Tuesday, 28 February 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.
இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.

  📚 அல்குர்ஆன் : 4:150,151

✨✨✨✨✨✨✨✨✨✨✨
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 " வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ”என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத எந்தக் காதும் கேட்டிராத எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான். எனினும் (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துள்ளது சொற்பமே! "

🎭அறிவிப்பாளர் :
 அபூஹுரைரா (ரலி)

📓நூல்:
ஸஹீஹ் முஸ்லிம் -5438

💥💥💥💥💥💥💥💥💥💥💥
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴

💥💥💥💥28-2-17💥💥💥💥

*🌾இஸ்லாம், இறைநம்பிக்கை குறித்த அடிப்படைத் தகவல்கள் தொடர் - 5*


*🌾இஸ்லாம், இறைநம்பிக்கை குறித்த அடிப்படைத் தகவல்கள் தொடர் - 5*

♻இஸ்லாத்தில் இறைக் கோட்பாடு

அல்லாஹ் ஒருவனென்றும், அவனது இறைத்தன்மையிலும், படைத்து பரிபாலிப்பதிலும் அவனுக்கு நிகராக யாரும் இல்லை என்றும் நம்புதல், அல்லாஹ் ஒரே ஒருவனே, அவனது அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் எவருக்கும் பங்கு இல்லை.

🎓அல்லாஹ்வே அனைத்தையும் சிருஷ்டித்தவன், அவனைத் தவிர உள்ள அனைத்தும் அவனால் சிருஷ்டிக்கப் பட்டவையே, சிருஷ்டிப்பில் அவனுக்கு பங்காளியாக எவரும் இல்லை, அல்லாஹ் இல்லாமையில் இருந்து உருவாக்கும் ஆற்றல் மிக்கவன், அவனது படைப்பினங்களுக்கு உபகாரம் செய்பவன், வாழ்வாதாரம் வழங்குபவன், அவர்களது அனைத்து செயற்பாடுகளையும் அறிபவன், அவர்களின் செயலுக்கேற்ப கூலி வழங்குபவன் என நம்புவது,வணங்கி வழிப் பட தகுதி வாய்ந்த இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என நம்புதல், அவனைத்தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது,மலக்கு (வானவர்) களும், நபிமார்களும் அல்லாஹ்வுக்கு பணிபுரியவும், வழிப் படவுமே படைக்கப் பட்டுள்ளனர்.

👨‍👩‍👦‍👦அவன் மனித சமூகத்துக்கான வாழ்வு நெறியை அவனது தூதர்களினூடாகவும், வேதங்களின் மூலமும் அறிவித்துக் கொடுத்தான், அல்லாஹ் என்றும் இருப்பவன், அவனுக்கு பெற்றோர் கிடையாது, குழந்தைகள் கிடையாது, அந்தம், ஆதி இல்லாதவன், யாரிடமும் எந்த தேவையும் அற்றவன்.

✅முதலுக்கு முதலானவன், முடிவுக்கு முடிவானவன், அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அவனுக்கு இணைக் கற்பித்தலைத் தவிர அனைத்து குற்றங்களையும் மன்னிப்பவன், அவனுக்கு அழகிய திருநாமங்களும், பூரண வருணனைகளும் உள்ளன, அதில் அவனுக்கு நிகராக யாருமில்லை,

🕋அவன் எம்மை எந்தவொன்றுமின்றி அனைத்து வளங்களோடும் அழகிய உருவில் சிருஷ்டித்து அநேக அருள்களைப் பாலித்திருக்கிறான், எவரேனும் தொழுகைகள், பிற வணக்கங்கள், வணக்க சாஷ்டாங்கங்கள் போன்றவற்றை அல்லாஹ்வுக்கன்றி வேறு எவருக்கேனும் (ஒரு மலக்காகவோ, தெரிவு செய்யப் பட்ட நபியாகவோ இருந்தாலும் சரியே) நிறைவேற்றுவார்களாயின், தான் ஒரு முஸ்லிமென உரிமைக் கோரிக்கொண்ட போதும் அவன் ஒரு முஸ்லிமே அல்ல.

⭕“மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்” என  (நபியே!) நீர் கூறுவீராக”  (அல் குர்ஆன் 6:162)(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

❤அல்லாஹ் (எவரிடத்திலும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.

*(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)*

பதிவு நாள்: *01-03-2017*


*🔴நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் தொடர் - 5*


*🔴நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் தொடர் - 5*

*🎯சிறுவன் உடலில் குர்ஆன் வசனம் உண்மையா*

*🔘யகுபோவ் என்ற சிறுவனின் உடலில் குர்ஆன் வசனம் எழுதப்பட்டிருப்பது உண்மையா*

🔘சமீபகாலமாக இது போன்ற வதந்திகள் அதிகரித்து வருகின்றன. மீன் உடம்பில் லாயிலாஹ் இல்லல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது என்றும் வானத்தில் அல்லாஹ் என்ற வார்த்தையின் வடிவில் மேகக் கூட்டம் திரண்டது எனவும் இன்னும் இது போன்று பல செய்திகள் மக்களுக்கு மத்தியில் பரப்பப்படுகின்றது.

🔘இணையதளத்தில் வெளியிடப்படும் இது போன்ற செய்திகள் நம்புவதற்கு ஏற்ற வகையில் இல்லை. ஒரு பேச்சுக்கு இவையெல்லாம் உண்மை என்று ஏற்றுக் கொண்டாலும் இவை இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கு எந்த வகையிலும் உதவாது.

🔘ஏனென்றால் மாற்று மதத்தில் உள்ளவர்களும் தங்கள் நம்பிக்கைக்குத் தோதுவாக இது போன்ற நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

🔘 பிள்ளையார் வடிவில் பப்பாளி வந்தது. ஏசுவினுடைய தோற்றத்தில் மேகக் கூட்டங்கள் திரண்டது என்றெல்லாம் பலவாறு கூறப்படுகின்றது.

🔘எதார்த்தமாக அமைந்த நிகழ்வுகளைத் தங்கள் நம்பிக்கைக்கு சாதகமாக ஆக்கிக் கொள்கின்றனர். இவர்களைப் போன்று முஸ்லிம்களாகிய நாமும் நடந்து கொள்ளக்கூடாது.

🔘குர்ஆன் அல்லாஹ்வுடைய வேதம் என்பதற்கு நாம் இது போன்ற பலவீனமான வாதங்களை வைப்பது கூடாது. மாறாக அறிவுப்பூர்வமான உண்மையான சான்றுகள் பலவற்றை குர்ஆனே நமக்கு கற்றுத் தருகின்றது.

🔘இந்தச் சான்றுகளே அறிவாளிகளிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

*(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)*

பதிவு நாள்: *28-02-2017*


Monday, 27 February 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) - ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான்.
"

  📚 அல்குர்ஆன் : 4:149

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

" அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ ”ரப்பனா! ஆத்தினா ஃபித்துன்யா ஹசனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹசனத்தன் வகினா அதாபந் நார்” (எங்கள் இறைவா! இம்மையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!) என்று பிரார்த்தித்துவந்தார்கள்."

🎭அறிவிப்பாளர் :
அனஸ்(ரலி)

📓நூல்:
ஸஹீஹ் முஸ்லிம் -5220

🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴

🕌🕌🕌🕌28-02-2017🕌🕌🕌🕌

🌾 *இஸ்லாம், இறை நம்பிக்கை குறித்த அடிப்படைத் தகவல்கள் தொடர் - 4


🌾 *இஸ்லாம், இறை நம்பிக்கை குறித்த அடிப்படைத் தகவல்கள் தொடர் - 4*

🚻நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல் குர்ஆன் 30:30,31)

🌝ஒவ்வொரு குழந்தைகளும் அதன் இயல்பு மார்க்கத்திலேயே பிறக்கின்றன; அக்குழந்தைகளை திசைத் திருப்பி சிலை வணங்கிகளாக, இணைவைப்பாளார்களாக மாற்றுகின்றவர்கள் அவர்களை சூழவுள்ள பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களே. மனிதர்கள் இவ்வுலகில் படைக்கப் பட்டபோது ஆரம்பத்தில் அனைவரும்  தூய மார்கத்திலேயே இருந்தனர். அனைவரும் ஓரிறைக் கொள்கையையே கடைப்பிடித்துக் கொண்டிருந்தனர். எனினும் காலவோட்டத்தில் பிளவு பட்டுக் கொண்டு வெவ்வேறு கொள்கைகளை கடைப் பிடிக்க ஆரம்பித்தனர். இதன்போதே சரியான மார்கத்தை தெளிவு படுத்தும் பொருட்டு இறைவன் இவ்வுலகில் தனது தூதர்களை  இறக்கிவைத்தான.  அப்படி அனுப்பப் பட்டவர்களில் முதல் தூதரே நூஹ் (அலை) அவர்கள். மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறில்லை; பின்னர் அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர்.  (அல் குர்ஆன் 10:19)(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்து விட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.  (அல் குர்ஆன் 2:213)

*❓இஸ்லாம் என்றால் என்ன?*

⭕சிலர் கருதுவது போன்று இஸ்லாம் சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன் முஹம்மத் என்பவரால் தோற்றுவிக்கப் பட்ட வெற்று மதம் அன்று. மாற்றமாக மனித குலத்தைப் படைத்த கடவுளினால் அவர்களின் வாழ்வு சீர்பெற அவர்கள் படைக்கப் பட்ட நாள் முதல் கொடுக்கப் பட்ட முழுமையான வாழ்வு நெறியே இஸ்லாம். இஸ்லாம் என்ற அரபு வார்த்தை, பணிவு, கட்டுப்படல், வழிப்படல் என்ற அர்த்தத்தோடு, சாந்தி சமாதானம் என்ற கருத்தையும் பொதிந்துள்ளது. எனவே எவர் இறைவனின் கட்டளைகளுக்கு முழுமையாக கட்டுப் பட்டு நடக்கின்றாரோ, அவர் ஈருலகிலும் நிம்மதியையும், சாந்தத்தையும் அடைவார். ஒருவன் முஸ்லிமாக கருதப் படுவதற்கு, முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்து இருக்க வேண்டும் அல்லது முஸ்லிம் மத்தியில் அறிமுகமான பெயர் வைத்திருக்க வேண்டும் என்ற எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லை. முஸ்லிம் என்றால் தன்னைப் படைத்த கடவுளுக்கு வழிப்படுபவன் என்பதே அர்த்தம். எனவே ஒருவன் தன்னைப் படைத்த இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு, அவன் தனது செய்தியை கூறுவதற்காக அனுப்பிய தூதர்களையும், அவர்களில் இறுதியாக அனுப்பப்பட்ட முஹம்மத் (அவர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்) அவர்களையும் ஏற்றுக் கொண்டு அவர்களின் போதனைகளை தன் வாழ்வில் எடுத்து நடந்தால்   போதும் அவன் முஸ்லிமாக மாறிவிடுவான்.

🈵இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள், மற்றும் நம்பிக்கைக் கொள்ள வேண்டிய அம்சங்களின் சுருக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது:

🆔*இஸ்லாத்தின் கடமைகள்*

*❤நம்பிக்கைப் பிரகடனம்:*

☝🏻“அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு”

*📃 மொழி பெயர்ப்பு:*

🚻“வணங்கத்தக்க நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுவதோடு, முஹம்மத் (ஸல்லல்லாஹு அளைஹிவஸல்லம்) அவர்கள் அவனின் அடிமையும், தூதருமாவார் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்”

✅ஒருவன் மேற்கூறப்பட்ட வசனங்களை உள்ளத்தினால் ஏற்றுக்கொண்டு நாவினால் மொழிந்தால் முஸ்லிமாக மாறிவிடுவான்.

🕋அதனைத் தொடர்ந்துள்ள இஸ்லாத்தின் அடிப்படை செயற்பாட்டுத் தூண்கள்: அவை:

கலிமா,
தொழுகை (சலாஹ்),
நோன்பு (சவ்ம்),
ஏழைவரி (சகாத்),
புனித மக்கா யாத்திரை (ஹஜ்)

*👔நம்பிக்கைக்கான தூண்கள்*

⬛இஸ்லாமிய நம்பிக்கையின் தோற்றமும், உருவாக்கமும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)  அவர்களின் பின் நிகழவில்லை. ஏற்கனவே அருளப்பட்ட இறை வேதங்கள் பொதிந்ததும், இறைத்தூதர்கள் கூறிய தூதையுமே அன்னாரும் தொடர்ந்தார்கள். இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடு எப்போதும் எவ்வித மாற்றங்களும் இன்றி அழியாமல் நிலைத்திருக்கும் உண்மையாகும். அது இறைவனைப் பற்றிய உண்மைகளையும், அவனது சிருஷ்டிகளோடுள்ள தொடர்ப்பையும், எமக்குப் போதிக்கிறது. இவ்வுலக வாழ்வின் உண்மை இதில் பொதிந்திருக்கிறது. அதில் மனிதனின் பங்களிப்பு என்ன? என்பதைப் பற்றியெல்லாம் பேசுகிறது..

🎓இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடுகள் பின்வரும் ஆறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு விளங்குகின்றன, அவை:

♻அல்லாஹ்,மலக்குகள், வேதங்கள், தூதர்கள், மறுமை நாள், விதி என்பனவற்றை நம்புவதாகும்.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *28-02-2017*


*🕋 மார்க்க கேள்வி எண்* 391:🕋


*🕋 மார்க்க கேள்வி எண்* 391:🕋

🎯 *அ)  மூஸா (அலை) அவர்கள் ஒருவனை கொலை செய்த குற்றத்தை அல்லாஹ் மன்னித்தவுடன் மூஸா(அலை) இறைவனிடம் என்ன கூறினார்❓*
("படிக்க வேண்டிய வசனம்  *சூரத்துல் கஸல் (வரலாறுகள்) 28:11-20*

✅பதில்:
என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக என்று மூஸா(அலை) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்:- *அல்குர்ஆன்: 28:17*

📜“என் இறைவா! என் மீது நீ அருள்புரிந்ததன் காரணமாக, நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 28:17)

🎯 ஆ) *காலத்தை எதற்காக ஏச வேண்டாம் என பெருமானார்  கூறினார்கள்❓*

✅பதில்:
 அல்லாஹ்வே காலத்தை படைத்ததினால்.

