🏵⚓🏵⚓🏵⚓🏵⚓🏵⚓🏵
🔰 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 🔰
🌙நபிமார்கள் வரலாறு🌟
🎾இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : 10
🕋 இப்ராஹிம் அலை அவர்களின் குடும்பமும்;மக்கத்து பூமியும்:
இப்ராஹீம் அலை அவர்கள்,ஹாஜர் தம் மகன் இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் இருவரையும் கொண்டுவந்து அவர்களை கஅபாவின் மேல்பகுதியில் இப்போதுள்ள ஜம்ஜம் கிணற்றுக்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே விட்டுவிட்டார்கள்.
🕌 பிறகு இப்ராஹீம் அலை அவர்கள் அவர்களை அங்கேயே விட்டுவிட்டு ஷாம் நாட்டிற்குத் திரும்பி சென்றார்கள்.அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் அலை அவர்கள் பின்தொடர்ந்து வந்து,"இப்ராஹீமே!மனிதரோ வேறெந்தப் பொரளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?".என்று கேட்டார்கள்.
இப்ராஹீம் அலை அவர்கள் அவர்களைத் திரும்பி பார்க்காமல் நடக்கலானார்கள்.ஆகவே,அவர்களிடம் ஹாஜர் அலை அவர்கள்,"அல்லாஹ் தான் உங்களுக்கு கட்டளையிட்டானா?என்று கேட்க,அவர்கள்,ஆம் என்று சொன்னார்கள்.அதற்கு ஹாஜர் அலை அவர்கள்,"அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டேன்"என்று சொல்லிவிட்டுத் திரும்பி சென்று விட்டார்கள்.
🏳🌈 இப்ராஹீம் அலை அவர்கள் சிறிது தூரம் நடந்துசென்று மலைக் குன்றின் அருகே,அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது தம் முகத்தை இறையில்லம் கஃபாவை நோக்கி,பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி,இந்தச் சொற்களால் பிரார்த்தித்தார்கள்.
எங்கள் இறைவா!எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்குள்,விவசாயத்துக்குத் தகுதியில்லாத பள்ளத்தாக்கில்,இவர்கள் தொழுகை நிறைவேற்றுவதற்காக பணியமர்த்திவிட்டேன்.எனவே எங்கள் இறைவா!மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக!இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!
📒அல்குர்ஆன் 14:37
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*
📝 உலாமாக்கள் குழுமம்
🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪
🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 27 / 2 / 17
☂☂☂☂☂☂☂☂☂☂☂
No comments:
Post a Comment