Saturday, 29 July 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள்! - 7

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள்! - 7

========================

ஜம் ஜம் கிணறு!

 இப்போது மக்கா
நகரமாக இருக்கும் இந்த இடம் ஊராக
உருவாவதற்கு முன், முதன் முதலில் இப்ராஹீம் நபி عليه السلام  அவர்கள்
தமது மனைவியையும், கைக்
குழந்தையான மகன்
இஸ்மாயீலையும் இறைக் கட்டளைப்படி இங்கே
குடியமர்த்தினார்கள்.
குழந்தை தாகத்தால் தவித்த போது
இஸ்மாயீலின் தாயார், ஸஃபா மர்வா என்னும் இரு மலைக் குன்றுகள்
மீதும் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக ஓடி ஏறி,
ஏதாவது வணிகக் கூட்டம் செல்கின்றதா? என்று பார்த்தார்கள்.
அவர்களிடம் தண்ணீர் வாங்கி குழந்தையின்
தாகத்தை தணிக்க எண்ணினார்கள்.
அதற்கிடையே அல்லாஹ், குழந்தை
கிடந்த இடத்தில் அற்புத நீரூற்றை
ஏற்படுத்தினான்.
எத்தனை ஆண்டுகளானாலும்
கெட்டுப் போகாத தன்மை இந்த ஜம்ஜம் நீருக்கு உண்டு. இங்கே கால் கோடிக்கும் அதிகமான மக்கள்
அன்றாடம் பயன்படுத்தியும்,
கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கு எடுத்துச் சென்றும்
இந்தக் கிணறு ஊறிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாம் மெய்யான
மார்க்கம் என்பதற்குச் சான்று பகர்ந்துக் கொண்டிருக்கிறது.
தோண்டுகின்ற இடமெல்லாம்
எண்ணெய்க் கிணறுகள்
தோன்றுகின்ற இந்தப் பாலைவன
மணலில், இது ஒரு வரலாற்று அற்புதம்.

நாள் தோறும் வருகின்ற
பல்லாயிரக் கணக்கான மக்களுக்கும்,
ஆண்டு தோறும் கூடுகின்ற அத்தனை இலட்சம் பேருக்கும் தாகம் தணிக்கிறது இக்கிணறு. அதிக
சக்தியுள்ள இயந்திரங்கள் மூலம்
அனுதினமும் நீர் வெளியேற்றப்
படுகிறது. அள்ள அள்ளக் குறையாத
இப்பேரற்புதத்தை நிகழ்த்திக்
கொண்டிருக்கும் இறைவன்
பேராற்றலுடையவன்.சுற்றிலும் கண்ணாடித் தடுப்புகளால் அரண்
அமைத்து பாதுகாக்கப் பட்டுள்ள இக்கிணற்றின் மிக அருகில் சென்று
பார்க்கும் ஹாஜிகள் இறைவனின்
மாபெரும் அற்புதத்தை எண்ணி வியக்கின்றனர். இந்த ஜம்ஜம் கிணறு
இருக்கும் பகுதியும், பிரார்த்தனை
அங்கீகரிக்கப்படும் இடங்களில் ஒன்றாகும்.தரைப் பகுதியில் படிகள் அமைத்து உள்ளே சென்று பார்க்கவும், தண்ணீர் அருந்தவும்
ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
ஆண்களுக்கும், பெண்களுக்கும்,
தனித் தனியாக பாதைகள் அமைக்கப்
பட்டுள்ளன.
தவாபை முடித்து
தொழுகையையும் நிறை வேற்றிய ஹாஜிகள், கூட்டம்
கூட்டமாகச் சென்று தண்ணீர் அருந்துகின்றனர். பிரார்த்தனை
அங்கீகரிக்கப் படும் இந்த கிணற்றடியில் நின்று
பிரார்த்திக்கின்றனர். வயிறும் மனதும் நிறைந்தவர்களாக
ஹாஜிகள் அடுத்த செயலை நிறைவேற்ற அவசரமாகச்
செல்கின்றனர்.

ஸஃபா மர்வா மலைகளுக்கிடையே ஸயீ என்னும் ஓட்டம்.

ஸயீ என்னும் தொங்கோட்டம்.
ஸஃபாவும், மர்வாவும்
அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த
ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும்
சுற்றுவது குற்றமில்லை.
நன்மைகளை மேலதிகமாகச்
செய்பவருக்கு அல்லாஹ் நன்றி
பாராட்டுபவன். அறிந்தவன்.(திருக்
குர்ஆன் 2:158)

அன்று நபி இஸ்மாயீல் عليه السلام
அவர்களின் அன்னையார் தண்ணீர்
தேடி ஓடியதை நினைவு கூறும்
விதமாக இன்றளவும் ஹஜ்ஜுக்கு வரும்
 அனைவரும் ஓடுகின்றனர்.
ஸஃபா, மர்வா என்பது இரு சின்னஞ் சிறு
 மலைக் குன்றுகளின்
பெயர். இப்போது அந்த இடங்களில் மலைக்
 குன்றுகள் இல்லை. சற்று உயரமான
 இடத்தில் மலைக்
குன்றுகளை நினைவு படுத்தும் விதமாக  கற்கள் குவித்து
வைக்கப்பட்டுள்ளன. ஸஃபா, மர்வா
இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதி,
நீண்ட அரங்கம் போல் அமைக்கப் பட்டு,
குளு குளு வசதி செய்யப்
பட்டுள்ளது. ஆங்காங்கே மாபெரும்
மின் விசிறிகள் காற்றோட்டத்தை
ஏற்படுத்துகின்றன. அடுக்கடுக்காக
மூன்று தளங்கள், ஹாஜிகள்
சிரமமின்றி ஓடுவதற்கு வசதியாக
அமைக்கப் பட்டுள்ளன. போவதற்கும்,
வருவதற்குமாக இரு தனித்தனிப்
பாதைகள். ஓட இயலாதவர்களைத்
தள்ளு வண்டியில் வைத்து, தள்ளிக்
கொண்டு செல்வதற்கும் நடுவில்
தனிப்பாதை அமைக்கப் பட்டுள்ளது.
ஓட்டத்தை, ஸஃபாவில் துவக்க
வேண்டும்.

 ஸஃபாவிலிருந்து
மர்வா சென்று சேருவது ஒரு
ஓட்டம். மீண்டும் மர்வாவிலிருந்து
புறப்பட்டு ஸஃபா வந்து சேருவது இரண்டாவது  ஓட்டம். இவ்விதம்,
ஸஃபாவில்  தொடங்கிய முதல் ஓட்டம், ஏழாவது
 ஓட்டத்துடன் மர்வாவில்
நிறைவு பெறும்.
ஸஃபாவிலிருந்து மர்வா வரை
வேகமாக ஓட வேண்டும் என்று
அவசியமில்லை. நடந்து சென்றால்
போதும். இடைப்பட்ட பகுதியில் ஒரு
 குறிப்பிட்ட தூரத்தில் மட்டும் ஆண்கள் சற்று  வேகமாக ஓட
வேண்டும். இந்த இடத்திற்கு
‘மீலைனில் அக்லரைன்” என்று பெயர்.
இந்த இடத்திற்கு அடையாளமாக
இரு புறமும் பச்சை விளக்குகள்
எரிகின்றன.
நபி صلى الله عليه وسلم  அவர்கள் முதல் தவாஃப்
செய்யும் போது மூன்று
சுற்றுக்களில் வேகமாக
ஓடுவார்கள். நான்கு சுற்றுக்களில்
நடப்பார்கள். மேலும் ஸஃபா
மர்வாவுக்கிடையே வலம் வரும்போது
 ஓடைப் பகுதியில்
 மட்டும் ஓடுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் رضي الله عنه
ஆதாரம்: புகாரி (1644)

ஸஃபா மர்வா
குன்றுகளுக்கிடையே, மனித வெள்ளம் கரை
 புரண்டு ஓடுகிறது.
 ஹஜ் அல்லது உம்ராச்
செய்ய வந்த அத்தனை இலட்சம்
புனிதர்களும் ஓடுகிறார்கள்.
ஒருவரையொருவர் இடிக்கவில்லை. வீண்
 பேச்சுக்கள் இல்லை.
உலக நினைவுகள் இல்லை.
மெதுவான குரலில் துஆக்கள்
ஓதுவதைத் தவிர வேறு எந்த சப்தமும்
இல்லை.  மரணத்தை
நினைத்து ஓடுகிறார்கள்!;
மறுமையை நினைத்து
ஓடுகிறார்கள்! மஹ்ஷரை
நினைத்து ஓடுகிறார்கள்!
மண்ணறை வாழ்வை நினைத்து
ஓடுகிறார்கள்!கால்கள் ஓடுகின்றன!
கண்கள் அழுகின்றன! நாவுகள்
பிரார்த்திக்கின்றன!
ஸஃபாவில் முதல் ஓட்டத்தைத்
தொடங்கிய ஹாஜிகள், தமது ஏழாவது  ஓட்டத்தை மர்வாவில்
நிறைவு செய்து  தங்கள் முதல்
கடமையான  உம்ராவை
இத்துடன் இனிதே நிறைவு
செய்கின்றனர்.
‘ஒரு உம்ராச் செய்வது மறு உம்ரா
வரையில் உள்ள பாவங்களின்
பரிகாரமாகும். ஒப்புக் கொள்ளப்பட்ட
ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத் தவிர
வேறில்லை” என்று நபி صلى الله عليه وسلم
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:
அபூ ஹுரைரா رضي الله عنه  ஆதாரம்:
திர்மிதி (855)

தமத்துவ் என்னும் ஹஜ் செய்ய நிய்யத்
செய்தவர்கள், தலைமுடி நீக்கி
அல்லது கத்தரித்து
இஹ்ராமிலிருந்து
விடுபடுகின்றனர். கிரான் என்னும்
ஹஜ் செய்ய நிய்யத் செய்து இஹ்ராம்
அணிந்தவர்கள் இதே இஹ்ராமுடன்
ஹஜ்ஜை எதிர் நோக்கிக்
காத்திருக்கின்றனர்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி

கடலங் குடி.

பதிவு

Thursday, 27 July 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள்! 06

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள்! 06

========================

தவாபுல் குதூம் என்னும் முதல் தவாப்!

பொதுவாக எந்தப் பள்ளியில்
நுழைந்தாலும், முதலில் 2 ரக்அத் நபில் தொழுவது சிறந்தது. ஆனால்
மஸ்ஜிதுல் ஹராமின் உள்ளே நுழைந்ததும்
கடமையான ஜமாஅத் தொழுகை
நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம்
தவிர, மற்ற நேரங்களில் முதலில் தவாப் செய்வதே சிறந்தது. அதுவே முறையும் கூட.
ஹஜ் அல்லது உம்ராச் செய்ய, புனித
மக்காவுக்கு வரும்போது முதலில் செய்யும் தவாபுக்கு ‘தவாபுல் குதூம்” என்று
பெயர். கஃபாவை ஏழு முறை சுற்றி வருவது
ஒரு தவாப் ஆகும். மஸ்ஜிதுல் ஹராமுக்கு ஏராளமான நுழைவாயில்கள் உள்ளன. எந்த
வழியாகவும் உள்ளே நுழையலாம். அவரவர்
வந்து சேரும் வழிகளில் உள்ள நுழைவாயில் வழியே
உள்ளே நுழைகின்றனர். அவரவர் தம் தவாபுல்
குதூமை அழகாகத் தொடங்குகின்றனர்.
‘நபி صلى الله عليه وسلم  அவர்கள் மக்காவுக்கு வந்ததும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்தார்கள். ஹஜருல்
அஸ்வதை முத்தமிட்டார்கள். பின்பு வலப்புறமாக (கஃபாவை)
சுற்றலானார்கள். மூன்று சுற்றுக்கள்
விரைவாகவும் நான்கு சுற்றுக்கள்
சாதாரணமாகவும் நடந்து சுற்றினார்கள்.
பிறகு மகாமே இப்ராஹீம் எனும் இடத்திற்கு
வந்தார்கள். மகாமே இப்ராஹீமில்
தொழுமிடத்தை ஏற்படுத்திக்
கொள்ளுங்கள் (2:125) என்ற வசனத்தை
ஓதிவிட்டு, தமக்கும் கஃபாவுக்கும் இடையே
மகாமே இப்ராஹீம் இருக்குமாறு 2
ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர்
ஹஜருல் அஸ்வதுக்கு வந்து அதைத்
தொட்டு முத்தமிட்டார்கள். பிறகு
ஸஃபாவுக்குச் சென்றார்கள்.
‘நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும்
அல்லாஹ்வின் சின்னங்களில்
உள்ளவையாகும் (திருக் குர்ஆன் 2: 158) என்ற வசனத்தை
 அவர்கள் ஓதியதாக எண்ணுகிறேன்”
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: திர்மிதி
(784)

ஹஜருல் அஸ்வத் கல் இருக்கும் இடத்திலிருந்து
ஹாஜிகள் தவாபைத்
தொடங்குகின்றனர். இயன்றால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு
முத்தமிடட்டும், இயலாவிட்டால்
தூரத்திலிருந்தே கைகளால் சைகை செய்தும் தவாஃபத்
 தொடங்கலாம். நபி صلى الله عليه وسلم
அவர்கள் தமது வாகனத்தின் மீதமர்ந்து
தவாப் செய்தார்கள். ஹஜருல்
அஸ்வதுக் கருகே வந்த போது அதை நோக்கி சைகை
செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் رضي الله عنه  ஆதாரம்: திர்மிதி (793)

‘ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிருந்து
இறங்கியதாகும். அது பாலை விட
வெண்மையாக இருந்தது. ஆதமுடைய
மக்களின் பாவங்கள் அதைக் கறுப்பாக்கி
விட்டன” என்று நபி صلى الله عليه وسلم
கூறினார்கள்.
 இப்னு அப்பாஸ் رضي الله عنه  திர்மிதி (803)
கியாமத் நாளில் பார்க்கும் இரு கண்கள்
கொண்டதாகவும், பேசும் நாவு
கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை
(அல்லாஹ்) எழுப்புவான். யார் இதை
முத்தமிட்டரோ அவருக்காக அது சாட்சி கூறும்
என்று நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رضي الله عنه
ஆதாரம்: திர்மிதி (884)
தவாபின் ஒவ்வொரு சுற்றின் போதும்
ஹஜருல் அஸ்வதை முத்தமிடவோ அல்லது அதை
நோக்கி சைகை செய்யவோ வேண்டும்.
நபி صلى الله عليه وسلم  அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து
கஃபாவை தவாப் செய்தார்கள்.
ஹஜருல் அஸ்வதின் பக்கம்
வரும்போதெல்லாம் சைகை
செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் رضي الله عنه  ஆதாரம்: புகாரி (1612)
ஹாஜிகள் தவாபைத்
தொடங்குகிறார்கள். ஒரே சீராக, ஒழுங்கு
 முறையுடனும், மிகுந்த
கட்டுப்பாட்டுடனும் சுற்றி வருகிறார்கள்.
இலட்சக் கணக்கான மக்கள் சுற்றிக்
கொண்டே இருக்கிறார்கள். இரவும் பகலும்
 இடைவிடாது சுற்றிக் கொண்டே
இருக்கிறார்கள்.அரசர்களும், ஆண்டிகளும்,
ஆட்சி செய்யும் அதிகாரிகளும்,
முதலாளிகளும், தொழிலாளிகளும்,
ஏழைகளும், செல்வந்தர்களும், ஏற்றத்
தாழ்வின்றி சுற்றுகிறார்கள்.
படித்தவர்களும், பாமரர்களும், பாகுபாடின்றி
சுற்றுகிறார்கள். ஆண்களும். பெண்களும்,
சிறியோரும், பெரியோரும், வாலிபர்களும்,
வயோதிகரும் அனைத்து வகை மனிதர்களும்
அழகாகச் சுற்றுகிறார்கள்.
தள்ளாத வயதில் பெற்றோரைத் தம் முதுகில்
சுமந்தபடி தாம் பெற்றக் குழந்தைகளைத் தம்
தோளில் சுமந்தபடி வளரும் சிசுக்களைத் தம் வயிற்றில்
 சுமந்தபடி மறுமை பயத்தைத் தம்
மனதில் சுமந்தபடி இறையச்சத்தைத் தம்
இதயத்தில் சுமந்தபடி திருமறை குர்ஆனைத் தம் கரங்களில்
 சுமந்தபடி
-திக்ருகளைத் தம் நாவுகளில்
மொழிந்த படி பாவ மன்னிப்புக்
கேட்டுத் தம் கைகள் ஏந்தியபடி கவலையுடன்
அழுதழுது கண்ணீர் சொரிந்தபடி
சுற்றுகிறார்கள். சுற்றுகிறார்கள். சுற்றிக்
கொண்டே இருக்கிறார்கள்.
1400 ஆண்டுகளாக, ஆயிரமாயிரம் கோடிப்
பேர்கள் சுற்றினார்கள். இந்தக் கணப்
பொழுதிலும் இலட்சக் கணக்கானோர் சுற்றிக்
 கொண்டிருக்கிறார்கள். இறுதி நாள் வரை
 இன்னும் எத்தனை எத்தனை கோடிகளோ!
எண்ணிக்கை எந்த எண்ணிலும் அடங்காது.
ஏட்டிலும் அடங்காது.
ஏழு முறை கஃபாவைச் சுற்றுவது ஒரு தவாப்
ஆகும். ஏழு சற்றுக்களை நிறைவு செய்தவர்கள்,
எவ்வளவு இதமுடன் வெயியேறுகின்றனர்!
தவாபை முடித்தவர்முடித்தவர்கள், சிறுகச் சிறுக
வெளியேற தவாபைத்
தொடங்குபவர்கள் பக்குவமாக
நுழைகின்றனர். சங்கிலித் தொடராக
இந்தச் சுற்றுக்கள்
தொடர்கின்றன.தொடர்ந்துக் கொண்டே
 இருக்கின்றன. முதல்
தவாபில் முதல் மூன்று சுற்றுக்களில் மட்டும் தோள்களைக்
 குலுக்கியவாறு கொஞ்சம் வேகமாக
 (ஆண்கள்) ஓட வேண்டும்.
நபி صلى الله عليه وسلم  அவர்கள், ஹஜ்ஜிலும் உம்ராவிலும் முதல்
மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள்.
(மீதமுள்ள) நான்கு சுற்றுக்களில் நடந்து
செல்வார்கள். அறிவிப்பவர்:
அப்துல்லாஹ் பின் உமர் رضي الله عنه  ஆதாரம்: புஹாரி (1604)

