Wednesday, 2 August 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள்! 09

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள்! 09

=======================

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم   அவர்கள்
கூறினார்கள்.
மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனையப் பள்ளிகளில் தொழுவதை விட எனது பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச்
சிறந்தது.
அறிவிப்பவர்: அபூ
ஹூரைரா رضي الله عنه  ஆதாரம்: புகாரி
(1190)
இந்த ஹதீஸின் கருத்தை உணர்ந்த
ஹாஜிகள், தஹஜ்ஜுத்
தொழுகையைக் கூடத் தவற விடுவார்களா? மதீனாவில்
தங்கியிருக்கும் நாட்களில்
மஸ்ஜிதுன்னபவியில் அதிகமதிகம்
தொழுகையில் ஈடுபட்டு
நன்மைகளை சேர்ப்பதில் கவனமாக
இருக்கின்றனர்.
இன்றைய தினம் பஜ்ருத் தொழுகையை ஜமாஅத்துடன்
நிறைவேற்றி விட்டு மக்கள் கூட்டம், அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்களின் புனித அடக்கத்தலத்தை
ஜியாரத் செய்ய
அலைமோதுகிறது. பள்ளியின்
உட்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக
முன்னோக்கி நகருகின்றனர். இதோ!
முதலில் தெரிவது ‘சுவர்க்கப் பூங்கா' அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم
அவர்கள் கூறினார்கள்:
‘எனது வீட்டிற்கும் எனது மிம்பருக்கும் இடைப்பட்டப் பகுதி
சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு
பூங்காவாகும்.” அறிவிப்பவர்: அபு
ஹுரைரா رضي الله عنه  புகாரி (1195)

இந்த இடத்திற்கு அடையாளமாக,
அழகான பச்சைக் கம்பளம்
விரிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நபி
மொழி அரபியில் ‘மா பைன பைத்தீ
வ மிம்பரீ ரவ்லதன் மின் ரியாலில்
ஜன்னா” என்று எழுதி
வைக்கப்பட்டுள்ளது.
நபி صلى الله عليه وسلم  அவர்கள் நின்று
தொழவைத்த இடமும்
(மிஹ்ராபுன்னபி) பிரசங்கம்
செய்வதற்காக நின்ற மேடையும்,
அருகருகே அமைந்துள்ளன.
பாக்கியம் பெற்ற இந்த
இடங்களுக்கருகில் நிற்கவும், நின்று தொழவும் ஹாஜிகள்
அலைமோதுகின்றனர்.
அடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக
முன்னேறுகின்றனர். அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்கள் துயில் கொண்டுள்ள
புனித அடக்கத்தலத்தை நோக்கி!
இதோ! தூய நபியவர்கள் துயில்
கொண்டுள்ள தூய்மைத் தலம்.
உண்மை நபியவர்கள் உறங்கும் உன்னத
அடக்கத் தலம். மனங்கவரும்
இஸ்லாத்தை மனங்குளிர போதித்த
மனித குல மாணிக்கத்தின்
மறைவிடம்.புவியெங்கும் மக்கள் புகழ் பாடிக் கொண்டாடும்,
புனிதரின் பூத உடல் இங்கே தான்.
யுகம் யுகமாய் திருந்தாதக்
காட்டுமிராண்டிகளாக
இருந்தவர்களை, இருபத்து மூன்றே
ஆண்டுகளில் இகமே போற்றும் இனிய தோழர்களாய் மாற்றியமைத்த
இனியவரின் புனித உடல் இங்கேதான்.
கண்கள் காணக் காண,
நினைவுகள் பின்னோக்கி
செல்கின்றன. 1400 ஆண்டுகளுக்கு
முன் அகிலம் முழுவதும்,
அநியாயமும், அட்டூழியமும்,
தலை விரித்தாடியபோது,
அகிலத்தின் அருட்கொடையை,
அரேபியப் பாலையில் அல்லாஹ்
அவதரிக்கச் செய்தான்.
தாயின் வயிற்றில் கருவாக இருந்த
போதே தந்தையை இழந்து, தமது ஆறாம் வயதில், தாயையும் இழந்து, பாட்டனார் அப்துல் முத்தலிபின்
பராமரிப்பில் வளர்ந்து, ‘அல் அமீன்” என்றும் ‘அஸ்ஸாதிக்” என்றும்
அன்புடன் அழைக்கப் பட்ட நம்பிக்கைக்குரிய இளைஞராக
செல்வச் சீமாட்டி கதீஜாவின் சிறப்பு
மிகு வணிகராக இருபத்தைந்தாம்
வயதில் எழில் மணம் புரிந்து
நாற்பதாம் வயதில் இறைத்தூதராக
நபித்துவம் பெற்று மக்கத்துக்
குறைஷிகளால் பலவித
துன்பங்களுக்குள்ளாகி-53 ஆம் வயதில், இறைவனின்
ஆணைப்படிதாம் பிறந்து வளர்ந்த
மக்காவைத் துறந்து-மதீனத் திரு
நகருக்கு மாண்புடன் ஹிஜ்ரத் செய்து மதீனத்து அன்ஸாரிகளின்
மதிப்புக்கு உரியவராக-மன்னாதி மன்னர்களும் தமக்கு முன்னே அணிவகுத்து நிற்கும் அளவுக்கு
மாண்பையும் மரியாதையையும்
பெற்று மாபெரும்
சாம்ராஜ்ஜியத்தை மதீனாவில்
நிறுவி ஏகத்துவக் கொள்கையை
இகமெங்கும் பரவச் செய்து தமது 63
ஆம் வயதில்  அல்லாஹ்வின்
அழைப்பை ஏற்று இம் மண்ணுலக
வாழ்க்கையை முடித்துக்
கொண்டு மறுமை நாள் வரை துயில் கொண்டுள்ள தூய இடம் இது தான்.

