Thursday, 23 February 2017

*🕋 மார்க்க கேள்விஎண்388:🕋


*🕋 மார்க்க கேள்விஎண்388:🕋

🎯 *அ)  எத்தகையவர்களை கேட்கும் படி செய்ய முடியாது என அல்லாஹ் நபியிடம் கூறுகிறான்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துந் நம்லி (எறும்புகள்) 27:71-80"*

✅பதில்:

🌾மரித்தோரை

🌾செவிடர்களை

🌾புறங்காட்டி திரும்பியவர்களை.

ஆதாரம்:- *அல்குர்ஆன்: 27:80*

📄நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது; - அவ்வாறே செவிடர்களையும் - அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும்போது - (உம்) அழைப்பைக் கேட்கும் படிச் செய்ய முடியாது.
(அல்குர்ஆன் : 27:80)

🎯ஆ) *எந்த நபிக்கு வேதத்தை ஓதுவது எளிதாக்கப்பட்டிருந்தது மற்றும் எவ்விதம் என பெருமானார் கூறுகிறார்கள்❓*

✅பதில்:  🎓தாவூத் (அலை) அவர்களுக்கு

📋தம் வாகனப் பிராணிக்குச் சேணம் பூட்டிடக் கட்டளையிடுவார்கள். பணியாள் சேணம் பூட்டி முடிப்பதற்குள் -வேதம் - முழுவதையும் ஓதிவிடுவார்கள்.

ஆதாரம்:- *புகாரி: 3417, 4713*

📕3417. நபி(ஸல்) அவர்கள் கூறினார்
தாவூத்(அலை) அவர்களுக்கு (தவ்ராத், ஸபூர் ஆகிய இறைவேதங்களை ஓதுவது லேசாக்கப்பட்டிருந்தது. தம் (குதிரை) வாகனத்தை (சவாரிக்காகத்) தயார் செய்யும் படி உத்திரவிடுவார்கள். உடனே, அதற்குச் சேணம் பூட்டப்படும் வாகனத்திற்குச் சேணம் பூட்டப்படுவதற்கு முன்பே இறைவேதத்தை ஓதி விடுவார். தன் கையினால் உழைத்துப் பெறும் சம்பாத்தியத்திலிருந்து தான் உண்பார்.
அத்தாஉ இப்னு யஸார்(ரஹ்) வழியாகவும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸஹீஹ் புகாரி.

📒4713. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தாவூத்(அலை) அவர்களுக்கு வேதம் ஓதுவது இலேசாக்கப்பட்டிருந்தது. அவர்கள் தம் வாகனப் பிராணிக்குச் சேணம் பூட்டிடக் கட்டளையிடுவார்கள். (பணியாள்) சேணம் பூட்டி முடிப்பதற்குள் -வேதம் - முழுவதையும் ஓதிவிடுவார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
3. ஷாஜகான் - சென்னை 1
4. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
5. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
6. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 1
7. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
8. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
9. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை 2
10. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
11. ஹக்கிம் - தென்காசி 2
12. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 1

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
2. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
3. ஹுசைன் - நாகர்கோவில் 2
4. அப்துல் பாசித் - சவுதி 2
5. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
6. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
7. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
8. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
9. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
10. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 1
11. நூகு அமீர் -கீழக்கரை 2
12. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *24-02-2017*

No comments:

Post a Comment