*🕋 மார்க்க கேள்வி எண்* 389🕋:
🎯 *அ) மறுமையில் நன்மை மற்றும் தீமைகளை கொண்டு வருபவருக்குரிய கூலி என்ன❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துந் நம்லி (எறும்புகள்) 27:81-90"*
✅பதில்:
நன்மையைக் கொண்டு வருபவருக்கு அதைவிட மேலானது கிடைக்கும்.
தீமையைக் கொண்டு வருபவருக்கு முகங்கள் குப்புற நரக நெருப்பில் தள்ளப்படும்.
ஆதாரம்:- *அல்குர்ஆன்:27:89 & 90*
📒(அந்நாளில்) எவர் நன்மையைக் கொண்டு வருகிறாரோ, அவருக்கு அதைவிட மேலானது உண்டு - மேலும் அவர்கள் அந்நாளின் திடுக்கத்தை விட்டும் அச்சந் தீர்ந்து இருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 27:89)
📕இன்னும்: எவர் தீமையைக் கொண்டு வருகிறாரோ அவர்களுடைய முகங்கள் குப்புற (நரக) நெருப்பில் தள்ளப்படும்; “நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு அன்றி (வேறு) நீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்களா?” (என்று கூறப்படும்.)
(அல்குர்ஆன் : 27:90)
🎯 ஆ) *போதை வஸ்த்துக்களை பயன்படுத்துபவருக்கு மறுமையில் எந்த பானத்தை புகட்ட இருப்பதாக பெருமானார் கூறுகிறார்கள்❓*
✅பதில்:
"தீனத்துல் கபால்" - நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ்.
ஆதாரம்:- *முஸ்லிம்:4075*
📄4075. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் யமன் நாட்டிலுள்ள "ஜைஷான்" எனுமிடத்திலிருந்து வந்து, தம் நாட்டினர் சோளத்திலிருந்து தயாரித்துப் பருகிவருகின்ற ஒருவகை பானம் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அது போதையளிக்கக்கூடியதா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம் (போதையளிக்கக்கூடியதே)" என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "போதையளிக்கக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும். (இவ்வுலகில்) போதைப் பொருட்களை உட்கொள்பவருக்கு (மறுமையில்) "தீனத்துல் கபாலை" நிச்சயமாக நான் புகட்டுவேன் என அல்லாஹ் உறுதிமொழி எடுத்துள்ளான்" என்று கூறினார்கள்.
மக்கள் "அல்லாஹ்வின் தூதரே! "தீனத்துல் கபால்" என்பது என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ்" என்று விடையளித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
2. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
3. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 2
4. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
5. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
6. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
7. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
8. ஹக்கிம் - தென்காசி 2
9. முபராக் - சென்னை 1
10.ஷாஜகான் - சென்னை 1
11. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை 2
12. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. அப்துல் பாசித் - சவுதி 2
2. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 1
3. சுல்தான் - திருநெல்வேலி 2
4. நூகு அமீர் -கீழக்கரை 2
5. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
6. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
7. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
8. ஹுசைன் - நாகர்கோவில் 2
9. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
10. சாதிக் - மல்லிப்பட்டினம் 1
11. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
12. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
13. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
✍✍✍✍✍✍✍✍✍✍✍
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *25-02-2017*
No comments:
Post a Comment