ஆதாரம்:- *ஸஹீஹ் புகாரி :4826,6181,7491*
*ஸஹீஹ் முஸ்லிம் :4519,4520, 4522,4523,4524*

📃4826. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📄6181. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில் தான் இரவுபகல் (இயக்கம்) உள்ளது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.203
ஸஹீஹ் புகாரி.

📑7491. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
“ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்) ஆவேன். என் கரத்திலேயே அதிகாரமனைத்தும உள்ளது. நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டுவருகிறேன்“ என்று அல்லாஹ் கூறினான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📋4519. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில்தான் இரவும் பகலும் உள்ளன.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

📒 4523. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காலத்தை ஏசாதீர்கள். ஏனெனில்இ அல்லாஹ்வே காலம் (படைத்து இயக்குபவன்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

📕4520. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான்;காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). நானே இரவு பகலை மாறி மாறி வரச்செய்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

📗4524. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் காலத்தை ஏச வேண்டாம். ஏனெனில்இ அல்லாஹ்வே காலம் (படைத்து இயக்குபவன்). உங்களில் யாரும் திராட்சையை (”கண்ணியம்” எனும் பொருள் கொண்ட) ”அல்கர்ம்” என்று பெயரிட்டு அழைக்க வேண்டாம். உண்மையில் கண்ணியம் (எனும் பெயருக்குத் தகுதியானவர்) முஸ்லிமான மனிதரே ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2
2. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
3. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
4. ஹக்கிம் - தென்காசி 2
5. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
6. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
7. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
8. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
9. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை 2
10. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
2. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
3. சுல்தான் - திருநெல்வேலி 2
4. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 2
5. முஜீப் - சென்னை (ராயபுரம்) 1
6. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
7. ஹுசைன் - நாகர்கோவில் 2
8. நூகு அமீர் -கீழக்கரை 2
9. சாதிக் - மல்லிப்பட்டினம் 1
10. அப்துல் பாசித் - சவுதி 2
11. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
12. முஹம்மது அஸ்லம் -கடையநல்லூர் 2
13. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
14. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2

🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *27-02-2017*

*🔴நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் தொடர் -4*


*🔴நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் தொடர் -4*

*🎯அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன*

🔘இறைவன் படைப்பில் ஆண் பெண் என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண் இனத்துக்கும் பெண் இனத்துக்கும் உடல் தோற்றத்தில் மட்டுமின்றி குணம் நடத்தை ஆகிய விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது.

🔘ஆனால் அரவாணிகள் என்போர் இதிலிருந்து மாறுபடுகின்றனர். ஆண்களைப் போன்ற உடல் தோற்றம் கொண்டிருந்தாலும் அவர்களின் உணர்வுகள் குணாதிசங்கள் நடத்தைகள் ஆகியவை அனைத்தும் பெண்களைப் போன்று அமைந்திருக்கும். அதாவது உடல் தோற்றத்தைக் கவனித்தால் இவர்கள் ஆண்களாகவும் குணாதிசியங்களைக் கவனித்தால் இவர்கள் பெண்களாகவும் இருக்கின்றனர்.

🔘இது இவர்களின் உடலில் ஏற்பட்ட பாதிப்பாகும். இந்தப் பாதிப்பு மனிதனின் சுய முயற்சி இல்லாமல் இறைவனுடைய சோதனையாக சில நேரங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதுண்டு.

🔘இதைப் பொறுத்துக் கொண்டால் அதற்குரிய கூலியை இறைவன் நிச்சயம் கொடுப்பான். மேலும் மருத்துவம் செய்து இந்தக் குறையைச் சீர் செய்ய முயற்சிக்கலாம். சிகிச்சைக்குப் பின் ஆண்களுக்குரிய அனைத்து அம்சங்களும் இவர்களுக்கு கிடைத்துவிடும் என்று மருத்துவர் கூறினால் இந்த மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.

🔘இவர்கள் ஆண்களைப் போன்றே ஆடைகளையும் நடத்தைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

🔘ஆனால் இன்றைக்கு அரவாணிகள் நவீன கருவிகளையும் மருந்துகைளையும் பயன்படுத்தி தங்களை பெண்களாக மாற்றிக் கொள்கின்றனர். செயற்கையாக பெண் போன்ற உடலமைப்பை உருவாக்கிக் கொள்கின்றனர். இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்வதை அல்லாஹ் தடை செய்துள்ளான்.

*📖அல்குர்ஆன்👇👇*

*அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளை யிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.*

*அல்குர்ஆன் (4 : 119)*

🔘உருவத்தில் ஆணாக இருந்து கொண்டு பெண்களைப் போன்று உடை அணிவதையும் அலங்காரம் செய்து கொள்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

*📚ஹதீஸ்👇👇*

*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள் .*

*அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)*

*நூல்: புகாரி (5885)*

*📚ஹதீஸ்👇👇*

*நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், "அவர்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்'' என்று சொன்னார்கள். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரை வெளியேற்றினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஒருவரைரை வெளியேற்றினார்கள்.*

*அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-லி*

*நூல் : புகாரி (5886)*

🔘மேலும் இன்றைக்கு உள்ள அரவாணிகள் சமுதாயத்திற்கு நிறைய தீங்குகளை ஏற்படுத்துகின்றனர். ஒழுக்கமான ஆண்களைக் கவர்ந்து விபச்சாரத்திற்கு அழைக்கின்றனர். இதன் மூலம் உயிர்கொல்லி நோயான எய்ட்ஸைப் பரப்புவதில் இவர்களே பெரும்பங்கு வகிக்கின்றனர்.

🔘பேருந்து நிலையம் இரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் மிகவும் துணிச்சலாக பிச்சை எடுக்கின்றனர். கை கால் நன்றாக இருந்தும் உழைத்து உண்பதற்கு உடலில் வலு இருந்தும் மானங்கெட்டு பிச்சை எடுக்கின்றனர். பிச்சை போடாவிட்டால் அசிங்கமான வார்த்தைகளால் திட்டுகின்றனர்.

🔘பலர் இவர்களின் கேடுகெட்ட நடத்தைக்கு அஞ்சி காசை தூக்கி எரிந்து விடுகின்றனர். இது ஒரு வகையான கொள்ளைத்
தொழிலாகும்.

*📚ஹதீஸ்👇👇*

*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஆயிஷா! மக்கள் எவரது அவருவருப்பான பேச்சுகளிலிருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரை விட்டு ஒதுங்குகிறார்களோ அவரே மக்களில்ல் தீயவர் ஆவார் என்றார்கள்.*

*அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி*

*நூல் : புகாரி (6054)*

🔘இது போன்று தீய நடத்தை கொண்ட அரவாணிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

*📚ஹதீஸ்👇👇*

*என்னிடம் (பெண்னைப் போன்று நடந்து கொள்ளும்) "அரவாணி ஒருவர் அமர்ந்திருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த "அரவாணி, (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவிடம், "அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணமுடித்துக் கொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்'' என்று சொல்வதை நான் செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இந்த அரவாணிகள் (பெண்களாகிய)

உங்களிடம் ஒரு போதும் வர (அனுமதிக்க)க் கூடாது'' என்று சொன்னார்கள்.*

*அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி)*

*நூல் : புகாரி (4324)*

🔘ஆண்கள் எவ்வாறு பெண்களுடைய சபைக்கு செல்லக் கூடாதோ அதைப் போன்று அலிகளும் செல்லக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே அரவாணிகளாக இருப்பவர்கள் ஆண்களுக்குரிய சட்டத்தின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பதை இதன் மூலம் அறியலாம்.

(♻இன்ஷா அல்லாஹ் நாளை வேறொரு பிரச்சனை மற்றும் தீர்வுடன் தொடரும்♻).

பதிவு நாள்: *27-02-2017*



🎾இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : 10


🏵⚓🏵⚓🏵⚓🏵⚓🏵⚓🏵

🔰 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 🔰

🌙நபிமார்கள் வரலாறு🌟

 🎾இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : 10


🕋 இப்ராஹிம் அலை அவர்களின் குடும்பமும்;மக்கத்து பூமியும்:

இப்ராஹீம் அலை அவர்கள்,ஹாஜர் தம் மகன் இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் இருவரையும் கொண்டுவந்து அவர்களை கஅபாவின் மேல்பகுதியில் இப்போதுள்ள ஜம்ஜம் கிணற்றுக்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே விட்டுவிட்டார்கள்.

🕌 பிறகு இப்ராஹீம் அலை அவர்கள் அவர்களை அங்கேயே விட்டுவிட்டு ஷாம் நாட்டிற்குத் திரும்பி சென்றார்கள்.அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் அலை அவர்கள் பின்தொடர்ந்து வந்து,"இப்ராஹீமே!மனிதரோ வேறெந்தப் பொரளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?".என்று கேட்டார்கள்.

இப்ராஹீம் அலை அவர்கள் அவர்களைத் திரும்பி பார்க்காமல் நடக்கலானார்கள்.ஆகவே,அவர்களிடம் ஹாஜர் அலை அவர்கள்,"அல்லாஹ் தான் உங்களுக்கு கட்டளையிட்டானா?என்று கேட்க,அவர்கள்,ஆம் என்று சொன்னார்கள்.அதற்கு ஹாஜர் அலை அவர்கள்,"அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டேன்"என்று சொல்லிவிட்டுத் திரும்பி சென்று விட்டார்கள்.

🏳‍🌈 இப்ராஹீம் அலை அவர்கள் சிறிது தூரம் நடந்துசென்று மலைக் குன்றின் அருகே,அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது தம் முகத்தை இறையில்லம் கஃபாவை நோக்கி,பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி,இந்தச் சொற்களால் பிரார்த்தித்தார்கள்.

எங்கள் இறைவா!எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்குள்,விவசாயத்துக்குத் தகுதியில்லாத பள்ளத்தாக்கில்,இவர்கள் தொழுகை நிறைவேற்றுவதற்காக பணியமர்த்திவிட்டேன்.எனவே எங்கள் இறைவா!மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக!இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!

📒அல்குர்ஆன் 14:37


 🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

📝 உலாமாக்கள் குழுமம்

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 27 / 2 / 17

☂☂☂☂☂☂☂☂☂☂☂

🎾இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : 9


🏵⚓🏵⚓🏵⚓🏵⚓🏵⚓🏵

🔰 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 🔰

🌙நபிமார்கள் வரலாறு🌟

 🎾இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : 9


☀ இறந்தவர்களை அல்லாஹ் எப்படி உயிர்பிக்கிறான்:

இப்ராஹீம் அலை நம்ரூதிடம்,"என் இறைவன் உயிர்பிப்பான்;இறக்கச் செய்வான்"என்று கூறினார்கள்.இது அல்லாஹ்வால் முடியும் என்பதை உறுதியாக அறிந்திருந்த அவர்கள்,இதைக் கண்ணால் பார்த்து மேலும் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என விரும்பினார்கள்.

🍀 இப்ராஹீம் அலை அவர்களின் கேள்வி:
எனவே தான்,இப்ராஹீம் அலை அவர்கள்,என் இறைவா!இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக'என்று கேட்டார்கள்.அப்போது அதை நீ நம்பவில்லையா?என்று அல்லாஹ் கேட்டான்.அதற்கு அவர் 'அவ்வாறன்று நம்பியிருக்கிறேன்;எனினும் எனது உள்ளம் நிம்மதியடைவதற்காக கேட்கிறேன்'என்று கூறினார்.

அதற்கு இறைவன் "நீர் நான்கு பறவைகளைப் பிடித்து அவற்றைத் துண்டுதுண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக"பின்னர் அவற்றின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு மலையில் வைப்பீராக.பின்னர் அவற்றை நீர் கூப்பிடுவீராக.அவை உம்மிடம் விரைந்து வந்துவிடும்.அல்லாஹ் வல்லமை மிக்கவனும் ஞானம் நிறைந்தவனும் ஆவான் என்பதை அறிந்து கொள்வீராக"என்று அல்லாஹ் கூறினான்.

📗அல்குர்ஆன் 2:260

இப்ராஹீம் அலை அவர்கள் நான்கு பறவைகளைப் பிடித்து அவற்றை அறுத்து பல துண்டுகளாக ஆக்கினார்கள்.அவற்றின் இறக்கைகளைப் பிய்த்து பல.பாகங்களாகக் கிழித்தார்கள்.பின்பு நான்கு பறவைகளின் கூறுகளையும் கலந்தார்கள்.அதன்பின் அவற்றைப் பல கூறுகளாக பிரித்து ஒவ்வொரு கூறையும் ஒவ்வொரு மலையில் வைத்தார்கள்.

💍 பின்னர் அல்லாஹ்வின் கட்டளைப்படி அவற்றை அழைத்துவிட்டு,அவை எப்படி உயிர்பெற்று வருகின்றன என்பதைப் பார்க்கலானார்கள்.உடனே அப்பறவைகளின் இறக்கை,இரத்தம்,சதை உள்ளிட்ட பாகங்கள் (வேறு மலையில் இருந்த) அவற்றின் மற்ற பாகங்களை நோக்கி பறந்து சென்று அவற்றுடன் இணைந்து கொண்டன.இறுதியில் ஒவ்வொறு பறவையும் தனியாக அவர்களிடம் விரைந்து வந்தன.

