Monday, 27 February 2017

🌾 *இஸ்லாம், இறை நம்பிக்கை குறித்த அடிப்படைத் தகவல்கள் தொடர் - 4


🌾 *இஸ்லாம், இறை நம்பிக்கை குறித்த அடிப்படைத் தகவல்கள் தொடர் - 4*

🚻நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல் குர்ஆன் 30:30,31)

🌝ஒவ்வொரு குழந்தைகளும் அதன் இயல்பு மார்க்கத்திலேயே பிறக்கின்றன; அக்குழந்தைகளை திசைத் திருப்பி சிலை வணங்கிகளாக, இணைவைப்பாளார்களாக மாற்றுகின்றவர்கள் அவர்களை சூழவுள்ள பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களே. மனிதர்கள் இவ்வுலகில் படைக்கப் பட்டபோது ஆரம்பத்தில் அனைவரும்  தூய மார்கத்திலேயே இருந்தனர். அனைவரும் ஓரிறைக் கொள்கையையே கடைப்பிடித்துக் கொண்டிருந்தனர். எனினும் காலவோட்டத்தில் பிளவு பட்டுக் கொண்டு வெவ்வேறு கொள்கைகளை கடைப் பிடிக்க ஆரம்பித்தனர். இதன்போதே சரியான மார்கத்தை தெளிவு படுத்தும் பொருட்டு இறைவன் இவ்வுலகில் தனது தூதர்களை  இறக்கிவைத்தான.  அப்படி அனுப்பப் பட்டவர்களில் முதல் தூதரே நூஹ் (அலை) அவர்கள். மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறில்லை; பின்னர் அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர்.  (அல் குர்ஆன் 10:19)(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்து விட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.  (அல் குர்ஆன் 2:213)

*❓இஸ்லாம் என்றால் என்ன?*

⭕சிலர் கருதுவது போன்று இஸ்லாம் சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன் முஹம்மத் என்பவரால் தோற்றுவிக்கப் பட்ட வெற்று மதம் அன்று. மாற்றமாக மனித குலத்தைப் படைத்த கடவுளினால் அவர்களின் வாழ்வு சீர்பெற அவர்கள் படைக்கப் பட்ட நாள் முதல் கொடுக்கப் பட்ட முழுமையான வாழ்வு நெறியே இஸ்லாம். இஸ்லாம் என்ற அரபு வார்த்தை, பணிவு, கட்டுப்படல், வழிப்படல் என்ற அர்த்தத்தோடு, சாந்தி சமாதானம் என்ற கருத்தையும் பொதிந்துள்ளது. எனவே எவர் இறைவனின் கட்டளைகளுக்கு முழுமையாக கட்டுப் பட்டு நடக்கின்றாரோ, அவர் ஈருலகிலும் நிம்மதியையும், சாந்தத்தையும் அடைவார். ஒருவன் முஸ்லிமாக கருதப் படுவதற்கு, முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்து இருக்க வேண்டும் அல்லது முஸ்லிம் மத்தியில் அறிமுகமான பெயர் வைத்திருக்க வேண்டும் என்ற எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லை. முஸ்லிம் என்றால் தன்னைப் படைத்த கடவுளுக்கு வழிப்படுபவன் என்பதே அர்த்தம். எனவே ஒருவன் தன்னைப் படைத்த இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு, அவன் தனது செய்தியை கூறுவதற்காக அனுப்பிய தூதர்களையும், அவர்களில் இறுதியாக அனுப்பப்பட்ட முஹம்மத் (அவர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்) அவர்களையும் ஏற்றுக் கொண்டு அவர்களின் போதனைகளை தன் வாழ்வில் எடுத்து நடந்தால்   போதும் அவன் முஸ்லிமாக மாறிவிடுவான்.

🈵இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள், மற்றும் நம்பிக்கைக் கொள்ள வேண்டிய அம்சங்களின் சுருக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது:

🆔*இஸ்லாத்தின் கடமைகள்*

*❤நம்பிக்கைப் பிரகடனம்:*

☝🏻“அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு”

*📃 மொழி பெயர்ப்பு:*

🚻“வணங்கத்தக்க நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுவதோடு, முஹம்மத் (ஸல்லல்லாஹு அளைஹிவஸல்லம்) அவர்கள் அவனின் அடிமையும், தூதருமாவார் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்”

✅ஒருவன் மேற்கூறப்பட்ட வசனங்களை உள்ளத்தினால் ஏற்றுக்கொண்டு நாவினால் மொழிந்தால் முஸ்லிமாக மாறிவிடுவான்.

🕋அதனைத் தொடர்ந்துள்ள இஸ்லாத்தின் அடிப்படை செயற்பாட்டுத் தூண்கள்: அவை:

கலிமா,
தொழுகை (சலாஹ்),
நோன்பு (சவ்ம்),
ஏழைவரி (சகாத்),
புனித மக்கா யாத்திரை (ஹஜ்)

*👔நம்பிக்கைக்கான தூண்கள்*

⬛இஸ்லாமிய நம்பிக்கையின் தோற்றமும், உருவாக்கமும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)  அவர்களின் பின் நிகழவில்லை. ஏற்கனவே அருளப்பட்ட இறை வேதங்கள் பொதிந்ததும், இறைத்தூதர்கள் கூறிய தூதையுமே அன்னாரும் தொடர்ந்தார்கள். இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடு எப்போதும் எவ்வித மாற்றங்களும் இன்றி அழியாமல் நிலைத்திருக்கும் உண்மையாகும். அது இறைவனைப் பற்றிய உண்மைகளையும், அவனது சிருஷ்டிகளோடுள்ள தொடர்ப்பையும், எமக்குப் போதிக்கிறது. இவ்வுலக வாழ்வின் உண்மை இதில் பொதிந்திருக்கிறது. அதில் மனிதனின் பங்களிப்பு என்ன? என்பதைப் பற்றியெல்லாம் பேசுகிறது..

🎓இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடுகள் பின்வரும் ஆறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு விளங்குகின்றன, அவை:

♻அல்லாஹ்,மலக்குகள், வேதங்கள், தூதர்கள், மறுமை நாள், விதி என்பனவற்றை நம்புவதாகும்.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *28-02-2017*


No comments:

Post a Comment