Tuesday, 1 August 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள்! -08

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾


உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள்! -08

========================

புனித மதீனாவுக்குப் புறப்படுதல்!

உம்ராவை இறையருளால் இனிதே
நிறைவேற்றிய புனித
இறைநேசர்கள் மக்காவில்
தங்குவதற்காக அவரவர்
வழிகாட்டிகளால், ஏற்பாடு செய்யப்
பட்டுள்ள தங்கும் விடுதிகளுக்குச்
சென்று ஓய்வெடுக்கின்றனர். ஹரம் ஷரீபுக்கு மிக அருகிலேயே
தங்குமிடம் கிடைக்கப் பெற்றவர்கள்
ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும்
ஹரம் ஷரீபுக்கு வந்து தங்கள் வாழ்வில் கிடைத்தற்கரிய
சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்
கொள்கின்றனர். சற்றுத் தொலைவில்
தங்கியிருப்பவர்களும் முன் கூட்டியே ஹரம் ஷரீபுக்கு வந்து
ஜமாஅத் தொழுகையின்
பாக்கியத்தை அடைந்துக்
கொள்கின்றனர். புனித ஹஜ்ஜை ஆவலுடன் எதிர் நோக்கிக்
காத்திருக்கும் புண்ணிய சீலர்கள்,
மக்காவில் தங்கியிருக்கும்
நாட்களில் வரலாற்றுப் புகழ் பெற்ற
இடங்களைக் கண்டு, கடந்த கால
இஸ்லாமிய வரலாற்றை நினைவு
கூறுகின்றனர்.
புனித ஹஜ்ஜுக்கு இன்னும் சில
நாட்கள் இருப்பதால்- அதற்குள் புனித மதீனாவுக்குப் போய்
வரலாமே! ஹஜ்ஜை முடித்தபின்
மதீனாவுக்குச் செல்வதென்றால்
அங்கேயும் அதிக மக்கள் நெரிசலாக
இருக்கும்.
அதுமட்டுமின்றி
ஹஜ்ஜின் அனைத்து
செயல்களையும் செய்து முடித்து களைப்பு அடைந்து
விடலாம் என்பதால் பெரும் பாலானவர்கள் இப்போதே புனித
மதீனாவுக்குப் புறப்பட்டுச்
செல்கின்றனர்.

மதீனா நோக்கி ஒரு மகிழ்ச்சிப் பயணம்.
உம்ராவை இனிதே நிறைவேற்றிய
இறைவனின் விருந்தினர்கள்,
புனிதப் பயணத்தின் இரண்டாம் கட்டமாக புண்ணிய மதீனா நன்னகர் நோக்கி இதோ புறப்பட்டுவிட்டனர்.
14 நூற்றாண்டுகளுக்கு முன் இறைவனின் தூதுச் செய்தியை,
ஓரிறைக் கொள்கையை, உன்னத
இஸ்லாத்தை, மக்கத் திருநகரில்
அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்கள்
எடுத்துரைத்த போது- அவர்களும்,
அவர்களின் சத்தியக் கொள்கையை
ஏற்றுக் கொண்டோரும், மக்கத்துக் குறைஷிக் கெடுமதியாளர்களால்,
பல்வேறு துன்பங்களுக்கும்,
இன்னல்களுக்கும், ஆளாக்கப்
பட்டார்கள்.

பொறுமையின் சிகரமான பூமான்
நபி صلى الله عليه وسلم அவர்கள்  பொறுத்துப்
பொறுத்து இதற்கு மேலும் சகித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்ட போது இறைவனின்
ஆணைப்படி அண்ணல் நபி صلى الله عليه وسلم
அவர்களும், அவர்களின் ஆருயிர்த்
தோழர் அபூ பக்கர் சித்தீக் رضي الله عنه
அவர்களும், தாங்கள் பிறந்து வளர்ந்த
மக்காவைத் துறந்து
புறப்பட்டனர்.’யத்ரிப்” என்னும் இனிய
நகரம், அவ்விருவரையும் இரு கரம் நீட்டி வரவேற்றது.
அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்களுக்கும்,
அவர்களின் சத்தியக் கொள்கைக்கும்,
புத்துணர்வு தந்தது. பண்டைய
வரலாற்றில் ‘யத்ரிப்” என்ற பெயரால்
அழைக்கப்பட்ட அந்த நகரம் தான்,
பின்னாளில்
‘மதீனத்துன்னபி” (நபியின் நகரம்)
என்று மரியாதைப் பெற்று, அதுவே இப்போது ‘மதீனா தைய்யிபா’ என்று
அழைக்கப்படுகிறது. அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்கள் இடம் பெயர்ந்து சென்ற அந்த நிகழ்ச்சி ‘ஹிஜ்ரத்”
எனப்படுகிறது.
இஸ்லாமிய ஆண்டு
இந்த நாளிலிருந்து தான் தொடங்குகிறது.