தவாபை முடித்ததும், அடுத்த செயல்
மகாமே இப்ராஹீமில் இரண்டு ரக்அத்
தொழவேண்டும். ஏனெனில் நபி صلى الله عليه وسلم அவர்கள் இப்படித்தான்
செய்தார்கள்.
நபி صلى الله عليه وسلم  அவர்கள் மக்கா வந்த போது கஃபாவை ஏழு
 முறை வலம் வந்தார்கள். பிறகு
மகாமே இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு
ரக்அத் தொழுதார்கள். பிறகு ஸஃபாவி(ல்
 ஓடுவத)ற்காகப்
புறப்பட்டார்கள். ‘நிச்சயமாக
அல்லாஹ்வின் தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய
 முன் மாதிரி உள்ளது” என இறைவன்
கூறுகிறான். அறிவிப்பவர்: இப்னு உமர் رضي الله عنه
ஆதாரம்: புகாரி(1627)

மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை
ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (திருக்
குர்ஆன் 2:125)
தவாபை நிறைவு செய்த ஹாஜிகள்,
மகாமே இப்ராஹீமுக்கு அருகில் நின்று இரண்டு ரக்அத்
 தொழுகின்றனர். மகாமே
இப்ராஹீமுக்கு மிக அருகில் தான் நின்று
தொழ வேண்டும் என்பதில்லை.
நபி صلى الله عليه وسلم  அவர்கள் (தம் ஹஜ்ஜை முடித்து)
மக்காவிலிருந்து புறப்பட நாடினார்கள்.
தவாப் செய்யாத நிலையில் நானும்
புறப்பட ஆயத்தமானேன். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள்
 ‘சுப்ஹுத் தொழுகைக்காக
இகாமத் சொல்லப்பட்டவுடன்
மக்கள் தொழுது
கொண்டிருக்கும்போது நீ ஒட்டகத்தின்
மீதமர்ந்து தவாப் செய்துக் கொள்” எனக் கூறினார்கள்.
அவ்வாறே நான் செய்தேன். இதனால்
(இரண்டு ரக்அத்துகளை) பள்ளிக்கு வெளியே
வந்த பிறகே தொழுதேன். அறிவிப்பவர்:
உம்மு ஸலமா رضي الله عنها  ஆதாரம்: புகாரி
(1626)

மகாமே இப்ராஹீமுக்கு அருகில் நின்று
தொழுவது, தவாபு சுற்றுபவர்களுக்கு
இடையூறாக இருக்கும். நெரிசலில் சிலர் அவசர அவசரமாக, ருகூவு செய்யவும்
முடியாமல், ஸஜ்தாச் செய்யவும்
முடியாமல், சிரமப்பட்டு தொழுவதைக்
காணலாம். தொழுகை என்பது நிறுத்தி
நிதானமாகச் செய்ய வேண்டிய ஒரு
வணக்கமாகும்.
எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப் படுத்த மாட்டோம்
 (திருக் குர்ஆன் 23:62)
என்று அல்லாஹ்வின் திருமறை கூறுகிறது. எனவே கடுமையான
 சிரமத்துக்கு மத்தியில் அந்த மகாமே
 இப்ராஹீமுக்கு அருகில் நின்று
தொழுவதை விட மஸ்ஜிதுல் ஹராமின்
எந்தப் பகுதியிலும் தொழுகையை நிறைவேற்றிக்
கொள்ளலாம். விபரம் அறிந்த ஹாஜிகள்,  தவாபின் இரண்டு ரக்அத் தொழுகையை
 மஸ்ஜிதுல் ஹராமில்
வசதிப் பட்ட இடங்களில் நிறைவேற்றுகின்றனர்.
கஃபாவின் வட பகுதியில் அரை வட்டத்துக்குச்
சிறிய சுவர் ஒன்று எழுப்பப் பட்டுள்ளது. இதற்கு ஹிஜ்ர்
 இஸ்மாயீல் என்று பெயர். நான் கஃபா
 ஆலயத்துக்குள் நுழைந்து அதில்
தொழ விருப்பம்
கொண்டிருந்தேன். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை
நுழையச் செய்து, ஆலயத்தின் உள்ளே நுழைய
விரும்பினால் இங்கே
தொழுவாயாக! ஏனெனில் இதுவும்
 ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும்
உனது கூட்டத்தினர் கஃபாவைக் கட்டிய போது அதைச்
சுருக்கி விட்டனர். மேலும் இந்த இடத்தை ஆலயத்தை
விட்டும் அப்புறப் படுத்திவிட்டனர்.” என்று கூறினார்கள்.
 அறிவிப்பவர்: ஆயிஷா رضي الله عنها
ஆதாரம்: திர்மிதி: (802)

ஹாஜிகளில் பலர், இந்த ஹிஜ்ருக்குள் நுழைந்து தொழுது
 கொள்கின்றனர்.
இங்கு நின்று பிரார்த்திக்கின்றனர். கஃபாவின் மேற்குப்
 பகுதியில் மழை நீர் வடிவதற்காகக் குழாய்
ஒன்று  வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ' மீஜாபுர்
 ரஹ்மத்” என்று  பெயர். இதுவும்
பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் இடங்களில்
ஒன்றாகும். ஹாஜிகள் இந்த இடத்திலும்
நின்று பிரார்த்திக்கின்றனர்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்:27-07-2017

Wednesday, 26 July 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் -05

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் -05

========================

மக்கத் திரு நகரில்.
‘இறைவனின் விருந்தினர்களை வரவேற்பதில் மக்கத்
திரு நகரம் மகிழ்ச்சி அடைகிறது” என்னும் ‘உம்முல் குரா” பல்கலைக் கழக அலங்கார வளைவு,
ஹாஜிகள் புனித மக்காவில் நுழைந்து விட்டனர் என்பதை உணர்த்துகிறது.
எந்த நகரைச் சிறப்பித்து இறைவன் தன் திரு மறையில்
இயம்பினானோ!
இறைவனை வணங்க, உலகின் முதல்
இறையாலயம் எழுப்பப்பட்டச் சிறப்பு எந்த நகருக்குக் கிடைத்ததோ!
எந்த நகரில், ஈருலக வேந்தர் இறைத் தூதர் நபி صلى الله عليه وسلم
 அவர்கள் பிறந்தார்களோ!
இஸ்லாம் என்னும் கதிரவனின் ஒளிக் கதிர்கள், எந்த நகரிலிருந்து ஒளி வீசத் தொடங்கியதோ!
அந்த மக்கத் திருநகருக்குள் ஹாஜிகள் நுழைந்து
விட்டனர். மஸ்ஜிதுல் ஹராமுக்கு மிக அருகில் சென்று வாகனங்கள் நிறுத்தப்
படுகின்றன. கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளத்தில் மஸ்ஜிதுல் ஹராமைக்
கண்ட வண்ணம், புனித மண்ணில் அடியெடுத்து வைக்கின்றனர் புண்ணிய ஹாஜிகள். விண்ணோக்கி உயர்ந்த
மினாராக்களிலிருந்து கம்பீரமாகக் கேட்கிறது
பாங்கொலி.
கணக்கிலடங்கா பள்ளிகளில்
காலமெல்லாம் கேட்ட சப்தம் தான். இந்தப் பள்ளியின் ஒலி பெருக்கியில் மட்டும்
எப்படி இத்தனை ஒரு கம்பீரம்! ஆர்ப்பரித்து எழும் கடல் அலை படிப்படியாக இறங்குவது போல்
செவிகளில் ஓர் உணர்வு. ‘பாலைகளில்,
காடுகளில், பணிபடர்ந்த நாடுகளில்,
சோலைகளில், தீவுகளில்,” இந்தப் பாங்கோசைக்
கேட்காத இடமில்லை இப்பாருலகில்.
இறைவனை வணங்க உலகம் முழுவதும் ஒரே மாதிரியான அழைப்பு. இஸ்லாத்திற்கு
மட்டுமே உரிய தனிச் சிறப்பு. மொழி
தெரிந்தவர் தெரியாதவர்
பொருள் புரிந்தவர் புரியாதவர்
எல்லோருக்கும் தெரியும், இது ‘அல்லாஹ்வை
வணங்க அனைவரும் வாருங்கள்” என விடுக்கும்
அழைப்பு.
நாள் ஒன்றுக்கு ஐவேளைத் தொழுகை.
நானிலமெங்கும் உள்ள
பள்ளிவாசல்களில், நாள் தவறாமல்
நடக்கும் இந்த இறை வணக்கத்திற்காக, நாள்
ஒன்றுக்கு ஐந்து முறை அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு தொழுகையின் நேரமும் சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக்
கொண்டு ஊருக்கு ஊர், மாநிலத்துக்கு
மாநிலம், நாட்டுக்கு நாடு மாறுபடும்.
ஒவ்வொரு தொழுகைக்கும்
அழைக்கப்படும் இந்தப் பாங்கோசை உலகம்
முழுவதும் ஏதேனும் ஒரு பகுதியில் கேட்டுக் கொண்டே இருக்கும். யுக முடிவு நாள் வரை இந்த சங்க நாதம் ஒலித்துக்
கொண்டே இருக்கும்.

மனங்கவரும் மஸ்ஜிதுல் ஹராம்!

புனித ஹாஜிகள் தாங்கள் வந்த நோக்கத்திலேயே
கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.
மஸ்ஜிதுல் ஹராமின் அனைத்து வாசல்
வழியாகவும் அணி அணியாக ஆர்வத்துடன்
நுழைகின்றனர். இந்த மஸ்ஜிதுல் ஹராம்
பள்ளியில் ஒரு ரக்அத் தொழுவது மற்றப்
பள்ளிகளில் ஒரு இலட்சம் ரக்அத்கள்
தொழுவதற்குச் சமம்.திருக் கஃபாவை
உள்ளடக்கிய இப் புனிதப் பள்ளி, பல்வேறு கால
கட்டங்களிலும், விரிவு படுத்தப் பட்டு
வந்திருக்கிறது.
இறுதியாக, இப்போதைய ஆட்சியாளர்களால்,
மிகப்பிரம்மாண்டமான அளவில் விரிவு
படுத்தப் பட்டுள்ளது. அதி நவீன வசதிகளுடன்,
அழகான முறையில், வடிவமைக்கப்பட்டுள்ள இப்பள்ளியில், ஏக காலத்தில் இருபது இலட்சம் பேர், எந்தச் சிரமமுமின்றித் தொழ
முடியும். கட்டிடக் கலையின் சகல விதமானத்
தொழில் நுட்பங்களும் இங்கே கையாளப்
பட்டுள்ளன.
பல்லாயிரக் கணக்கான ஊழியர்கள் சீருடை
அணிந்து சுழற்சி முறையில் பகலும் இரவும்
பணிபுரிகின்றனர். தூய்மைப் பணியாளர்கள்
எந்த நேரமும் ஒவ்வொரு பகுதியிலும்
தூய்மைப் படுத்திக் கொண்டே
இருக்கின்றனர். மஸ்ஜிதுல் ஹராமின் மையப்
பகுதியில் இதோ நம் கண்களைப் பறிக்கின்றதே! இது
தான் கஃபா!

ஃபா என்னும் முதல் இறையாலயம்!

(இறை வணக்கத்திற்கென)
மனிதர்களுக்காக அமைக்கப் பட்ட முதல்
ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில்
உள்ளதுதான், அது பரக்கத்து (பாக்கியம்)
மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும்
நேர்வழியாகவும் இருக்கிறது. (திருக் குர்ஆன் 3:96)
கஃபா. சொல்லுக்கடங்காத
புகழுக்குரிய இறையில்லம். இறைவனை வணங்க,
உலகில் முதன் முதல் உருவாக்கப்பட்ட
இறையாலயம். உலகில் இப்போது வாழும் 120
கோடி முஸ்லிம்களின் ஒரே இதயம். ஐயாயிரம்
ஆண்டுகளாக அத்தனை புயல்களையும்
மழைகளையும் எதிர்த்து நின்று காலத்தால்
அழியாமல் அப்படியே நிமிர்ந்து நிற்கும்,
அல்லாஹ்வின் அருள் இல்லம். அந்த
ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும்,
பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை
நினைவூட்டுவீராக! (திருக் குர்ஆன் 2:125)

ஆம்! உலக முஸ்லிம்கள் ஒன்று கூடுமிடமாக
இந்த ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தை பாதுகாப்பு மையமாக இறைவன் அறிவித்து 14
நூற்றாண்டுகள் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள்

 நடந்த பின்பும், அது இன்றளவும்
அபய பூமியாகவே அமைந்துள்ளது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
1400 ஆண்டுகளுக்கு முன் அப்ரஹா என்னும் அரசன் யானைப் படையுடன், இப்புனிதக் கஃபாவை
அழிக்க வந்த போது ‘அபாபீல்” என்னும்
சின்னஞ்சிறு பறவைகளைக் கொண்டு அல்லாஹ் பாதுகாத்தான். திரு மறையின் 105 ஆவது அத்தியாயம் இச்சம்பவத்தை
அழகாக எடுத்தியம்புகின்றது.
அது போலவே, எல்லாக் கால கட்டத்திலும்,
எதிரிகளிடமிருந்தும், இயற்கையின்
தாக்குதல்களிலிருந்தும். இதனை இன்று வரை இறைவன் காப்பாற்றி வருகிறான். கண்ணைப் பறிக்கும் வண்ணப் படங்களாகக் காலண்டர்
அட்டைகளில் மட்டுமே கண்டு களிப்படைந்தக்
கஃபாவை இதோ கண் முன்னே ஹாஜிகள்
காண்கின்றனர். களிப் பேருவகைக்
கொள்கின்றனர். கற்பனையில் கூடக்
கண்டிராதக் காட்சியைக் கண்டு கண்கள் அகல
விரிகின்றன.
இதயம் நடுங்குகிறது. மெய் சிலிர்க்கிறது.
மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன. உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஓர்
உணர்வு. பன்னூலாசிரியர் ஆசுஆ அப்துற்றஹீம் அவர்கள் பாணியில்
சொல்வதானால், ‘உச்சியைப் பிடித்து
ஒரு உலுக்கு உலுக்குகிறது.
“இந்தக் கஃபா, விலையுயர்ந்த கருப்புத் திரையால் மூடப் பட்டுள்ளது. திரை முழுவதும் தங்க
இழைகளால் திருமறை வசனங்கள் தீட்டப்
பட்டுள்ளன. இந்தக் கருப்புத் திரையை உருவாக்கு
வதற்கென்றே  தனியாக ஒரு
தொழிற்கூடம் நிறுவப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் இந்தக் கருப்புத் திரை மாற்றப் பட்டு, புதிய திரை போர்த்தப் படுகின்றது.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி

கடலங் குடி.

பதிவு நாள்: 26-07-2017

Monday, 24 July 2017

சுலைமான் நபி வரலாறு தொடர் - 5

==சில குறிப்புகள்==

# சுலைமான் (அலை) அவர்களது படையில் ஜின்கள் மனிதர்கள் பறவைகள் இருந்தனர்.
# எறும்புகளின் மொழியையும் அறியக்கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள்.
# சுலைமான் (அலை) அவர்களை எறும்புகளும் அறியக்கூடியவைகளாக இருந்தன.
# சுலைமான் (அலை) அவர்கள் கேட்ட [[பிரார்த்தனை|துஆ]]:

''என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!''

பதிவு நாள்: 24-07-2017.

