*🕋 மார்க்க கேள்வி எண்* 391:🕋
🎯 *அ) மூஸா (அலை) அவர்கள் ஒருவனை கொலை செய்த குற்றத்தை அல்லாஹ் மன்னித்தவுடன் மூஸா(அலை) இறைவனிடம் என்ன கூறினார்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துல் கஸல் (வரலாறுகள்) 28:11-20*
✅பதில்:
என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக என்று மூஸா(அலை) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்:- *அல்குர்ஆன்: 28:17*
📜“என் இறைவா! என் மீது நீ அருள்புரிந்ததன் காரணமாக, நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 28:17)
🎯 ஆ) *காலத்தை எதற்காக ஏச வேண்டாம் என பெருமானார் கூறினார்கள்❓*
✅பதில்:
அல்லாஹ்வே காலத்தை படைத்ததினால்.
ஆதாரம்:- *ஸஹீஹ் புகாரி :4826,6181,7491*
*ஸஹீஹ் முஸ்லிம் :4519,4520, 4522,4523,4524*
📃4826. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📄6181. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில் தான் இரவுபகல் (இயக்கம்) உள்ளது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.203
ஸஹீஹ் புகாரி.
📑7491. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
“ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்) ஆவேன். என் கரத்திலேயே அதிகாரமனைத்தும உள்ளது. நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டுவருகிறேன்“ என்று அல்லாஹ் கூறினான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📋4519. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில்தான் இரவும் பகலும் உள்ளன.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
📒 4523. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காலத்தை ஏசாதீர்கள். ஏனெனில்இ அல்லாஹ்வே காலம் (படைத்து இயக்குபவன்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.
📕4520. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான்;காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). நானே இரவு பகலை மாறி மாறி வரச்செய்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
📗4524. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் காலத்தை ஏச வேண்டாம். ஏனெனில்இ அல்லாஹ்வே காலம் (படைத்து இயக்குபவன்). உங்களில் யாரும் திராட்சையை (”கண்ணியம்” எனும் பொருள் கொண்ட) ”அல்கர்ம்” என்று பெயரிட்டு அழைக்க வேண்டாம். உண்மையில் கண்ணியம் (எனும் பெயருக்குத் தகுதியானவர்) முஸ்லிமான மனிதரே ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2
2. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
3. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
4. ஹக்கிம் - தென்காசி 2
5. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
6. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
7. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
8. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
9. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை 2
10. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
2. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
3. சுல்தான் - திருநெல்வேலி 2
4. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 2
5. முஜீப் - சென்னை (ராயபுரம்) 1
6. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
7. ஹுசைன் - நாகர்கோவில் 2
8. நூகு அமீர் -கீழக்கரை 2
9. சாதிக் - மல்லிப்பட்டினம் 1
10. அப்துல் பாசித் - சவுதி 2
11. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
12. முஹம்மது அஸ்லம் -கடையநல்லூர் 2
13. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
14. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1
🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *27-02-2017*
No comments:
Post a Comment