السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
🌾 🌾 صباح الخير 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள்! - 7
========================
ஜம் ஜம் கிணறு!
இப்போது மக்கா
நகரமாக இருக்கும் இந்த இடம் ஊராக
உருவாவதற்கு முன், முதன் முதலில் இப்ராஹீம் நபி عليه السلام அவர்கள்
தமது மனைவியையும், கைக்
குழந்தையான மகன்
இஸ்மாயீலையும் இறைக் கட்டளைப்படி இங்கே
குடியமர்த்தினார்கள்.
குழந்தை தாகத்தால் தவித்த போது
இஸ்மாயீலின் தாயார், ஸஃபா மர்வா என்னும் இரு மலைக் குன்றுகள்
மீதும் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக ஓடி ஏறி,
ஏதாவது வணிகக் கூட்டம் செல்கின்றதா? என்று பார்த்தார்கள்.
அவர்களிடம் தண்ணீர் வாங்கி குழந்தையின்
தாகத்தை தணிக்க எண்ணினார்கள்.
அதற்கிடையே அல்லாஹ், குழந்தை
கிடந்த இடத்தில் அற்புத நீரூற்றை
ஏற்படுத்தினான்.
எத்தனை ஆண்டுகளானாலும்
கெட்டுப் போகாத தன்மை இந்த ஜம்ஜம் நீருக்கு உண்டு. இங்கே கால் கோடிக்கும் அதிகமான மக்கள்
அன்றாடம் பயன்படுத்தியும்,
கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கு எடுத்துச் சென்றும்
இந்தக் கிணறு ஊறிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாம் மெய்யான
மார்க்கம் என்பதற்குச் சான்று பகர்ந்துக் கொண்டிருக்கிறது.
தோண்டுகின்ற இடமெல்லாம்
எண்ணெய்க் கிணறுகள்
தோன்றுகின்ற இந்தப் பாலைவன
மணலில், இது ஒரு வரலாற்று அற்புதம்.
நாள் தோறும் வருகின்ற
பல்லாயிரக் கணக்கான மக்களுக்கும்,
ஆண்டு தோறும் கூடுகின்ற அத்தனை இலட்சம் பேருக்கும் தாகம் தணிக்கிறது இக்கிணறு. அதிக
சக்தியுள்ள இயந்திரங்கள் மூலம்
அனுதினமும் நீர் வெளியேற்றப்
படுகிறது. அள்ள அள்ளக் குறையாத
இப்பேரற்புதத்தை நிகழ்த்திக்
கொண்டிருக்கும் இறைவன்
பேராற்றலுடையவன்.சுற்றிலும் கண்ணாடித் தடுப்புகளால் அரண்
அமைத்து பாதுகாக்கப் பட்டுள்ள இக்கிணற்றின் மிக அருகில் சென்று
பார்க்கும் ஹாஜிகள் இறைவனின்
மாபெரும் அற்புதத்தை எண்ணி வியக்கின்றனர். இந்த ஜம்ஜம் கிணறு
இருக்கும் பகுதியும், பிரார்த்தனை
அங்கீகரிக்கப்படும் இடங்களில் ஒன்றாகும்.தரைப் பகுதியில் படிகள் அமைத்து உள்ளே சென்று பார்க்கவும், தண்ணீர் அருந்தவும்
ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
ஆண்களுக்கும், பெண்களுக்கும்,
தனித் தனியாக பாதைகள் அமைக்கப்
பட்டுள்ளன.
தவாபை முடித்து
தொழுகையையும் நிறை வேற்றிய ஹாஜிகள், கூட்டம்
கூட்டமாகச் சென்று தண்ணீர் அருந்துகின்றனர். பிரார்த்தனை
அங்கீகரிக்கப் படும் இந்த கிணற்றடியில் நின்று
பிரார்த்திக்கின்றனர். வயிறும் மனதும் நிறைந்தவர்களாக
ஹாஜிகள் அடுத்த செயலை நிறைவேற்ற அவசரமாகச்
செல்கின்றனர்.
ஸஃபா மர்வா மலைகளுக்கிடையே ஸயீ என்னும் ஓட்டம்.