சுலைமான் நபி வரலாறு தொடர் -4

அரசியின் மனமாற்றம்==

--(அவள் கண்டு அறிந்து கொள்ள முடியாதபடி) அவளுடைய அரியாசன(த்தின் கோல)த்தை மாற்றி விடுங்கள்; அவள் அதை அறிந்து கொள்கிறாளா, அல்லது அறிந்து கொள்ள முடியாதவர்களில் ஒருத்தியாக இருக்கிறாளா என்பதை நாம் கவனிப்போம்.'' என்று சுலைமான் (அலை) கூறினார்கள்.(அல்குர்ஆன் 27:41)

--ஆகவே, அவள் வந்த பொழுது, ''உன்னுடைய அரியாசனம் இது போன்றதா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள்; ''நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது'' என்று கூறினாள்; இந்தப் பெண்மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம், நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் (என்று ஸுலைமான் கூறினார்). (அல்குர்ஆன் 27:42)

அவளிடம்; ''இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!'' என்று சொல்லப்பட்டது; அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தணிணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள், (இதைக் கண்ணுற்ற ஸுலைமான்), ''அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!'' என்று கூறினார். (அதற்கு அவள்) ''இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் (முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்'' எனக் கூறினாள். (அல்குர்ஆன் 27:44)

==சுலைமான் நபியும் எறும்புகளும்==

இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் [[எறும்பு]] (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று. ( குர்ஆன் 27:18)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.....

பதிவு நாள்: 24-07-2017

சுலைமான் நபி வரலாறு தொடர் - 3

அரசி அவளது பிரமுகர்களிடம் இக்கடிதம் பற்றி ஆலோசனை செய்தாள். அவர்கள் சுலைமானுக்கு எதிராக போர் தொடுக்கும்படி பரிந்துரை செய்தார்கள். ஆனால் அரசி, 'அரசர்கள் ஒரு நகரத்தினுள் படையெடுத்து நுழைவார்களானால் நிச்சயமாக அதனை அழித்து விடுவார்கள், அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை சிறுமைப்படுத்தி விடுவார்கள். அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்' என்று புத்திசாலித்தனமாக கூறினாள்.

அவள் பல பரிசுப் பொருட்களை சுலைமான் (அலை) அவர்களுக்கு அனுப்பினாள். ஆனால் அவர்கள் அதை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். பிறகு சுலைமான் (அலை) அவர்களை நேரில் சந்திக்க புறப்பட்டாள்.

==அரசியின் அரியாசனம்==

பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிப்பட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர்? என்று சுலைமான் (அலை) அவர்கள் கேட்டார்கள்.
ஜின்களில் பலம் பொருந்திய 'இப்ரித்' அதற்கு முன்வந்தது. நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன் என்று கூறியது.

ஆனால் இறைவேதத்தின் ஞானத்தை பெற்றிருந்த ஒருவர், உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள் அதை உங்களிடம் கொண்டு வருவேன் என்று கூறினார்.

அவர் சொன்னவாறே அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் சந்தோசமடைந்தார்கள். அதனால் அவர்கள் பெருமை கொள்ளவில்லை.

இது என்னுடைய இறைவனின் அருட்கொடையாகும். நான் நன்றியுடன் இருக்கிறேனா அல்லது மாறு செய்கிறேனா என்று இறைவன் என்னை சோதிக்கிறான். எவன் ஒருவன் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே நன்மையாகும். எவன் மாறு செய்கின்றானோ அது அவனுக்கே இழப்பாகும். ஏனென்றால் என் இறைவன் எவரிடத்தும் தேவைப்படாதவன், கண்ணியம் மிக்கவன் என்று சுலைமான் (அலை) கூறினார்கள்.

சுலைமான் நபி வரலாறு தொடர் - 2

ஹுது ஹுது பறவையின் பதில்==

சிறிது நேரத்தில் ஹுது ஹுது பறவை அங்கே வந்து சேர்ந்தது.

'நீங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் கொண்டு வந்துள்ளேன்' என்று அந்த பறவை சொன்னது.
'ஸபாவிலிருந்து நான் உண்மை செய்தியை உங்களுக்காக கொண்டு வந்துள்ளேன்' என்று தொடர்ந்தும் சொன்னது.

அங்கே ஒரு பெண் (பல்கீஸ் ராணி) அம்மக்களை ஆட்சி செய்வதைக் கண்டேன். அவளுக்குத் தேவையான எல்லாமும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளிடத்தில் சிறப்பான அரியாசனமும் இருக்கிறது. ஆனால் அவளும் அவளைச் சார்ந்த மக்களும் அல்லாஹ்வை வணங்குவதற்குப் பதிலாக [சூரியனை வணங்குகிறார்கள்].

அவர்களுடைய இத்தவறான செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகானதாக காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான். அதனால் அவர்கள் அல்லாஹ்வை வணங்கவில்லை.

வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும், நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டாமா?

அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் வேறு இல்லை, அவன் மகத்தான அர்ஷுக்கு(அரியாசனம்) உரிய இறைவன் என்றும் கூறியது.

==சுலைமான் (அலை) அவர்களின் கடிதம்==

சுலைமான் (அலை) அவர்கள் ஒரு கடிதத்தை ஹுது ஹுது பறவையிடம் கொடுத்து, அந்த ராணியிடம் கொடுத்து விடும் படி கூறினார்கள். அதில்

''நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்'' (என்று எழுதப்பட்டிருக்கிறது).

அதோடு இந்தக் கடிதம் விஷயமாக என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை அறிந்து விட்டு விரும்படியும் கூறினார்கள்.

சுலைமான் நபி வரலாறு தொடர் - 1

சுலைமான் நபி வரலாறு

சுலைமான்(سليمان) நபி [தாவூது நபியின்] மகனாவார்கள். அவர்கள் இறைவனிடம் ஒரு கோரிக்கையை வைத்தார்கள். அது 'எவரும் அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ வழங்குவாயாக!' என்பது தான் அந்த கோரிக்கை.

அதன்படி அல்லாஹ் அவருக்கு மிகப்பெரும் அரசாங்கத்தை வழங்கினான். பளிங்குகளிலான மாளிகையை அமைத்து வாழ்ந்தார்கள்.

அவர்கள் மனிதர்களை கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவும் ஜின்களையும் பறவைகளையும் கட்டுப்படுத்தக் கூடியவர்களாவும் இருந்தார்கள். [பறவைகளின் மொழியை] அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தான்.

மேலும் காற்றையும் அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான். அந்தக் காற்று அவர்களைச் சுமந்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு கொண்டு செல்லும்.

கட்டிடங்களை கட்டும் ஜின்களையும் முத்துக் குளிக்கும் ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தான்.

==கண்காணிக்கும் பணி==

ஒரு நாள் சுலைமான் (அலை) அவர்கள் பறவைகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

ஏனென்றால் பறவைகளை அல்லாஹ் அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தான். அதாவது பறவைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அவருக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

பறவைகளுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அவை உடனே நிறைவேற்ற வேண்டும். அதற்காகவே அல்லாஹ் சுலைமான் (அலை) அவர்களுக்கு பறவைகளின் பாஷையை கற்றுக் கொடுத்திருந்தான்.

அவர்கள் பறவைகளின் கூட்டத்தை பார்வையிட்ட போது ஹூது ஹூது என்னும் பறவையை காணவில்லை, அதனால் சுலைமான் (அலை) அவர்கள்,

'ஹுது ஹுது பறவை எங்கே போனது? அதை நான் காணவில்லை, சரியான காரணத்தை அது சொல்லவில்லை என்றால் நான் அதை தண்டிப்பேன் அல்லது கொன்று விடுவேன்' என்று கூறினார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.....

பதிவு நாள்: 24-07-2017

Saturday, 22 July 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் 04

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾


உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள்!

========================

ஹஜ்ஜின் வகைகள்!

ஹஜ் கடமையை மூன்று வகையாக
நிறைவேற்றலாம்.
1.ஹஜ்ஜை மட்டும்
நிறைவேற்றுவதாக முடிவு செய்து அதை நிறைவேற்றுதல்.
(இது இப்ராத் எனப்படும்)
2.ஹஜ்ஜுடன் உம்ரா என்னும்
கடமையையும் சேர்த்து ஒரே
இஹ்ராமில் நிறைவேற்றுதல்.(இது
கிரான் எனப்படும்)
3.முதலில் உம்ராவுக்காக இஹ்ராம்
அணிந்து அதை
நிறைவேற்றியவுடன் மக்காவில்
தங்கியிருந்து, ஹஜ்ஜுடைய நேரம்
வந்ததும், மறுபடியும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை
நிறைவேற்றுதல்.(இது தமத்துவ் எனப்படும்)

இஹ்ராம் உடையுடுத்திய ஏந்தலர்கள்!

ஹஜ் அல்லது உம்ராச் செய்ய, புனித
மக்காவுக்கு வரும்போது
ஒவ்வொரு வழியிலும் ஒரு எல்லையை நபி صلى الله عليه وسلم  அவர்கள் நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இந்த எல்லைக்கு ‘மீக்காத்” என்று பெயர்.
ஹஜ் அல்லது உம்ராச் செய்ய வருபவர்கள், இந்த எல்லையை
அடையும் போது ‘இஹ்ராம்” உடை
அணிந்து தான் நுழைய வேண்டும். ஆகாய மார்க்கமாக வருபவர்கள்,
‘மீக்காத்” எல்லையைக் கடந்தே
வரவேண்டியிருப்பதால், புறப்படும்
இடத்திலிருந்தே குளித்து இஹ்ராம் அணிந்து வந்து
விடுகின்றனர்.
கடல் மார்க்கமாக, கப்பலில் வருபவர்கள், ‘மீக்காத்” எல்லையை
அடையும் போது, கப்பல் நிறுத்தப்
பட்டு அறிவிப்பு செய்யப் படுகின்றது. ஹாஜிகள் கப்பலிலேயே குளித்து இஹ்ராம் உடை அணிந்து தயாராகி
விடுகின்றனர்.
தரை மார்க்கமாக வருபவர்கள், அவரவர்
வரும் வழியில் உள்ள ‘மீக்காத்” எல்லையில் குளித்து இஹ்ராம்
அணிய வசதியாக, ஒவ்வொரு ‘மீக்காத்” எல்லையிலும், பல
நூற்றுக் கணக்கில், நவீன வசதிகளுடன் கூடிய குளியலறைகள் கட்டப் பட்டு,
வசதிகள் செய்யப் பட்டுள்ளன.
உள் நாட்டிலிருந்தும், அண்டை
நாடுகளிலிருந்தும், தரை மார்க்கமாக ஹஜ்ஜின் நாட்களுக்கு
முன்னதாகவே புனித
மக்காவுக்கு வரும் ஹாஜிகள் இந்த
எல்லையை அடைந்ததும் குளித்து
இஹ்ராம் உடை தரித்து, முதலில்
உம்ராச் செய்வதற்கு
தயாராகின்றனர்.
எல்லையைக் கடந்து வரும் எல்லோரும் இது வரை
அணிந்திருந்த ஆடம்பர ஆடைகளைக்
களைந்து ‘இஹ்ராம்” என்னும் இரு வெண் துணிகளை ஆண்கள்
அணிந்துக் கொள்கின்றனர். (பெண்கள்
அவரவர் வழக்கமாக உடுத்தும் உடைகளை உடுத்திக் கொள்ளலாம்)

நபி صلى الله عليه وسلم  அவர்கள் இஹ்ராமுக்காக
தையல் இல்லாத ஆடையை
அணிந்ததை நான் பார்த்துள்ளேன்.
மேலும் (இஹ்ராமுக்கு முன்னால்)
குளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸைத்
பின் தாபித் رضي الله عنه  ஆதாரம்: திர்மிதி (760)

இஹ்ராம் உடையை
அணிந்தவர்களாக
இவ்வுலக இன்பங்களைத்
துறந்தவர்களாக
நித்திய வாழ்க்கையை
நினைத்தவர்களாக
இறை பக்தியை இதயத்தில்
தேக்கியவர்களாக
இறைவனின் அருளுக்கு
ஏங்கியவர்களாக
ஈருலக நற்பேற்றுக்கு
இறைஞ்சியவர்களாக
இறைவனிடம் இரு கரம் ஏந்தியவர்களாக
புறப்பட்டு விட்டனர், புண்ணிய
சீலர்கள், புனித மக்காவை நோக்கி!

மீள ஒலிக்கிறது ‘தல்பிய்யா”
முழக்கம், முன்னை விட பன்மடங்கு
உயர்ந்த தொணியில்.
லப்பைக் அல்லாஹும்ம
லப்பைக்லப்பைக் லா ஷரீக்க லக
லப்பைக்இன்னல் ஹம்த வந் நிஃமத்த லக வல் முல்க்
லா ஷரீக்க லக்.
‘என்னிடம் ஜிப்ரீல் عليه السلام வந்து
தல்பிய்யாவின் போதும், இஹ்ராம்
கட்டும் போதும், உரத்த குரலில்
கூறுமாறு என் தோழர்களுக்குக்
கட்டளையிடக் கூறினார்கள்” என நபி صلى الله عليه وسلم  அவர்கள்
கூறினார்கள்.
 ஸாயிப் رضي الله عنه
 ஆதாரம்: திர்மிதி (759)

மக்காவை நோக்கி வரும் மாபெரும்
 சாலைகளில் வாகனங்கள் அசுர
 வேகத்தில் பறக்கின்றன.
வாகனங்களின் வேகத்தை விட,
வந்திருப்போரின் இதயத்தின் வேகம்
இப்போது அதிகம்.
மக்காவை நோக்கி வரும் அனைத்து
பிரதான சாலைகளிலும் மக்கா நகர எல்லைக்கு
 வெளியே
பரிசோதனை மையங்கள் அமைக்கப்
பட்டுள்ளன. அனைத்து
வாகனங்களும் நிறுத்தப் பட்டு
அனைவரும் ஹஜ்ஜை
நிறைவேற்றுவதற்கு முறையான அனுமதி
 பெற்றுள்ளனரா? என
பரிசோதிக்கப் படுகின்றனர்.
சமீப காலம் வரை உள்
நாட்டிலிருந்தும் அண்டை
நாடுகளிலிருந்தும், தரை மார்க்கமாக
 ஹஜ்ஜுக்கு வருபவர்கள்
அவரவர் தம் சொந்த வாகனங்களில்
வந்து கொண்டிருந்தனர். இதனால்
மக்கா நகரின் சாலைகளில் போக்கு
வரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
மக்கா நகரப் போக்கு வரத்துத் துறை
 சகல வசதிகளையும்
செய்திருந்தாலும் கூட,
பல்லாயிரக் கணக்கான வாகனங்கள் ஒரே
 சமயத்தில் மக்காவின் உள்ளே நுழைந்தால்
 கட்டுப் படுத்துவது
கடினமானக் காரியம் அல்லவா?
எனவே சில ஆண்டுகளுக்கு
முன்பு, சவூதி அரசு ஒரு புதிய ஏற்பாட்டை
 நடை முறைக்குக்
கொண்டு வந்தது. அதன்படி மக்கா
நகர எல்லைக்கு வெளியே ஒவ்வொரு
 வழியிலும் ‘கார்
நிறுத்துமிடங்கள்” அமைத்து சிறிய
 வாகனங்கள் அனைத்தும்
இங்கேயே நிறுத்திவிட ஏற்பாடு
செய்யப் பட்டது.

இந்தக் கார் நிறுத்துமிடங்களில்
அனைத்து சிறிய வாகனங்களும்
வரிசை வரிசையாக ஒரு ஒழுங்கு
முறையுடன் நிறுத்தப் பட்டு,
உரிமையாளர்களுக்கு அடையாள
அட்டை வழங்கப் படுகின்றது.
ஹஜ்ஜின் அனைத்து
செயல்களையும் முடித்து விட்டு
இங்கு வந்து, தமது அடையாள
அட்டையைக் காண்பித்து
உரிமையாளர்கள் தங்கள்
வாகனங்களை எடுத்துச் செல்ல
வேண்டும்.
இந்தத் தீவுத் திடல் முழுவதும்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
கார்கள் மயம். உலகின் அனைத்து
நாட்டுத் தயாரிப்புக் கார்களும்,
அனைத்து மாடல்களும், இங்கே
அணிவகுத்து நிறுத்தப்
பட்டிருக்கும் அழகே அழகு.
இந்த இடத்திற்கு அப்பால், பெரிய
வாகனங்கள் பேருந்துகள் மட்டுமே
அனுமதிக்கப்படும். சிறிய
வாகனங்களில் வந்து  தங்களது
வாகனங்களை இங்கே
நிறுத்தியவர்கள்  இங்கிருந்து
புறப்படும் அரசுப் பேருந்துகளில்
மக்காவை நோக்கிப்
பயணிக்கின்றனர்.
மீண்டும்
தொடங்குகிறது பயணம்!
மீள ஒலிக்கிறது
 தல்பிய்யா முழக்கம்!
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
லப்பைக் லாஷரீக்க லக லப்பைக்
இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக வல்
முல்க்
லா ஷரீக்க லக்.

இன்ஷா அல்லாஹ் இன்னும்  தொடரும்...

தொகுப்பு....