(இறந்து போனவற்றை மீண்டும் அல்லாஹ்வால் உயிர்ப்பிக்க முடியும் என்பதை) இப்ராஹீம் அலை அவர்கள் நேரடியாகப் பார்த்து,உள்ளம் நிம்மதி பெற வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் இந்த ஏற்பாட்டை செய்தான்.
     
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

📝 உலாமாக்கள் குழுமம்

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 27 / 2 / 17

☂☂☂☂☂☂☂☂☂☂☂

🎾இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : 8


🏵⚓🏵⚓🏵⚓🏵⚓🏵⚓🏵

🔰 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 🔰

🌙நபிமார்கள் வரலாறு🌟

 🎾இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : 8


🎋 பலஸ்தீன் நாட்டின் பக்கம் இப்ராஹீம் நபியின் ஹிஜ்ரத்:

இப்ராஹீம் நபியுடன் அவர்களின் மனைவியும்,ஒரு மனிதனரும்  ஈமான் கொண்டிருந்தனர்.மனைவியின் பெயர் சாரா.அம்மனிதரின்  பெயர் லூத்.இவர் பிற்காலத்தில் நபியாக்கப்பட்டார்.ஏகத்துவ பிரச்சாரத்தின் மூலம் எவரும் ஈமான் கொள்ளததால் இப்ராஹீம் அலை அங்கிருந்து புறப்பட்டார்கள்.

தந்தை ஈமான் கொள்ளததால் உறவை முறித்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார்கள்.

🌾 சாராவையும்,லூதையும் அழைத்துக் கொண்டு ஃபலஸ்தீன் நாட்டிற்கு சென்றார்கள்.ஃபலஸ்தீனிலிருந்து மிஸ்ர் நாட்டிற்கு சென்றார்கள்.

சாராவை மிஸ்ர் நாட்டிற்கு இப்ராஹீம் நபி அழைத்துச் சென்றபோது நடந்த வரலாற்றை நபி ஸல் அவர்கள் நமக்கு சொல்லிக் காட்டுகிறார்கள்:

ஒரு நாள் இப்ராஹீம் அலை அவர்களும்,அவர்களின் துணைவியார் சாரா அலை அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள்.அப்போது அந்த மன்னனிடம் அவர்களைக் குறித்து இங்கு ஒருவர் வந்திருக்கிறார்.அவருடன் அவருடைய அழகான மனைவியும் இருக்கிறாள்"என்று கூறப்பட்டது.

⚱ உடனே,இப்ராஹீம் அலை அவர்களை அழைத்து வரச்சொல்லி அந்த மன்னர் சாரா அலை அவர்களை யார் அந்தப் பெண்?எனக் கேட்க இப்ராஹீம் அலை அவர்கள் இவள் என் சகோதரி எனக் கூறி ஸாரா அலை அவர்களிடமும் அவனிடம் அவ்வாறே பதிலளிக்க கூறினார்.

அவன் சாரா அலை அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான்.சாரா அலை அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன்கையால் அள்ள முயன்றான்.உடனே,அவன் வலிப்பு நோயால் தண்டிக்கப்பட்டான்.அவன் சாரா அலை அவர்களிடம்,அல்லாஹ்விடம் எனக்காக என் கைகளை குணப்படுத்தும்படி பிரார்த்தனை செய்.நான் உனக்கு தீங்கு செய்ய மாட்டேன்"என்று சொன்னான்.உடனே சாரா அலை அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க,அவன் வலிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டான்.பிறகு, இரண்டாவது முறையாக அவர்களை அணைக்க முயன்றான்.முன்பு போன்றே மீண்டும் தண்டிக்கப்பட்டான்.அல்லது அதைவிட கடுமையாக தண்டிக்கப்பட்டான்.அப்போதும்,"எனக்காக என் கைகளை குணப்படுத்தும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்.நான் உனக்கு தீங்கு செய்ய மாட்டேன்"என்று சொன்னான்.அவ்வாறே அவர் பிரார்த்திக்க,அவன் வலிப்பிலிரந்து விடுவிக்கப்பட்டான்.

💎 பிறகு தன் காவலன் ஒருவனை அழைத்து,நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை.ஒரு ஷைத்தாதை தான் கொண்டு வந்துள்ளீர்கள்"என்று சொன்னான்.

பிறகு,ஹாஜிரா அவர்களை,சாரா அலை அவர்களுக்குப் பணியாளாக கொடுத்தான்.சாரா அலை அவர்கள்,இப்ராஹீம் அலை அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்பொழுது வந்தார்கள்.இப்ராஹீம் அலை அவர்கள் கைகளால் சைகை செய்து,'என்ன நடந்தது? என்று கேட்டார்கள்.அவர்,'அல்லாஹ் நிராகரிப்பாளனின் அல்லது தீயனின் சூழ்ச்சியை முறியடித்து,அவன் மீதே திருப்பி விட்டான்.ஹாஜிராவைப் பணிப் பெண்ணாக அளித்தான்"என்று சாரா அலை அவர்கள் பதில் கூறினார்கள்.

📚புகாரி:3358

     
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

📝 உலாமாக்கள் குழுமம்

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 27 / 2 / 17

☂☂☂☂☂☂☂☂☂☂☂

🎾இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : 7


🏵⚓🏵⚓🏵⚓🏵⚓🏵⚓🏵

🔰 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 🔰

🌙நபிமார்கள் வரலாறு🌟

 🎾இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : 7

🐠 அதிகாரம் படைத்த நம்ரூத் மன்னனிடம் இப்ராஹீம் நபிசெய்த அழகிய விவாதம்:

அல்லாஹ் தனக்கு ஆட்சியை கொடுத்துவிட்டான் என்பதற்காக இப்ராஹீமிடம்,அவருடைய இறைவன் குறித்து எதிர்வாதம் புரிந்தவனை (நபியே) நீர் கவனிக்கவில்லையா?"என் இறைவன் உயிர் கொடுப்பான்;இறக்கச் செய்வான்"என்று இப்ராஹீம்  கூறியபோது "நானும் உயிர் கொடுப்பேன்;இறக்கச் செய்வேன்"என அவன் கூறினான்.(அதற்கு) இப்ராஹீம் "அல்லாஹ் சூரியனை கிழக்கில் உதிக்கச் செய்கிறான்;(முடிந்தால்) நீ அதை மேற்கில் உதிக்கச் செய் பார்க்கலாம் என்று கூறினார்.அப்போது (அல்லாஹ்வை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான்.அநீதி இழைக்கும் மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்.

📕 அல்குர்ஆன் 2:258

நபி இப்ராஹீம் (அலை) அவர்களது காலத்தில் வாழ்ந்த 'பாபில்' நாட்டு அரசன் நம்ரூத் பின் கன்ஆன் என்பவன்தான் இறைவன் விஷயத்தில் அவர்களுடன் தர்க்கம் செய்தான்.

🔆 முஜாஹித் (ரஹ் )அவர்கள் கூறுகிறார்கள்:
உலகில் (ஒரே நேரத்தில்) கிழக்கு மற்றும் மேற்குபகுதிகளை ஆட்சி புரிந்த மன்னர்கள் நால்வர்.அவர்களில் இருவர் இறைநம்பிக்கையாளர்கள்;மற்றிருவர் இறைமறுப்பாளர்கள்.இறைநம்பிக்கையாளர்கள்,சுலைமான் பின் தாவூத் (அலை) மற்றும் துல்கர்னைன் ஆகியோர் ஆவர்.இறைமறுப்பாளர்கள் நம்ரூத் மற்றும் புக்த்த நஸ்ஸர் ஆகியோர் ஆவர்.
(அல்லாஹ்வே அறிவான்.)

இவ்வாறு நம்ரூத் அநீதியிழைத்து,தீவிரமாக இறைவனை மறுத்து,கடும் பிடிவாதமாக இருந்ததற்கு அவன் நீண்ட நாள் ஆட்சி புரிந்ததும் அவனது சர்வாதிகாரமுமே காரணம்.அவன் நானூறு ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாக கூறப்பட்டுள்ளது.

⌛நம்ரூத் நானும் உயிர் கொடுப்பேன்;நானும் மரணிக்கச் செய்வேன் என இப்ராஹீம் நபியிடம் கூறினான்;
கதாதா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
நம்ரூத் இவ்வாறு கூறியதின் பொருளாவது:மரண தண்டனை கைதிகள் இருவர் என்னிடம் கொண்டு வரப்படுவார்கள்.அவர்களில் ஒருவனைக் கொலை செய்துவிடும்படி நான் உத்தரவிடுவேன்.அதன்படி அவன் கொல்லப்படுவான்.மற்றொருவனை மன்னித்துவிடுமாறு கட்டளையிடுவேன்.அவன் விடப்படுவான்.இந்தக் கருத்தில்தான் "நான் உயிர் கொடுப்பேன்;இறக்கச் செய்வேன்"என அவன் கூறினான்.

ஸைத் பின் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ் அந்தச் சர்வாதிகார அரசனிடம் ஒரு வானவரை அனுப்பினான்.அவர் அவனிடம் அல்லாஹ்வை இறைவனாக ஏற்கும்படி கட்டளையிட்டார்.ஆனால்,அவன் மறுத்துவிட்டான்.இரண்டாவது தடவையாக அழைப்பு விடுத்தார்;அப்போதும் மறுத்து விட்டான்.மூன்றாவது தடவையாக அழைத்தார்;அப்போதும் அவன் மறுத்து விட்டான்.இறுதியில் அவர் நம்ரூதிடம்,"நீர் உன் படைகளை திரட்டு;நான் என் படைகளை திரட்டுகிறேன் (நாம் போரிட வேண்டியதுதான்)" எனக் கூறினார்.

🚦அவ்வாறே நம்ரூத் சூரியன் உதித்த வேளையில் தன் படைகளை திரட்டினான்.அப்போது அல்லாஹ் சூரியனே கண்ணுக்குத் தெரியாதவாறு கொசுக்களின் ஒருபெரும் கூட்டத்தை நம்ரூதின் படைகள் மீது அனுப்பி,அவர்களை அழிக்குமாறு ஏவினான்.அவை அவர்களின் சதையையும் இரத்ததையும் தின்று எலும்புகளை மட்டுமே விட்டுவைத்தன.கொசுக்களில் ஒன்று அரசனின் மூக்கில் நுழைந்தது.அல்லாஹ் அந்தக் கொசுவால் நானூறு ஆண்டுகள் அவனை வேதனை செய்தான்.அப்போது நம்ரூத் வேதனை தாளாமல் இரும்புக் கம்பியால் தனது தலையில் தானே அடித்துக் கொள்வான்.இறுதியில் அவன் அழிந்துபோனான்.

     
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

📝 உலாமாக்கள் குழுமம்

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 27 / 2 / 17

☂☂☂☂☂☂☂☂☂☂☂

🎾இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : 6


🍓🍎🍓🍎🍓🍎🍎🍓🍎🍓🍎

🔰 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 🔰

🌙நபிமார்கள் வரலாறு🌟

 🎾இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : 6

💆🏿 சிலை வணக்கத்திற்கு எதிராக  இப்ராஹிம் அலை அவர்கள் மேற்கொண்ட தந்திரம்;

ஒருநாள் திருவிழா சமயத்தில்  மக்கள் அனைவரும் ஊருக்கு வெளியே சென்றுவிட்டனர்.அத்தருணத்தில் இப்ராஹிம் அலை அவர்கள் சிலைகள் இருக்கும் இடத்திற்கு வந்து கோடாரியைக் கொண்டு அங்கிருந்த ஒரு பெரிய சிலையைத் தவிர்த்து மற்ற எல்லாச் சிலைகளையும் அடித்து உடைத்து நொறுக்கினார்கள்.நடுவில் நின்ற பெரிய சிலையின் கழுத்தில் அந்தக் கோடாரியை மாட்டினார்.

திரும்பி வந்த மக்கள் சிலைகள்  உடைந்திருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்தனர்.தம் தெய்வங்களைப் பற்றி அவதூராகப் பேசித்திரிந்த இப்ராஹிம் தான் இதைச் செய்திருக்கக் கூடும் என்று உணர்ந்து அவரை அழைத்தார்கள்.

🎪 அவரிடம் "இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை உடைத்தது நீ தானே?"என்று கேட்டார்கள்.அவர் மிகவும் தன்மையாக "இந்தப் பெரிய சிலை கழுத்தில் தானே கோடாரியுள்ளது,அதுதான் உடைத்திருக்கக்கூடும்.அந்தச் சிலையிடமே  கேட்டுக் கொள்ளுங்கள்"என்று சாமார்த்தியமாகப் பதிலளித்தார்.

அவர்கள் அவர் சொல்ல வரும் விஷயத்தை புரிந்து கொண்டார்கள்.நாம்தான் இவற்றை தெய்வங்களாக நம்பி தவறு இழைத்துவிட்டோம் என்று சிலர் சொன்னாலும் அவர்களால் நேரடியாக ஒப்புக் கொள்ள முடியவில்லை.

அவமானப் பட்டதை மறைக்கும் விதமாக,அதனைத் தவிர்ப்பதற்காக "சிலைகள் பேசாது என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா?"என்று கேட்டனர்.

⭐ "ஓ! அப்படியானால் சிலைகள் பேசாது என்பது உங்களுக்குத் தெரியுமா?அப்படி எந்த நன்மையும் தீமையும் அளிக்காதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்.அது உங்களுக்கு கேடுதான் என்று உணர்கிறீர்களா?நீங்கள் ஏதேனும் நன்மை செய்ய நாடினால் இவைகளை நெருப்பிலிட்டு எரியுங்கள்"என்று கூறினார்.