ஸயீ என்னும் தொங்கோட்டம்.
ஸஃபாவும், மர்வாவும்
அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த
ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும்
சுற்றுவது குற்றமில்லை.
நன்மைகளை மேலதிகமாகச்
செய்பவருக்கு அல்லாஹ் நன்றி
பாராட்டுபவன். அறிந்தவன்.(திருக்
குர்ஆன் 2:158)
அன்று நபி இஸ்மாயீல் عليه السلام
அவர்களின் அன்னையார் தண்ணீர்
தேடி ஓடியதை நினைவு கூறும்
விதமாக இன்றளவும் ஹஜ்ஜுக்கு வரும்
அனைவரும் ஓடுகின்றனர்.
ஸஃபா, மர்வா என்பது இரு சின்னஞ் சிறு
மலைக் குன்றுகளின்
பெயர். இப்போது அந்த இடங்களில் மலைக்
குன்றுகள் இல்லை. சற்று உயரமான
இடத்தில் மலைக்
குன்றுகளை நினைவு படுத்தும் விதமாக கற்கள் குவித்து
வைக்கப்பட்டுள்ளன. ஸஃபா, மர்வா
இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதி,
நீண்ட அரங்கம் போல் அமைக்கப் பட்டு,
குளு குளு வசதி செய்யப்
பட்டுள்ளது. ஆங்காங்கே மாபெரும்
மின் விசிறிகள் காற்றோட்டத்தை
ஏற்படுத்துகின்றன. அடுக்கடுக்காக
மூன்று தளங்கள், ஹாஜிகள்
சிரமமின்றி ஓடுவதற்கு வசதியாக
அமைக்கப் பட்டுள்ளன. போவதற்கும்,
வருவதற்குமாக இரு தனித்தனிப்
பாதைகள். ஓட இயலாதவர்களைத்
தள்ளு வண்டியில் வைத்து, தள்ளிக்
கொண்டு செல்வதற்கும் நடுவில்
தனிப்பாதை அமைக்கப் பட்டுள்ளது.
ஓட்டத்தை, ஸஃபாவில் துவக்க
வேண்டும்.
ஸஃபாவிலிருந்து
மர்வா சென்று சேருவது ஒரு
ஓட்டம். மீண்டும் மர்வாவிலிருந்து
புறப்பட்டு ஸஃபா வந்து சேருவது இரண்டாவது ஓட்டம். இவ்விதம்,
ஸஃபாவில் தொடங்கிய முதல் ஓட்டம், ஏழாவது
ஓட்டத்துடன் மர்வாவில்
நிறைவு பெறும்.
ஸஃபாவிலிருந்து மர்வா வரை
வேகமாக ஓட வேண்டும் என்று
அவசியமில்லை. நடந்து சென்றால்
போதும். இடைப்பட்ட பகுதியில் ஒரு
குறிப்பிட்ட தூரத்தில் மட்டும் ஆண்கள் சற்று வேகமாக ஓட
வேண்டும். இந்த இடத்திற்கு
‘மீலைனில் அக்லரைன்” என்று பெயர்.
இந்த இடத்திற்கு அடையாளமாக
இரு புறமும் பச்சை விளக்குகள்
எரிகின்றன.
நபி صلى الله عليه وسلم அவர்கள் முதல் தவாஃப்
செய்யும் போது மூன்று
சுற்றுக்களில் வேகமாக
ஓடுவார்கள். நான்கு சுற்றுக்களில்
நடப்பார்கள். மேலும் ஸஃபா
மர்வாவுக்கிடையே வலம் வரும்போது
ஓடைப் பகுதியில்
மட்டும் ஓடுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் رضي الله عنه
ஆதாரம்: புகாரி (1644)
ஸஃபா மர்வா
குன்றுகளுக்கிடையே, மனித வெள்ளம் கரை
புரண்டு ஓடுகிறது.
ஹஜ் அல்லது உம்ராச்
செய்ய வந்த அத்தனை இலட்சம்
புனிதர்களும் ஓடுகிறார்கள்.