கண் இமைக்கும் நேரத்தில் வள்ளல்
நபியின் வாழ்க்கைச் சரிதம் நம் கண்
முன்னே தோன்றி மறைகிறது.
இந்தப் புனித அடக்கத்தலத்தைக்
காணக் காண, அனைவரின் கண்களும் கண்ணீர் வடிக்கின்றன. அனைவரின்
நாவுகளும் அழகாக ஸலாம் உரைக்கின்றன. நபியே ஸலாம் உண்டாக!இறைவனின் தூதரே
ஸலாம் உண்டாக! அனைவரும்
ஸலாம் கூறுகிறார்கள்.
அமைதியாக ஸலாம்
கூறுகிறார்கள்.

‘எனது கப்ரை திரு விழா நடத்தும்
இடமாக ஆக்கிவிடாதீர்கள்” என்று
அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்கள் அருளிச் சென்ற
 வார்த்தை இன்றளவும் இங்கே பேணப் படுகின்றது.

அனைத்து வகை
அனாச்சாரங்களிலிருந்தும், ஆடல் பாடல்  கச்சேரிகளிலிருந்தும்,
அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்களின் புனித
அடக்கத்தலத்தை அல்லாஹ்
காப்பாற்றி விட்டான்.

அறியாமையால் சிலர், கையேந்தி
பிரார்த்திக்கவும், அடக்கத்தலத்தின்
சுவர்களைத் தொட்டு
முத்தமிடவும் முயற்சிக்கின்றனர்.
அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்கள் மீது
கொண்ட அளவு கடந்த அன்பின் காரணமாக
 இவ்வாறு
செய்கின்றனர் என்பதை
மறுப்பதற்கில்லை.
காவல் துறையினரும், அரசு
அதிகாரிகளும், அறிவிற் சிறந்த
ஆன்றோரும், அருகில் நின்று
கண்காணிக்கின்றனர்.
அறியாமையால் அனாச்சாரங்களில்
ஈடுபட முனைவோரைத்
தடுக்கின்றனர்.
அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்கள், கப்ர்
ஜியாரத் எப்படிச் செய்யவேண்டும்
என்று மொழிந்தார்களோ! அவர்களின்
அடியொற்றி நடந்த ஸஹாபாக்கள்
எவ்விதம் ஜியாரத் செய்தார்களோ!
அந்த முறை தான் இன்றளவும் இங்கே
கடைபிடிக்கப்படுகிறது.
அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்களுக்கு
ஸலாம் உரைத்தபடியே, மக்கள்
கூட்டம் மெதுவாக நகருகின்றது.