அவர் பேசியதை மக்கள் ஏற்கமுடியாமல் அவர்மீது கோபம் கொண்டனர்.இதைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இப்ராஹீம் அலை அவர்களை தீர்த்துக்கட்ட முயர்ச்சித்தின் நம்ரூத்.

இப்ராஹீமுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்.அவரை நெருப்பு குண்டத்தில் தூக்கியெறிய வேண்டுமென்று முடிவெடுத்தார்கள்.,

🔥 நெருப்புக் குண்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.இப்ராஹீம் அலை அவர்களைக் குண்டுகட்டாகக் கட்டி நெருப்பில் தூக்கி எறிந்தார்கள்.

அப்பொழுது, அல்லாஹ் நெருப்பிற்கு இவ்வாறு கட்டளையிட்டான்.
"நெருப்பே!இப்ராஹீமின் மீது குளிராகவும்,பாதுகாப்பாகவும் ஆகிவிடு".

📙அல்குர்ஆன்21:69

"எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்.அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்."என்றுஇப்ராஹீம் அலை நெருப்பிலிருந்தபடி கூறினார்கள்.

🌲 இப்ராஹம் அலை,நெருப்பில் பொசுங்கி அவர்கள் கதை முடிந்திருக்கும் என்று சூழ்ச்சியாளர்கள் நினைத்தனர்.ஆனால்,இப்ராஹீம் அலை அவர்கள் எவ்வாறு உள்ளே சென்றார்களோ அதேபோன்று நெருப்பிலிருந்து வெளியே வந்தார்கள்.இது அவர்களுக்கு மிகப்பெரும் கைசேதத்தையும,நஷ்டத்தையும் ஏற்படுத்திவிட்டது.

அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர்.அவர்களை நஷ்டமடைந்தோராக ஆக்கினோம்.

📗அல்குர்ஆன் 21:70
     
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

📝 உலாமாக்கள் குழுமம்

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 27 / 2 / 17

☂☂☂☂☂☂☂☂☂☂☂


Sunday, 26 February 2017

❤"நமது உடல் ஓர் அற்புத படைப்பு"அதில் ஆச்சரியப் படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!


*☪நள்ளிரவு தாண்டியும்* *📱"Whatsup" 💻"Fb"-ல்* *காலம்_கழிப்பவர்களே 👉*
*படிப்போம்🌺படிப்பினை பெறுவோம் ♻*

❤"நமது உடல் ஓர் அற்புத படைப்பு"அதில் ஆச்சரியப் படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!

👩‍👩‍👧‍👧அதில் ஒன்று தான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை *(Biological Clock System)!!!*

🎓இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி, நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது.  அது தான் "பினியல் சுரப்பி"

🔴கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த *PINEAL GLAND;* பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது!!

♨இந்த பினியல் சுரப்பி,"ஓர் அரிய  பொருளை "தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!

😇அது தான் "மெலடோனின்" (melatonin)

😳இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது!  புற்று நோயைக் குணப்படுத்தும், இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது என்று, இன்றைய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்!!  

✅மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்!!

💟ஆம்!  இரவின் இருளில்தான் ,பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்!!

♐அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை, நரம்பு மூலமாக அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!

☣ஒவ்வொரு நாளும் இஷாவுக்குப் பிறகு; இருளில் சுரக்கும் மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.!!

👁நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால்,பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!

🎓பினியல் சுரப்பி  மெலடோனினை "இஷா"வுக்குப் பிறகு சுரக்க ஆரம்பித்து "ஃபஜ்ருக்கு" இரண்டு மணி நேரத்துக்கு முன் நிறுத்தி விடும்!!

👀ஆகவே இரவு  நீண்ட நேரம் கண் விழித்திருந்தால்,நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக ஆவோம்.!!!!

😖எனவே; இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று  நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது!!

🌅அதே போன்று; அதிகாலையில் காற்று வளி மண்டலத்தில் "ஓஸோன்" நிறைந்திருக்கும்.  ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!

👑இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!

😣ஆக;  இரவு முற்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது! அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது!!

😃நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது!!!

⬛இதனைத்தான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே; அண்ணல் நபிகளார் அவர்கள் அழகுற எடுத்துக் கூறினார்கள்!!

❤அற்புதமாக வாழ்ந்தும் காட்டினார்கள்! அவர்களது வாழ்க்கை முறை; இஷாவுக்குப் பின் உடனே உறங்கி, முன்- அதிகாலையில் தஹஜ்ஜுத் துக்கு எழும்,வழக்கம் உடையதாக  இருந்தது!!

💢அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!

😇அதிகாலையில் எழும்போது; நமது மூளையும்,  இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!

👔அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும், திறமை மிக்கதாகவும்,  ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!

🕋எனவே முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும்,  அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெறவும்,  அனைத்துக்கும் மேலாக அல்லாஹ்வின் அருளைப் பெறவும்..!; ஒரு முஸ்லிம் முன் தூங்கி,முன் எழ வேண்டும்!!!!  "உங்கள்  வாழ்வு  வளர்ந்து  செழிக்கட்டும்"வஸ்ஸலாம்...

பதிவு நாள்: *27-02-2017*


♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான்.
"

   📚 அல்குர்ஆன் : 4:147

💢💢💢💢💢💢💢💢💢💢💢
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 " அல்லாஹ் கூறினான்: என் அடியான் ஒரு சாண் அளவு என்னை முன்னோக்கி வந்தால் ஒரு முழம் அளவு அவனை நான் முன்னோக்கிச் செல்வேன். ஒரு முழம் அளவு அவன் என்னை முன்னோக்கி வந்தால்இ (வலம் இடமாக விரிந்த) இரு கை நீட்டளவு அவனை நான் முன்னோக்கிச் செல்வேன். இரு கை நீட்டளவு அவன் என்னை முன்னோக்கி வந்தால்இ அதைவிட விரைவாக (நெருங்கி) அவனிடம் நான் செல்வேன்."

🎭அறிவிப்பாளர் :
அபூஹுரைரா (ரலி)

📓நூல் :
ஸஹீஹ் முஸ்லிம் -5196

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴

🌟🌟🌟🌟27-02-2017🌟🌟🌟🌟

🌾*இஸ்லாம், இறை நம்பிக்கை குறித்த அடிப்படைத் தகவல்கள் தொடர் - 3*


🌾*இஸ்லாம், இறை நம்பிக்கை குறித்த அடிப்படைத் தகவல்கள் தொடர் - 3*

*⁉யாருக்காக இஸ்லாம் (ஓரிறைக் கொள்கை)?*

👨‍👩‍👧‍👦இவ்வுலக வாழ்கையின் நோக்கத்தை புரிந்து கொண்டு, உண்மையான இலக்கை நோக்கி பயணிப்போர் அனைவருக்காகவும், இறைவனால் வழங்கப் பட்ட புத்தி நுட்பத்தை செயல்படுத்தி இறைவனை புரிந்துக் கொண்டோர் அனைவருக்காகவும், இறைவனுக்கு  கட்டுப்பட்டு அவனின் அருளை காண விரும்புவோர் அனைவருக்காகவும், இறைவனின் வார்த்தைகளை புரிந்து கொண்டு அதன்படி நடக்க விரும்புவோர்  அனைவருக்காகவும், இறைவன் அருளியுள்ள அருட்கொடைகளைப் புரிந்து கொண்டு அதற்கான நன்றி உணர்வையும், இறை நேசத்தையும் உள்ளத்தில் கொள்வோருக்காகவும், படைத்து பரிபாளிக்கும் இறைவனுக்கு தனது செயற்பாடுகள் அனைத்தையும் அர்ப்பணம் செய்ய விரும்புவோர் அனைவருக்காகவும், இறைவேதங்கள், இறை தூதர்கள் அனைவரையும் ஏற்றுக் கொண்டோருக்காகவும், வாழ்க்கைப் படலத்தை முன்னெடுத்துச் செல்வதில் சிரமங்களை எதிர் கொண்டு தீர்வுத் திட்டத்தை தேடுவோருக்காகவும், நான், நீங்கள் உட்பட ஈருலகிலும் நிம்மதியான வாழ்வையும், இறைவன் சித்தப்படுத்தி வைத்துள்ள பேரின்பங்களையும் அடைய விரும்புவோர் அனைவருக்காகவும், ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல் குர்ஆன் 22:34)

🎓ஆணாயினும், பெண்ணாயினும் இறை நம்பிக்கையாளராக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (அல் குர்ஆன் 16:97)

*♻மனித சமூகத்தின் இயல்பு மார்க்கம் இஸ்லாம்*

இறைவன் இப்பிரபஞ்சத்தைப் படைத்து, அதில் மனிதர்கள் மற்றும் ஜின்னினங்களை அவனை வணங்குவதற்காகவே படைத்துள்ளான்.அந்த நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றும் பொருட்டு தேவையான எல்லா வளங்களையும், வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளான்.

🌎இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.    அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.

🌴நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன். (அல் குர்ஆன் 51: 56, 57,58)அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; (அல் குர்ஆன் 2:29) இப்படியாக படைக்கப் பட்ட மனிதனின் உள்ளத்திலும் இறை நம்பிக்கையையும், இறை  நேசத்தையும் இறைவன் இயல்பாகவே  விதைத்துள்ளான்.

💐மனிதர்கள் அவர்கள் படைக்கப் பட்டுள்ள இயல்பு நிலையில் அப்படியே விடப்பட்டார்கள் என்றால் இறைவனை இயல்பாகவே நம்பிக்கைக் கொள்வார்கள், அவனுக்கு அடி பணிவார்கள், அவனை நேசிப்பார்கள், அவனுக்கு யாதொன்றையும் இணை கற்பிக்க மாட்டார்கள்.ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலை நிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

 (♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *27-02-2017*


*🔴நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் தொடர் - 3


*🔴நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் தொடர் - 3*

*🎯ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா? ஹராமா?*

🔘ஷேர் மார்க்கெட்  என்பது ஒரு கம்பெனி நடத்துகிறவர் தன்னிடமுள்ள 1 கோடி மதிப்புள்ள தொழிலில் 30 லட்சம் ரூபாய் அளவிற்கு பிறர் கூட்டு சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிப்பார். ஒரு பங்கு என்பது 10 ரூபாயக்கு மேல் தாண்டக் கூடாது என்பது தான் சட்ட விதிமுறை. எனவே இந்த 10 ரூபாய் உள்ள ஒரு பங்கை 100 பங்காக  சேர்த்து முதல் தடவையாக அதை 1000 ரூபாய் மதிப்பாக விற்பனை செய்வார். இவர் முதலில் நிர்ணயம் செய்யும் இந்த 1000 ரூபாய்க்கு முக மதிப்பு என்று பெயர்.

🔘இதன் பின் முக மதிப்பாக உள்ள பங்கின் மதிப்பை நாட்கள் செல்ல செல்ல அதிகரிக்கிறார். உதாரணமாக 1000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பங்கின் மதிப்பு 2000, 3000, 4000 என்று ஏறி சில நேரங்களில் 1000 மதிப்புள்ள பங்கு 5 இலட்சம் வரை கூட சென்று விடும். 30 இலட்சம் மதிப்புள்ள பங்கு 10 மடங்காகி 3 கோடி என்றாகி விடுகிறது.

❌இதில் மார்க்கம் தடை செய்துள்ள பல அம்சங்கள் அடங்கியுள்ளன.

🔘30 இலட்சம் மதிப்புள்ளது 3 கோடியாக ஆனதால் அவரிடமுள்ள 70 இலட்சம் மதிப்புள்ள பங்கின் மதிப்பு 7 கோடி என்று இல்லாததை இருப்பதைப் போன்று  காட்டப்படுகிறது.

🔘இந்தக் கம்பெனியில் நாம் சேர்ந்தால் நம்முடைய பங்கு ஹலாலான தொழிலில் இடப்பட்டுள்ளதா? அல்லது ஹராமான தொழிலில் இடப்பட்டுள்ளதா? என்பது தெரியாது. ஆகுமான தொழில் என்று உறுதியாகத் தெரியாத வரை அதில் நாம் முதலீடு செய்வது கூடாது.

🔘நாம் 10000 முக மதிப்பில் உள்ள ஒரு பங்கை சில நாட்கள் கழித்து 5 இலட்சத்திற்கு வாங்குகிறோம் என்று வைத்து கொள்வோம். இலாப சதவீதத்தை நாம் வாங்கிய 5 இலட்சத்திலிருந்து கணக்கிடாமல் ஆரம்பத்தில் உள்ள 10000 என்ற முகமதிப்பிலிருந்து கணக்கிட்டு நமக்கு இலாபத்தைக் கொடுப்பார். இது நம்மை ஏமாற்றுகின்ற மோசடியாகும்.

🔘ஒரு வியாபாரத்தில் கூட்டு சேர்பவர்கள் அந்த வியாபாரத்தின் மொத்த கணக்கு வழக்குகளைப் பார்ப்பதற்கு உரிமை பெற்றவர்கள். ஆனால் இந்த முறையில் கூட்டு சேர்ந்தவர்களுக்கு இந்த உரிமை வழங்கப்படாது. எந்தத் தொழிலில் முதலீடு செய்யப்பட்டது? எவ்வளவு செலவானது? எவ்வளவு இலாபம் வந்தது? என்ற எந்த விபரத்தையும் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது.

(♻இன்ஷா அல்லாஹ் வேறொரு பிரச்சனை மற்றும் தீர்வுடன்  தொடரும்♻)

பதிவு நாள்: *26-02-2017*

Saturday, 25 February 2017

🌾 *இஸ்லாம், இறை நம்பிக்கை குறித்த அடிப்படைத் தகவல்கள் _தொடர் - 2_*


🌾 *இஸ்லாம், இறை நம்பிக்கை குறித்த அடிப்படைத் தகவல்கள் _தொடர் - 2_*

📃தெரிவு எங்கள் கைகளிலேயே இருக்கிறது; எதைத் தெரிவு செய்யப் போகிறோம்?

