லட்சம் மக்கள் தங்கிச் சென்ற
மினாவின் கூடாரங்கள் வெறிச் சோடிக்
 கிடக்கின்றன. வரும்
ஆண்டுகளில் வரவிருக்கும்
புனிதர்களுக்காகக்
காத்திருக்கின்றன. இறையில்லம்
கஃபாவைச் சுற்றுதல் மட்டும் எப்போதும்
எப்போதும்  தொடர்ந்துக்
கொண்டே இருக்கும். சங்கிலித்
தொடரான இச்சுற்றுதல் சதா சர்வ
காலமும் தொடர்ந்துக் கொண்டே
இருக்கும். தினந் தோறும் வருகின்ற ஏராளமான
 மக்கள்
என்றென்றைக்கும் இந்த
இறையில்லத்தை சுற்றிக் கொண்டே
 இருப்பர்.
அண்டம் அழியும் வரை, மண் மாயும்
வரை, யுகம் முடியும் வரை ஓயாது
 ஒழியாது சுற்றிக்
கொண்டே இருப்பர்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி

கடலங் குடி.

பதிவு நாள்: 25-08-2017

No comments:

Post a Comment