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்: 22-07-2017

Thursday, 20 July 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 3

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

========================

சமத்துவ மார்க்கம் இஸ்லாம்.இஸ்லாம்
ஓர் உலக மார்க்கம். இதன் அனைத்து
வணக்க வழிபாடுகளும் உலகளாவிய
அளவில் மனித குலத்தை
ஒன்றுபடுத்துவதாக இருக்கும். திருமறை குர்ஆனின்
போதனைகளும் திரு நபி صلى الله عليه وسلم
அவர்களின் செயல் பாடுகளும் இந்த
இனிய மார்க்கத்தின் வழிகாட்டிகள்.
இந்த இனிய இஸ்லாம் இவ்வுலகிற்கு
சமத்துவத்தைத் தந்தது.
சகோதரத்துவத்தை போதித்தது.
முழு மனித சமுதாயத்தையும்
ஓரணியில் ஒன்றுபடுத்தும் உன்னத வழியைக் காட்டியது.
இஸ்லாத்தின் அடிப்படைக்
கடமைகளில் ஒன்றான தொழுகை,
வெறும் குனிதலையும், சிரம் பணிதலையும், உதட்டளவில்
மந்திரங்கள் மொழிவதையும்,
கொண்ட சடங்கு அல்ல. நாள் ஒன்றுக்கு ஐந்து நேரம், படைத்த
இறைவனை வணங்க பள்ளிவாசலில்
ஒன்று கூடும்போது  அங்கு ஏழை, செல்வந்தன் என்னும் ஏற்றத் தாழ்வு களையப் படுகின்றது.
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும்
வேற்றுமை வேரறுக்கப் படுகின்றது.
முதலில் வந்தவர்
முதலில். அடுத்தடுத்து வந்தவர்
அடுத்தடுத்த வரிசைகளில்.
அரசனும் ஆண்டியும் அருகருகில்.
அவரவர் பகுதியில் உள்ள
பள்ளிவாசல்களில் ஐந்து நேரமும்
ஒன்று கூடும்போது அங்கே ஒரு
சமத்துவம்.
வாரம் ஒருமுறை வெள்ளிக் கிழமைத் தொழுகையில் ஊரே
ஒன்று கூடும்போது அதைவிட சற்று அதிக சமத்துவம்.
ஆண்டுக்கு ஒரு முறை புனித மக்காவின் அரபாத்
பெருவெளியில், உலக முஸ்லிம்கள் ஒன்று திரளும்போது மாபெரும்
சமத்துவம். இதைவிடப் பெரிய
சமத்துவம் இப்பாருலகில் வேறு
எங்குமே இல்லை. வேறு எதுவுமே இல்லை. இது தான்
ஹஜ்.இனத்தால், குலத்தால்,
நிறத்தால், தேசத்தால், உண்ணும் உணவால், உடுத்தும் உடையால்,
பேசும் மொழியால், பின்பற்றும்
கலாச்சாரத்தால், வேறு பட்ட அனைவரும், ஒரே இடத்தில் ஒன்று
திரண்டு, ஒரே உடை அணிந்து, ஒரே மறையைப் பின்பற்றி, ஒரே இறையை இறைஞ்சும் உன்னதப்
பண்பாடு. இது தான் ஹஜ். உலகின் அனைத்து கண்டங்களும்
இங்கே சங்கமம்.
உலகின் அனைத்து நாடுகளும் இங்கே சங்கமம்.
உலகின் அனைத்து மொழிகளும்
இங்கே சங்கமம்.
உலகின் அனைத்து நிறங்களும் இங்கே சங்கமம்.
உலகின் அனைத்து மனிதர்களும்
இங்கே சரிசமம்.
ஆம் இது தான் ஹஜ்.

*புண்ணிய சீலர்கள் வருகை!*

மக்காவில் ‘கஃபா” என்னும் புனித
இறையாலயத்தை இறைவனின் நண்பர் நபி இப்ராஹீம்
அலைஹிஸ்ஸலாம் அவர்களும்,
அவர்களின் அருமந்த மைந்தர், நபி
இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம்
அவர்களும் புணர் நிர்மாணம் செய்து முடித்த போது, புனித
ஹஜ்ஜூக்குப் புறப்பட்டு வருமாறு
மக்களை அழைக்கும் படி, இறைவன்
கூறினான்.

‘மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி
அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும்
ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின்
மீதும் உம்மிடம் வருவார்கள். அவை
அவர்களைத் தொலைவிலுள்ள
ஒவ்வொரு பாதையிலிருந்தும்
கொண்டு வந்து சேர்க்கும்” என்று
கூறினோம். (திருக் குர்ஆன் 22 27)
நடந்தும், ஒட்டகங்களில் சவாரி
செய்தும் வந்திறங்கிய காலம் போக
இப்போது கார்களிலும்
பஸ்களிலும் தரை மார்க்கமாக
கப்பல்களில் கடல் மார்க்கமாக
விமானங்களில் ஆகாய மார்க்கமாக
புனித ஹஜ்ஜை நிறைவேற்ற,
உலகின் எல்லாப்
பகுதிகளிலிருந்தும் மக்கள் திரள்
திரளாக வந்துக்
கொண்டிருக்கின்றனர். துல் கஅதா மாதம் தொடங்கிவிட்டால் போதும், நாளுக்கு நாள் இறைவனின்
விருந்தினர்கள் எண்ணிக்கை,
அதிகரித்துக் கொண்டே
போகின்றது.

ஜித்தா ‘இஸ்லாமியத் துறைமுகம்”
கப்பல்களால் நிரம்பி வழிகின்றது.
தீவுகளே இடம் பெயர்ந்து, நீலத்
திரைக் கடலில் நீந்தி வந்தனவோ! என
வியக்கும் வண்ணம், பெரும் பெரும்
கப்பல்களில் புண்ணிய சீலர்கள்
வந்திறங்குகின்றனர்.
ஜித்தா, மன்னர் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான தளத்தில், ஆகா!
இவையென்ன? பறவைகளின்
அணிவகுப்பா? இல்லை இல்லை.
பறந்து வந்த விமானங்களின்
அணிவகுப்பு.
அகில உலகத்தையும் ஆட்டிப் படைக்கும்
அமெரிக்காவிலிருந்து!
ஒரு காலத்தில் சூரியனே
அஸ்தமிக்காத நிலப்பரப்பை தன்
கட்டுப்பாட்டில் வைத்திருந்த
இங்கிலாந்திலிருந்து!
காணும் இடமெல்லாம் காடுகளை
உள்ளடக்கிய
ஆப்பிரிக்காவிலிருந்து!
காரல் மார்க்ஸின் கம்யூனிஸ
தேசங்களிலிருந்து!
முஸ்லிம்கள் எண்ணிக்கையில்
முதலிடம் வகிக்கும்
இந்தோனேசியாவிலிருந்து!
மனங்குளிரும் மரியாதைக்குப்
பேர் போன மலேசியாவிலிருந்து!
செல்வச் செழிப்பு மிக்க
சிங்கப்பூரிலிருந்து!
இதயம் கவரும் பசுமை நிறைந்த
இலங்கையிலிருந்து!
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவிலிருந்து!
பச்சைப் பிறைக் கொடி
பாகிஸ்தானிலிருந்து!
பங்காளி நாடாம் வங்காள
தேசத்திலிருந்து!
இன்னும் இவை போன்ற எண்ணற்ற
தேசங்களிலிருந்து....
வண்ண வண்ணப் பறவைகளாய்
வானவெளிப் பாதையில் பறந்து
வந்த விமானங்களிலிருந்து
இலட்சக் கணக்கான இலட்சிய வாதிகள்
புனித ஹஜ்ஜை நிறைவேற்ற
வந்திறங்குகின்றனர்!

*திக்கெட்டும் தல்பிய்யா முழக்கம்!*

செங்கடலின் மணமகள்” என
வார்த்தைகளால் வர்ணிக்கப் படும்
ஜித்தா நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.
ஆகாய மார்க்கமாகவும் கடல்
மார்க்கமாகவும் வந்திறங்கிய
ஹாஜிகள், பயணக் களைப்புத் தீரச்
சற்று ஓய்வெடுத்து விட்டு, புனித மக்காவை நோக்கி
பயணிக்கின்றனர்.
ஜித்தாவுக்கு ம் புனித
மக்காவுக்கும் இடைப்பட்ட தூரம்
சுமார் 65 கிலோ மீட்டர். அகன்று
விரிந்த அதிவிரைவுச்
சாலைகளில் கார்களும் பஸ்களும்
சீறிப் பாய்கின்றன.
அண்டை நாடுகளாம் அரபு நாடுகளின் அனைத்து
சாலைகளும் மக்காவை நோக்கி!
அகன்ற சாலைகளில் அணி அணியாக
வந்துக் கொண்டிருக்கும் அனைத்து
வாகனங்களும் மக்காவை நோக்கி!
தரை மார்க்கமாக ஹஜ்ஜுக்கு
வருபவர்கள்  அலை கடலெனத் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
எல்லாத் திசைகளிலிருந்தும்
வருகின்ற ஹாஜிகளின்
எண்ணிக்கை நாளுக்கு நாள், நேரத்துக்கு நேரம், கூடிக்
கொண்டே போகின்றது. நூறுகள்
ஆயிரங்களாக, ஆயிரங்கள்
இலட்சங்களாக, கணிப் பொறியின்
கணக்கு கூடிக் கொண்டே போகின்றது. அத்தனை இலட்சம் பேரையும் ஆண்டு தோறும்
அரவணைக்கின்றது மக்கத் திரு நகரம்.

அனைவரின் இதயங்களிலும்
ஆண்டவனின் பக்தி!
அனைவரின் முகங்களிலும் ஹஜ்
செய்யும் மகிழ்ச்சி!
அனைவரின் நாவுகளிலும்
தல்பிய்யா என்னும் மந்திரம்!
லப்பைக்- அல்லாஹும்ம லப்பைக்
லப்பைக்- லாஷரீக்க லக லப்பைக்
இன்னல் ஹம்த- வந் நிஃமத்த லக வல்
முல்க் லா ஷரீக்க லக்
என்பது நபி صلى الله عليه وسلم  அவர்களின்
தல்பிய்யாவாக
இருந்தது.அறிவிப்பவர்: இப்னு உமர் رضي الله عنه  ஆதாரம்: திர்மிதி (755)

இலட்சக் கணக்கான ஹாஜிகளின்
திரு வாய்கள் அனைத்தும், இரவும்
பகலும், இருபத்து நான்கு மணி
நேரமும் முழங்கிக்
கொண்டிருக்கும் மூல மந்திரத்தின் பொருள்
 இது தான்.
வந்தேன் இறைவா! வந்தேன் இறைவா!
உன் அழைப்பை ஏற்று இதோ வந்தேன்
இறைவா!
உனக்கு நிகரானவர் எவருமில்லை
அருளும் ஆட்சியும் புகழும் உனக்கே!
உனக்கு நிகரானவர் எவருமில்லை.

ஆகா! இந்தத் தாரக மந்திரத்தை
ஹாஜிகள் உச்சரிக்கும் போது அவர்களின்
 உள்ளங்கள் குளிர்கின்றன.
கேட்கும் போது நம் செவிகள்
குளிர்கின்றன.ஒரு முறையா?
இரு முறையா? ஓராயிரம்
முறையா? இல்லை. இதற்கு
எண்ணிக்கையே இல்லை. புனித
ஹஜ்ஜுக்குப் புறப்பட்டதிலிருந்து,
பகலிலும், இரவிலும்,
காலையிலும், மாலையிலும்,
நிற்கும் போதும் நடக்கும் போதும்
வாய் மொழிகின்றது. உறங்கும்
போது கூட உள்ளங்கள்
மொழிகின்றனவோ?
அவரவர் இல்லங்களிலிருந்து, புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டது முதல்
மொழியத் தொடங்கிய ‘தல்பிய்யா”
முழக்கம், புனித மக்காவுக்கு
வருகின்ற வழி நெடுகிலும், வந்து
சேர்ந்த பின்னரும், புனித ஹஜ்ஜின்
புண்ணியத் தலங்கள் முழுவதும்,
எட்டுத் திக்கும் எதிரொலித்துக்
கொண்டே இருக்கின்றது.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு....

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

Tuesday, 18 July 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 02

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீது
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 02.

========================

நூதனமான தடைகள்!

சிலர் வழிச்செலவுக்கு எவ்வித ஏற்பாடும் இல்லாமல் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு மற்றவர்களிடம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே
போய்க் கொண்டிருந்தார்கள். இது புண்ணியமான செயல் என்றும்
நினைத்தார்கள். தாங்கள் இறைவன்
வீட்டை நோக்கிப் போய்க்
கொண்டிருக்கிறோம் எனவே உலகப் பொருள்களை நாங்கள் ஏன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சொல்லிக்
கொண்டிருந்தார்கள். பொதுவாக ஹஜ் பயணத்தில் வணிகம் செய்வதும்
சம்பாதிப்பதற்காக உழைப்பதும்
தடுக்கப்பட்டவை என்று கருதிக்
கொண்டிருந்தார்கள்.
பெரும்பாலோர்
உண்ணுவதையும்,
குடிப்பதையும்
துறந்திருந்தார்கள். இதையும்
இறை வழிபாடு என்றே
நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

சிலர் ஹஜ்ஜுக்கு புறப்பட்டால்
உரையாடலை நிறுத்திக்
கொள்வார்கள். இதற்கு
‘ஹஜ்ஜெமுஸ்மித்’ மெளன ஹஜ்
என்று பெயர். இப்படிப்பட்ட தவறான
நடைமுறைகள் கணக்கின்றி இருந்தன.
இந்த நிலைமை ஏறத்தாழ
இரண்டாயிரம் ஆண்டுகள் இருந்தன.
பின்னர் இப்ராஹீம் நபியின் வழித் தோன்றலில் இருந்து
முழுமையான மனிதர் ஒருவர் தோன்றினார். அவர்களின்
திருப்பெயர் முஹம்மது பின்
அப்துல்லாஹ். எவ்வாறு
இப்ராஹீம் நபி அவர்கள்
பண்டிதர்களும் குருக்களும்
கொண்ட குலத்தில்
பிறந்தார்களோ அவ்வாறே
முஹம்மத் صلى الله عليه وسلم  அவர்களும் பல
நூற்றாண்டுகளாக கஃபாவுக்கு
குருக்களாயிருக்கும்
குடும்பத்தில் பிறந்தார்கள்.
இப்ராஹீம் நபியவர்கள் பொய்யான தவறான தெய்வ மூடக் கொள்கைகளை அழிக்க பெரும்பாடு பட்டதைப் போல்
முஹம்மது صلى الله عليه وسلم  அவர்களும்
தாங்கள் கொண்டு வந்த கலப்படமற்ற
மார்க்கத்தை 21 ஆண்டு காலத்தில்
இறைப்பணியை எல்லாம் செய்து
முடித்தபோது அவர்கள்
இறைக்கட்டளைப்படி
முன்போலவே காபாவை முழு
உலகத்துக்கும் இறைவனுக்கு
வழிபட்டோருக்குரிய
கேந்திரமாக எல்லாப்
பக்கங்களிலிருந்தும் ஹஜ் செய்ய
வாருங்கள் என முன்போலவே
அறிவித்தார்கள்.

அந்த ஆலயத்திற்குச் சென்று வர
மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் ஹஜ்
செய்வதானது அல்லாஹ்வுக்கு
ஆற்றவேண்டிய கடமையாகும்.
ஆனால் யாரேனும்
இக்கட்டளையைச் செயல்படுத்த
மறுத்தால் (அவர் தெரிந்து கொள்ளட்டும்) உலகத்தார்
அனைவரை விட்டும், நிச்சயம் அல்லாஹ் தேவையற்றவனாய்
இருக்கின்றான். (3:97)

சிலை வணக்கம் ஒழிந்தது!

கஃபாவிலுள்ள சிலைகள் அனைத்தும் உடைத்து
எறியப்பட்டன. இறைவனைத் தவிர
மற்றவருக்கு செய்த வழிபாடுகள்
அனைத்தும் நிறுத்தப்பட்டன.
இணைவைக்கும் பழக்கங்கள் அடியோடு அழிக்கப்பட்டன.
இறைவன் பெயரால்
திருவிழாக்களும்,
வேடிக்கைகளும் தடை
செய்யப்பட்டன.
அவன் எவ்வாறு (தன்னை நினைவு கூறவேண்டுமென்று)
உங்களுக்கு
அறிவுறுத்தியிருக்கின்றானோ அவ்வாறு அவனை நினைவு
கூறுங்கள்! இதற்கு முன்னரோ நீங்கள் வழி தவறியவர்களாய்
இருந்தீர்கள். (2:198)

அபத்தமான செயல்!

ஹஜ்ஜின்போது இச்சைகளைத்
தூண்டக்கூடிய சொல் செயல் மற்றும் தீவினை சண்டை சச்சரவு
ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது!
(2:197)
பின்னர் நீங்கள் உங்களுடைய
ஹஜ்ஜின் கிரியைகளை
நிறைவேற்றி விட்டீர்களானால்,
நீங்கள் (முன்னர்) உங்கள் மூதாதையரை நினைவு
கூர்ந்தது போல- ஏன், அதனைவிட அதிகமாக அல்லாஹ்வை
நினைவு கூறுங்கள். (2:200)

விளம்பரத்திற்காக தடை!

