சுலைமான் நபி வரலாறு
சுலைமான்(سليمان) நபி [தாவூது நபியின்] மகனாவார்கள். அவர்கள் இறைவனிடம் ஒரு கோரிக்கையை வைத்தார்கள். அது 'எவரும் அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ வழங்குவாயாக!' என்பது தான் அந்த கோரிக்கை.
அதன்படி அல்லாஹ் அவருக்கு மிகப்பெரும் அரசாங்கத்தை வழங்கினான். பளிங்குகளிலான மாளிகையை அமைத்து வாழ்ந்தார்கள்.
அவர்கள் மனிதர்களை கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவும் ஜின்களையும் பறவைகளையும் கட்டுப்படுத்தக் கூடியவர்களாவும் இருந்தார்கள். [பறவைகளின் மொழியை] அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தான்.
மேலும் காற்றையும் அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான். அந்தக் காற்று அவர்களைச் சுமந்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு கொண்டு செல்லும்.
கட்டிடங்களை கட்டும் ஜின்களையும் முத்துக் குளிக்கும் ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தான்.
==கண்காணிக்கும் பணி==
ஒரு நாள் சுலைமான் (அலை) அவர்கள் பறவைகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.
ஏனென்றால் பறவைகளை அல்லாஹ் அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தான். அதாவது பறவைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அவருக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
பறவைகளுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அவை உடனே நிறைவேற்ற வேண்டும். அதற்காகவே அல்லாஹ் சுலைமான் (அலை) அவர்களுக்கு பறவைகளின் பாஷையை கற்றுக் கொடுத்திருந்தான்.
அவர்கள் பறவைகளின் கூட்டத்தை பார்வையிட்ட போது ஹூது ஹூது என்னும் பறவையை காணவில்லை, அதனால் சுலைமான் (அலை) அவர்கள்,
'ஹுது ஹுது பறவை எங்கே போனது? அதை நான் காணவில்லை, சரியான காரணத்தை அது சொல்லவில்லை என்றால் நான் அதை தண்டிப்பேன் அல்லது கொன்று விடுவேன்' என்று கூறினார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.....
பதிவு நாள்: 24-07-2017
சுலைமான்(سليمان) நபி [தாவூது நபியின்] மகனாவார்கள். அவர்கள் இறைவனிடம் ஒரு கோரிக்கையை வைத்தார்கள். அது 'எவரும் அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ வழங்குவாயாக!' என்பது தான் அந்த கோரிக்கை.
அதன்படி அல்லாஹ் அவருக்கு மிகப்பெரும் அரசாங்கத்தை வழங்கினான். பளிங்குகளிலான மாளிகையை அமைத்து வாழ்ந்தார்கள்.
அவர்கள் மனிதர்களை கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவும் ஜின்களையும் பறவைகளையும் கட்டுப்படுத்தக் கூடியவர்களாவும் இருந்தார்கள். [பறவைகளின் மொழியை] அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தான்.
மேலும் காற்றையும் அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான். அந்தக் காற்று அவர்களைச் சுமந்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு கொண்டு செல்லும்.
கட்டிடங்களை கட்டும் ஜின்களையும் முத்துக் குளிக்கும் ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தான்.
==கண்காணிக்கும் பணி==
ஒரு நாள் சுலைமான் (அலை) அவர்கள் பறவைகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.
ஏனென்றால் பறவைகளை அல்லாஹ் அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தான். அதாவது பறவைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அவருக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
பறவைகளுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அவை உடனே நிறைவேற்ற வேண்டும். அதற்காகவே அல்லாஹ் சுலைமான் (அலை) அவர்களுக்கு பறவைகளின் பாஷையை கற்றுக் கொடுத்திருந்தான்.
அவர்கள் பறவைகளின் கூட்டத்தை பார்வையிட்ட போது ஹூது ஹூது என்னும் பறவையை காணவில்லை, அதனால் சுலைமான் (அலை) அவர்கள்,
'ஹுது ஹுது பறவை எங்கே போனது? அதை நான் காணவில்லை, சரியான காரணத்தை அது சொல்லவில்லை என்றால் நான் அதை தண்டிப்பேன் அல்லது கொன்று விடுவேன்' என்று கூறினார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.....
பதிவு நாள்: 24-07-2017
No comments:
Post a Comment