Monday, 27 February 2017

🎾இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : 6


🍓🍎🍓🍎🍓🍎🍎🍓🍎🍓🍎

🔰 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 🔰

🌙நபிமார்கள் வரலாறு🌟

 🎾இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : 6

💆🏿 சிலை வணக்கத்திற்கு எதிராக  இப்ராஹிம் அலை அவர்கள் மேற்கொண்ட தந்திரம்;

ஒருநாள் திருவிழா சமயத்தில்  மக்கள் அனைவரும் ஊருக்கு வெளியே சென்றுவிட்டனர்.அத்தருணத்தில் இப்ராஹிம் அலை அவர்கள் சிலைகள் இருக்கும் இடத்திற்கு வந்து கோடாரியைக் கொண்டு அங்கிருந்த ஒரு பெரிய சிலையைத் தவிர்த்து மற்ற எல்லாச் சிலைகளையும் அடித்து உடைத்து நொறுக்கினார்கள்.நடுவில் நின்ற பெரிய சிலையின் கழுத்தில் அந்தக் கோடாரியை மாட்டினார்.

திரும்பி வந்த மக்கள் சிலைகள்  உடைந்திருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்தனர்.தம் தெய்வங்களைப் பற்றி அவதூராகப் பேசித்திரிந்த இப்ராஹிம் தான் இதைச் செய்திருக்கக் கூடும் என்று உணர்ந்து அவரை அழைத்தார்கள்.

🎪 அவரிடம் "இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை உடைத்தது நீ தானே?"என்று கேட்டார்கள்.அவர் மிகவும் தன்மையாக "இந்தப் பெரிய சிலை கழுத்தில் தானே கோடாரியுள்ளது,அதுதான் உடைத்திருக்கக்கூடும்.அந்தச் சிலையிடமே  கேட்டுக் கொள்ளுங்கள்"என்று சாமார்த்தியமாகப் பதிலளித்தார்.

அவர்கள் அவர் சொல்ல வரும் விஷயத்தை புரிந்து கொண்டார்கள்.நாம்தான் இவற்றை தெய்வங்களாக நம்பி தவறு இழைத்துவிட்டோம் என்று சிலர் சொன்னாலும் அவர்களால் நேரடியாக ஒப்புக் கொள்ள முடியவில்லை.

அவமானப் பட்டதை மறைக்கும் விதமாக,அதனைத் தவிர்ப்பதற்காக "சிலைகள் பேசாது என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா?"என்று கேட்டனர்.

⭐ "ஓ! அப்படியானால் சிலைகள் பேசாது என்பது உங்களுக்குத் தெரியுமா?அப்படி எந்த நன்மையும் தீமையும் அளிக்காதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்.அது உங்களுக்கு கேடுதான் என்று உணர்கிறீர்களா?நீங்கள் ஏதேனும் நன்மை செய்ய நாடினால் இவைகளை நெருப்பிலிட்டு எரியுங்கள்"என்று கூறினார்.

அவர் பேசியதை மக்கள் ஏற்கமுடியாமல் அவர்மீது கோபம் கொண்டனர்.இதைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இப்ராஹீம் அலை அவர்களை தீர்த்துக்கட்ட முயர்ச்சித்தின் நம்ரூத்.

இப்ராஹீமுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்.அவரை நெருப்பு குண்டத்தில் தூக்கியெறிய வேண்டுமென்று முடிவெடுத்தார்கள்.,

🔥 நெருப்புக் குண்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.இப்ராஹீம் அலை அவர்களைக் குண்டுகட்டாகக் கட்டி நெருப்பில் தூக்கி எறிந்தார்கள்.

அப்பொழுது, அல்லாஹ் நெருப்பிற்கு இவ்வாறு கட்டளையிட்டான்.
"நெருப்பே!இப்ராஹீமின் மீது குளிராகவும்,பாதுகாப்பாகவும் ஆகிவிடு".

📙அல்குர்ஆன்21:69

"எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்.அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்."என்றுஇப்ராஹீம் அலை நெருப்பிலிருந்தபடி கூறினார்கள்.

🌲 இப்ராஹம் அலை,நெருப்பில் பொசுங்கி அவர்கள் கதை முடிந்திருக்கும் என்று சூழ்ச்சியாளர்கள் நினைத்தனர்.ஆனால்,இப்ராஹீம் அலை அவர்கள் எவ்வாறு உள்ளே சென்றார்களோ அதேபோன்று நெருப்பிலிருந்து வெளியே வந்தார்கள்.இது அவர்களுக்கு மிகப்பெரும் கைசேதத்தையும,நஷ்டத்தையும் ஏற்படுத்திவிட்டது.

அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர்.அவர்களை நஷ்டமடைந்தோராக ஆக்கினோம்.

📗அல்குர்ஆன் 21:70
     
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

📝 உலாமாக்கள் குழுமம்

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 27 / 2 / 17

☂☂☂☂☂☂☂☂☂☂☂


No comments:

Post a Comment