 அல்லாஹ்வின்
தூதர் صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்.
‘யத்ரிபு என்று மக்கள் கூறக்கூடிய,
எல்லா ஊர்களையும் மிகைக்கக் கூடிய ஓர் ஊருக்கு (ஹிஜ்ரத்
செய்து செல்லுமாறு) நான் கட்டளை யிடப்பட்டேன்! அது தான் மதீனா! இரும்பின் துருவை உலை நீக்கி விடுவதைப் போல் மதீனா நகர்
தீயவர்களை வெளியேற்றி விடும்”
அறிவிப்பவர்: அபூ ஹூரைரா رضي الله عنه
ஆதாரம்: புகாரி (1871)
பாம்பு தன் புற்றில் (சென்று)
அபயம் பெறுவது போல், ஈமான்
(இறை நம்பிக்கை) மதீனாவில் அபயம்
பெறும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா رضي الله عنه  ஆதாரம்: புகாரி
(1876)

இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய
பரக்கத்தைப் போல் இரு மடங்கை
மதீனாவில் ஏற்படுத்துவாயாக!
அறிவிப்பவர்: அனஸ் رضي الله عنه  ஆதாரம்:
புகாரி (1885)

அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்களுக்கு
மிகவும் பிடித்தமான இந்த மதீனா, இன்று அனைவருக்கும்
பிடித்தமான நகரமாக இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. நபி صلى الله عليه وسلم  அவர்களின் துஆவின் மகிமை
இன்றளவும் இந்த மதீனா நகரத்தில்
பிரதிபலிக்கிறது.
சிந்தைக்கினிய செழுமை மிக்க
மதீனா நகர் நோக்கி புறப்பட்டு விட்டனர்
 ஹாஜிகள். வழி
நெடுகிலும், கண்ணுக்கெட்டிய
தூரம் வரை பாலைவனமும்,
இடையிடையே இருபுறமும்
மலைக் குன்றுகளும், அரபு நாட்டு இயற்கை
 அப்படியே
பிரதிபலிக்கிறது. அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்களும், அவர்களின்
அருமைத் தோழர் அபூ பக்கர் சித்தீக் رضي الله عنه
 அவர்களும், கரடு முரடான பாதைகளில்
 ஒட்டகத்தின் மீதேறி
நாட்கணக்கில் கடந்த தூரத்தை, இப்போது
 சில மணி நேரங்களில்,
அகன்று விரிந்த வழவழப்பான
சாலைகளில், அதிவேகமாக
விரைந்து செல்லும் வாகனங்களில்
ஹாஜிகள் சென்றடைகின்றனர்.

இதோ! மதீனா முனவ்வராவின்
எல்லைப் பகுதி.
அனைத்து வாகனங்களும்
நிறுத்தப்பட்டு அடையாள அட்டைகள்  பரிசோதிக்கப்
படுகின்றன. மதீனா நகரின் அனைத்து  எல்லைப் பகுதிகளிலும்
இவ்விதம் சோதனைச் சாவடிகள்
அமைக்கப்பட்டுள்ளன. அடையாள
அட்டைகள் சரி பார்க்கப்பட்ட பின்னர்,
அனைத்து ஹாஜிகளும் அகம்
குளிர, முகம் மலர, மதீனா நகரில்
நுழைகின்றனர். இதயம் கவரும்
பசுமை நிறைந்த, இங்கித நகரில்
நுழைகின்றனர். மாநபி அவர்கள் வாழ்ந்த
 மதீனத் திரு நகரில்
நுழைகின்றனர்.

 மதீனா நகரின்
மையப் பகுதியை நெருங்க நெருங்க, மஸ்ஜிதுன்னபவியின்
வானளாவிய மினாராக்களை வெகு
 தொலைவிலிருந்தே காண முடிகிறது.