பெயருக்காகவும்,
விளம்பரத்துக்காகவும்
செய்யப்பட்டு வந்த ஆடம்பரமான தான தர்ம போட்டிகள்
அனைத்திற்கும் முடிவு
கட்டப்பட்டது. இந்த இடத்தில் இப்ராஹீம்  நபியவர்கள்
காலத்திலிருந்த அதே
செயல்முறை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டது.
இறைவனின் திருப்பெயர் கொண்டு பிராணிகளை
அறுங்கள், வசதியுள்ளவர்களின்
தியாகத்தால் ஹஜ்ஜுக்கு வருகிற
ஏழைகளுக்கும் உண்ணும் வாய்ப்பு
கிடைக்கட்டும்.
உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால்
விரயம் செய்யாதீர்கள்! திண்ணமாக
அல்லாஹ் விரயம் செய்வோரை
நேசிப்பதில்லை. (7:31)

குர்பானியின் இரத்தத்தை பூசத் தடை!

குர்பானியின் இரத்தத்தை
கஃபாவின் சுவர்களில் தடவுவதும்,
இறைச்சியை கொண்டு வந்து பரப்புவதும் நிறுத்தப்பட்டது.
அவற்றின் இறைச்சியும்
இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச்
சேருவதில்லை. ஆயினும்,
உங்களின் இறையச்சமே அவனிடம்
போய்ச் சேருகின்றது. (22:37)

நிர்வாணமாக வலம் வரத் தடை!

(நபியே! அவர்களிடம்) நீர் கேட்பீராக: அல்லாஹ் தன்
அடிமைகளுக்காகத்
தோற்றுவித்துள்ள (ஆடை) அலங்காரத்தை தடை செய்தது யார்? (7:32)
நீர் கூறும்: அல்லாஹ்
மானக் கேடானவற்றைச்
செய்யும்படி எப்போதும் கட்டளை
இடுவதில்லை. (7:28)

புனித மாதங்களை மாற்றத் தடை!

ஏதேனும் ஓர் ஆண்டில் (போர் தடுக்கப்பட்ட) ஒரு மாதத்தை
(போருக்காக) அவர்கள்
அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொள்கிறார்கள்.
 ஆனால் மறு ஆண்டில்
 அதே மாதத்தில் போர்
புரிவது கூடாது என்று
தடுத்து விடுகிறார்கள்.
எனெனில் அல்லாஹ்வினால் தடை
செய்யப்பட்டுள்ள மாதங்களின்
எண்ணிக்கையைப் பூர்த்தியாக்க
வேண்டும் என்பதற்காக! (9:37)

வழிச் செலவுக்கு
வசதி இல்லாமல் ஹஜ்ஜுக்கு செல்வது
 தடுக்கப்பட்டது!

மேலும் நீங்க (ஹஜ்ஜுக்காக)
வழித்துணைச் சாதனங்களைக்
கொண்டு செல்லுங்கள்! உண்மை
யாதெனில், வழித்துணைச்
சாதனங்களில் எல்லாம் மிக
மேலானது இறையச்சம்தான்.
(2:197)

ஹஜ் காலத்தில் வியாபார அனுமதி!

ஹஜ் பயணத்தில்
சம்பாதிக்காமலிருப்பது நற்செயல் என்றும்,  வருமானம் தேடுவது
ஆகாத செயல் என்றும் கருதப்பட்டு வந்தது.
(ஹஜ் பயணத்தில்) உங்கள்
இறைவனின் அருளை
தேடிக்கொள்வது உங்கள் மீது
குற்றமாகாது. (2:198)

மெளன ஹஜ்ஜும். உண்ணாமலும்,
பருகாமலும் இதர அறியாமைச்
சடங்குகள் அனைத்தும்  அழித்து விட்டு
 இறையச்சம், ஒழுக்கம், தூய்மை
 எளிமை ஆகியவற்றின்
முழு வடிவமாக ஹஜ்
ஆக்கப்பட்டது.

கஃபாவிற்கு வருகிற
பாதைகள் அனைத்திலும்
கஃபாவிலிருந்து இருபது மைலுக்கு
 அப்பால் ஒவ்வோர்
எல்லை நிர்ணயிக்கப்பட்டது. மக்கள் அனைவரும்
 அல்லாஹ்வுடைய
இல்லத்தில் எளியவராகவும்,
தாழ்மையுடையவராகவும் வருகை
 புரியவேண்டும்.
பணக்காரர்கள், ஏழைகள்
எவராயினும் அந்த எல்லையை
அடைந்ததும் ‘இஹ்ராம்’ எனும்
எளிய உடைகளை
அணியவேண்டும் எனக்
கட்டளையிடப்பட்டது.

அமைதியான  சூழ்நிலை ஏற்படுதல்

சாந்தி சமாதானத்தை
நேசிக்கும் மனப்பாங்கு ஏற்படவும் இறை
 ஆலயத்திற்கு
வருவோர்க்கு எவராலும் எந்தத்
தீங்கும் நிகழக்கூடாது
என்பதற்காகவே ஹஜ்ஜுக்குறிய
நான்கு மாதங்களை
கண்ணியப்படுத்தி அம்மாதங்களில்
போரிடுவது தடுக்கப்பட்டது.
ஹாஜிகள் கஃபாவுக்கு
வரும்போது அவர்களுக்கு அங்கே
திருவிழாக்களோ, ஆடலோ
பாடலோ இராது. மாறாக ஒவ்வொரு
 அடியிலும்
இறைவனின் தியானம் இருக்கும்;
தொழுகைகள் இருக்கும்,
வழிபாடுகள் இருக்கும்;
தியாகங்கள் இருக்கும்; கஃபாவைச்
சுற்றி வலம் வருதல் இருக்கும்;
அங்கு உச்சரிக்கப்படும்
வாக்கியங்கள் இவையே!

 ﻟًﺒّﻴْﻚَ ﺍَﻟﻠّﻬُﻢَّ ﻟَﺒَّﻴْﻚَ ، ﻟَﺒَّﻴْﻚَ ﻻ ﺷَﺮِﻳْﻚَ ﻟَﻚَ ﻟَﺒَّﻴْﻚَ، ﺍِﻥَّ ﺍﻟْﺤَﻤْﺪَ ﻭَﺍﻟﻨِّﻌْﻤَﺔَ ﻟَﻚَ ﻭَﺍﻟْﻤُﻠْﻚَ ﻻﺷَﺮِﻳْﻚَ ﻟَﻚ!

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்: 19-07-2017.

படைத்தவனுக்கு தியாகம்

📌📌📌📌📌📌📌📌📌📌

  படைத்தவனுக்கு தியாகம்

📌📌📌📌📌📌📌📌📌📌

   இந்த உலகத்தை படைத்து காத்து நிற்க்கும் ஏகவல்லவனாம் அல்லாஹ் விற்க்கே அனைத்து புகழும் உன்டவதாக
    ஆமின்

    உலகத்தில் மனித பிறவியை படைத்து அவனுக்கு நல்லது கெட்டது என்ற அனைத்து பரிமானங்களையும் வாழங்கிய ஏக வல்லவன் *அல்லாஹ்* விற்க்காக இந்த மனிதன் என்ன தியாகம் செய்திருக்கிறான்.

  கஷ்டங்கள் வந்தால் மட்டும் படைத்த இறைவனை நினைக்கும் நாம். நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும் போது மட்டும் ஏன் அவனை நினைப்பதில்லை ஏன்?

   எளிய மார்க்கத்தை நமக்கு அளித்த இறைவனை நாம் ஏன் தொழுவதில்லை?

   இந்த அற்ப உலக வாழ்க்கையில் நாம் பணம் பொருள் அனைத்திற்க்காவும் ஓடுகிறோமே தவிர இதற்க்கு பிறகு நமக்கு மிக முக்கியமான மறுமை வாழ்க்கை ஒன்று இருப்பதை மறந்து விடுகிறோம்.

  இந்த பழாய் போன அற்ப வாழ்க்கையில் போட்டி.,பொறாமை,தீமை, மற்றும் அனைத்து விதமான காரியங்களிலும் படைத்தவன் பார்த்துகொண்டிருக்கிறான் என்பதை மறந்து செயல்பட்டு கொண்டியிருக்கிறோம்.

   வாழ்க்கையில் நம் குடும்ப நலனிற்க்காக தியாகம் செய்யும் நாம் ஒரு தடவையாவது படைத்த இறைவனுக்காக தியாகம் செய்ய முன் வருவதில்லை.

  நாம் சம்பாதிக்கும் பெயர் புகழ் ஏதும் நாம் இறப்பிற்க்கு பிறகு நமக்கு கூட வருவதில்லை நாம் செய்யும் அமல்கள்தான் நமற்க்கு மறுமை நாளில் பக்கம் நின்று சாட்சி சொல்லும் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

   ஆகையால் வாழ்வில் எத்துனை எத்துனையோ தியாகங்கள் செய்யும் நாம். நம்மை படைத்து நமக்கு உருவம் தந்து நமக்கு மனிதன் என்ற மிக பெருமையான அந்தஸ்த்தை அந்த *அல்லாஹ்* விற்க்காக தியாகம் செய்வோம்.

 ஐந்து வேலை தொழுகையை எக்காரணம் கொண்டும் விடமாட்டோம் என்று உறுதி புறிவோம்.

  ஒரு நாளில் மிஞ்சி போனால் மொத்தமாக ஒரு அரைமனி நேரம்தான் நாம் தொழுக்காக பயன் படுத்த போகிறோம். அந்த அரைமனி நேரம் தான் நம் மறுமை வாழ்வின் நிரந்தர மனித்துளிகள் என்பதை உணர்ந்து கொண்டாலே போதுமானது.

   நம் தியாகத்தை ஏற்று நமக்கு இம்மையிலும் மறுமையிலும் நல்லதொரு அழகான வாழ்க்கையை நமக்கு தரவேண்டும் எல்லாம்வல்லா *அல்லாஹ்* விடம் நாம் மன்றாடி கேட்போம்
 
 நிச்சியம் நம் துவாக்களை ஏற்று நமக்கு நழ்வழி காட்டுவான்

           ஆமின்

📌📌📌📌📌📌📌📌📌📌

மலுக்ஸா இம்ரான்

📌📌📌📌📌📌📌📌📌📌📌

🎓தாவூத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் - 19

🎓தாவூத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் - 19

🌾தாவூத் நபியின் குற்றத்தை அல்லாஹ் மன்னித்தான்

38:24 (அதற்கு தாவூது) "உமமுடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்யசமாக அவர்உம்மீது அநியாயம் செய்து விட்டார் நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர் இத்தகையவர் சிலரே" என்று கூறினார் இதற்குள் "நிச்சயமாக நாமேஅவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனைநோக்கினார்.

38:25 ஆகவே, நாம் அவருக்கு அ(க் குற்றத்)தை மன்னத்தோம் அன்றியும், நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.


தாவூத் நபியால் சபிகபட்டவர்கள்
5:78 இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால்சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும்இருந்தார்கள்.

அல்லாஹ்வை நோக்குபவரகா இருந்தார்.

38:17 இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவரகா இருந்தார்.

🍭இன்ஷா அல்லாஹ் தொடரும்......

🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗

பதிவு நாள்:18:07 2017

🎓தாவூத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் - 18

🎓தாவூத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் - 18

📗புகாரி எண்: 3427

மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தாவூத் - அலை - அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், 'உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது" என்று கூற, மற்றொருத்தி அவளிடம், 'உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது" என்று கூறினாள். எனவே, இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) தாவூத்(அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் (அவ்விரு பெண்களில்) மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (அவர்களின் தீர்ப்பில் கருத்து வேறுபட்டு) அப்பெண்கள் இருவரும் சுலைமான்(அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், 'என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதமுள்ள) ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப்) பிளந்து (பங்கிட்டு) விடுகிறேன்" என்று கூறினார்கள். அப்போது இளையவள், 'அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்" என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே, சுலைமான் (அலை) அவர்கள் 'அந்தக் குழந்தை அ(ந்த இளைய)வளுக்கே உரியது' என்று தீர்ப்பளித்தார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அன்று தான் (கத்திக்கு) 'சிக்கீன்' என்னும் சொல்லைச் செவியுற்றேன். (கத்தியைக் குறிக்க) 'முத்யா என்னும் சொல்லைத் தான் நாங்கள் பயன்படுத்தி வந்தோம்" என்று கூறுகிறார்கள்.

🍭இன்ஷா அல்லாஹ் தொடரும்......

🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗

பதிவு நாள்:18:07:2017

🎓தாவூத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் - 17

🎓தாவூத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் - 17

💐தாவூது அலைஹி வஸல்லம் அவர்களின் தீர்ப்பின்படி குழந்தையைத் தன்னிடம் வைத்திருந்த பெரியவள் சற்றும் சலனமின்றி வாய் மூடியிருக்க இளையவள் உடனே சொன்னாள், ‘அல்லாஹ் உங்களுக்கு கருணை புரிவானாக! வேண்டாம், தயவு செய்து அப்படிச் செய்யாதீர்கள். குழந்தை அவளின் பிள்ளைதான். அதை அவளிடமே கொடுத்துவிடுங்கள்’ என்றாள். இதைக்கேட்டவுடன் ஸ{லைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இந்தச் சின்னவளே உண்மையான தாய்!’ எனத் தீர்ப்பு வழங்கினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, நஸாயீ)

தாயன்பு எத்தகையது என்பதற்கு இந்நிகழ்ச்சி தக்கதொரு சான்றாகும். ஆம்! தம் கண் முன்னால் தான் ஈன்றெடுத்த தன் அன்பு மகனை அறுக்கப் போகிறேன் என்று சொன்னவுடனேயே உண்மைத்தாய் பதறுகிறாள். தனக்குத் தன் குழந்தை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவனை கொன்றுவிடக்கூடாது என்பதற்காக குழந்தை தன் மகனல்ல, அவளின் மகன்தான் எனக் கூறிவிடுகிறாள். இதைத்தான் நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களும் எதிர்பார்த்தார்கள்.

நீதியைக் கண்டு பிடிப்பதற்கு சில வேளை இது போன்ற தந்திரங்கள் தேவைப்படுகின்றன. இல்லையெனில் நீதி அநீதியாக மாறிவிடும். நபி தாவூது அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த தீர்ப்பு வெளிப்படையான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால் நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களோ அல்லாஹ்வினால் அளிக்கப்பட்டிருந்த அறிவின் ஒளியாலும் ஆழிய மதி நுட்பத்தினாலும் பிரச்சனையின் ஆழத்துக்கே சென்று ஒரு நொடியில் நீதியை வழங்கி விட்டார்கள்.

ஹதீஸ் ஆதார நூல்கள் :

சுனன் நசையி 5307, 5308, 5309

முஸ்னத் அஹ்மத் 7931, 8124

🍭இன்ஷா அல்லாஹ் தொடரும்........

🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗

18;07:2017

🎓தாவூத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் - 16

🎓தாவூத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் - 16

🌷இரண்டு பெண்கள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். இருவருக்கும் குழந்தைகள். அதுவும் ஆண் குழந்தைகள். இந்நிலையில் அங்கே வந்தது ஓநாய் ஒன்று! தாய்மார்கள் அயர்ந்திருந்த வேளையில் ஒரு குழந்தையை அது கவ்விச்சென்று விட்டது. கண் விழித்துப் பார்த்த இருவரும் ஒரு குழந்தையைக் காணாமல் தவித்தபோது தூரத்தில் ஓநாயின் பிடியில் சிக்கி குழந்தை கதறுவதும் சற்று நேரத்தில் அதன் உயிர் பிரிந்து விட்டதும் தெரிகிறது. குழந்தையைப் பறிகொடுத்தவள் உடனே ஒரு தந்திரம் செய்தாள்.

அருகில் கிடந்த மற்றொரு குழந்தையை உடனே கைப்பற்றினாள். ‘உன் குழந்தையை ஓநாய் தூக்கிச் சென்று விட்டதே!’ என்று அடுத்தவளைப் பார்த்து சொன்னாள். அவளோ, ‘என்ன கொடுமை இது? உன் குழந்தையைத் தானே அது கொண்டு சென்றது. இது என் பிள்ளையல்லவா?’ என்று குமுறினாள்.

விவகாரம் நபி தாவூது அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகம் சென்றது. அவர்கள் வழக்கை விசாரித்தார்கள். இரு பெண்களில் வயதால் சற்றுப் பெரியவளாக இருந்தவருக்கே அந்த குழந்தை சொந்தம் என்று தீர்ப்பளித்து விட்டார்கள். அவர்களின் தீர்ப்பால் அழுது புலம்பிய மற்றொரு பெண் வெளியே வந்து அங்கே நின்று கொண்டிருந்த நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிட்டாள்.