✅அல்லாஹ் எங்களை நேர்வழியில் நடத்துவானாக! ஆமீன்.

⁉எதற்காக இஸ்லாம் (ஓரிறைக் கொள்கை)?

👨‍👩‍👧மனித சமூகத்துக்காக அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) முதல் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் வரை அனைத்து நபிமார்களினதும் ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மற்றும் ஏனைய நபிமார்கள் அனைவரும் அழைப்பு விடுத்த மார்க்கமும் இஸ்லாமே என்பதாலும், அல்லாஹ்வின் வசனங்கள் அடங்கிய இறுதி வேதமாகிய அல் குர்ஆன் மற்றும் ஏனைய இறை வேதங்களின் மூலம் அங்கீகாரம் பெற்ற ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,மேலும் தனி மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, அரசியல், பொருளாதாரம் போன்ற அனைத்து துறைகளுக்குமான உயரிய வாழ்வு நெறிகளைக் கற்றுத்தருவதோடு மற்றுமின்றி அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளை வழங்கும் உன்னத மார்க்கம் இஸ்லாமே என்பதாலும், பாரபட்சமின்றி எத்தரத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, எக்குலத்தை சார்ந்திருந்தாலும் சரி, அனைவருக்கும், அனைத்து காலங்களுக்கும் பொருந்தும் விதமான நேர்மையான சட்டங்களையும், தீர்வுகளையும் கொண்டு சர்வதேச தன்மையுடன் விளங்கும் ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும், அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்?

📖வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும். (அல் குர்ஆன் 3:83)இன்னும் இஸ்லாம் (ஒரே இறைவனுக்கு வழிப்படுதல்) அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது;

📋மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல் குர்ஆன் 3:85)

📕நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் (ஒரே இறைவனுக்கு வழிப்படுதல்) தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான். (அல் குர்ஆன் 3:19) என இறைவன்

🎓அல்குர்ஆனில் கூறியிருப்பதாலும்
இஸ்லாத்தையே எமது மார்க்கமாக தெரிவு செய்து கொள்வோம்!

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *26-02-2017*


♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" யார் மன்னிப்புக் கேட்டு சீர்திருந்தி, அல்லாஹ்வை (தம் நற்செய்கைகள் மூலம்) கெட்டியாகப் பிடித்து, தங்களுடைய சன்மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகத் தூய்மையாக்கியும் கொண்டார்களோ அவர்கள் முஃமின்களுடன் இருப்பார்கள்; மேலும் அல்லாஹ் முஃமின்களுக்கு மகத்தான நற்கூலியை அளிப்பான்.
"

   📚 அல்குர்ஆன் : 4:146

📒📒📒📒📒📒📒📒📒📒📒
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

" மது தடைசெய்யப்பட்ட நாளன்று நான் அபூதல்ஹா (ரலி) அவர்களது இல்லத்தில் மக்களுக்கு மது பரிமாறிக்கொண்டிருந்தேன். அந்நாட்களில் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்கள்இ கனிந்த பேரீச்சம் பழங்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பேரீச்ச மதுவையே (ஃபளீக்) அவர்கள் அருந்தினர்.
(மதுவைத் தடைசெய்யும் இறைவசனம் அருளப்பெற்றதும்) ஒரு பொது அறிவிப்பாளர் ”(மக்களே!) மது தடைசெய்யப்பட்டுவிட்டது” என்று அறிவிப்புச் செய்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என்னிடம்)இ ”வெளியே போய் பார்(த்து வா)” என்று கூறினார்கள். அவ்வாறே நான் வெளியில் சென்றேன். அங்கு பொது அறிவிப்பாளர் ஒருவர் ”அறிந்துகொள்ளுங்கள். மது தடைசெய்யப்பட்டுவிட்டது” என்று அறிவிப்புச் செய்துகொண்டிருந்தார்.
(இந்த அறிவிப்பைக் கேட்ட அனைவரும் மதுவை வீட்டுக்கு வெளியே ஊற்றினர்.) மதீனாவின் தெருக்களில் மது ஓடியது. அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம்இ ”வெளியே சென்று இதையும் ஊற்றிவிடு” என்று (தம்மிடமிருந்த மதுவைக் கொடுத்து) கூறினார். அவ்வாறே நான் அதை ஊற்றிவிட்டேன்.
அப்போது மக்கள் (அல்லது மக்களில் சிலர்) ”மதுஇ தம் வயிறுகளில் இருக்கும் நிலையில் இன்ன மனிதர் கொல்லப்பட்டார். இன்ன மனிதர் கொல்லப்பட்டார் (அவர்களின் நிலை என்னவாகுமோ!)” என்று கூறினர்.
(இந்த வாசகம் அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பிலேயே உள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை என அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்).
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்இ ”(இறைவனை) அஞ்சிஇ இறைநம்பிக்கை கொண்டுஇநல்லறங்கள் செய்துஇ பிறகு அஞ்சிஇ இறைநம்பிக்கை கொண்டுஇ பின்னரும் அஞ்சிஇ நன்மைகளைச் செய்வார்களானால் (தடுக்கப்பட்டவற்றை முன்னர்) உட்கொண்டதற்காக இறைநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர்மீது எந்தக் குற்றமுமில்லை” (5:93) எனும் வசனத்தை அருளினான்."

🎭அறிவிப்பாளர் :
அனஸ்(ரலி)

📓நூல் :
ஸஹீஹ் முஸ்லிம்-4006

⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴

⛩⛩⛩⛩26-02-2017⛩⛩⛩⛩

*🕋 மார்க்க கேள்வி எண் 390:*


*🕋 மார்க்க கேள்வி எண் 390:*
_(மூன்று மதிப்பெண் கேள்வி, குர்ஆன் கேள்விக்கு இரண்டு மதிப்பெண்கள்)_

🎯 *அ)வழி கெடுகிறவரிடம் நபியை அல்லாஹ் என்ன கூற சொல்கிறான்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துந் நம்லி (எறும்புகள்) 27:91-93"*)

✅பதில்:
🎓.“நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்.

🎓எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

🎓அவன் சீக்கிரத்தில் உங்களுக்குத் தன் அத்தாட்சிகளைக் காண்பிப்பான்; அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்”

🎓உம்முடைய இறைவன் நீங்கள் செய்வதை விட்டும் பராமுகமாக இல்லை.

ஆதாரம்:- *அல்குர்ஆன்: 27:92 & 93*

📕இன்னும்: குர்ஆனை ஓதி வரவும் (நான் ஏவப்பட்டுள்ளேன்); ஆகவே எவர் நேர்வழியை அடைகிறாரோ - அவர் நேர்வழியடைவது அவர் நன்மைக்கேயாகும்; அன்றியும் எவர் வழி கெடுகிறாரோ (அவருக்குக்) கூறுவீராக: “நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்.“
(அல்குர்ஆன் : 27:92)

📒இன்னும் கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவன் சீக்கிரத்தில் உங்களுக்குத் தன் அத்தாட்சிகளைக் காண்பிப்பான்; அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” மேலும் உம்முடைய இறைவன் நீங்கள் செய்வதை விட்டும் பராமுகமாக இல்லை.
(அல்குர்ஆன் : 27:93)

🎯 *_ஆ)நதியில்  மிதந்து வந்த மூஸா (அலை) அவர்களைக் குறித்து ஃபிர்அவ்னிடம் அவனது மனைவி என்ன கூறினார்❓_*
("படிக்க வேண்டிய வசனம்  *சூரத்துல் கஸல் (வரலாறுகள்) 28:01-10*)

✅பதில்:
🎓 இக்குழந்தை எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்.

ஆதாரம்:- *அல்குர்ஆன்: 28:9*

📄இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.
(அல்குர்ஆன் : 28:9)

🎯 *இ) எவர்களுடைய உள்ளம் பறவைகளின் உள்ளம் போல் இருக்கும் என பெருமானார்  கூறுகிறார்கள்❓*

✅பதில்: சொர்க்கத்தில் நுழையயக்கூடிய சில மக்களின் உள்ளங்கள்.

ஆதாரம்:- *முஸ்லிம்:  5462*

📖5462. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உள்ளங்கள் பறவைகளின் உள்ளத்தைப் போன்றிருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 3
2. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 3
3. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை (தஞ்சை) 3
4. அபூதல்ஹா - திருநெல்வேலி 3
5. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 3
6. ஹக்கிம் - தென்காசி 3
7. ஹபிப் ரஹ்மான் - துபாய் 3
8. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 3
9. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 3
10.ஷாஜகான் - சென்னை 2
11. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 3
12. பீர் முஹம்மது - திருநெல்வேலி 3

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 3
2. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 3
3. சுல்தான் - திருநெல்வேலி 3
4. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
5. நூகு அமீர் -கீழக்கரை 3
6. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 3
7. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 3
8. அப்துல்காதர் - திருநெல்வேலி 3
9. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 3
10. ஹுசைன் - நாகர்கோவில்3
11. பத்ருத்தீன் - கடையநல்லூர் 3
12.அப்துல் பாசித் - சவுதி 3
13. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 3

⏱⏱⏱⏱⏱⏱⏱⏱⏱⏱⏱

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

⏱⏱⏱⏱⏱⏱⏱⏱⏱⏱⏱

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *26-02-2017

*🔴நவீன பிரச்சனைகளும், தீர்வுகளும் தொடர் - 3*


*🔴நவீன பிரச்சனைகளும், தீர்வுகளும் தொடர் - 3*

*🎯ஒட்டகத்தின் சிறுநீரில்* *மருத்துவ குணம் உண்டா*
*ஸஹீஹுல்* *புஹாரி 5686 வது* *ஹதீஸில் ஒட்டகத்தின் சிறுநீர் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டதாக உள்ளது. இது சவூதியில் நடைமுறையில் உள்ளது. இது பற்றிய விளக்கம்*

🔘மருத்துவத்துக்காக ஒட்டகத்தின் பாலையும் அதன் சிறுநீரையும் பருகுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனப் பின்வரும் செய்தி கூறுகின்றது.

*📚ஹதீஸ்👇👇*

*"உக்ல்' அல்லது "உரைனா' குலத்தாரில் சிலர் (மதீனாவிற்கு) வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே (அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க) பால் ஒட்டகங்களை பெற்றுக்கொண்டு, அவற்றின் சிறு நீரையும், பாலையும் பருகிக்கொள்ளுமாறு அவர்களை நபியவர்கள் பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் (ஒட்டகங்களை நோக்கி) நடந்தனர். (அவற்றின் சிறுநீரையும் பாலையும் பருகி) அவர்கள் உடல் நலம் தேறினர்.*

*அறிவிப்பவர் : அனஸ் (ரலி)*

*நூல் ; புகாரி (233)*

🔘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒட்டகப் பாலும் அதன் சிறுநீரும் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. இது அன்றைய காலத்து மக்களின் மருத்துவ முறையாகும்.

🔘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் இந்த வழிகாட்டலைக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக அன்றைய காலத்தில் அவர்களுக்கு இருந்த உலக அறிவை அடிப்படையாக வைத்தே இவ்வாறு கூறியுள்ளார்கள்.

🔘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்கம் தொடர்பாகக் கட்டளையிட்டால் அதை ஏற்று செயல்படுத்துவது நம்மீது கடமை. ஆனால் அவர்கள் இது போன்று உலக விஷயம் தொடர்பாக ஏதேனும் கூறினால் அது வஹீ அடிப்படையில் கூறப்பட்டதல்ல. எனவே அதை ஏற்பதற்கும் ஏற்காமல் இருப்பதற்கும் நமக்கு அனுமதி வழங்கியுள்ளார்கள்.

🔘உலக விஷயம் தொடர்பாக அவர்கள் ஏதாவது கருத்து தெரிவித்து அக்கருத்து தவறாக இருக்குமேயானால் அதை நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. பின்வரும் சம்பவம் இதைத் தெளிவாக உணர்த்துகின்றது.

*📚ஹதீஸ்👇*

*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்ச மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்து கொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை சூல் கொள்ளச் செய்வதாக அவர்கள் கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். மக்கள் "இவ்வாறே நாங்கள் செய்து வருகிறோம்'' என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் நன்றாயிருந்திருக்கலாம்'' என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டு விட்டனர்.*
*வருடத்தில் கனிகள் "உதிர்ந்து விட்டன' அல்லது "குறைந்து விட்டன'. அதைப் பற்றி மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அவர்கள், "நான் ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே'' என்று சொன்னார்கள்.*

*அறிவிப்பவர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)*

*நூல் : முஸ்லிம் (4712)*

🔘மற்றொரு அறிவிப்பில் *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உங்கள் உலக விவகாரங்கள் பற்றி (என்னை விட) நீங்களே நன்கு அறிந்தவர்கள்'' என்று சொன்னதாக உள்ளது. (4713)*

🔘ஒட்டகத்தின் பாலிலும் சிறுநீரிலும் மருத்துவ குணம் இருந்து அதைப் பயன்படுத்த விரும்பினால் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அதைவிடச் சிறந்த மருத்துவ முறை கண்டறியப்பட்டால் அதைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இதனால் நபிவழியை நாம் மீறியவர்களாக மாட்டோம்.

