Thursday, 3 August 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 10

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 10

========================

ஜன்னத்துல் பகீஃ!

அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்களின் அன்பு
மனைவியரில் பலரும், அருமைத்
தோழர்களில் பல்லாயிரக்
கணக்கானோரும், இங்கு தான் அடக்கப்
பட்டுள்ளனர்.
திரு மறையின் முழுமையான
மூலப் பிரதியை உருவாக்கித்
தந்தவரும், மூன்றாவது
கலீபாவுமான உஸ்மான் இப்னு
அஃப்பான் رضي الله عنه  அவர்கள்,
பெருமானாரின் எண்ணற்ற பொன்
மொழிகளை அகிலத்திற்கு
அறிவித்த, அபூ ஸயீத் அல் குத்ரி رضي الله عنه  அவர்கள்,
அண்ணலாருக்கு அமுதூட்டிய
அருமை அன்னை, ஹலீமா
ஸஃதிய்யா رضي الله عنه  அவர்கள்,
அண்ணலாரின் அருமந்த மைந்தர்,
இப்ராஹீம் رضي الله عنه  அவர்கள், பிக்ஹ் சட்டங்களை இயற்றிய
பெருமேதை, இமாம் மாலிக் رضي الله عنه
அவர்கள்,
திருத்தமுடன் திரு மறையை
ஓதுவதில் தனிச் சிறப்புப் பெற்ற
காரி, இமாம் நாபிஃ رحمة الله عليه  அவர்கள்,
ஆகியோரும், இன்னும் ஏராளமான நபித் தோழர்களும், இறை
நேசர்களும், ஆன்றோரும்,
சான்றோரும், இந்தப் புனித மண்ணில் தான் அடக்கம் செய்யப்
பட்டுள்ளனர். திரளாகக் கூடி நின்று, ஹாஜிகள் இந்தப் புனித மண்ணில் அடக்கப்
பட்டிருப்பவர்களுக்காக
அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றனர்.
இந்த அடக்கத் தலத்திலும், இன்னும்
இங்குள்ள எந்த அடக்கத் தலங்களிலும்
பெண்கள் அனுமதிக்கப்
படுவதில்லை. ஏனெனில்,
கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை அல்லாஹ் சபிப்பானாக!
என்று அண்ணல் நபி صلى الله عليه وسلم   அவர்கள்
எச்சரித்திருக்கிறார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹூரைரா رضي الله عنه
ஆதாரம்: திர்மிதி
இந்த ஜியாரத்தை முடித்துக்
கொண்டு, ஹாஜிகள் மதீனாவைச்
சுற்றியுள்ள, சரித்திரப் புகழ் பெற்ற
இடங்களைப் பார்த்து வரப்
புறப்படுகின்றனர். மதீனாவைச்
சுற்றிலும் பார்க்க வேண்டிய இடங்களை  அவரவர் தம்
வழிகாட்டிகளின்
வழிகாட்டுதலின்படி சென்று பார்த்து வருகின்றனர். மதீனாவின்
மகத்துவத்தையும், மாண்பையும்
பறை சாற்றிக் கொண்டு வரலாற்று
ஆதாரங்களாக நிலைத்து நிற்கும்
இடங்களையும், சரித்திரச்
சான்றுகளையும், காணுகின்ற
கண்கள் பேறு பெற்றவை.
அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்களை
வரவேற்று உபசரித்து,
அகிலமெங்கும் இஸ்லாம் பரவ,
அடித்தளம் அமைத்துக் கொடுத்த –
மதீனத் திரு நகரை மகிழ்ச்சியுடன்
தரிசிக்கும் உள்ளங்கள் பேறு பெற்றவை.
அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்களால்
ஆசீர்வதிக்கப்பட்ட அழகுத் திரு நகரில்
தங்கி  ஆத்ம திருப்தி அடையும்
இதயங்கள் பேறு பெற்றவை.இந்தப்
புனித மதீனாவில் தங்கியிருக்கும்
நாட்களில் இயன்றவரை
மஸ்ஜிதுன்னபவிக்கு வந்து, ஜமாஅத்துடன் தொழுது அளப்பெரும் நன்மைகளை
அடைகின்றனர் ஹாஜிகள்.

மனம் குளிர மஸ்ஜிதுன்னபவியில்
தொழுது, மன நிறைவடைந்த
மாண்பாளர்கள், இதோ புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றப்
புறப்பட்டு விட்டனர். புறப்பட்டுப்
போகின்ற இறுதி நேரத்திலும்
கூட மீண்டும் ஒரு முறை அண்ணல்
நபி صلى الله عليه وسلم  அவர்களின் புனித அடக்கத்
தலத்தை ஜியாரத் செய்யத்
தவறவில்லை. உயிரினும் மேலான
உண்மை நபியவர்களுக்கு ஸலாம் உரைத்து, புறப்பட்டு விட்டனர்
புனித மக்கா நன்னகர் நோக்கி!