வழக்கு மீண்டும் மறு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. விஷயத்தை நன்கு விளங்கிக் கொண்ட ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையான தாயைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு தந்திரம் செய்தார்கள். ‘குழந்தை இருவருக்குமே தேவை. எனவே ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் இக்குழந்தையை இரு கூறுகளாகப்பிளந்து ஆளுக்குப் பாதியாகத் தந்து விடுகின்றேன்’ என்றார்களே பார்க்கலாம்!

🍭இன்ஷா அல்லாஹ் தொடரும்......

🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗

பதிவு நாள்:18:07:2017

🎓தாவூத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் - 15

🎓தாவூத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் - 15

38:22 தாவூதிடம் நுழைந்த போது அவர் அவர்களைக் கண்டு திடுக்குற்றார் அப்போது அவர்கள் கூறினார்கள் "பயப்படாதீர்! நாங்களிருவரும்வழக்காளிகள் எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார் எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!"

38:23 (அவர்களில் ஒருவர் கூறினார்) "நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர் இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடகள் இருக்கின்றன்ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெச் சொல்லி, வாதத்தில் என்னைமிகைத்து விட்டார்."

38:24 (அதற்கு தாவூது) "உமமுடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்யசமாக அவர்உம்மீது அநியாயம் செய்து விட்டார் நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர் இத்தகையவர் சிலரே" என்று கூறினார் இதற்குள் "நிச்சயமாக நாமேஅவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனைநோக்கினார்.

38:25 ஆகவே, நாம் அவருக்கு அ(க் குற்றத்)தை மன்னத்தோம் அன்றியும், நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.

🍭இன்ஷாஅல்லாஹ் தொடரும்......

🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗

பதிவு நாள்:18:07:2017

🎓தாவூத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் - 14

🎓தாவூத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் - 14

🌸தாவூத் நபியின் தீர்ப்பு 

38:26 (நாம் அவரிடம் கூறினோம்) "தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம் ஆகவே மனிதர்களிடையேசத்தியத்தைக் கொண்டு (நீதுமாக)த் தீர்ப்புச் செய்யும் அன்றியும், அனோ இச்சையைப் பின் பற்றாதீர் (ஏனெனில் அது) உம்மைஅல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.

21:78 இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடகள்இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக்கொண்டிருந்தோம்.

21:79 அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம் மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும்நற்)கல்வியையும் கொடுத்தோம் இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம் அவைதாவூதுடன்) தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.

38:21 அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அதை;திருந்த) மிஹ்ராபின் சவரைத்தாண்டி -

இனஷா அல்லாஹ்  தொடரும்.....

🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗
பதிவு நாள்:18:07:2017

Monday, 17 July 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 1

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் -1 


========================

எப்படி எந்த நோக்கத்திற்காக ஹஜ்
துவங்கிற்று என்பதை இப்ராஹீம்
அலைஹிஸ்ஸலாம் அவர்களின்
காலச்சூழ்நிலைகள் அறிவது அவசியம். இப்ராஹீம் عليه السلام
அவர்களின் மகனார் இஸ்மாயீல் عليه السلام
 அவர்களுக்குப்பிறகு
அவர்களின் வழித்தோன்றல்கள்
மார்க்கத்தில் எவ்வளவு காலம் நிலைத்து நின்றார்கள் என
இறைவன்தான் அறிவான்!
எப்படியோ சில
நூற்றாண்டுகளில் இந்த மக்கள்
வழிகேட்டில் புகுந்துவிட்டனர்.
ஒரே இறவனை வணங்குவதற்கும்
அழைப்பதற்கும் அமைக்கப்பட்ட இறை
ஆலயத்தில் நூற்றுக்கணக்கில்
சிலைகள் வைக்கப்பட்டுவிட்டன.

 ﻟًﺒّﻴْﻚَ ﺍَﻟﻠّﻬُﻢَّ ﻟَﺒَّﻴْﻚَ ، ﻟَﺒَّﻴْﻚَ ﻻ ﺷَﺮِﻳْﻚَ ﻟَﻚَ ﻟَﺒَّﻴْﻚَ، ﺍِﻥَّ ﺍﻟْﺤَﻤْﺪَ ﻭَﺍﻟﻨِّﻌْﻤَﺔَ ﻟَﻚَ ﻭَﺍﻟْﻤُﻠْﻚَ ﻻﺷَﺮِﻳْﻚَ ﻟَﻚ

“நான் வந்திருக்கிறேன். எனது இறைவனே! வந்திருக்கிறேன்.
உனக்கு இணை துணை கிடையாது. நான்
வந்திருக்கிறேன். நிச்சயமாக புகழ்
அனைத்தும் உனக்கே
உரித்தானவை. அருட்கொடைகள்
அனைத்தும் உன்னுடையவை.
எல்லாவிதமான ஆட்சிகளும் உனக்கே உரித்தானவை. உனக்கு இணை எவரும் கிடையாது.”
இதில் விசித்திரம்
என்னெவென்றால் சிலை வணக்கத்தை ஒழிப்பதற்காகவே தம்
வாழ்நாளெல்லாம் உழைத்த இப்ராஹீம் நபி இஸ்மாயீல் நபி
ஆகியோருக்கும் சிலைகள்
தயாரிக்கப்பட்டு விட்டன.
நேர்வழியில் நின்ற இப்ராஹீம்
நபியின் சந்ததியினர் ‘லாத்’ ‘மனாத்’
‘ஹூபல்’ ‘நஸ்ர்’ ‘யாகூது’ ‘உஸ்ஸா’ ‘அஸாப்’ ‘நாயிலா’
இப்படி பல பெயர்களில் சிலைகளை வடித்து வணங்கினார்கள்.

செவ்வாய், புதன், வெள்ளி, சனி
இப்படி இன்னும் எந்த எந்தத் கோளங்களை அவர்கள்
வணங்கினார்கள் என்றும்
தெரியவில்லை. பேய், பிசாசு, வானவர்கள் இறந்து போன
தங்களுடைய பெரியார்கள்
ஆகியோரையும் அவர்கள்
வணங்கினார்கள். அறியாமை இந்த
அளவுக்கு முற்றிப்
போயிருந்தது.
அவர்கள் வீட்டை விட்டு புறப்பட்டு விட்டால் பயணத்தில்
வணங்குவதற்கு தெய்வச் சிலை
இல்லாவிட்டால் கல் ஒன்று கிடைத்தாலும் வணங்க ஆரம்பித்து
விடுவார்கள். கல்லும்
கிடைக்கவில்லை என்றால்
மண்ணைத் தண்ணீரில் குழைத்து உருவம் அமைத்து ஆட்டு பாலைத் தெளித்து வணங்குவார்கள்.

*ஹஜ்ஜின் தவறான வடிவங்கள்!*

அந்த அஞ்சான காலத்தில் ஹஜ்ஜின்
கதி எப்படி இருந்தது என்பத
எண்ணிப்பாருங்கள்; ஒவ்வொரு
ஆண்டும் அங்கே ஒரு திருவிழா நடைபெற்றது. பல குலத்தவர்கள் தம்
இனத்தாரோடு இங்கே வந்து தனித்தனியே முகாம்
போடுவார்கள். அவரவர்கள்
தங்களைச் சேர்ந்த கவிஞர்கள் அல்லது துதி பாடர்கள் தம்மிடமும்
தம் குலத்தாரிடம் உள்ள பெருமைகளை பாடி பெருமையடித்துக் கொள்வதில்
மற்றவர்களை முந்துவார்கள்.
இறுதியில் அவர்கள்
ஒருவரையொருவர்
இழித்துரைக்கும் அளவுக்கு நிலைமை முற்றிவிடும்.
அப்புறம் எவர் தர்மப்பிரபு எவர்
கொடைவள்ளல் என்கிற போட்டி
நடக்கும்! குலத்தலைவரும் தமது பெருமையை பறைசாற்ற
சமையலில் பெரிய பெரிய
அண்டாக்களையும்
குண்டாக்களையும் வரிசை வரிசையாக அடுப்புகளில்
ஏற்றுவார்கள். ஒருவரையொருவர்
மிகைப்பதற்காக ஒட்டகத்திற்கு
மேல் ஒட்டகத்தை
அறுத்துக்கொண்டே போவார்கள்.
இந்த வீண் செலவுக்காண நோக்கம் இதுதான். இந்தத் தடவை நடந்த திரு விழாவில் இத்தனை பேருக்கு
உணவளித்தார் என்று பிரசாரம் ஆக வேண்டும். இந்தக் கூட்டத்தில் மதுபானம், விபச்சாரம், இசை
படுமோசமான செயல்கள்
அனைத்தும் தாராளமாக நடந்து
கொண்டிருந்தன.
நிர்வாணமாக வலம் வருதல் காபாவை சுற்றி வலம்
வருதலும் நடந்துகொண்டுதான்
இிருந்தது. ஆனால் எப்படி நிர்வாணமாக சுற்றிக்
கொண்டிருந்தார்கள்? எங்கள் அன்னையர் எங்களை எந்த
நிலையில்
பெற்றெடுத்தார்களோ அந்த நிலையில்தான் நாங்கள் இறைவன்
முன் செல்வோம் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
இறைவன் பெயரால் பலியும் தியாகச் செயல்களும் கூடச்
செய்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் எப்படியென்றால்
பலியிடப்பட்டவற்றின் இரத்ததை கஃபாவின் சுவர்களிலெல்லாம்
தடவுவார்கள். மாமிசத்தை
வாசலில் பரப்புவார்கள்.  இந்த
இரத்தமும் மாமிசமும்
இறைவனுக்கு தேவை என்ற எண்ணத்தில்!

இப்ராஹீம் நபியவர்கள் ஹஜ்ஜின்
நான்கு மாதங்களை
தடுக்கப்பட்டவை என்றும், இந்த
மாதங்களில் எந்த விதமான
சண்டையும் வம்பும்
நடத்தக்கூடாது என்றும்
அறிவுறுத்தியிருந்தார்கள். இந்த மக்கள் ஏதோ அந்த மாதங்களின்
கண்ணியத்தை சிறிதளவு மனத்தில்
வைத்திருந்தார்கள். ஆனால் மனம்
சண்டையிட விரும்பினால்
துணிச்சலான சந்தர்ப்பவாதத்தை
வைத்துக்கொண்டு ஓர் ஆண்டில் தடை செய்யப்பட்ட மாதத்தை
அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொண்டு அடுத்த ஆண்டில் அதற்கு ஈடு செய்து
கொள்வார்கள். அத்துடன் தமது
மார்க்கத்தில் நல்லெண்ணம்
கொண்டிருந்த அவர்களில் ஒரு
சிலரும் தமது அறியாமையின்
காரணத்தினால் நூதனமான புதிய
முறைகளை உருவாக்கிக்
கொண்டிருந்தார்கள்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்... 

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்: 18-07-2017

அல் அக்ஸாவை மீட்போம் தொடர் - 5

அல்லாவின் சாந்தியும் சமாதானமும்
நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக
அல்அக்ஸாவை
மீட்போம்
என்ற தலைப்பின் இக்கட்டுரையில்
இந்த மாத இதழில் இஸ்ரேல்/பாலஸ்தீனம்
நாட்டில் உள்ள
பைத்துல் முகத்தஸ்
அதாவது எபிரேயர் மொழியில் யெரூசலம் எனலாம்
யெரூசலம் அல்லது எருசலேம் (Jerusalem) என்பது நடு ஆசியாவில் அமைந்து, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மதங்களுக்கும், இசுரயேலர், பாலத்தீனியர் ஆகியோருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும், பழமைமிக்க நகராகவும் அமைந்துள்ளது.
எருசலேம் என்பது எபிரேய மொழியில்  (யெருசலையிம்) என்றும், அரபியில் அல்-குத்சு (القُدس) என்றும் அழைக்கப்படுகிறது. எருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்கு புனித தூயகம் என்றும் பொருள்[1].

கிழக்கு எருசலேமையும் உள்ளடக்கிப் பார்த்தால் எருசலேம் நகரம் இசுரேல் நாட்டின் மிகப் பெரிய நகரம் என்பது மட்டுமன்றி, மிகப்பெரும் மக்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ள நகரமும் ஆகும்.
இதன் பரப்பளவு 125 சதுர கி.மீ (48.3 சதுர மைல்) ஆகும். பழமையான நகரங்களில் ஒன்றான இந்நகரம் யூதேய மலைப்பகுதியில், மத்தியதரைக் கடலுக்கும் சாக்கடலின் வடக்குக் கரைக்கும் இடையில் அமைந்துள்ளது.[2][3] ஆபிரகாமிய சமயங்கள் என்று அழைக்கப்படுகின்ற யூத சமயம், கிறித்தவ சமயம், இசுலாம் ஆகிய மூன்று மதங்களுக்கும் எருசலேம் ஒரு புனித நகராக உள்ளது.

எருசலேமின் நீண்டகால வரலாற்றின்போது அந்நகரம் இருமுறை அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது; 23 தடவை முற்றுகையிடப்பட்டது; 52 தடவை தாக்குதலுக்கு உள்ளானது;
44 தடவை கைப்பற்றப்பட்டது.[4] நகரத்தின் பழைய பகுதியில் கி.மு. 4ஆம் ஆயிரமாண்டிலிருந்தே மக்கள் குடியேற்றம் இருந்துவந்துள்ளது.[5] இவ்வாறு எருசலேம் உலகப் பழம் நகரங்களுள் ஒன்றாக எண்ணப்படுகிறது. மதில்சுவர்களைக் கொண்ட பழைய எருசலேம் உலகப் பாரம்பரியச் சொத்து (World Heritage) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.[6] இது நான்கு குடியிருப்புகளை உள்ளடக்கியது. அவை: அர்மீனியக் குடியிருப்பு, கிறித்தவக் குடியிருப்பு, யூத குடியிருப்பு, முஸ்லிம் குடியிருப்பு என்பனவாகும்.[7]
ஆக இஸ்ரேலில் மூன்று பிரிவுகளாக உள்ளது
ஆனால் அதே சமயத்தில் வரலாற்றை சற்று பார்போமேயானால்
ஆரம்ப தொடக்க காலத்திலேயே இஸ்லாம் தான் ஏற்பட்டது
அதாவது இஸ்லாம் என்பது மதம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்து
இஸ்லாம் என்றால் "சலாம்"
சாந்தி சமாதானமாக இருக்க வேண்டும் என்று எண்ணங்களில் நினைத்து நம் போன்ற மனிதர்கள் நம் சகோதரர்கள் ஆவார்கள்
இவர்களை தான் இஸ்லாமியர்கள் என்கிறோம்,
ஆனால் இதனை உடைக்க வேண்டும் அதாவது ஒன்றுபட்டவர்களை பிரிக்க வேண்டும்,
பிரிவுகளை உண்டாக்க வேண்டும்,
என்ற சதியை ஜின் இனத்தை  சேர்ந்த சைத்தான் சில மனிதர்கள் துணைகொண்டு இஸ்ரேலில் பிரிவுகள் ஏற்படுத்தி மனிதர்களை வழி கெடுத்தான்,
அதே சமயத்தில் ஜின்களுக்கும் மனிதர்களுக்கும்
அனைத்து உயிர்களுக்கும் இறையை வழங்கும் இறைவனாகிய "அல்லா"மனிதர்களை
ஒன்றினைக்க நம் மனிதர்களில் இருந்து நபிமார்களை தேர்ந்தெடுத்து அறியாமையில் இருக்கும் மனிதர்களுக்காக தோரா,இன்ஜில்
வேதம் வழங்கபட்டது,
ஆனாலும் அதனை ஏற்க மனமில்லாத ஒரு கூட்டத்தினர்கள் அதனை மாற்றி அமைத்து ,பைத்துல் முகத்தஸ் (ஜெருசலேம்)
பகுதியில் மனிதர்களை பிரிவுகள் ஏற்படுத்தினார்கள்,
உண்மையாக சரியாக நாம்
 வரலாற்றை பார்த்தால்
பைத்துல் முகத்தஸில் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசல்தான் முதன்முதலாக கட்டப்பட்டது,
அதனை முழுவதுமாக ஜின்களை வைத்து சுலைமான் அலை அவர்கள் தான் அல்அக்ஸா பள்ளியை கட்டிமுடித்தார்கள்,காரணம் மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காக,
இஸ்ரேல் என்ற பெயர் மாற்ற பட்ட நாட்டில் மொழிகள்,நிறங்கள்,
எண்ணங்கள் இப்படி பல பிரிவுகளாக இருக்கின்ற காரணத்தால் அந்த பகுதியில் அல்அக்ஸா பள்ளிவாசலில்" அல்லாவிற்காக
சகோதரர்களாய் ஒன்றினைந்து தொழுகிறார்கள்,
இந்த ஒற்றுமைகள் மீண்டும் பிரிவு படுத்த வேண்டும் அதாவது மனுஜின் கூட்டாத்தார்கள்,
யூதர்களின் ஒரு சாரார்கள் என்பவர்களால் அதாவது இன்றைய காலங்களில் இலுமினாட்டியாக இருப்பவர்கள்
இஸ்லாத்தில் உள்ளவர்களை தீவிரவாதிகள் என்பதை பொய்யாக சித்தரித்து மீடியாவிற்கு கொண்டுவந்தார்கள்,
இஸ்லாமியர்களை அவர்களின் சொந்த நிலங்களை சூழ்ச்சி செய்து யூதர்கள் ஒரு பிரிவினர்கள் அவர்கள் சொந்தமாக்கி புதிய நாடாக இஸ்ரேல் என்ற பெயரை ஏற்படுத்தினார்கள்,
அல்அக்ஸா பள்ளியில் சுற்றி உள்ள இஸ்லாமியர்களை அதே நாட்டில் உள்ள வேறு பகுதியில் சூழ்ச்சி செய்து தள்ளிவிட்டார்கள் எனலாம்,
ஆனால் இன்றை காலங்கள் வரை அல்அக்ஸாவை தரைமட்டமாக ஆக்க வேண்டும் என்ற
எண்ணங்கள் கொண்ட யூதர்களின் ஒரு சாரார்கள் திட்டம்
தீட்டி வருகிறார்கள்,
ஆனாலும் இறுதி இறை தூதர் முஹம்மத் ரசூல் சல் அலை உம்மத்தினர்கள் தினந்தோறும் உயிர்களை தியாகம் செய்து அல்அக்ஸாவை தரைமட்டமாக ஆக்க விடாமல் காப்பாற்றி வருகிறார்கள்,
அந்த பகுதியல் மனிதர்கள்
 ஒன்றிணைய கூடாது,அதாவது பாலஸ்தீன இஸ்லாமியர்களை அல்அக்ஸா பள்ளி வாசலில்
ஒன்றினைந்து தொழுக கூடாது என்ன ஒரே அடிப்படை எண்ணங்கள் தான் இந்த
இலுமினாட்டிகளின் எண்ணம்,
ஆக
‏பாலஸ்தீனதில் ஆக்கிரமிப்பில் உள்ள
‏மஸ்ஜிதுல் அல்அக்ஸாவை
மூடி வரலாறு காணாத விதத்தில் முதல் முறையாக ஜும்ஆ தொழுகைக்கு தடை விதித்தது ஸியோனிஷ இஸ்ரேல் அரசாங்கம் ,(அல்ஜஸீரா )

இந்த சம்பவம் மிக கவலைக்குரிய ஒன்றாக இருந்தாலும்.......
மூடப்பட்டது மஸ்ஜிதுல் அக்ஸா மட்டுமல்ல நமது வீர வரலாறுகளும் ,முஸ்லீம்களின்
நம்பிக்கையும் தான் ........