🔘நபிகள் நாயகம் ஸல அவர்களுக்கு உஹதுப் போரில் காயம் ஏற்பட்டு இரத்தம் பீரிட்டு ஓடியது. இதை நிறுத்த சாம்பலை அந்த இடத்தில் பூசி இரத்தம் கசிவதை நிறுத்தியதாக *புகாரியில் ஹதீஸ் உள்ளது. 243, 2903, 2911, 3037, 4075, 5248, 5722*

🔘இப்போது விபத்து ஏற்பட்டு இரத்தம் ஓடினால் சாம்பலைப் பூசுவது நபிவழியைப் பின்பற்றுவதாக ஆகாது. அன்றைக்கு அது தான் ஒரே வழியாக இருந்ததால் அதைத் தான் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் இன்று இரத்தம் ஓடுவதை நிறுத்த சிறந்த வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதைப் பயன்படுத்துவது தான் நபிவழியைப் பின்பற்றும் சரியான வழியாகும்.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *25-02-2017*


🌾இஸ்லாம், இறை நம்பிக்கை குறித்த அடிப்படைத் தகவல்கள் தொடர் 1:


🌾இஸ்லாம், இறை நம்பிக்கை குறித்த அடிப்படைத் தகவல்கள் தொடர் 1:

🕋இஸ்லாம் என்பது மனித சமூகத்தைப் படைத்த இறைவனால் அவர்களுக்காகத் தெரிவு செய்யப் பட்ட வாழ்வு நெறியாகும்.

🎓அந்த இஸ்லாம் பற்றிய சிறு குறிப்புக்களை எளிய நடைமுறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் இங்கே நூல் வடிவில் தருகிறோம். பொதுவாக இஸ்லாத்தைப் பற்றி சுருக்கமாக அறிந்துக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த நூல் இன்ஷா அல்லாஹ் மிக பயனுள்ளதாக அமையும் என  நம்புகிறோம். இஸ்லாம் பற்றிய மேலதிக விவரங்களைப் புரிந்துக் கொள்ள அது சம்மந்தப் பட்ட நூல்களையோ, அறிஞர்களையோ அணுகி தெளிவுப் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

📕இதனை நூல் வடிவில் கொண்டுவர உதவிய எல்லாம் வல்ல அல்லாஹ்வை புகழ்வதோடு, இந்த முயற்சியை பலன் மிக்கதாக ஆக்கியருள வேண்டிப்  பிரார்த்திக்கின்றேன்.

🎓தெரிவு எங்கள் கைகளிலேயே இருக்கிறது, எதைத் தெரிவு செய்யப் போகிறோம்? பூமி, செடிகொடிகள், பூச்சி இனங்கள், மிருகங்கள், பறவைகள், மீன் வகைகள், ஆகியவற்றோடு  ஏனைய படைப்புக்களும் எப்படி சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன? என்பது பற்றி நீங்கள் சற்று சிந்தித்துப் பார்த்ததுண்டா?அவற்றின் வாழ்வுக்கான வழிகாட்டலும், முறையான நிர்வாகக் கட்டமைப்பும் பற்றியெல்லாம் தெளிவு பெற்றிருக்கிறீர்களா?சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள், மேகங்கள், வீசும் காற்று ஆகியவற்றோடு ஏனைய சிருஷ்டிப்புகளும் எவ்வாறு உலக வாழ்வுக்கான பங்களிப்பை உரிய முறையில் அளிக்கின்றன என்பதை அறிவீர்களா? தக்க முறையில் அமைந்துள்ள உங்கள் உடல் அமைப்பைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள், அவற்றின் உறுப்புக்கள் எப்படி இணைந்து செயற் படுகின்றன?.

🎓இத்தகைய சிந்தனைக்கு எட்டாத படைப்புக்களை சிருஷ்டித்தது யார்? அவற்றின் திட்டமான ஒருங்கிணைப்பை நிர்மாணித்தது யார்? சிக்கல்கள் நிறைந்த இப்பிரமாண்டமான அமைப்பை முழுமையாக நிர்வகிப்பது யார்? இந்தப் படைப்புக்களின் சிருஷ்டிப்பு விவகாரத்தில் யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஏன் முடி போன்ற ஓர் சிறிய படைப்பைக் கூட வேறு எவராலும் உருவாக்க முடியாது!

🎓படைத்தவனும், ஆளுபவனும் ஒரே இறைவனே, அவனே உண்மை இறைவனாவான். ஒரு இறைவனுக்கும் அதிகமாகப் பல இறைவன்கள் இருந்தால் வானங்களிலும், பூமியிலும் குழப்பங்கள் ஏற்பட்டு விடும். எனவே, ஒருவனான அல்லாஹ்வே உண்மையான இறைவனாவான்.எனவே இத்தகைய அடிப்படைகளின் படி எம்மைப் படைத்துப் பரிபாலிப்பவனுக்கு மகிமை கூறவும், எம்மை அர்ப்பணிக்கவும், சிறப்பும் அருளும் மிக்க அவனது வழிகாட்டலை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.எமது புத்தி நுட்ப விளக்கத்துக்காக சிருஷ்டிப்பாளன் அருள் புரிந்து, நேர்வழியைத் தெரிவு செய்ய சுதந்திரமும் தந்துள்ளான்.தனது தூதர்கள் மூலமும், வேதங்கள் மூலமும் அல்லாஹ் எமக்கு நேர்வழி காட்டியுள்ளான்.

🎓முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)  அவர்களுக்குப் பின் தூதுத்துவத்தை நிறைவு செய்ததோடு, அல்குர்ஆனோடு வேதங்களும் முற்றுப் பெற்றது.வாழ்வில் தனித்தனியே இரு வழிகள் உள்ளன. ஒன்று இவ்வாழ்விலும், மறு உலக வாழ்விலும் இனிமைப் பயக்கும், இதுவே ஒரே இறைவனுக்கு கட்டுப் படுதலா (இஸ்லாமா) கும். மற்றது இவ்வுலகிலும் துன்பம் விளைவிப்பதோடு மறுமையிலும் தண்டனையைப் பெற்றுத்தரும். (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 2:256)

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *25-02-2017*


Friday, 24 February 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கித் தர விரும்புகிறீர்களா?
"

   📚 அல்குர்ஆன் : 4:144

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

" நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல்) நேரத்தில் ”ஜுமுஆ” தொழுவோம். பிறகு (சுவர்களுக்கு நிழல் படியாததால்) நாங்கள் (ஒதுங்கி நடக்க) நிழல் தேடியவாறே (வீட்டுக்குத்) திரும்புவோம்."

🎭அறிவிப்பாளர் :
சலமா பின் அல்அக்வஉ (ரலி)

📓நூல் :
ஸஹீஹ் முஸ்லிம் -1561

🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴


பதிவு நாள்: *25-02-2017*



*✍தெரிந்து கொள்வோம்:* *சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி !*


📚📚📚📚📚📚📚📚📚📚

*✍தெரிந்து கொள்வோம்:*
*சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி !*

⏬⏬⏬⏬⏬⏬⏬⏬⏬⏬

*1. குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள சொர்க்கங்களின் பெயர்கள் யாவை?*
*சொர்க்கங்களின் பெயர்கள் :*

*1. தாருஸ் ஸலாம் - அமைதியான இல்லம் ( 10:25 )*

*2. தாருல் கரார் - நிலையான உலகம் ( 40:39 )*

*3. ஜன்னத்துல் ஹுல்த் - நிலையான சொர்க்கம் ( 25:15 )*

*4. ஜன்னத்துல் மாஃவா - சொர்க்கச்சோலைகள் ( 53:15,  32:19 )*

*5. ஜன்னத்துன் நயீம் - இன்பகரமான சொர்க்கம் ( 5:65,  56:12 )*

*6. ஜன்னத்துன் அத்ன் - நிலையான சொர்க்கம் ( 9;27, 19:61,  38:50 )*

*7. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் - சொர்க்கத்துச் சோலைகள் ( 18:107,  23:11 )*

*சொர்க்க வாசல்களின் பெயர்கள் :*

*1. சலா ( ஸஹிஹீல் புகாரி # 1897*

*2. ஜிஹாத் ( ஸஹிஹீல் புகாரி # 1897*

*3. ஸதகா ( ஸஹிஹீல் புகாரி # 1897*

*4. ரய்யான் ( ஸஹிஹீல் புகாரி # 1897*

*5. ஹஜ்*
*6. கஸ்மன்*
*7. ஈமான்*
*8. திக்ரு*

*2. குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள நரகங்களின் பெயர்கள் யாவை?*

*1. ஜஹன்னம் (52:13)*
*2. ளலா (70:15)*
*3. ஹுதமா (104:4,5 )*
*4. ஸகர் ( 54:48,  74:26, 27, 42)*
*5.ஜஹீம் ( 69:31)*
*6. ஹாவியா (101:9)*

*3. சொர்க்கவாசிகளுக்கு வழங்கப்படும் பானங்களின் பெயர்கள் யாவை?*

*1. கற்பூர பானம் (76;5)*
*2. இஞ்சி பானம் (76:17)*
*3. ஸல்ஸபீல் (76:18)*

*4. சொர்க்கவாசிகளுக்கு அணிவிக்கப்படும் பட்டாடைகளின் பெயர்கள் யாவை?*

*1. ஸிந்துஸ் ( 18:31,  44:53,  76:21 )*
*2. இஸ்தப்ரக் ( 18:31,  44:53,  76:21 )*

*5. சொர்க்கவாசிகளுக்கு வழங்கப்படும் கன்னி (மனைவி) களின் பெயர் என்ன?*

*" ஹுருல்ஈன் "(கண்ணழகிகள்)*
*44:54,  56:22*

*6. சொர்க்கத்தில் வழங்கப்படும் ( போதையற்ற) முத்திரையிடப்பட்ட மதுவின் பெயர் என்ன?*

*" ரஹிகிம் மஹ்தூம் " ( 83:25 )*

*7. சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் இடையே இருக்கும் அகலமான தடுப்புச்சுவரின்பெயர் என்னா?*

*" அல் அஃராப் "( 7:46 to 49 )*

*8. மனிதன் சோதனைக்குள்ளாக்கப் படாமல் எளிதாக சொர்க்கம் செல்லமுடியாது என அல்லாஹ் எந்த வசனம் மூலம் எச்சரிக்கிறான்?*
*2:214*

*9. நல்லடியார்கள் தங்கும் சொர்க்கம் எங்கே உள்ளது?*

*" ஸித்ரதுல் முன்தஹா " என்ற இலந்தை மரத்தின் கீழ் உள்ளது (53:13,14,15 )*

*10. நரகவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் யாவை?*

*1. கொதிக்கும் : ( 6:70, 10:4, 37:67, 38:57)*
*2. சீழ் ( சலம்) ( 14:16,17, 38:57, 69:36, 78:25 )*
*3. ஸக்கூம் மரம் ( 37:62, 44:43 to 46, 56:52,53 )*
*4. முள்மரம் ( 88:6 )*

*11. நரகத்தில் இருக்கும் ஸக்கும் மரத்தின் பாளை எதனுடைய வடிவில் இருக்கும்?*

*ஷைத்தானின் தலைகளைப் போல் இருக்கும்!( 37:65 )*

*12. நகரவாசிகளை வானவர்கள் எதைக்கொண்டு அடிப்பார்கள்?*

*இரும்பு சம்மட்டியால் அடிப்பார்கள்! (22:21)*

*13. நரகவாசிகளின் ஆடைகள் யாவை?*

*1. நெருப்பினால் ஆன ஆடை ( 22:19)*
*2. நெருப்பினால் ஆன விரிப்பு ( 7:41)*
*3. நெருப்பினால் ஆன போர்வை ( 7:41)*

*14. நரகத்திற்கு எத்தனை*
*வாசல்கள் இருக்கும்?*

*7 வாசல்கள் இருக்கும் ( 15:44 )*

*15. நரகவாசிகளை வானவர்கள் எத்தனை முழம் உள்ள சங்கிலியால் கட்டுவார்கள்?*

*70 முழம் உள்ள சங்கிலியால் கட்டுவார்கள் ( 69:32 )*

*16. சபிக்கப்பட்ட மரம் எது?*

*கள்ளி மரம் ( 17:60 )*
*ஸஹிஹீல் புகாரி : 4716*

*17. நரகத்தின் எரிபொருட்கள் யாவை?*

*1. மனிதர்களும், கற்களும் ( 2:24 )*
*2. மனிதர்களும்,  ஜின்களும் ( 22:98,  72:15 )*

*18. நரகத்தின் பொறுப்புதாரியான வானவரின் பெயர் என்ன ?*

*மாலிக் ( 43:77 )*

*19. பெருமையடிப்போர் நரகம் செல்வார்கள் என அல்லாஹ் எந்த வசனம் மூலம் எச்சரிக்கிறான்?*

*( 16:29,  39:72,  40:75,76 46:20 )*

*20. ஸகர் எனும் நரகத்திற்கு எத்தனை வானவர்கள் காவல் இருப்பார்கள்?*

*19 வானவர்கள் ( 74:30 )*

*21. நரகத்தை யாரைக்கொண்டு நிரப்புவதாக அல்லாஹ் கூறுகிறான்?*

*மனிதர்களைக் கொண்டும், ஜின்களைக்கொண்டும் ( 32:13 )*

*22. " ஜன்னத்துல் ஃபிர்தௌஸிற்கு " தகுதியானவர்களின் பண்புகள் யாவை?*

*1. உள்ளச்சத்துடன் தொழுவார்கள்*
*2. வீணானவற்றை புறக்கனிப்பார்கள்.*
*3. ஸகாத்தை முறைப்படி நிறைவேற்றுவார்கள்*
*4.தங்களது வெட்கஸ்தலங்களை பாதுகாப்பார்கள்*
*5. ஹலாலான தங்களது மனைவிகள், தனது அடிமைப்பெண் இவர்களிடம் மட்டுமே உறவு கொள்வார்கள்*
*6. அமானிதங்களையும், வாக்குறுதிகளையும் பேணுவார்கள்*
*7. தொழுகைகளை பேணித் தொழுவார்கர் ( 23:2 to 11 )*

*23. உங்கள் மனைவிகளுடன் சொர்க்கம் செல்லுங்கள் என்ற நற்செய்திக்கு உரியவர்கள் யார்?*

*குர்ஆன் வசனங்களை விசுவாசித்து அல்லாஹ்விற்கு முற்றிலும் கீழ்படிந்து நடப்பவர்கள்! ( 43:69, 70 )*

*24. ஸகர் என்ற நரகத்தின் தன்மை யாது?*

*தொழாதவன்,  ஏழைகளுக்கு உணவளிக்காதவன் இவர்களின் உடல்களில் பட்டு அவர்களின் உருவத்தை மாற்றிவிடும்! ( 74:26 to 29,  74:42 to 44 )*

*25. ஹாவியா என்ற நரகத்தின் தன்மை யாது?*

*கடுமையான சூடேற்றப்பட்ட நரக நெருப்பாகும் ( 101:9 to 11 )*

*26. " ஹுதமா " என்ற நரகத்தின் தன்மை யாது?*

*உடலில்பட்டவுடன் நேராகச்சென்று இதயத்தை தாக்கும்! ( 104.5.6.7)*

*👆இப்பதிவை தாங்கள் இருக்கும் மற்ற வாட்ஸ்அப் தளங்களுக்கும் அனுப்பி அவர்களும் அறிந்துக்கொள்ள உதவவும் இன்ஷாஅல்லாஹ்...*

பதிவு நாள்: *25-02-2017*


*🕋 மார்க்க கேள்வி எண்* 389🕋


*🕋 மார்க்க கேள்வி எண்* 389🕋:

🎯 *அ)  மறுமையில் நன்மை மற்றும் தீமைகளை கொண்டு வருபவருக்குரிய கூலி என்ன❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துந் நம்லி (எறும்புகள்) 27:81-90"*

✅பதில்:
நன்மையைக் கொண்டு வருபவருக்கு அதைவிட மேலானது கிடைக்கும்.

