🏵⚓🏵⚓🏵⚓🏵⚓🏵⚓🏵
🔰 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 🔰
🌙நபிமார்கள் வரலாறு🌟
🎾இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : 8
🎋 பலஸ்தீன் நாட்டின் பக்கம் இப்ராஹீம் நபியின் ஹிஜ்ரத்:
இப்ராஹீம் நபியுடன் அவர்களின் மனைவியும்,ஒரு மனிதனரும் ஈமான் கொண்டிருந்தனர்.மனைவியின் பெயர் சாரா.அம்மனிதரின் பெயர் லூத்.இவர் பிற்காலத்தில் நபியாக்கப்பட்டார்.ஏகத்துவ பிரச்சாரத்தின் மூலம் எவரும் ஈமான் கொள்ளததால் இப்ராஹீம் அலை அங்கிருந்து புறப்பட்டார்கள்.
தந்தை ஈமான் கொள்ளததால் உறவை முறித்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார்கள்.
🌾 சாராவையும்,லூதையும் அழைத்துக் கொண்டு ஃபலஸ்தீன் நாட்டிற்கு சென்றார்கள்.ஃபலஸ்தீனிலிருந்து மிஸ்ர் நாட்டிற்கு சென்றார்கள்.
சாராவை மிஸ்ர் நாட்டிற்கு இப்ராஹீம் நபி அழைத்துச் சென்றபோது நடந்த வரலாற்றை நபி ஸல் அவர்கள் நமக்கு சொல்லிக் காட்டுகிறார்கள்:
ஒரு நாள் இப்ராஹீம் அலை அவர்களும்,அவர்களின் துணைவியார் சாரா அலை அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள்.அப்போது அந்த மன்னனிடம் அவர்களைக் குறித்து இங்கு ஒருவர் வந்திருக்கிறார்.அவருடன் அவருடைய அழகான மனைவியும் இருக்கிறாள்"என்று கூறப்பட்டது.
⚱ உடனே,இப்ராஹீம் அலை அவர்களை அழைத்து வரச்சொல்லி அந்த மன்னர் சாரா அலை அவர்களை யார் அந்தப் பெண்?எனக் கேட்க இப்ராஹீம் அலை அவர்கள் இவள் என் சகோதரி எனக் கூறி ஸாரா அலை அவர்களிடமும் அவனிடம் அவ்வாறே பதிலளிக்க கூறினார்.
அவன் சாரா அலை அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான்.சாரா அலை அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன்கையால் அள்ள முயன்றான்.உடனே,அவன் வலிப்பு நோயால் தண்டிக்கப்பட்டான்.அவன் சாரா அலை அவர்களிடம்,அல்லாஹ்விடம் எனக்காக என் கைகளை குணப்படுத்தும்படி பிரார்த்தனை செய்.நான் உனக்கு தீங்கு செய்ய மாட்டேன்"என்று சொன்னான்.உடனே சாரா அலை அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க,அவன் வலிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டான்.பிறகு, இரண்டாவது முறையாக அவர்களை அணைக்க முயன்றான்.முன்பு போன்றே மீண்டும் தண்டிக்கப்பட்டான்.அல்லது அதைவிட கடுமையாக தண்டிக்கப்பட்டான்.அப்போதும்,"எனக்காக என் கைகளை குணப்படுத்தும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்.நான் உனக்கு தீங்கு செய்ய மாட்டேன்"என்று சொன்னான்.அவ்வாறே அவர் பிரார்த்திக்க,அவன் வலிப்பிலிரந்து விடுவிக்கப்பட்டான்.
💎 பிறகு தன் காவலன் ஒருவனை அழைத்து,நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை.ஒரு ஷைத்தாதை தான் கொண்டு வந்துள்ளீர்கள்"என்று சொன்னான்.
பிறகு,ஹாஜிரா அவர்களை,சாரா அலை அவர்களுக்குப் பணியாளாக கொடுத்தான்.சாரா அலை அவர்கள்,இப்ராஹீம் அலை அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்பொழுது வந்தார்கள்.இப்ராஹீம் அலை அவர்கள் கைகளால் சைகை செய்து,'என்ன நடந்தது? என்று கேட்டார்கள்.அவர்,'அல்லாஹ் நிராகரிப்பாளனின் அல்லது தீயனின் சூழ்ச்சியை முறியடித்து,அவன் மீதே திருப்பி விட்டான்.ஹாஜிராவைப் பணிப் பெண்ணாக அளித்தான்"என்று சாரா அலை அவர்கள் பதில் கூறினார்கள்.
📚புகாரி:3358
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*
📝 உலாமாக்கள் குழுமம்
🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪
🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 27 / 2 / 17
☂☂☂☂☂☂☂☂☂☂☂
No comments:
Post a Comment