ஒருவரையொருவர் இடிக்கவில்லை. வீண்
பேச்சுக்கள் இல்லை.
உலக நினைவுகள் இல்லை.
மெதுவான குரலில் துஆக்கள்
ஓதுவதைத் தவிர வேறு எந்த சப்தமும்
இல்லை. மரணத்தை
நினைத்து ஓடுகிறார்கள்!;
மறுமையை நினைத்து
ஓடுகிறார்கள்! மஹ்ஷரை
நினைத்து ஓடுகிறார்கள்!
மண்ணறை வாழ்வை நினைத்து
ஓடுகிறார்கள்!கால்கள் ஓடுகின்றன!
கண்கள் அழுகின்றன! நாவுகள்
பிரார்த்திக்கின்றன!
ஸஃபாவில் முதல் ஓட்டத்தைத்
தொடங்கிய ஹாஜிகள், தமது ஏழாவது ஓட்டத்தை மர்வாவில்
நிறைவு செய்து தங்கள் முதல்
கடமையான உம்ராவை
இத்துடன் இனிதே நிறைவு
செய்கின்றனர்.
‘ஒரு உம்ராச் செய்வது மறு உம்ரா
வரையில் உள்ள பாவங்களின்
பரிகாரமாகும். ஒப்புக் கொள்ளப்பட்ட
ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத் தவிர
வேறில்லை” என்று நபி صلى الله عليه وسلم
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:
அபூ ஹுரைரா رضي الله عنه ஆதாரம்:
திர்மிதி (855)
தமத்துவ் என்னும் ஹஜ் செய்ய நிய்யத்
செய்தவர்கள், தலைமுடி நீக்கி
அல்லது கத்தரித்து
இஹ்ராமிலிருந்து
விடுபடுகின்றனர். கிரான் என்னும்
ஹஜ் செய்ய நிய்யத் செய்து இஹ்ராம்
அணிந்தவர்கள் இதே இஹ்ராமுடன்
ஹஜ்ஜை எதிர் நோக்கிக்
காத்திருக்கின்றனர்.
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி
கடலங் குடி.
பதிவு
🌾 🌾 صباح الخير 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள்! - 7
========================
ஜம் ஜம் கிணறு!
இப்போது மக்கா
நகரமாக இருக்கும் இந்த இடம் ஊராக
உருவாவதற்கு முன், முதன் முதலில் இப்ராஹீம் நபி عليه السلام அவர்கள்
தமது மனைவியையும், கைக்
குழந்தையான மகன்
இஸ்மாயீலையும் இறைக் கட்டளைப்படி இங்கே
குடியமர்த்தினார்கள்.
குழந்தை தாகத்தால் தவித்த போது
இஸ்மாயீலின் தாயார், ஸஃபா மர்வா என்னும் இரு மலைக் குன்றுகள்
மீதும் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக ஓடி ஏறி,
ஏதாவது வணிகக் கூட்டம் செல்கின்றதா? என்று பார்த்தார்கள்.
அவர்களிடம் தண்ணீர் வாங்கி குழந்தையின்
தாகத்தை தணிக்க எண்ணினார்கள்.
அதற்கிடையே அல்லாஹ், குழந்தை
கிடந்த இடத்தில் அற்புத நீரூற்றை
ஏற்படுத்தினான்.
எத்தனை ஆண்டுகளானாலும்
கெட்டுப் போகாத தன்மை இந்த ஜம்ஜம் நீருக்கு உண்டு. இங்கே கால் கோடிக்கும் அதிகமான மக்கள்
அன்றாடம் பயன்படுத்தியும்,
கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கு எடுத்துச் சென்றும்
இந்தக் கிணறு ஊறிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாம் மெய்யான
மார்க்கம் என்பதற்குச் சான்று பகர்ந்துக் கொண்டிருக்கிறது.
தோண்டுகின்ற இடமெல்லாம்
எண்ணெய்க் கிணறுகள்
தோன்றுகின்ற இந்தப் பாலைவன
மணலில், இது ஒரு வரலாற்று அற்புதம்.