இந்த அல் மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்டெடுத்த ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் முதல் மாவீரர் ஸலாஹுத்தீன் அல் அய்யூபி (ரஹ்) அவர்கள் வரை நமக்கு அவர்கள் விட்டுச்சென்றதல்லாம் நீங்காத வரலாற்று சாதனைகள் மட்டுமா !!

மாறாக நீங்கள் உண்மையான முஃமின்களாக இருக்கும்
 வரை நீங்கள் தான் உயர்ந்தவர்கள் ,வெற்றியாளர்கள் என்பது தானே !!

நாம் என்ன படிப்பினை பெற்றோம் !!

அன்றும் அதே ஏக இறைவன் இன்றும் அவனே இறைவன் அன்றும் அதே இறை வேதம் அல்குர்ஆன் இன்றும் அதுவே வேதம் ஆனால் ......

அன்றிருந்தவர்கள் முஃமின்கள் (இறை விசுவாசிகள்) அவர்களுக்கு வெற்றி கிடைத்தது காரணம் அவர்கள் வாய்மையானவர்களாக இருந்து சேட்டிலைடை படைத்த அந்த அல்லாஹ்வுடைய தொடர்பில் இருந்தார்கள்,

இன்று இருப்பவர்கள் பெயர் தாங்கிய முஸ்லீம்களாக இழிவடைந்து ,உரிமைகளை இழந்து ,ஆக்கிரமிக்கப்
பட்டவர்களாக காட்சி அளிக்கின்றனர் காரணம் இவர்கள்
வாய்மை இழந்து ,இறை நம்பிக்கை குன்றிய நிலையில்
சேட்டிலைட் உடன் மட்டுமே (சமூக வலை தளங்கள் உடன் )
தங்களின் தொடர்பை வைத்திருக்கின்றனர் .

இந்த நிலை மாற வேண்டும் என்றால் நாம் அனைவரும்
முஸ்லீம்கள் (இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள் )என்ற படித்தரத்திலிருந்து முஃமின்களாக (இறை விசுவாசிகளாக) மாறினால்
இந்த உம்மத் இன்னும் பல உமரையும்,ஸலாஹுதீனையும்
ஈன்றெடுக்கும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை .
--------------------------------------------------------------
எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொல்லாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.
அல்குர்ஆன்-3:139

பாலஸ்தீன நாட்டில் அதாவது பெயர் மாற்றபட்ட
இஸ்ரேல் என்ற நாட்டில்
மொழிகள் அடிப்படையிலும்,
யூதம் ,கிறஸ்துவம்,
அடிப்படையிலும் மனிதர்கள் பிரிந்து கிடைக்கிறார்கள்,
பைத்துல்முகத்தஸ்/ஜெருசலேமில்
உள்ள அல்அக்ஸா பள்ளியை  வைத்தே ஒன்றிணையமுடியும்,
ஒன்றிணைக்க முடியும்,
அதாவது இஸ்ரேலில் இஸ்லாமியர்
ஆட்சி ஏற்பட்டால் தான் அல்அக்ஸா பள்ளிவாசலை முழு உலக இஸ்லாமியர்களுக்கு சொந்தமாக்க முடியும்,
நாம் ஒன்றிணைய முடியும்,
ஆக நாம் ஒவ்வொருவரும்
அல்லாவிடம் அல்அக்ஸா பள்ளிவாசலுக்காக
ஒரு நிமிடம்
துவா கேட்போம்,
இன்ஷா அல்லா இஸ்ரேல்
நாட்டில் இஸ்லாமிர்கள் ஆட்சி வருவது வெகுதொலைவில் இல்லை ,
"அல்லா"ஆமின் செய்வானாக.
பதிவு தொடரும்...
அல்லாவின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக.

Sunday, 16 July 2017

📓திருக்குர்ஆனின் விளக்கங்கள்-19📓

🎯காளைக் கன்றை வணங்கிய இஸ்ரவேலர்


📖அல்குர்ஆன்
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُم بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَىٰ بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ ۚ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ

"என் சமுதாயமே! காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்ததன் மூலம் உங்களுக்கே தீங்கு இழைத்து விட்டீர்கள். எனவே உங்களைப் படைத்தவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்! உங்களையே கொன்று விடுங்கள்! இதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு நல்லது' என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக! அவன் உங்களை மன்னித்தான். அவனே மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.*

திருக்குர்ஆன்  2:54

 🔘இறைவனிடமிருந்து வேதத்தைப் பெறுவதற்காக *"தூர்"* மலைக்கு மூஸா நபி அழைக்கப்பட்டார். தூர் மலை நோக்கி மூஸா நபி புறப்பட்டவுடன் அவரது சமுதாயத்தைச் சேர்ந்த ஸாமிரிஎன்பவன் அவர்களது நகைகளைப் பெற்று உருக்கி *காளைக் கன்றின் சிற்பத்தை உருவாக்கினான்.

🔘 மூஸா நபியின் காலடி மண்ணை எடுத்து அதில் போட்டவுடன் அந்தச் சிற்பத்திலிருந்து ஒரு சப்தம் வந்தது. *"இது தான் கடவுள்; மூஸா வழி மாறிச் சென்று விட்டார்"* எனக் கூறி அம்மக்களை ஸாமிரி நம்ப வைத்து அதற்கு வழிபாடு நடத்தச் செய்து விட்டான். *(பார்க்க திருக்குர்ஆன் 20:96)

🔘 அதிலிருந்து ஒரு சப்தம் வந்ததே கடவுள் என்று நம்புவதற்கு அவர்களுக்குப் போதிய சான்றாகத் தெரிந்தது. அது பேசாது என்பதோ, இவர்களின் பேச்சுக்கு எந்த மறுமொழியும் கூறாது என்பதோ அவர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

🔘 மூஸா நபி அவர்கள் அதைத் தீயில் போட்டு எரித்துச் சாம்பலாக்கி அந்தச் சாம்பலைக் கடலில் தூவி, இது கடவுள் அல்ல என நிரூபித்துக் காட்டினார்கள். *(பார்க்க திருக்குர்ஆன் 20:89, 20:97)*

🔘 நமது அறிவுக்குப் புலப்படாத ஏதோ ஒன்றை நம்மிடம் ஒருவர் செய்து காட்டி நம்மை ஏமாற்ற முயலலாம். அது போன்ற நேரங்களில் அதை மட்டும் அடிப்படையாக வைத்து அவருக்கு அனைத்தும் இயலும் என்று நாம் நம்பி விடக் கூடாது.

🔘 இதில் ஏதோ தந்திரம் உள்ளது எனப் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற ஒன்றிரண்டு செயல்களைச் செய்பவர் மற்ற அனைத்து விஷயங்களிலும் நம்மைப் போலவே மனிதராக இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

🔘 உண்ணுகிறார்; பருகுகிறார்; மல ஜலம் கழிக்கிறார்; நோய் வாய்ப்படுகிறார்; முதுமையடைகிறார் என்பன போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு அவரது பலவீனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
20:97 வசனத்திலிருந்து நாம் பெறவேண்டிய பாடம் இது தான்.

🚫(பார்க்க: திருக்குர்ஆன் 2:51, 2:54, 2:92, 2:93, 4:153, 7:148, 7:149, 7:152, 20:85-98)

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

பதிவு நாள்: 17-07-2017

தமிழக முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றம்


தமிழக முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தேவை இந்திய முஸ்லிம்களின் வரலாறும் இன்னொரு வரலாற்றுக்கான திட்டமிடுதலும்
கல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா?  என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெண்மணியும் -டீக்கடை பேஸ்புக் குழுமமும் நடத்திய கட்டுரைப்போட்டியில் 2ம் இடம் பெற்ற சகோதரி அன்னு அவர்களின் கட்டுரை இது.  கல்வியில் இஸ்லாமிய சமூகத்தின் ஆரம்பகால   எழுச்சிமிக்க பக்கங்களும், வீழ்ந்த காரணங்களும் என வரலாற்று ஆய்வுடன்  எழுதப்பட்ட இக்கட்டுரை ஒவ்வொர்   முஸ்லிமும்  கட்டாயம் அறிந்திருக்க வேண்டியது!   முழுமையாக படியுங்கள். மறைக்கப்பட்ட வரலாற்றை அறிந்துக்கொள்ளுங்கள்!!!

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்
இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13.4 சதவிகிதமாக இருக்கிறார்கள். ஆனால் அரசாங்கத்தின் பொறுப்பான பதவிகளில் 2 அல்லது 3 சதவிகிதத்தினர் மட்டுமே முஸ்லிம்கள்.
 முஸ்லிம்களில் 7.2 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள். அதிலும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரிக்குச் செல்கிறார்கள். பட்டமேற்படிப்பு படித்தவர்கள் வெறும் 1.2 சதவிகிதத்தினர் மட்டுமே.
இந்திய முஸ்லிம்களில் 94.8 சதவிகிதத்தினர் வறுமைக்கோட்டுக் கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் நகரங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 28.3 சதவிகிதத்தினர் மிக மோசமான வறுமையில் வாழ்கிறார்கள்.
நாடு முழுவதிலுமுள்ள சிறு நகரங்களில் தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் மாதவருவாயை விட முஸ்லிம்களின் மாத வருவாய் குறைவாக இருக்கிறது.
நீதித்துறையில் தலித்துகளின் பங்கு 20 சதவிகிதமாக இருக்கிற போது முஸ்லிம்கள் பங்கு 7.8 சதவிகிதம் மட்டுமே.
தலித்துகளில் 23 சதவிகிதத்தினருக்கு குழாய் குடிநீர் கிடைக்கையில் முஸ்லிமகளில் 19 சதவிகிதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது.
தலித்துகளில் 32 சதவிகிதம் பேருக்கு ரேஷன் கார்டு இருக்கிறதென்றால் முஸ்லிம்களில் 22 சதவிகிதத்தினரே ரேஷன் கார்டு வைத்திருக்கின்றனர்.
பொதுத்துறை (7.2%) சுகாதாரத்துறை (4.4%) ரயில்வே துறை (4.5%) போன்ற பல்வேறு அரசு சார்ந்த துறைகளில் தலித்களைவிட முஸ்லிம்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது.
தற்போதைய நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் முஸ்லிம்களின் மக்கள் தொகையான 13.4 சதவிகிதத்திற்கு சுமார் 70 - 75 முஸ்லிம் எம்.பி-க்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய முஸ்லிம் எம் பி-க்களின் எண்ணிக்கை 33 மட்டுமே!
மின்சாரம் இல்லாத கிராமங்களில் அதிகம் வாழ்பவர்கள் முஸ்லிம்களே. அதுபோல சேரிகளில் வாழ்பவர்களிலும் முஸ்லிம்களே அதிகம்.

இப்படிப் போகிறது அந்த அறிக்கை A1.

யாருடைய அறிக்கை? ஏழு வருடங்களுக்கு முன், 2005இல் அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கால் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார கல்வி நிலை குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ‘சச்சார் கமிட்டி’யின் அறிக்கைA2.
யாரைப் பற்றி?
"இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது." என இல்லஸ்டிரேட்டட் வீக்லி 29-12-1975 தேதியிட்ட இதழில் எழுதினாரே குஷ்வந்த்சிங், அந்த இந்திய இஸ்லாமியர்களைப் பற்றி....

சுருக்கமாக சொன்னால்,
தலித்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற சிறுபான்மை மக்களைவிடவும் முஸ்லிம்கள் மிக மோசமாகத் தாழ்ந்து கிடக்கிறார்கள்.
முஸ்லிம்கள் இந்திய மக்கள் தொகையில் 14%க்கு மேல் இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த சதவீதம் வெறுமனே 2.5% மட்டுமே  என்பவைதான் அந்த அறிக்கை தரும் அதிர்ச்சி.

நிற்க. 2005இல் இந்த அறிக்கை வெளியாகியதிலிருந்து, நம் சமூகத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்ல நாம் என்ன திட்டங்கள் செய்துள்ளோம்?? இன்று நம் சமுதாயத்தில் அதிக அளவிலான குழந்தைகள் கல்வி கற்றுக்கொண்டுள்ளன. ஆயினும் ஒரு தனி மனிதனின் கல்வி பற்றிய சிந்தனைக்கும், நம் சமூகத்தின் வளர்ச்சிக்கும் இடையே எத்தனை எத்தனை பிளவுகள்??? ஏன் இந்த நிலை? அரசு தன் வாக்குறுதிகளை பொய்ப்பிக்கிறது என்று வரலாற்றின் அத்தனை பக்கத்திலும் தெரிந்து கொண்ட பின்னரும், நம் சமுதாயத்தை முன்னேற்ற நாம் ஏன் எந்த அடியையும் இன்னும் எடுக்கவில்லை? யார் இதற்கு காரணம்? ஏன் இதை நிவர்த்தி செய்ய முயலாமலே நாம் ஓடிக்கொண்டுள்ளோம்? எதனை நோக்கி? இந்த ஓட்டத்தில் நம் தமிழக முஸ்லிம் சமுதாயம் எத்தனை தாக்குப் பிடிக்க முடியும்? சிந்தித்தோமா??? இனியும் சிந்திப்போமா??? வாருங்கள் பொன்னேட்டில் பதியப்பட்ட நம் வரலாற்றையும், வளமான எதிர்காலத்திற்கான இப்போதைய திட்டங்களையும் சற்றே மறு ஆய்வு செய்வோம். இன்ஷா அல்லாஹ்.