துல் ஹஜ் எட்டாம் நாள்!

 ஹஜ்ஜின் முதல் நாள்.
புண்ணிய சீலர்கள், எந்த நோக்கத்திற்காக அவரவர்
இல்லங்களிலிருந்து புறப்பட்டு
வந்தார்களோ! அந்த ஹஜ் இன்று தான்
ஆரம்பம். உலகின் பல்வேறு
நாடுகளிலிருந்தும்- உள் நாட்டின்
பல்வேறு பகுதிகளிலிருந்தும்
புனித ஹஜ்ஜை நிறைவேற்று
வதற்காக வந்து, மக்காவின் பல்வேறு இடங்களிலும்
தங்கியிருந்த ஹாஜிகள்
ஹஜ்ஜுக்காக நிய்யத் செய்து இஹ்ராம் அணிந்து இன்று மினா
வந்து சேருகின்றனர்.
‘இப்ராத்” எனும் வகை ஹஜ் செய்ய,
இறுதி நேரத்தில் வருபவர்கள், அவரவர் வரும் வழியில் உள்ள ‘மீக்காத்” எல்லையில் குளித்து இஹ்ராம்
அணிந்து நேரடியாக மினா வந்து
சேருகின்றனர்.
மினாவில் சமீப காலம் வரை அனைத்து ஹாஜிகளும்,
தற்காலிகமாக அமைக்கப்பட்ட
கூடாரங்களில் தான் தங்க
வைக்கப்பட்டனர். ஹஜ்ஜின் நாட்களைத்
தவிர மற்ற நாட்களில் மினாவில், மணலையும் மலைகளையும் தவிர
வேறு எதுவுமே இருக்காது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்!

தற்காலிக கூடாரங்களில் அடிக்கடி தீ விபத்துக்கள் நடந்து
கொண்டிருந்தன. தனித்தனியாக
கேஸ் மற்றும் மண்ணெண்ணெய்
அடுப்புகளை வைத்து அவரவர் சொந்தமாக சமையல் செய்து
கொண்டிருந்ததால், இவ்விதம் அடிக்கடி
தீ விபத்துக்கள்
ஏற்படுவதையொட்டி,
கூடாரங்களில் சமையல் செய்வதை
சவூதி அரசு முதலில் தடை செய்தது.
 அதற்குப் பகரமாக,
அத்தனை இலட்சம் ஹாஜிகளுக்கும்,
பாதுகாப்பான தனி இடங்களில், சுகாதார
 முறைப்படி உணவைத் தயார் செய்து  விநியோகிக்கும்
பொறுப்பைப் பல்வேறு தனியார்
நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டன.
இதன் மூலம் உணவுப்
பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்தது. சில
 ஆண்டுகளுக்கு
முன், துணிகளால் அமைக்கப்படும்
கூடாரங்களை அறவே தவிர்த்து விட்டு,  சவூதி அரசு அத்தனை
இலட்சம் ஹாஜிகளுக்கும், நவீன
வசதிகளுடன் கூடிய தீப்பிடிக்காத
கூடாரங்கள் அமைத்துக்
கொடுத்தது. இதன் மூலம், அடிக்கடி
 ஏற்பட்ட தீ விபத்துக்கள்
தவிர்க்கப்பட்டன.
மினாவில் ஒவ்வொரு வருடமும்
ஹாஜிகளுக்கு கூடுதல் வசதிகள்
செய்து கொடுக்கப் படுகின்றன.
தடையின்றி அனைவருக்கும்
தண்ணீர் கிடைக்க வழிவகை
செய்யப்பட்டுள்ளது. அவரவர்
தங்கியிருக்கும் பகுதிக்கு
அருகிலேயே, பல நூற்றுக் கணக்கான
 கழிவறை வசதி,
ஆண்களுக்கும், பெண்களுக்கும்,
தனித்தனியாக
அமைக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத் துறையினர், தீ
விபத்துக்களிலிருந்து
ஹாஜிகளைப் பாதுகாக்க, சகல
விதமான பாதுகாப்பு
ஏற்பாடுகளையும் செய்து இரவும் பகலும்
 கண்காணிக்கின்றனர்.
கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள
அனைத்துப் பகுதிகளிலும் தயார்
நிலையில் தீயணைப்பு வாகனங்கள்
நிறுத்தப்பட்டுள்ளன. இரு சக்கர
வாகனங்களில் தீயணைப்புக்
கருவிகளுடன் தீயணைப்பு வீரர்கள்
எந்த நேரமும் சுற்றிச் சுற்றி வந்த வண்ணம்
உள்ளனர்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்: 03-08-2017

No comments:

Post a Comment