*அபூபக்கர் رضي الله عنه*

அவர்களுக்கு அடுத்து அடக்கம்
செய்யப் பட்டிருக்கும், அண்ணலாரின்
அருமைத் தோழர், அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்களின்
 ஒவ்வொரு துன்ப
துயரத்திலும் பங்கு கொண்ட
பண்பாளர், அண்ணலாருடன் சேர்ந்து ஹிஜ்ரத்
செய்யும்  பேறு பெற்ற
பெருந்தகை, நபிமார்களுக்குப் பின்
மனிதர்களில் சிறந்தவர் என்று
புகழப்பட்ட புண்ணிய சீலர், நபி  صلى الله عليه وسلم  அவர்களுக்குப்
பின் அவர்களின் அரசியல்
தலைமையை அலங்கரிக்கும்
பொறுப்புக்கு அனைவராலும்
ஏகோபித்து அங்கீகரிக்கப் பட்டவர்,
அபூ பக்கர் சித்தீக் رضي الله عنه  அவர்களுக்கு
ஸலாம் உரைக்கின்றனர்.மக்கள் கூட்டம் மேலும்
 முன்னோக்கி
நகருகின்றது.

*உமர் رضي الله عنه*

அவர்களை அடுத்து அடக்கம்
செய்யப்பட்டுள்ள, அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்களின்
 அன்புத் தோழர், வீரத்தின் விளை நிலம்
 இஸ்லாமிய கிலாபத்
ஆட்சியின் இரண்டாவது கலீபா, நீதி மிக்க
 ஆட்சிக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய
 நீதி மான், உமர் رضي الله عنه  அவர்களுக்கு
ஹாஜிகள் ஸலாம் உரைக்கின்றனர்.
ஜியாரத்தை முடித்து வெளியில் வந்த
 ஹாஜிகள், வாழ்வில்
கிடைத்தற்கரிய பெரும் பேற்றைப்
பெற்றதற்காக ஆனந்தக் கண்ணீர்
வடிக்கிறார்கள். ஹஜ்ஜுடைய
காலங்களில், மஸ்ஜிதுன்னபவியில்
உள்ளே நுழைந்து ஜியாரத்தை முடித்து
 வெளியே வருவது என்பது சிரமமான
  காரியம் தான். நின்று
 காண்பதற்கு நேரம் இல்லை. கடல்
 அலையைப் போல் ஹாஜிகள் கூட்டம்
 கொஞ்சம் கொஞ்சமாக
நகர்ந்துக் கொண்டே வருகின்றது.
அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்களின் புனித
அடக்கத்தலத்தை தரிசிக்கும் பேறு
பெற்றோம் என்னும் மகிழ்ச்சிக்கு
முன்னால்  அதற்காகப் பட்ட சிரமங்கள்
யாருக்கும் ஒரு பொருட்டாகத்
தெரியவில்லை.புண்ணியம் கிடைக்கப்
 பெற்றவர்களின் திரு
முகங்களில் புன்னகைப் பூக்கள்
பூத்துக் குலுங்குகின்றன.
இந்த மதீனத் திரு நகரில்
தங்கியிருக்கும்
நாட்களிலெல்லாம், இன்னும் ஒரு முறை
 இன்னும் ஒரு முறை எவ்வளவு சிரமங்கள்
இருந்தாலென்ன? இன்னும் ஒரு முறை
  மறுபடியும் இந்த பொன்னான வாய்ப்பு
  எப்போது கிடைக்கும்?  எனவே இன்னும் ஒரு
முறை ஜியாரத் செய்ய வேண்டும் என்னும்
ஆசையே அனைவரின்
மனதிலும்
மேலோங்குகிறது.இறைத்தூதர் صلى الله عليه وسلم  அவர்களுக்காகத் தம்
இன்னுயிரையும் அர்ப்பணிக்கத்
தயாராக இருக்கும் இனிய இதயங்களுக்கு
இப்படி ஓர் ஆர்வம்
ஏற்படுவதில் வியப்பில்லை.புனித
அடக்கத்தலத்தை ஜியாரத் செய்து
முடித்த புண்ணிய சீலர்கள் இதோ
மஸ்ஜிதுன்னபவிக்கு அருகில் இருக்கும்
 ஜன்னத்துல் பகீஃ என்னும்
புனிதர்களின் பூஞ்சோலை
நோக்கி புறப்பட்டு விட்டனர்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்: 02-08-2017

No comments:

Post a Comment