*சுன்னாவை பாதுகாப்பதில் சஹாபாக்களின் பங்கு​ - 3


*சுன்னாவை பாதுகாப்பதில்   சஹாபாக்களின் பங்கு​*

*PART 3*

*அல்குர்ஆனும் அல்ஹதீஸும் வாழ்வின் அடிப்படைகள் என்ற வகையில் இவ்விரண்டும் முழுவடிவில் நபி (ஸல்) அவர்கள் காலத்திலே பாதுகாக்கப்பட்டு நடை முறைப்படுத்தப் பட்டது. மதீனா நகரம் “தாருல் ஹிஜ்ரா” என்று அழைக்கப்பட்டது போலவே  “தாருஸ் ஸூன்னா” சுன்னா நடைமுறைப்படுத்தப்பட்ட இடம் எனவும் சஹாபாக்களால் அழைக்கப் பட்டது.(நூல்: புகாரி 7323)*

*நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அவர்களது மறைவுக்குப் பின்னும் சுன்னாவை எழுதி பாதுகாத்தது போல் அந்த சுன்னாவை மக்களிடத்தில் எத்திவைப்பதிலும் கூடுதல் கவனமும் அச்சமும் கொண்டார்கள்.*

*நபியவர்களின் வார்த்தைகளை அறிவிக் கும் போது கூடுதல் குறைகள் ஏற்படுமாயின் அவை மார்க்கத்தை மாற்றிவிடக்கூடியவை என்று மிகவும் அஞ்சி தங்களுடைய பொறுப் பை கவனமாக மேற்கொண்டார்கள்.*

*அல்லாஹ்வின் தூதரின் செய்திகளை எத்திவைப்பது அருளுக்குரிய காரியம் என்பதை புரிந்து செயல்பட்டார்கள். அவர்களது பேணு தலையும் பற்றையும் பின்வருமாறு விளங்கிக் கொள்ளமுடியும்.நபி (ஸல்) அவர்களின் மறை வுக்குப் பின் ஹதீஸ்களை மக்களிடையில் அறி விப்பதில் ஸஹாபாக்கள் மிகுந்த எச்சரிக்கை யுடன் நடந்து கொண்டார்கள்.*

*எனது பேச்சை (ஹதீஸை) செவியுற்று மனனமிட்டு பேணிக் காத்து மற்றவருக்கு எத்தி வைக்கின்ற மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக என நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள். (அறிவிப்பவர்: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) (நூல்: இப்னு மாஜா 230 திர்மிதி 2658)*

*என்னைப் பற்றிய ஒரு செய்தியையாவது எத்திவைத்து விடுங்கள் என நபி(ஸல்) அவர் கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல் லாஹ் இப்னு அம்ரு(ரலி), நூல்: புகாரி)*

*அல்லாஹ்வின் அருளுக்குரிய இப்பணி யை மேற்கொள்வதில் சஹாபாக்கள் தங்களால் முடிந்தவரை ஈடுபட்டார்கள். தாங்கள் கற்றுக் கொண்ட  ஹதீஸ்களை எத்திவைப்பதிலும் பள்ளிவாசல்களில் போதனைகள் செய்து வகுப்புக்கள் நடாத்துவதிலும்  பல பகுதிகளுக் கும் பயணங்கள் மேற்கொண்டும் தங்களை விட கூடு தலாக ஹதீஸ்களை தெரிந்து வைத்தி ருக்கின்றவர்களை கண்டறிந்து ஹதீஸ்களை பெற்றுக் கொள்வதிலும் நபித்தோழர்கள் கூடு தல் கவனம் செலுத்தினார்கள்.*

*ஜாபிர் (ரலி) அவர்கள் தனக்கு தெரியாத ஒரு ஹதீஸை ஷாம் பிரதேசத்திலுள்ள ஒரு நபித்தோழர் தெரிந்து வைத்துள்ளார் என்பதை அறிந்து அந்த ஹதீஸைப் பெற்றுக் கொள்வ தற்கு ஒரு மாதகால பிரயாணத்தை மேற் கொண்டு அந்த ஹதீஸை பெற்றுக் கொண்டு வந்தார்கள். (நூல்: அதபுல் முப்ரத்)*

*அபூ அய்யூபில் அன்ஸாரி (ரலி) அவர்கள் ஒரு ஹதீஸை பெற்றுக் கொள்வதற்காக மதீனாவி லிருந்து எகிப்துக்குப் பயண மானார்கள். (நூல்: பைஹகீ)*

*அப்துல்லாஹ் இப்னு புரைதா (ரலி) அறிவிக்கிறார்கள்:*

*மதீனா வைச் சேர்ந்த நபித் தோழர்களில் ஒருவர் எகிப்திலுள்ள புழாலாஹ் இப்னு உபைத் (ரலி) என்ற நபித் தோழரை சந்திக்க பயணமானார். அந்நபித் தோழரை கண்டு மகிழ்ந்த புழாலாஹ் (ரலி) அவர்கள் அவ ரை அன்புடன் வரவேற்றார். “நான் உங்களை சந்திப்பதற்காக இங்கு வரவில்லை. நானும் நீங்களும் நபி(ஸல்) அவர்கள் சொல்ல ஒரு ஹதீஸை செவியுற்றோம். அது பற்றிய அறிவு உங்களிடம் உள்ளது அதனை தெரிந்து கொண்டு போகவே வந்தேன்” என அந்நபித் தோழர் கூறினார். (நூல்: தாரமி, பாகம்.01 பக்கம் 468.)*

*இன்ஷா அல்லாஹ் தொடரும்......*

Saturday, 15 July 2017

ஹதீஸ்களை தொகுத்து வழங்கிய இமாம்களின் வாழ்க்கைக் குறிப்புகள்


இமாம் நஸாயீ

இயற்பெயர்  : அஹ்மத்

குறிப்புப் பெயர் : அபூ அப்திர் ரஹ்மான்

தந்தை பெயர்  : ஷுஐப்

பிறப்பு : ஹிஜ்ரீ 215 ஆம் ஆண்டில் நஸா என்ற ஊரில் பிறந்தார்கள். இவர் பிறந்த ஊரான நஸா என்பதுடன் இணைத்து நஸாயீ என்று இவர் மக்களால் அழைக்கப்படுகிறார்.

கல்வி : ஹிஜ்ரி 230ஆம் ஆண்டு பதினைந்தாவது வயதை அடைந்த போதே குதைபா பின் சயீத் அவர்களிடம் பயிலுவதற்காக பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். அவரிடம் 14 மாதங்கள் தங்கினார்கள். இவர் எழுதிய அல்அஹாதீசுல் லிஆஃப் (பலகீனமான ஹதீஸ்கள்) என்ற புத்தகம் ஹதீஸ் துறையில் இவர் பெற்றிருந்த பாண்டித்துவத்தைக் காட்டுகிறது.

இது மட்டுமின்றி மார்க்கச் சட்ட வல்லுனராகவும் திகழ்ந்துள்ளார்கள். இவர் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களை விட இமாம் நஸாயீ அவர்களே  மார்க்கச் சட்டத்தை அதிகம் அறிந்தவராக இருந்தார் என  இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார். எகிப்து நாட்டிலும் ஹிமஸ் நாட்டிலும் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் பொறுப்பை ஏற்றார்கள்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள்   : ஹுராஸான், ஈராக், ஜஸீரா, ஷாம், ஸஹுர், ஹிஜாஸ், எகிப்து

மாணவர்கள்: இப்னு ஹிப்பான், உகைலீ, இப்னு அதீ, அத்தவ்லாபீ, அத்தஹாவீ, அபூஉவானா, அத்தப்ரானி, இப்னு சின்னீ போன்ற பெரும் பெரும் அறிஞர்கள் இமாம் நஸயீ அவர்களிடம் மாணவர்களாகப் பயின்றுள்ளார்கள். இவர்களன்றி இன்னும் பலரும் உள்ளனர்.

ஆசிரியர்கள் : குதைபா, இஸ்ஹாக பின் ராஹவைஹி, அஹ்மத் பின் மனீஃ, அலீ பின் ஹஜர், அபூதாவூத், திர்மிதி, அபூஹாதம், அபூசுர்ஆ, முஹம்மத் பின் யஹ்யா, முஹம்மத் பின் பஷ்ஷார் ஆகியோர். இவர்களில் பெரும்பாலோர் இமாம் புகாரி மற்றும் முஸ்லிமின் ஆசிரியர்கள்.

படைப்புகள்: அஸ்ஸுனனுஸ் சுஹ்ரா, அஸ்ஸுனனுல் குப்ரா, அல்குனா, அமலுல் யவ்மி வல்லய்லா, அத்தஃப்சீர், அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன், தஸ்மியது ஃபுகஹாயில் அம்ஸார், இஷ்ரதுன்னிஸா ஆகியவை.

மரணம் : இமாம் நஸயீ பாலஸ்தீனத்தில் இறந்தார் என சில அறிஞர்கள் கூறுகின்றனர். தாரகுத்னீ போன்ற சில அறிஞர்கள் மக்காவில் இறந்ததாகக் கூறுகின்றனர். ஹிஜ்ரீ 303வது வருடம்  ஸஃபர் மாதம் 13 ஆம் நாள் திங்கட்கிழமை மரணித்தார்.

தகவல்: இணையம்

ரமழானின் அடிமைகளா..? ரஹ்மானின் அடிமைகளா..?

ரமழானின் அடிமைகளா..?
ரஹ்மானின் அடிமைகளா..?
=========================

ரமழானில் பள்ளிவாசலை நோக்கி படையெடுத்து வந்த மக்கள் கூட்டம் ரமழானுக்குப் பின்னர் காணாமல் போனதில் ஆச்சரியம் எதுவுமில்லை. காலம் காலமாக இப்படித்தான் நடக்கிறது. நமது மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருப்பதும் அவ்வாறுதானே..!

நோன்பு காலங்களில் பள்ளிவாசல்களில் சுனாமி போல் மக்கள் கூட்டம். பெருநாளுக்குப்பின் அலை அடித்து ஓய்ந்ததுபோல் பள்ளிவாசல்கள் எல்லாம் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

அனேக வணக்கங்கள் இஸ்லாமிய சமூகத்திற்கு வெறும் அடையாளங்களாக மாறிப்போயின. அடையாளங்கள் சமூகத்தில் எவ்வித தாக்கங்களை ஏற்படுத்துவதில்லை. நோன்பும் நமக்கு ஒரு சம்பிரதாயம் அவ்வளவுதான். சமூகத்தில் இந்த நோன்பு என்ன மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று உணர்ந்து செயல்படுவதாகத் தெரியவில்லை.

ஒரு மாதகாலம் உண்ணாமல் பருகாமல் தீமைகள் புரியாமல் மனக் கட்டுப்பாட்டுடன் இருக்கத் தெரிந்த நமக்கு 30 நாட்களுக்குப் பின்னர் அந்த உணர்வு காற்றில் கரைந்து போனதேன்..? மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்று மாறிப்போனதேன்..?

எனில் நாம் ரமழானைத்தான் வணங்கியிருக்கின்றோமே தவிர ரஹ்மானை அல்ல. ரமழான் வரும் போகும்..ஆனால் அந்த ரஹ்மான்.. எப்போதும் நித்திய ஜீவனாக இருப்பவன். வருடத்திற்கு ஒருமுறை மட்டும் வந்து செல்பவனல்ல அவன். எப்போதும் நம்மோடு இருப்பவன் அவன். அந்த ரஹ்மான வணங்குவோம். ரமழானை அல்ல.

நோன்புகள் ஒருபோதும் முடிவதில்லை! திருக்குர்ஆனும் நம்மைவிட்டு எங்கும் சென்றுவிடாது! பள்ளிவாசல்கள் ஒருபோதும் மூடப்படுவதும் இல்லை! பிரார்த்தனைகளுக்கு ரமளானில் மட்டுமல்ல.. இனியும் பதில் கிடைக்கும்! நற்செயல்களுக்கு எப்போதும் நற்கூலி கிடைக்கும்! ஆகவே மரணம்வரை படைத்தவனை வணக்கும் மக்களாக மாறுவோம்!

ரமழானின் அடிமைகளாக அல்ல.. ரஹ்மானின் அடிமைகளாக மாறுவோம்!!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்யும் செயலையே அல்லாஹ் அதிகம் விரும்புகின்றான்” (புகாரி, முஸ்லிம்)

நூஹ் மஹ்ழரி
13-07-2017

ஹஜ் வழிகாட்டி

ஹஜ் வழிகாட்டி

மீகாத் (இஹ்ராமின் எல்லை)
பிறை 07
அன்று இரவே மினா போக முடிவு செய்திருந்தால் ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்து இஹ்ராமில் ஆகிக் கொள்வது.

பிறை 08
ஃபஜ்ருக்குப் பின் ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்து இஹ்ராமில் ஆகிக் கொள்வது.

மக்கா -பிறை 07
1.முடிந்தால் தவாஃப் செய்வது.
2.மினாவிற்கு சென்று இரவில் தங்குவது.
3.பிறை எட்டு அன்றுதான் மினாவுக்கு செல்ல நினைத்திருந்தால் மக்காவில் தங்கியிருப்பது.

மினா -பிறை 08
1.மினாவில் தங்குவது.
2.மினாவில் ஓதிக்கொண்டிருப்பது.தஸ்பீஹ்,சலவாத்து,துஆ செய்து கொண்டிருப்பது.
3.மறுநாள் சூரிய உதயத்திற்கு பின் அரஃபா மைதானத்திற்கு புறப்படுவது.
4.ஒருவேளை இலேசாக இருக்குமென்று கருதினால் மறுநாள் பஜ்ருக்கு முன்பே அரஃபாவுக்கு புறப்படுவது.

அரஃபா -பிறை 09
1.அரஃபா மைதானம் அடைந்ததும் மஃரிப் வரை தங்கியிருப்பது.
2.திருக்குர்ஆன் ஓதுவது.
3.விரும்பினால் குளிப்பது,தஸ்பீஹ்,சலவாத்,துஆ செய்வது.
4.குறிப்பாக அஸருக்குப் பின் சேர்ந்து நின்று கூட்டு துஆ செய்வது,தனிப்பட்ட முறையில் துஆ செய்வது,நமக்காக நம் சொந்தக்களுக்காக ஊரில் நம்மிடம் சொல்லியனுப்பியவர்களுக்காக நினைவு வைத்து துஆ செய்வது.
5.மஃரிப் வந்த பிறகுதான் வெளியாவதற்கு அனுமதிப்பார்கள்.
6.மஃரிப் அங்கு தொழுவது இல்லை.
7.மஃரிபிற்கு பின்பு முஜ்தலிபாவிற்கு புறப்படுவது.

முஜ்தலிபா -பிறை 10 இரவு
1.முஜ்தலிபாவில் மஃரிப் மற்றும் இஷாவை தொழுவது.
2.திக்ர்,தஸ்பீஹ்,சலவாத்து,துஆ செய்து கொண்டிருப்பது.
3.ஓய்வு எடுத்துக்கொள்வது.
4.முஜ்தலிபாவில் ஷைத்தானுக்கு கற்களை (எடுப்பது)பொறுக்குவது.
பிறை 10ல் எறிய 7கற்கள்
பிறை 11ல் எறிய 21கற்கள்
பிறை 12ல் எறிய 21கற்கள்
பிறை 13ல் எறிய 21கற்கள்
மொத்தம் சிறுகற்கள்.
5.பஜ்ர் வக்தில் பஜ்ர் தொழுதபின்பு மினாவுக்கு திரும்புவது.

மினா -பிறை 10 காலை
முஜ்தலிபாவிலிருந்து மினாவிற்கு வந்து பெரிய ஷைத்தானுக்கு கல் எறிவதற்காக புறப்படுவது.

ஜமராத் (கல் எறியும் இடம்)
பிறை 10 பகல்
1.பெரிய ஷைத்தானுக்கு மட்டும் 7கல் எறிவது.
2.பெண்கள் முதியவர்களிடம் கற்களை வாங்கி அவர்களுக்காக அடிப்பது.

மினா -பிறை 10
1.கல் எறிந்தவுடன் குர்பான் கொடுப்பது அல்லது அதற்கு முறையாக பணம் கட்டி பதிவுச்சீட்டு ஏற்கனவே வாங்கியிருந்தால் குர்பான் கொடுத்ததாக மனதில் நினைப்பது.
2.முடி எடுப்பது இஹ்ராமை களைந்து ஆடைகளை மாற்றிக் கொள்வது.
3.மக்காவிற்கு செல்வது.

மக்கா -பிறை 10
1.10,11,12 பிறைகளில் வசதியை முன்னிட்டு தவாஃப் மற்றும் சயீ செய்வது.
2.மீண்டும் மினா சென்று விடுவது.

மினா -பிறை 11 இரவு
 பிறை இரவுகளிலும் பிறை 12 பகல் வரை மினாவில் தங்குவது.

ஜமராத் (கல் எறியும் இடம்)
பிறை 11 பகல்
சூரிய உச்சத்திற்குப் பின் மூன்று ஷைத்தானுக்கும் கல் எறிவது.

மினா -பிறை 11
அன்றிரவும் மினாவில் தங்குவது.

ஜமராத் (கல் எறியும் இடம்)
பிறை 12
சூரிய உச்சத்திற்குப்பின் மூன்று ஷைத்தானுக்கும் கல் எறிவது.

மினா -பிறை 12
1.பிறை 12 பகல் வரை மினாவில் தங்குவது.
2.பிறை 12ல் சூரியன் மறைவதற்கு முன்பே மினாவிலிருந்து புறப்பட்டு மக்கா வந்தடைந்ததும் ஹஜ்ஜின் கடமைகள் முடிவுற்றது.மீண்டும் மினா செல்லத் தேவையில்லை.
3.பிறை 12ல் சூரியன் மறைந்த பின்பும் மினாவில் இருந்தால்,பிறை அன்றும் மினாவிலேயே தங்கி இருந்து கல் எறிய செல்ல வேண்டும்.

ஜமராத் (கல் எறியும் இடம்)
பிறை 13
மூன்று ஷைத்தானுக்கும் கல் எறிவது.

மினா -பிறை 13
மினாவிற்கு வந்து மக்காவிற்கு செல்ல வேண்டும்.

மக்கா -பிறை 13
மக்கா வந்தடைந்ததும் ஹஜ்ஜின் கடமைகள் முடிவுற்றது.மீண்டும் மினா செல்லத் தேவையில்லை.