🏵⚓🏵⚓🏵⚓🏵⚓🏵⚓🏵
🔰 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 🔰
🌙நபிமார்கள் வரலாறு🌟
🎾இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : 7
🐠 அதிகாரம் படைத்த நம்ரூத் மன்னனிடம் இப்ராஹீம் நபிசெய்த அழகிய விவாதம்:
அல்லாஹ் தனக்கு ஆட்சியை கொடுத்துவிட்டான் என்பதற்காக இப்ராஹீமிடம்,அவருடைய இறைவன் குறித்து எதிர்வாதம் புரிந்தவனை (நபியே) நீர் கவனிக்கவில்லையா?"என் இறைவன் உயிர் கொடுப்பான்;இறக்கச் செய்வான்"என்று இப்ராஹீம் கூறியபோது "நானும் உயிர் கொடுப்பேன்;இறக்கச் செய்வேன்"என அவன் கூறினான்.(அதற்கு) இப்ராஹீம் "அல்லாஹ் சூரியனை கிழக்கில் உதிக்கச் செய்கிறான்;(முடிந்தால்) நீ அதை மேற்கில் உதிக்கச் செய் பார்க்கலாம் என்று கூறினார்.அப்போது (அல்லாஹ்வை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான்.அநீதி இழைக்கும் மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்.
📕 அல்குர்ஆன் 2:258
நபி இப்ராஹீம் (அலை) அவர்களது காலத்தில் வாழ்ந்த 'பாபில்' நாட்டு அரசன் நம்ரூத் பின் கன்ஆன் என்பவன்தான் இறைவன் விஷயத்தில் அவர்களுடன் தர்க்கம் செய்தான்.
🔆 முஜாஹித் (ரஹ் )அவர்கள் கூறுகிறார்கள்:
உலகில் (ஒரே நேரத்தில்) கிழக்கு மற்றும் மேற்குபகுதிகளை ஆட்சி புரிந்த மன்னர்கள் நால்வர்.அவர்களில் இருவர் இறைநம்பிக்கையாளர்கள்;மற்றிருவர் இறைமறுப்பாளர்கள்.இறைநம்பிக்கையாளர்கள்,சுலைமான் பின் தாவூத் (அலை) மற்றும் துல்கர்னைன் ஆகியோர் ஆவர்.இறைமறுப்பாளர்கள் நம்ரூத் மற்றும் புக்த்த நஸ்ஸர் ஆகியோர் ஆவர்.
(அல்லாஹ்வே அறிவான்.)
இவ்வாறு நம்ரூத் அநீதியிழைத்து,தீவிரமாக இறைவனை மறுத்து,கடும் பிடிவாதமாக இருந்ததற்கு அவன் நீண்ட நாள் ஆட்சி புரிந்ததும் அவனது சர்வாதிகாரமுமே காரணம்.அவன் நானூறு ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாக கூறப்பட்டுள்ளது.
⌛நம்ரூத் நானும் உயிர் கொடுப்பேன்;நானும் மரணிக்கச் செய்வேன் என இப்ராஹீம் நபியிடம் கூறினான்;
கதாதா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
நம்ரூத் இவ்வாறு கூறியதின் பொருளாவது:மரண தண்டனை கைதிகள் இருவர் என்னிடம் கொண்டு வரப்படுவார்கள்.அவர்களில் ஒருவனைக் கொலை செய்துவிடும்படி நான் உத்தரவிடுவேன்.அதன்படி அவன் கொல்லப்படுவான்.மற்றொருவனை மன்னித்துவிடுமாறு கட்டளையிடுவேன்.அவன் விடப்படுவான்.இந்தக் கருத்தில்தான் "நான் உயிர் கொடுப்பேன்;இறக்கச் செய்வேன்"என அவன் கூறினான்.
ஸைத் பின் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ் அந்தச் சர்வாதிகார அரசனிடம் ஒரு வானவரை அனுப்பினான்.அவர் அவனிடம் அல்லாஹ்வை இறைவனாக ஏற்கும்படி கட்டளையிட்டார்.ஆனால்,அவன் மறுத்துவிட்டான்.இரண்டாவது தடவையாக அழைப்பு விடுத்தார்;அப்போதும் மறுத்து விட்டான்.மூன்றாவது தடவையாக அழைத்தார்;அப்போதும் அவன் மறுத்து விட்டான்.இறுதியில் அவர் நம்ரூதிடம்,"நீர் உன் படைகளை திரட்டு;நான் என் படைகளை திரட்டுகிறேன் (நாம் போரிட வேண்டியதுதான்)" எனக் கூறினார்.
🚦அவ்வாறே நம்ரூத் சூரியன் உதித்த வேளையில் தன் படைகளை திரட்டினான்.அப்போது அல்லாஹ் சூரியனே கண்ணுக்குத் தெரியாதவாறு கொசுக்களின் ஒருபெரும் கூட்டத்தை நம்ரூதின் படைகள் மீது அனுப்பி,அவர்களை அழிக்குமாறு ஏவினான்.அவை அவர்களின் சதையையும் இரத்ததையும் தின்று எலும்புகளை மட்டுமே விட்டுவைத்தன.கொசுக்களில் ஒன்று அரசனின் மூக்கில் நுழைந்தது.அல்லாஹ் அந்தக் கொசுவால் நானூறு ஆண்டுகள் அவனை வேதனை செய்தான்.அப்போது நம்ரூத் வேதனை தாளாமல் இரும்புக் கம்பியால் தனது தலையில் தானே அடித்துக் கொள்வான்.இறுதியில் அவன் அழிந்துபோனான்.
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*
📝 உலாமாக்கள் குழுமம்
🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪
🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 27 / 2 / 17
☂☂☂☂☂☂☂☂☂☂☂
No comments:
Post a Comment