*🕋 மார்க்க கேள்வி எண் 390:*
_(மூன்று மதிப்பெண் கேள்வி, குர்ஆன் கேள்விக்கு இரண்டு மதிப்பெண்கள்)_
🎯 *அ)வழி கெடுகிறவரிடம் நபியை அல்லாஹ் என்ன கூற சொல்கிறான்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துந் நம்லி (எறும்புகள்) 27:91-93"*)
✅பதில்:
🎓.“நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்.
🎓எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
🎓அவன் சீக்கிரத்தில் உங்களுக்குத் தன் அத்தாட்சிகளைக் காண்பிப்பான்; அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்”
🎓உம்முடைய இறைவன் நீங்கள் செய்வதை விட்டும் பராமுகமாக இல்லை.
ஆதாரம்:- *அல்குர்ஆன்: 27:92 & 93*
📕இன்னும்: குர்ஆனை ஓதி வரவும் (நான் ஏவப்பட்டுள்ளேன்); ஆகவே எவர் நேர்வழியை அடைகிறாரோ - அவர் நேர்வழியடைவது அவர் நன்மைக்கேயாகும்; அன்றியும் எவர் வழி கெடுகிறாரோ (அவருக்குக்) கூறுவீராக: “நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்.“
(அல்குர்ஆன் : 27:92)
📒இன்னும் கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவன் சீக்கிரத்தில் உங்களுக்குத் தன் அத்தாட்சிகளைக் காண்பிப்பான்; அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” மேலும் உம்முடைய இறைவன் நீங்கள் செய்வதை விட்டும் பராமுகமாக இல்லை.
(அல்குர்ஆன் : 27:93)
🎯 *_ஆ)நதியில் மிதந்து வந்த மூஸா (அலை) அவர்களைக் குறித்து ஃபிர்அவ்னிடம் அவனது மனைவி என்ன கூறினார்❓_*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துல் கஸல் (வரலாறுகள்) 28:01-10*)
✅பதில்:
🎓 இக்குழந்தை எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்.
ஆதாரம்:- *அல்குர்ஆன்: 28:9*
📄இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.
(அல்குர்ஆன் : 28:9)
🎯 *இ) எவர்களுடைய உள்ளம் பறவைகளின் உள்ளம் போல் இருக்கும் என பெருமானார் கூறுகிறார்கள்❓*
✅பதில்: சொர்க்கத்தில் நுழையயக்கூடிய சில மக்களின் உள்ளங்கள்.
ஆதாரம்:- *முஸ்லிம்: 5462*
📖5462. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உள்ளங்கள் பறவைகளின் உள்ளத்தைப் போன்றிருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 3
2. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 3
3. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை (தஞ்சை) 3
4. அபூதல்ஹா - திருநெல்வேலி 3
5. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 3
6. ஹக்கிம் - தென்காசி 3
7. ஹபிப் ரஹ்மான் - துபாய் 3
8. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 3
9. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 3
10.ஷாஜகான் - சென்னை 2
11. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 3
12. பீர் முஹம்மது - திருநெல்வேலி 3
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 3
2. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 3
3. சுல்தான் - திருநெல்வேலி 3
4. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
5. நூகு அமீர் -கீழக்கரை 3
6. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 3
7. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 3
8. அப்துல்காதர் - திருநெல்வேலி 3
9. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 3
10. ஹுசைன் - நாகர்கோவில்3
11. பத்ருத்தீன் - கடையநல்லூர் 3
12.அப்துல் பாசித் - சவுதி 3
13. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 3
⏱⏱⏱⏱⏱⏱⏱⏱⏱⏱⏱
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1
⏱⏱⏱⏱⏱⏱⏱⏱⏱⏱⏱
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *26-02-2017
No comments:
Post a Comment