நாள் தோறும் வருகின்ற
பல்லாயிரக் கணக்கான மக்களுக்கும்,
ஆண்டு தோறும் கூடுகின்ற அத்தனை இலட்சம் பேருக்கும் தாகம் தணிக்கிறது இக்கிணறு. அதிக
சக்தியுள்ள இயந்திரங்கள் மூலம்
அனுதினமும் நீர் வெளியேற்றப்
படுகிறது. அள்ள அள்ளக் குறையாத
இப்பேரற்புதத்தை நிகழ்த்திக்
கொண்டிருக்கும் இறைவன்
பேராற்றலுடையவன்.சுற்றிலும் கண்ணாடித் தடுப்புகளால் அரண்
அமைத்து பாதுகாக்கப் பட்டுள்ள இக்கிணற்றின் மிக அருகில் சென்று
பார்க்கும் ஹாஜிகள் இறைவனின்
மாபெரும் அற்புதத்தை எண்ணி வியக்கின்றனர். இந்த ஜம்ஜம் கிணறு
இருக்கும் பகுதியும், பிரார்த்தனை
அங்கீகரிக்கப்படும் இடங்களில் ஒன்றாகும்.தரைப் பகுதியில் படிகள் அமைத்து உள்ளே சென்று பார்க்கவும், தண்ணீர் அருந்தவும்
ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
ஆண்களுக்கும், பெண்களுக்கும்,
தனித் தனியாக பாதைகள் அமைக்கப்
பட்டுள்ளன.
தவாபை முடித்து
தொழுகையையும் நிறை வேற்றிய ஹாஜிகள், கூட்டம்
கூட்டமாகச் சென்று தண்ணீர் அருந்துகின்றனர். பிரார்த்தனை
அங்கீகரிக்கப் படும் இந்த கிணற்றடியில் நின்று
பிரார்த்திக்கின்றனர். வயிறும் மனதும் நிறைந்தவர்களாக
ஹாஜிகள் அடுத்த செயலை நிறைவேற்ற அவசரமாகச்
செல்கின்றனர்.
ஸஃபா மர்வா மலைகளுக்கிடையே ஸயீ என்னும் ஓட்டம்.
ஸயீ என்னும் தொங்கோட்டம்.
ஸஃபாவும், மர்வாவும்
அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த
ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும்
சுற்றுவது குற்றமில்லை.
நன்மைகளை மேலதிகமாகச்
செய்பவருக்கு அல்லாஹ் நன்றி
பாராட்டுபவன். அறிந்தவன்.(திருக்
குர்ஆன் 2:158)
அன்று நபி இஸ்மாயீல் عليه السلام
அவர்களின் அன்னையார் தண்ணீர்
தேடி ஓடியதை நினைவு கூறும்
விதமாக இன்றளவும் ஹஜ்ஜுக்கு வரும்
அனைவரும் ஓடுகின்றனர்.
ஸஃபா, மர்வா என்பது இரு சின்னஞ் சிறு
மலைக் குன்றுகளின்
பெயர். இப்போது அந்த இடங்களில் மலைக்
குன்றுகள் இல்லை. சற்று உயரமான
இடத்தில் மலைக்
குன்றுகளை நினைவு படுத்தும் விதமாக கற்கள் குவித்து
வைக்கப்பட்டுள்ளன. ஸஃபா, மர்வா
இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதி,
நீண்ட அரங்கம் போல் அமைக்கப் பட்டு,
குளு குளு வசதி செய்யப்
பட்டுள்ளது. ஆங்காங்கே மாபெரும்
மின் விசிறிகள் காற்றோட்டத்தை
ஏற்படுத்துகின்றன. அடுக்கடுக்காக
மூன்று தளங்கள், ஹாஜிகள்
சிரமமின்றி ஓடுவதற்கு வசதியாக
அமைக்கப் பட்டுள்ளன. போவதற்கும்,
வருவதற்குமாக இரு தனித்தனிப்
பாதைகள். ஓட இயலாதவர்களைத்
தள்ளு வண்டியில் வைத்து, தள்ளிக்
கொண்டு செல்வதற்கும் நடுவில்
தனிப்பாதை அமைக்கப் பட்டுள்ளது.