நள்ளிரவு நேரத்திலும், கண்ணைப் பறிக்கும்
ஒளி  வெள்ளத்தில்
மிதக்கிறது இப்புனிதப் பள்ளி. சமீப காலம் வரை  மஸ்ஜிதுன்னபவியைச்
சுற்றி ஆக்கிரமித்துக்
கொண்டிருந்த பெரும் பெரும் அடுக்கு
 மாடிக் கட்டிடங்கள் கூட,
உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத்
 தொகை கொடுத்து
அப்புறப்படுத்தப்பட்டு இப்போது மிகப் பெரிய
 அளவில் பள்ளி வளாகம்
விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பள்ளி
 வெளிப்புற வளாகத்தின் பெரும்
 பகுதியில் தரை
மட்டத்திற்குக் கீழ் கார்
நிறுத்துமிடமும், கழிவறைகளும்,
அமைக்கப்பட்டுள்ளன. எல்லா
நுழைவாயில்களுக்கு
அருகிலும் அடித்தளப் பகுதியில் ஒளு செய்யும் குழாய்
வசதிகளும், கழிவறைகளும்
அமைக்கப்பட்டு  உள்ளே சென்று வர
தானியங்கிப் படிகள்
அமைக்கப்பட்டுள்ளன.
இயலாதவர்களும். முதியவர்களும்
கூட எளிதில் சென்று வர முடியும்.
பள்ளியின்  வெளிப்புற
வளாகத்திலேயே, பல இலட்சம் பேர் நின்று
 தொழ முடியும். பளீரென்ற வெள்ளைப்
 பளிங்குக் கற்களால் தரை முழுவதும்
 இழைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஆண்டுப் பெருகி வரும்
கூட்டத்திற்கு ஏற்றபடி  பள்ளி மிகவும்
 விசாலமாக இப்போது
வடிவமைக்கப் பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் எந்நேரமும் பள்ளியின் உள்ளேயும்,
வெளியேயும் தூய்மைப் படுத்திக்
கொண்டே இருக்கின்றனர். தரையை
சுத்தம் செய்வதற்காகவே சிறப்பான
முறையில் வடிவமைக்கப் பட்ட
இயந்திரங்கள் சுத்தம் செய்துக் கொண்டே
 இருக்கின்றன. பரந்து
விரிந்த பள்ளியின் உட்பகுதி
முழுவதும் குளிர் சாதன வசதி
செய்யப் பட்டு, கடும்
கோடையிலும் கூட இதமான குளுமையை
 அனுபவிக்க
முடிகிறது.
உட்பகுதியின் ஒரு பக்கம் மாபெரும்
தானியங்கிக் குடைகள்
அமைக்கப்பட்டுள்ளன. வெயில் மற்றும் மழை
 நேரங்களில் இந்த
ராட்சதக் குடைகள் விரிந்துக் கொள்ளும்.
 மற்ற நேரங்களில்
குடைகள் சுருங்கி
காற்றோட்டத்தை ஏற்படுத்தும்.
மற்றொரு பக்கம் காங்கிரீட் மேற்
கூரை தனித்தனிப் பகுதிகளாக
அப்படியே நகர்ந்து திறந்து கொள்ளும்.
 வெயில் மற்றும் மழை
நேரங்களில் மூடிக் கொள்ளும்.
கற்பனைக் கெட்டாத கட்டடக் கலையின்
அற்புத வடிவமைப்புகள்
காண்போரை பிரமிக்கச்
செய்கின்றன. பள்ளியின் உட்பகுதி
முழுவதும் பல்லாயிரக் கணக்கில் குடி நீர்
பிளாஸ்க்கள்
வைக்கப்பட்டு, மக்காவிலிருந்து
ஜம்ஜம் நீர் கொண்டு வந்து
தினந்தோறும் நிரப்பப்படுகிறது.
மக்காவில் உள்ள மஸ்ஜிதுல்
ஹராமில், இரவும் பகலும் மக்கள்
கஃபாவைத் தவாபு செய்துக் கொண்டே
 இருப்பார்கள். ஆனால் இந்த
மஸ்ஜிதுன்னபவியில், இரவு இஷாத்
தொழுகை முடிந்ததும்,
அனைவரும் வெளியேற்றப்
படுகின்றனர். பள்ளியின்
உட்புறத்திலும்,
வெளிப்புறத்திலும் இரவில் யாரையும்
உறங்க
அனுமதிப்பதில்லை. இஷாத் தொழுகை
 முடிந்து அடைக்கப்பட்ட
பள்ளியின் கதவுகள், தஹஜ்ஜுத்
தொழுகைக்கு பாங்கு
சொல்லப்பட்டவுடன்
திறக்கப்படுகின்றன. எல்லா நாட்களிலும்
 தஹஜ்ஜுத்
தொழுகையை நிறைவேற்ற
ஹாஜிகள் ஆர்வத்துடன் வந்து
விடுகின்றனர். பஜ்ருத் தொழுகை வரை இறை
 வணக்கத்தில்
ஈடுபடுகின்றனர்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு....

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்: 

No comments:

Post a Comment