தீமையைக் கொண்டு வருபவருக்கு முகங்கள் குப்புற நரக நெருப்பில் தள்ளப்படும்.

ஆதாரம்:- *அல்குர்ஆன்:27:89 & 90*

📒(அந்நாளில்) எவர் நன்மையைக் கொண்டு வருகிறாரோ, அவருக்கு அதைவிட மேலானது உண்டு - மேலும் அவர்கள் அந்நாளின் திடுக்கத்தை விட்டும் அச்சந் தீர்ந்து இருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 27:89)

📕இன்னும்: எவர் தீமையைக் கொண்டு வருகிறாரோ அவர்களுடைய முகங்கள் குப்புற (நரக) நெருப்பில் தள்ளப்படும்; “நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு அன்றி (வேறு) நீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்களா?” (என்று கூறப்படும்.)
(அல்குர்ஆன் : 27:90)

🎯 ஆ) *போதை வஸ்த்துக்களை பயன்படுத்துபவருக்கு மறுமையில் எந்த பானத்தை புகட்ட இருப்பதாக பெருமானார் கூறுகிறார்கள்❓*

✅பதில்:
"தீனத்துல் கபால்" - நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ்.

ஆதாரம்:- *முஸ்லிம்:4075*

📄4075. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் யமன் நாட்டிலுள்ள "ஜைஷான்" எனுமிடத்திலிருந்து வந்து, தம் நாட்டினர் சோளத்திலிருந்து தயாரித்துப் பருகிவருகின்ற ஒருவகை பானம் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அது போதையளிக்கக்கூடியதா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம் (போதையளிக்கக்கூடியதே)" என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "போதையளிக்கக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும். (இவ்வுலகில்) போதைப் பொருட்களை உட்கொள்பவருக்கு (மறுமையில்) "தீனத்துல் கபாலை" நிச்சயமாக நான் புகட்டுவேன் என அல்லாஹ் உறுதிமொழி எடுத்துள்ளான்" என்று கூறினார்கள்.
மக்கள் "அல்லாஹ்வின் தூதரே! "தீனத்துல் கபால்" என்பது என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ்" என்று விடையளித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
2. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
3. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 2
4. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
5. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
6. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
7. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
8. ஹக்கிம் - தென்காசி 2
9. முபராக் - சென்னை 1
10.ஷாஜகான் - சென்னை 1
11. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை 2
12. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. அப்துல் பாசித் - சவுதி 2
2. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 1
3. சுல்தான் - திருநெல்வேலி 2
4. நூகு அமீர் -கீழக்கரை 2
5. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
6. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
7. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
8. ஹுசைன் - நாகர்கோவில் 2
9. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
10. சாதிக் - மல்லிப்பட்டினம் 1
11. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
12. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
13. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2

✍✍✍✍✍✍✍✍✍✍✍

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

✍✍✍✍✍✍✍✍✍✍✍

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *25-02-2017*

*🔴நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் தொடர் -2*


*🔴நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் தொடர் -2*

*🎯நபிகள் பற்றி சினிமா* *எடுக்கலாமா*
*நபிகள் நாயகம் ஸல் அவர்கள்* *பற்றி திரைப்படம் எடுத்தால் என்ன?* *இசை இல்லாமல் முகம் காட்டாமல் எடுக்கலாமே? இதனால் அனைத்து சமுதாய மக்களுக்கும் எளிதில் புரியுமே?*

🔘திரைப்படங்கள் எடுத்து தங்கள் மதத்தைக் கொண்டு செல்ல முயன்றவர்களால் அதில் முழு வெற்றி பெற முடியவில்லை. இல்லாததையும் பொல்லாததையும் கற்பனை செய்து தங்கள் ஒரிஜினாலிட்டியை தாங்களே அழித்து விட்டனர்.

🔘ஆனால் 1400 ஆண்டுகளாக உருவப்படம் இல்லாமல் சிலை இல்லாமல் நாடகம் சினிமா இல்லாமல் நபிகள் நாயகம் குறித்த செய்திகள் சரியான முறையில் மக்களைச் சென்றடைந்து கொண்டு தான் உள்ளது.

🔘தனது சமரசம் செய்து கொள்ளாத கொள்கை மூலம் இம்மார்க்கம் அதன் தூய வடிவில் சென்று கொண்டு தான் இருக்கிறது.

🔘இது போன்ற திரைப்படங்கள் இல்லாமல் தான் இந்த மார்க்கம் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. மேலும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றவுடன் சிவாஜி கனேசனின் தோற்றம் நினைவுக்கு வருவது போல் நபிகள் நாயகத்தின் நிலை ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது.

🔘முகம் காட்டாமல் *த மெஸஞ்சர்* என்ற படம் எடுக்கப்பட்டது. அதில் முக்கால் வாசி பொய்யும் கால்வாசி உண்மையும் இருந்தாலும் அதற்கு எதிராக யாரும் வாய் திறக்காமல் அதையும் பார்த்து ரசித்தனர். நபிகள் நாயகத்தின் மீது இட்டுக் கட்டுகிறார்களே என்ற கோபம் யாருக்கும் வரவில்லை.

🔘மேலும் நபிகள் நாயகத்துக்கு மட்டும் உருவத்தைக் காட்டாவிட்டாலும் ஹம்ஸா என்பவரை அதில் கதாநாயகனாக காட்டினார்கள். அத்தனையும் பொய் என்பது தனி விஷயம். இதனால் ஏற்பட்ட விளைவு என்ன? ஹம்ஸா என்றவுடன் அதில் நடித்த நடிகன் தான் இன்றும் மனதில் நிழலாடுகிறான். அவரது ஒரிஜினாலிடி இல்லாமல் போய் விட்டது.

🔘மேலும் சினிமா என்றாலே அது வரலாறாக இருந்தால் கூட ஐந்து விழுக்காடு உண்மையுடன் 95 விழுக்காடு பொய் கலக்க வேண்டும். இல்லாவிட்டால் அது எடுபடாது. உள்ளது உள்ளபடி எடுத்தாலும் சினிமாவுக்காக கூட்டிக் குறைத்து எடுத்திருப்பார்கள் என்று தான் முஸ்லிமல்லாத மக்கள் நினைப்பார்கள். இதனால் நபிகள் நாயகத்தின் மதிப்புக்குப் பங்கம் தான் ஏற்படும்.

🔘பேச்சாக எழுத்தாக சொல்வதை மட்டும் மனித உள்ளம் சிந்தித்து உள் வாங்கும். இசையாக, நாடகமாக, கதையாகச் சொல்வதை காதும் கண்ணும் தான் ரசிக்குமே தவிர உள்ளத்தை அது அறவே ஈர்க்காது. இது தான் மனோதத்துவ முடிவாக உள்ளது.

🔘நான் ஒரு குடிகாரன் என்று ஒருவன் ஒப்புதல் வாக்கு மூலம் தந்தால் அவனை நாம் காரித் துப்புகிறோம். ஆனால் கோப்பயிலே என் குடியிருப்பு என்று அதையே அவன் பாடலில் சொன்னால் அதை நாமே முனுமுனுக்கிறோம்.

🔘நாம் மதிக்கும் மனிதன் திருடன் என்று தெரிய வந்தால் அவனை வெறுக்கிறோம். ஆனால் திரையில் திருடனாக கதாநாயகன் வந்தால் அவனுக்கு ரசிகர் மன்றம் வைக்கிறோம்.

🔘குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்று சாதாரண நடையில் நாம் சொன்னால் நம்மை அடிக்க வரும் மார்க்க அறிவற்றவர்கள் ஒரு கையில் இறை வேதம் மறு கையில் நபி போதம் இருக்கையில் நமக்கென்ன கலக்கம் என்ற பாடலை முனுமுனுக்கிறார்கள். இதில் இருந்து இவை உள்ளங்களில் இறங்குவதில்லை என்பதை அறியலாம். எனவே இது போன்ற வழிமுறைகளில் சொல்லப்படும் எந்தக் கருத்தாக இருந்தாலும் அது கண்ணையும் காதையும் தான் ஈர்க்கும். நிச்சயம் உள்ளத்தை ஈர்க்காது.

(இன்ஷா அல்லாஹ் வேறொரு தலைப்புடன் தொடரும்)

பதிவு நாள்: *24-02-2017*


Thursday, 23 February 2017

💎தடைசெய்ய பட்ட தீமைகள் தொடர் 5:🚫



🔥நம்மை நரகில் தள்ளும் பாவங்கள்

💎தடைசெய்ய பட்ட தீமைகள் தொடர் 5:🚫

❌22) *கொலை செய்தல்!*
📘“எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனை சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்” (அல்-குர்ஆன் 4:93)

📚‘நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்’ (அல்-குர்ஆன் 5:32)

❌23) *விபச்சாரம் செய்தல்!*
📘“நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது” (அல்-குர்ஆன் 17:32)

📚நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:
 ‘மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் வயோதிகன், பொய்யனான அரசன், பெருமையடிக்கும் ஏழை.”
நூல் : ஸஹீஹ் முஸ்லிம்

❌24) *ஓரினப் புணர்ச்சி (ஆணும் ஆணும் புணர்ச்சி) செய்தல்!*
📘“மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: ‘நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒருசெயலை செய்ய முனைந்து விட்டீர்கள். நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்’ என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்:‘நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக’ என்பது தவிர வேறு எதுவுமில்லை” (அல்-குர்ஆன் 29:28-29)

📚நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலை செய்யக்கூடியவர்களைக் கண்டால் செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்றுவிடுங்கள்’
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : அஹ்மத்.

❌25) *வட்டி வாங்குதல், கொடுத்தல், வட்டி சம்பந்தமான தொழில்களில் பணிபுரிதல்!*
📘“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும்) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் முதல் உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம்செய்யப்பட மாட்டீர்கள்” (அல்-குர்ஆன் 2:278-2:279)

📚“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும்(குற்றத்தில்) சமமானவர்” அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்.

❌26) *மது அருந்துதல்!*
📘மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.
நூல் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா

📚மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகத்தில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் *ரத்கத்துல் கப்பால்* எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட (சீழ்சலம்) பானம் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)
நூல்: இப்னு மாஜா.

.......இன்ஷா அல்லாஹ் தொடரும்........

பதிவு நாள்: *24-02-2017*



♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை; மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை.
"

  📚 அல்குர்ஆன் : 4:137

✨✨✨✨✨✨✨✨✨✨✨
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    " ஒருவர் (வெள்ளிக்கிழமை அன்று) குளித்துவிட்டு ஜுமுஆத் தொழுகைக்குச் சென்றுஇ அவரது விதியில் எழுதப்பட்டிருந்த அளவு (கூடுதலாகத்) தொழுதார்; பிறகு இமாம் தமது சொற்பொழிவை (குத்பா) முடிக்கும்வரை வாய்மூடி மௌனமாக உரையைக் கேட்டுவிட்டுஇ அவருடன் சேர்ந்து தொழுகையை நிறைவேற்றுகிறார். இத்தகையவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரையும் மேற்கொண்டு மூன்று நாட்கள்வரையும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படுகின்றன."

🎭அறிவிப்பாளர் :
அபூஹுரைரா (ரலி)

📓நூல் :
ஸஹீஹ் முஸ்லிம்-1556

💥💥💥💥💥💥💥💥💥💥💥
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴

💥💥💥💥24-2-17💥💥💥💥

*🕋 மார்க்க கேள்விஎண்388:🕋


*🕋 மார்க்க கேள்விஎண்388:🕋

🎯 *அ)  எத்தகையவர்களை கேட்கும் படி செய்ய முடியாது என அல்லாஹ் நபியிடம் கூறுகிறான்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துந் நம்லி (எறும்புகள்) 27:71-80"*

✅பதில்:

🌾மரித்தோரை

🌾செவிடர்களை

🌾புறங்காட்டி திரும்பியவர்களை.