ஓட்டத்தை, ஸஃபாவில் துவக்க
வேண்டும்.
ஸஃபாவிலிருந்து
மர்வா சென்று சேருவது ஒரு
ஓட்டம். மீண்டும் மர்வாவிலிருந்து
புறப்பட்டு ஸஃபா வந்து சேருவது இரண்டாவது ஓட்டம். இவ்விதம்,
ஸஃபாவில் தொடங்கிய முதல் ஓட்டம், ஏழாவது
ஓட்டத்துடன் மர்வாவில்
நிறைவு பெறும்.
ஸஃபாவிலிருந்து மர்வா வரை
வேகமாக ஓட வேண்டும் என்று
அவசியமில்லை. நடந்து சென்றால்
போதும். இடைப்பட்ட பகுதியில் ஒரு
குறிப்பிட்ட தூரத்தில் மட்டும் ஆண்கள் சற்று வேகமாக ஓட
வேண்டும். இந்த இடத்திற்கு
‘மீலைனில் அக்லரைன்” என்று பெயர்.
இந்த இடத்திற்கு அடையாளமாக
இரு புறமும் பச்சை விளக்குகள்
எரிகின்றன.
நபி صلى الله عليه وسلم அவர்கள் முதல் தவாஃப்
செய்யும் போது மூன்று
சுற்றுக்களில் வேகமாக
ஓடுவார்கள். நான்கு சுற்றுக்களில்
நடப்பார்கள். மேலும் ஸஃபா
மர்வாவுக்கிடையே வலம் வரும்போது
ஓடைப் பகுதியில்
மட்டும் ஓடுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் رضي الله عنه
ஆதாரம்: புகாரி (1644)
ஸஃபா மர்வா
குன்றுகளுக்கிடையே, மனித வெள்ளம் கரை
புரண்டு ஓடுகிறது.
ஹஜ் அல்லது உம்ராச்
செய்ய வந்த அத்தனை இலட்சம்
புனிதர்களும் ஓடுகிறார்கள்.
ஒருவரையொருவர் இடிக்கவில்லை. வீண்
பேச்சுக்கள் இல்லை.
உலக நினைவுகள் இல்லை.
மெதுவான குரலில் துஆக்கள்
ஓதுவதைத் தவிர வேறு எந்த சப்தமும்
இல்லை. மரணத்தை
நினைத்து ஓடுகிறார்கள்!;
மறுமையை நினைத்து
ஓடுகிறார்கள்! மஹ்ஷரை
நினைத்து ஓடுகிறார்கள்!
மண்ணறை வாழ்வை நினைத்து
ஓடுகிறார்கள்!கால்கள் ஓடுகின்றன!
கண்கள் அழுகின்றன! நாவுகள்
பிரார்த்திக்கின்றன!
ஸஃபாவில் முதல் ஓட்டத்தைத்
தொடங்கிய ஹாஜிகள், தமது ஏழாவது ஓட்டத்தை மர்வாவில்
நிறைவு செய்து தங்கள் முதல்
கடமையான உம்ராவை
இத்துடன் இனிதே நிறைவு
செய்கின்றனர்.
‘ஒரு உம்ராச் செய்வது மறு உம்ரா
வரையில் உள்ள பாவங்களின்
பரிகாரமாகும். ஒப்புக் கொள்ளப்பட்ட
ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத் தவிர
வேறில்லை” என்று நபி صلى الله عليه وسلم
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:
அபூ ஹுரைரா رضي الله عنه ஆதாரம்:
திர்மிதி (855)
தமத்துவ் என்னும் ஹஜ் செய்ய நிய்யத்
செய்தவர்கள், தலைமுடி நீக்கி
அல்லது கத்தரித்து
இஹ்ராமிலிருந்து
விடுபடுகின்றனர். கிரான் என்னும்
ஹஜ் செய்ய நிய்யத் செய்து இஹ்ராம்
அணிந்தவர்கள் இதே இஹ்ராமுடன்
ஹஜ்ஜை எதிர் நோக்கிக்
காத்திருக்கின்றனர்.
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி
கடலங் குடி.
பதிவு
No comments:
Post a Comment