Thursday, 23 February 2017

*🕋 மார்க்க கேள்வி எண்* 387🕋*


*🕋 மார்க்க கேள்வி எண்* 387🕋*

🎯 *அ)  நிராகரிப்பவர்கள் எதைக் கட்டுக் கதைகள் என்றி கூறினார்கள்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துந் நம்லி (எறும்புகள்) 27:61-70"*

✅பதில்:
மரித்து மண்ணாகிப் போன பிறகும் மீண்டும் கொண்டு வரப்படுவோமா

ஆதாரம்:- *அல்குர்ஆன்: 27:67 & 68*

📋மேலும், நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்: “நாங்களும் எங்கள் மூதாதையரும் (மரித்து) மண்ணாகிப் போன பின்னர், மீண்டும் வெளியே கொண்டு வரப்படுவோமா?
(அல்குர்ஆன் : 27:67)

📝நிச்சயமாக, இ(ந்த அச்சுறுத்தலான)து எங்களுக்கும் எங்களுக்கு முன் சென்று போன எங்கள் மூதாதையருக்கும் வாக்களிக்கப்பட்டே வருகிறது; இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” (என்றுங் கூறுகின்றனர்).
(அல்குர்ஆன் : 27:68)

🎯 ஆ) *தமக்கு பிறகு எத்தகைய நிராகரிப்பவர்களாக மாறி விடாதீர்கள் என பெருமானார் கூறினார்கள்❓*

✅பதில்:
பிடரியை வெட்டிக் கொள்ளும், சண்டையிட்டுக் கொள்ளும் நிராரிப்பவர்களாக

ஆதாரம்:- *புகாரி: 6868,7077, 1739, 1740*

📖1739. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் 10-ஆம் நாள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது, 'மக்களே! இது எந்த நாள்?' எனக் கேட்டார்கள். மக்கள் 'புனிதமிக்க தினம்' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் 'இது எந்த நகரம்?' எனக் கேட்டதும் மக்கள் 'புனிதமிக்க நகரம்' என்றனர். பிறகு அவர்கள் 'இது எந்த மாதம்?' எனக் கேட்டதும் மக்கள் 'புனிதமிக்க மாதம்!' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகிறதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்!' எனப் பல முறை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்தி, 'இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா?' என்றும் கூறினார்கள்.
என்னுடைய உயிர் யாருடைய கைவசம் உள்ளதோ அ(வ்விறை)வன் மீது ஆணையாக! இது அவர்கள் தங்களின் சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும்.
பின்னர் 'இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! என்னுடைய மரணத்திற்குப் பின் நீங்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகி விட வேண்டாம்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்த கேட்டேன்' என்ற வாக்கியம் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
ஸஹீஹ் புகாரி.

📃1740. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10-ஆம்) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, 'இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?' எனக் கேட்டார்கள். நாங்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!' என்றோம். அந்நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மெளனமாக இருந்துவிட்டு, 'இது (பலியிடுவதற்குரிய) நஹ்ருடைய நாளல்லவா?' என்றனர். நாங்கள் 'ஆம்!' என்றோம். பிறகு 'இது எந்த மாதம்?' என அவர்கள் கேட்டதும் நாங்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!' என்றோம். அப்போதும் அம்மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மெளனமாக இருந்தார்கள். பிறகு, 'இது துல்ஹஜ் மாதம் அல்லவா?' என அவர்கள் கேட்க, நாங்கள் 'ஆம்!' என்றோம். பிறகு 'இது எந்த நகரம்?' எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!' என்றோம். அப்போதும் அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மெளனமாக இருந்தார்கள். பிறகு 'இது புனிதமிக்க நகரமல்லவா?' எனக் கேட்க, நாங்கள் 'ஆம்!' என்றோம். பிறகு 'உங்களுடைய (புனிதமான) இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமான) இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் இரட்சகனைச் சந்திக்கும் நாள்வரை புனிதமானவையாகும்!' என்று கூறிவிட்டு, 'நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்ப்பித்து விட்டேனா?' எனக் கேட்டார்கள். மக்கள் 'ஆம்!' என்றனர். பிறகு அவர்கள் 'இறைவா! இதற்கு நீயே சாட்சியாயிரு! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! ஏனெனில், செவியேற்பவரை விட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்து கொள்பவராயிருக்கலாம்; எனக்குப் பின்னால் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகி விடவேண்டாம்!' எனக் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி.

📒6868. ('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடாதீர்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.


📕7077. நபி(ஸல்) அவர்கள் ('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) கூறினார்கள்:
எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை 2
2. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
3. ஷாஜகான் - சென்னை 1
4. ஹக்கிம் - தென்காசி 2
5. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்)2
6. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
7. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
8. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
9. ஹபிப் ரஹ்மான் - துபாய் 1
10. முபாரக் - சென்னை 1
11. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
12. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
2. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
3. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
4. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
5. நூகு அமீர் -கீழக்கரை 2
6. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
7. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
8. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
9. ஹுசைன் - நாகர்கோவில் 2
10.அப்துல் பாசித் - சவுதி 2

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *24-02-2017*

No comments:

Post a Comment