ஆதாரம்:- *அல்குர்ஆன்: 27:80*

📄நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது; - அவ்வாறே செவிடர்களையும் - அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும்போது - (உம்) அழைப்பைக் கேட்கும் படிச் செய்ய முடியாது.
(அல்குர்ஆன் : 27:80)

🎯ஆ) *எந்த நபிக்கு வேதத்தை ஓதுவது எளிதாக்கப்பட்டிருந்தது மற்றும் எவ்விதம் என பெருமானார் கூறுகிறார்கள்❓*

✅பதில்:  🎓தாவூத் (அலை) அவர்களுக்கு

📋தம் வாகனப் பிராணிக்குச் சேணம் பூட்டிடக் கட்டளையிடுவார்கள். பணியாள் சேணம் பூட்டி முடிப்பதற்குள் -வேதம் - முழுவதையும் ஓதிவிடுவார்கள்.

ஆதாரம்:- *புகாரி: 3417, 4713*

📕3417. நபி(ஸல்) அவர்கள் கூறினார்
தாவூத்(அலை) அவர்களுக்கு (தவ்ராத், ஸபூர் ஆகிய இறைவேதங்களை ஓதுவது லேசாக்கப்பட்டிருந்தது. தம் (குதிரை) வாகனத்தை (சவாரிக்காகத்) தயார் செய்யும் படி உத்திரவிடுவார்கள். உடனே, அதற்குச் சேணம் பூட்டப்படும் வாகனத்திற்குச் சேணம் பூட்டப்படுவதற்கு முன்பே இறைவேதத்தை ஓதி விடுவார். தன் கையினால் உழைத்துப் பெறும் சம்பாத்தியத்திலிருந்து தான் உண்பார்.
அத்தாஉ இப்னு யஸார்(ரஹ்) வழியாகவும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸஹீஹ் புகாரி.

📒4713. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தாவூத்(அலை) அவர்களுக்கு வேதம் ஓதுவது இலேசாக்கப்பட்டிருந்தது. அவர்கள் தம் வாகனப் பிராணிக்குச் சேணம் பூட்டிடக் கட்டளையிடுவார்கள். (பணியாள்) சேணம் பூட்டி முடிப்பதற்குள் -வேதம் - முழுவதையும் ஓதிவிடுவார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
3. ஷாஜகான் - சென்னை 1
4. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
5. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
6. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 1
7. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
8. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
9. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை 2
10. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
11. ஹக்கிம் - தென்காசி 2
12. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 1

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
2. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
3. ஹுசைன் - நாகர்கோவில் 2
4. அப்துல் பாசித் - சவுதி 2
5. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
6. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
7. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
8. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
9. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
10. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 1
11. நூகு அமீர் -கீழக்கரை 2
12. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *24-02-2017*

*🕋 மார்க்க கேள்வி எண்* 387🕋*


*🕋 மார்க்க கேள்வி எண்* 387🕋*

🎯 *அ)  நிராகரிப்பவர்கள் எதைக் கட்டுக் கதைகள் என்றி கூறினார்கள்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துந் நம்லி (எறும்புகள்) 27:61-70"*

✅பதில்:
மரித்து மண்ணாகிப் போன பிறகும் மீண்டும் கொண்டு வரப்படுவோமா

ஆதாரம்:- *அல்குர்ஆன்: 27:67 & 68*

📋மேலும், நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்: “நாங்களும் எங்கள் மூதாதையரும் (மரித்து) மண்ணாகிப் போன பின்னர், மீண்டும் வெளியே கொண்டு வரப்படுவோமா?
(அல்குர்ஆன் : 27:67)

📝நிச்சயமாக, இ(ந்த அச்சுறுத்தலான)து எங்களுக்கும் எங்களுக்கு முன் சென்று போன எங்கள் மூதாதையருக்கும் வாக்களிக்கப்பட்டே வருகிறது; இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” (என்றுங் கூறுகின்றனர்).
(அல்குர்ஆன் : 27:68)

🎯 ஆ) *தமக்கு பிறகு எத்தகைய நிராகரிப்பவர்களாக மாறி விடாதீர்கள் என பெருமானார் கூறினார்கள்❓*

✅பதில்:
பிடரியை வெட்டிக் கொள்ளும், சண்டையிட்டுக் கொள்ளும் நிராரிப்பவர்களாக

ஆதாரம்:- *புகாரி: 6868,7077, 1739, 1740*

📖1739. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் 10-ஆம் நாள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது, 'மக்களே! இது எந்த நாள்?' எனக் கேட்டார்கள். மக்கள் 'புனிதமிக்க தினம்' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் 'இது எந்த நகரம்?' எனக் கேட்டதும் மக்கள் 'புனிதமிக்க நகரம்' என்றனர். பிறகு அவர்கள் 'இது எந்த மாதம்?' எனக் கேட்டதும் மக்கள் 'புனிதமிக்க மாதம்!' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகிறதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்!' எனப் பல முறை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்தி, 'இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா?' என்றும் கூறினார்கள்.
என்னுடைய உயிர் யாருடைய கைவசம் உள்ளதோ அ(வ்விறை)வன் மீது ஆணையாக! இது அவர்கள் தங்களின் சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும்.
பின்னர் 'இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! என்னுடைய மரணத்திற்குப் பின் நீங்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகி விட வேண்டாம்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்த கேட்டேன்' என்ற வாக்கியம் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
ஸஹீஹ் புகாரி.

📃1740. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10-ஆம்) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, 'இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?' எனக் கேட்டார்கள். நாங்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!' என்றோம். அந்நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மெளனமாக இருந்துவிட்டு, 'இது (பலியிடுவதற்குரிய) நஹ்ருடைய நாளல்லவா?' என்றனர். நாங்கள் 'ஆம்!' என்றோம். பிறகு 'இது எந்த மாதம்?' என அவர்கள் கேட்டதும் நாங்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!' என்றோம். அப்போதும் அம்மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மெளனமாக இருந்தார்கள். பிறகு, 'இது துல்ஹஜ் மாதம் அல்லவா?' என அவர்கள் கேட்க, நாங்கள் 'ஆம்!' என்றோம். பிறகு 'இது எந்த நகரம்?' எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!' என்றோம். அப்போதும் அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மெளனமாக இருந்தார்கள். பிறகு 'இது புனிதமிக்க நகரமல்லவா?' எனக் கேட்க, நாங்கள் 'ஆம்!' என்றோம். பிறகு 'உங்களுடைய (புனிதமான) இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமான) இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் இரட்சகனைச் சந்திக்கும் நாள்வரை புனிதமானவையாகும்!' என்று கூறிவிட்டு, 'நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்ப்பித்து விட்டேனா?' எனக் கேட்டார்கள். மக்கள் 'ஆம்!' என்றனர். பிறகு அவர்கள் 'இறைவா! இதற்கு நீயே சாட்சியாயிரு! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! ஏனெனில், செவியேற்பவரை விட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்து கொள்பவராயிருக்கலாம்; எனக்குப் பின்னால் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகி விடவேண்டாம்!' எனக் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி.

📒6868. ('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடாதீர்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.


📕7077. நபி(ஸல்) அவர்கள் ('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) கூறினார்கள்:
எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை 2
2. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
3. ஷாஜகான் - சென்னை 1
4. ஹக்கிம் - தென்காசி 2
5. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2
6. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
7. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
8. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
9. ஹபிப் ரஹ்மான் - துபாய் 1
10. முபாரக் - சென்னை 1
11. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
12. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
2. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
3. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
4. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
5. நூகு அமீர் -கீழக்கரை 2
6. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
7. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
8. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
9. ஹுசைன் - நாகர்கோவில் 2
10.அப்துல் பாசித் - சவுதி 2

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *24-02-2017*

*🔴நவீன பிரச்சனைகளும் அதற்குரிய தீர்வுகளும் தொடர் - 1*


*🔴நவீன பிரச்சனைகளும் அதற்குரிய தீர்வுகளும் தொடர் - 1*

*🎯குர்ஆன் அப்ளிகேஷன், குர்ஆன் ரிங்க்டோன் உள்ள செல்போனை கழிவறைக்கு எடுத்துச் செல்லலாமா*?

🔘இப்போது அதிகமான மக்கள் பயன்படுத்தக் கூடிய செல் போன்களில் குர்ஆன் டெக்ஸ்ட் குர் ஆன் அரபி மூலம் மார்க்க நூல்கள், பயான்கள் ஆகியவை பதிவு செய்யக்கூடிய வகையில் தான் உள்ளன.

🔘மார்க்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் கழிவறை சென்றால் என்ன செய்ய வேண்டும்?

🔘இவர்களின் செல்போனுக்குள் குர்ஆன் உள்ளதால் அதைக் கழிவறைக்குள் கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும். என்று ஒருவர் முடிவு செய்தால் அது போல் குர்ஆன் ரிங்டோனாக வைத்திருப்பவரும் செல் போனை கழிவறைக்குள் கொண்டு செல்லாமல் தவிர்க்கலாம்.

🔘அல்லது வெளியே வைக்க முடியாத நிலை இருந்தால் கழிவறை செல்லும் போது போனை ஆப் செய்து விடலாம்.

🔘கழிவறை செல்லும் போது குர்ஆன் ஒலிக்கும் என்பதால் குர்ஆனை ரிங் டோனாக வைக்கக் கூடாது என்றால் குர்ஆன் சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்யப்பட்ட செல் போனையும் பயன்படுத்தக் கூடாது என்று கூற வேண்டும்.

🔘ஆனால் குர்ஆனை ரிங் டோனாக வைக்கக் கூடாது எனக் கூறுவோர் குர் ஆன் சாப்ட்வேர் விஷயத்தில் இப்படி கூறுவதில்லை.

🔘கழிவறைக்கு செல்லும் அவசியம் உள்ளதால் குர்ஆன் சாப்ட்வேர் உள்ள போனை பயன்படுத்தக் கூடாது என்று இவர்கள் கூறுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻

பதிவு நாள்: *23-02-2017*


💎தடைசெய்ய பட்ட தீமைகள் தொடர்4🚫


🔥நம்மை நரகில் தள்ளும் பாவங்கள்

💎தடைசெய்ய பட்ட தீமைகள் தொடர்4🚫

*❌17) தொழுகையில் பொடுபோக்காக, அலட்சியமாக இருத்தல்!*

📘இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)

📚அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப்படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (நூல்: ஸுனன் அபூதாவுத்)

*❌18) அவசர அவசரமாக தொழுதல்!*

📘“முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் : ‘திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தனது ருகூவையும், ஸுஜுதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் பதிலளித்தாகள்.
அறிவிப்பவர் : அபூகதாதா ரலி,
நூல் : அஹ்மத், ஹாகிம், தப்ரானி

📚“ருகூவை பூரணமாக செய்யாத, ஸஜ்தாவை மிக குறுகிய நேரத்திலும் செய்த ஒருவரைப் பார்த்து, “இந்த நிலையிலேயே தொழக்கூடியவர்கள் மரணிக்க நேரிட்டால், அவர் முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்களின் மார்க்கத்தை விட்டு விட்டு வேறு மார்க்கத்தை நிலைநாட்டியவராகத்தான் மரணிப்பார்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.

*❌19) அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தல்!*

📘“அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தவர் இணைவைத்து விட்டார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் : இப்னு உமர் (ஸலி),
நூல் : அபூதாவுத், அஹ்மத்.

📚 (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்து கொண்டிருந்தபோது அவர்களை அடைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் தம் தந்தையின் மீது சத்தியம் செய்தார்கள். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களை அழைத்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துவிட்டான். சத்தியம் செய்யமுற்படுபவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மெளனமாக இருந்துவிடட்டும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி.

*❌20) வேண்டுமென்றே ஜமாஅத் தொழுகையை தவறவிடுதல்!*

📘நீங்கள் தொழுகையையும் நிலைநாட்டுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். மேலும் என் முன்னிலையில் (தலை சாய்த்து) ருகூஉ செய்பவர்களுடன் நீஙகளும் சேர்ந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2 : 43)

📚நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜமாஅத்தாகத் தொழுவது தனித்துத் தொழுவதையும் விட இருபத்தி ஏழு மடங்கு சிறப்பிற்குரியதாகும். நான் தொழுகைக்கு ஏவி, தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக யாரையேனும் நியமித்து விட்டு ஜமாஅத்துத் தொழுகைக்கு வராதோரின் இல்லங்களுக்கு நானே சென்று அவர்கள் அங்கிருக்கும் நிலையில் அவ்வில்லங்களுக்குத் தீ வைக்க விளைகின்றேன். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்

*❌21) தொழுகையில் இமாமை முந்துதல்!*

📘முஹம்மத் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் “உங்களுடைய செயல்களை இமாமுக்கு முன்னால் ஆக்காதீர்கள்! இமாம் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறினால் நீங்களும் ‘அல்லாஹ் அக்பர்’ என்று சொல்லுங்கள்; இமாம் ‘வலழ்ழாலீன்’ என்று கூறினால் நீங்கள் “ஆமீன்” என்று சொல்லுங்கள்”. மற்றொரு அறிவிப்பில், ‘நிச்சயமாக இமாமைப் பின்பற்ற வேண்டும்’ என்று கூறினார்கள். மேலும், ‘இமாமுக்கு முந்தி தலையை உயர்த்துபவர் மறுமையில் அவருடைய தலையை கழுதையின் தலையைப் போல் அல்லாஹ் ஆக்கிவிடுவான் என்று அவர் பயந்துக்கொள்ள வேண்டாமா?” என்று கூறினார்கள்.

*....இன்ஷா அல்லாஹ் தொடரும்....*

பதிவு நாள்: *23-02-2017*